என் உளம் நெற்றி நீ

என் உளம் நெற்றி நீ, ஞனக்கூத்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 184, விலை 160ரூ. பயப்பட வைக்கும் கவிதைகளின் தொகுப்பு என் உளம் நெற்றி இன்றைக்கு, 43 வருடங்களுக்கு முன்னால், ‘அன்று வேறு கிழமை’ என்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியானது. எழுதியவர் ஞானக்கூத்தன். அந்தப் புத்தகம் ஏறக்குறைய பொன்விழா கொண்டாடவிருக்கும் காலத்தில், இப்போது ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் கவிஞர். தலைப்பு: ‘என் உளம் நிற்றி நீ’. தலைப்பே வாசகருக்கு ஒரு செய்தியைச் சொல்லி நிற்கிறது. ‘இது ‘நெஞ்சுக்குள் நீ’ பாணி கவிதைகள் […]

Read more

நீரிழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள்

நீரிழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள், டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன், சஞ்சீவியார் பதிப்பகம், பக். 272, விலை 250ரூ. எனக்கு டயாபடிக்’ என்று சொல்வது, ‘இன்று வெயில் அதிகம்’ என்பது போல இயல்பான ஒன்றாகி விட்டது. சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்; செய்யக் கூடாது என்பது போன்ற பொதுவான கேள்விகளுக்கு நண்பர்கள் உள்ளிட்டோர், நாம் எதிர்பார்த்ததற்கும் மேலாக, தகவல்கள் தருவர். ஆனால் அப்படியும் சர்க்கரை நோயாளிகளின் சந்தேகம் தீர்ந்திருக்காது. இந்த நூல், அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. அவர்களுக்கு, சுய கட்டுப்பாடும் மனோ […]

Read more

தி கிப்ட்

தி கிப்ட், தமிழில் கு. அழகிரிசாமி, ஆங்கிலத்தில் பட்டு எம். பூபதி, சாகித்ய அகாடமி, பக். 176, விலை 130ரூ. கு.அழகிரிசாமி தமிழில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர். ‘அன்பளிப்பு’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமியின் விருதினைப் பெற்றவர். அந்த தொகுப்பினை பட்டு எம்.பூபதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘ராஜா ஹேஸ் கம்’ கதையில், தன் குழந்தைகளை அரவணைத்துப் போற்றும் ஏழையான தாயம்மாள், தன் குழந்தைகள் வயதை ஒத்த அநாதைச் சிறுவனிடம் அன்பைப் பொழிகிறாள். ‘எங்கள் வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்’ என்று பணக்கார நண்பன் இராமசாமி பீற்றிக்கொள்ளும்போது, […]

Read more

கலைமாமணி வி.சி. குகநாதன்

கலைமாமணி வி.சி. குகநாதன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 224, விலை 200ரூ. திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் வி.சி. குகநாதனின், திரையுலக வாழ்க்கை வரலாற்றை, சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர். இந்தியா – இலங்கை இடையே உள்ள பல தீவுகளில், ஒன்றான, புங்குடு தீவில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக வளர்ந்து, அவரின் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் அளவுக்கு உயர்ந்தவர் குகநாதன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் வந்தவரை, மடைமாற்றிவிட்டவர், அண்ணாதுரை. எம்.ஜி.ஆருக்காக, எடுத்த திரைப்படம், தெலுங்கு திரையுலகில் செய்த சாதனைகள் […]

Read more

காளவாய்

காளவாய், கு.வெ. பாலசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 190, விலை 145ரூ. காலம் காலமாக அச்சத்தின் வழிநடக்கும் அடிமை மனநிலையில் அமைந்த பெண்கள் மற்றும் சமூகத்தின் மவுனத்தை, உறுதியான எதிர்ப்பு மனநிலையோடு, ஆவேசத்தோடு மாற்றம் கொள்ளும் சாத்தியங்களை உருவாக்கி காட்டுகிறது இந்த நாவல். சமூக அநீதிகளுக்கு எதிரான பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் ஒருங்கிணைந்த குரலாக ஓங்கி ஒலிக்கிறது நாவல். நீதியையும், நேர்மையையும் அறவழியில் நிலைநாட்டும் முயற்சியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் போராடுவதும், இறுதியாக உண்மையும் தர்மமும் நிலைநாட்டப்படுவதும் சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்கின்றன. ஆங்காங்கே பளிச் […]

Read more

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், விலை 90ரூ. தமிழ்க் கவிதைகளிலும் கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. ஐயர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ., போன்ற இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். தாகூரின் கவிதைகள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும்  அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தமிழ்மொழிபெயர்ப்பையும் தந்துள்ளதால், தமிழ் வாசகர்கள் பயன் பெறுவார்கள் என்பது உறுதி. […]

Read more

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, முனைவர் எஸ்.எம்.உமர், அல்லயன்ஸ் கம்பெனி, பக். 288, விலை 275ரூ. உயர்ந்த மனநிலையில் எம்.எஸ்., இசை கேட்டு மகிழ்வர் பலர்; இசையாகவே வாழ்ந்தவர் சிலரே. அச்சிலரில், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி குறிப்பிடத்தக்கவர். இந்த நூல் அவர் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதுடன், அவர் பண்பு நலன்களையும் மிக நேர்த்தியாக விவரிக்கிறது. