முதல் தலைமுறை மனிதர்கள்

முதல் தலைமுறை மனிதர்கள், சேயன் இப்ராஹீம், நிலவொளி பதிப்பகம், விலை 200ரூ. முதல் தலைமுறை மனிதர்களிடமிருந்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள, ஏராளமான தகவல்களைத் தேடி அலைந்து சேகரித்து இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். தமிழகத்தின் தவிர்க்க இயலாத சக்திகளாகத் திகழ்ந்த 30 இஸ்லாமிய ஆளுமைகளின் வரலாறு இந்நூலில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் போராட்டம், அரசியல், கல்வி, சமூக சேவை, சமுதாயச் சேவை… என்று பல தளங்களில் இந்த முதல் தலைமுறையினரின் பங்களிப்புகளுடன், அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர, அன்றைய தமிழக […]

Read more

மாற்று சினிமா

மாற்று சினிமா, (பத்து இயக்குநர்களின் நேர்காணல்கள்), தொகுப்பு எஸ். தினேஷ், பேசாமொழி பதிப்பகம், விலை 180ரூ. தமிழ் சினிமா கொஞ்சமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. அதற்கான ஆரம்ப யத்தனங்கள் இதில் தெளிவாகக் காணக் கிடைக்கிறது. இயக்குநர்கள் நவீன், மணிகண்டன், விக்ரம் சுகுமாரன், கார்த்திக் சுப்புராஜ், கமலக்கண்ணன், பாலாஜி தரணிதரன், சீனு ராமசாமி, ரமேஷ், அருண் குமார் என பட்டியல் நீள்கிறது. வெவ்வேறு இயக்குநர்களின் மனப்பாங்கு, சினிமாவைக் குறித்த சிந்தனை நலம் புரிபடுகிறது. சினிமாவை பிறிதொரு இடத்திற்குக் கொண்டு செல்ல அவர்களின் திட்டம், சினிமாவை எப்படி […]

Read more

வெல்வதற்கே வாழ்க்கை

வெல்வதற்கே வாழ்க்கை, கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. ‘எண்ணம் போல வாழ்வு’ என்பார்கள். வாழ்க்கையை வண்ணமயமாக்குவது எண்ணங்களே. அதன் அடிப்படையில் தன்னம்பிக்கை கட்டுரைகளை இந்த நூலில் கவிஞர் கவிதாசன் எழுதியுள்ளார். ‘தோற்றுப் போவது அவமானம் இல்லை. தோல்வியில் அவமானம் இல்லை. தோல்வியில் இருந்து கற்றுக்கொள்வதுதான் அனுபவம்’, ‘செவிகளில் தேன் தடவும் சொற்களை விட, இதயத்திற்கு இதம் சேர்க்கும் செயல்களே சிறந்தவை’ என்பன போன்ற கருத்துகளை நூல் முழுக்கக் காணலாம். நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

நல்ல தமிழ் எழுத வேண்டுமா? , அ.கி. பரந்தாமனார், அல்லி நிலையம், பக்:496, விலை ரூ160. நாம் அன்றாடம் நாளேடுகளில் படிக்கும் செய்திகள் மற்றும் கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றில் ஏதேனும் சில பிழைகள் கண்களில் படக்கூடும். சில செய்திகளில் உள்ள சொற்றொடர்கள் சரியா, தவறா என்ற குழப்பம் ஏற்படும். நாம் சரி என நினைப்பதும், தவறு என நினைப்பதும் சரிதானா என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது? அதற்கு உதவுவதுதான் இந்நூல். கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய அ.கி. பரந்தாமனார் ஒரு நாளேட்டில் வாரம் […]

Read more

மாயாஜாலமான மணவாழ்க்கை – மறந்து போன ரகசியங்கள்

மாயாஜாலமான மணவாழ்க்கை – மறந்து போன ரகசியங்கள், நாகலட்சுமி சண்முகம், எம்பஸி புக்ஸ், பக்.230, விலை ரூ.250, மண வாழ்க்கையில் பிரச்னைகள் வராமலிருக்க, அப்படி வந்தால் அவற்றைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இந்நூல் பேசுகிறது. விவசாயம், கைத்தொழில், மருத்துவம் என எல்லா அறிவுகளையும் தனிநபர்களின் அனுபவ எல்லைகளுக்குள் மட்டுமே சுருக்கி, அந்த அனுபவங்களின் அடிப்படையில் தனிநபரோடு தொடர்புடைய நபர்கள், குழுக்கள் மட்டுமே குறிப்பிட்ட விஷயங்களில் தேர்ச்சி பெற்று, சிறந்து விளங்குவது நமது மரபு. அதிலும் குடும்ப விஷயங்களில் பகிர்தலின் எல்லையோ […]

Read more

கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும்

கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும், ம.லெனின், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.220, விலை ரூ.222. முழுநேரமும் கணினி முன் அமர்ந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வீடுகளிலும் கூட கணினிகள் நிறைய வந்துவிட்டன. போதாதற்கு மடிக் கணினிகளைச் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்த முடிகிறது. கணினி நமது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் பாதிப்புகள், உடல் வலி, மன இறுக்கம், உடல் களைப்பு ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்களை இந்நூல் விளக்குகிறது. கணினியால் ஏற்படும் […]

Read more

திருவருட்பா பதிப்புச் சோலை

திருவருட்பா பதிப்புச் சோலை, இராம.பாண்டுரங்கன், ஐந்திணை வெளியீட்டகம், பக்.224, விலை ரூ.200. காலந்தோறும் ஆவணப்படுத்துதல் என்பது இன்றியமையாத ஒன்று. வரலாறுகளை ஆவணப்படுத்துதலின் மூலமாகவே பல்வேறு வரலாறுகளை அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் தமிழ் வரலாறுகளின், தமிழ் ஆய்வுகளை ஆவணப்படுத்தலின் தேவையை இந்நூல் வலியுறுத்துகிறது. 1867 முதல் 1972 வரை வெளியான திருவருட்பா பதிப்புகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வள்ளலாரின் "திருவருட்பா' தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய செல்வம். தாயுமானவர், பாரதியார், வானமாமலை, ம.பொ.சி. முதலியோர் பார்வையில் வள்ளலார் குறித்த விரிவான விளக்கம் சிறப்பு. தமிழ் நூல் […]

Read more

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5-எஸ்

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5-எஸ், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம், விலை 500ரூ. 5 -எஸ் என்பது ஒரு சிஸ்டம், பொருட்களை முறையாக வைப்பதுதான் அந்த சிஸ்டம். ஜப்பானிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் முதலிய அனைத்து இடங்களிலும் இந்த முறை அமலில் உள்ளது. அதை இங்கும் அமல்படுத்த வேண்டும் என்ற ஆவலில் வேதா டி.ஸ்ரீதரன் இந்த நூலை எளிய மொழி நடையில் எழுதியுள்ளார். பாராட்டக்கூடிய பயனுள்ள முயற்சி. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

இலக்கியப் பதிவுகளில் மதுரை (இரு தொகுதிகள்)

இலக்கியப் பதிவுகளில் மதுரை (இரு தொகுதிகள்), தொகுப்பாசிரியர்கள் : சு.சந்திரா, ரா.கவிதா, த.சுதந்திரமணி, பாவை பப்ளிகேஷன்ஸ்,  பக்.1208, விலைரூ.900. மதுரையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சார்பில் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை இரு தொகுப்பு நூல்களாக்கி வெளியிட்டுள்ளனர். கற்காலம் முதல் தற்காலம் வரை மதுரையின் வரலாறு, கலை, பண்பாடு, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் தொகுப்பில் ‘வரலாற்றுச் சிறப்பில் மதுரை39‘ […]

Read more

மருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்)

மருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்), கு.கணேசன், காவ்யா, பக்.403, விலை ரூ.400. இன்றைய நவீன உலகில் நோய்கள் அதிகரித்திருக்கின்றன. நோய்களைக் குணப்படுத்தும் நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகளும், கருவிகளும் அதிகரித்திருக்கின்றன. இந்நூல் நாம் அறியாத பல புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள், கருவிகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. மாரடைப்பு நோயைக் குணப்படுத்த ஸ்டென்ட் பொருத்துவார்கள். இந்த ஸ்டென்ட்டைச் சரியாகப் பொருத்துவதற்கு ரத்தக்குழாயின் உட்பகுதியைத் தெரிந்து கொள்ள பயன்படும் ‘ஆப்டிகல் கொஹிரென்ஸ் டோமோகிராபி தொழில்நுட்பம் 39‘ பற்றி இந்நூல் விளக்குகிறது. இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் […]

Read more
1 397 398 399 400 401 505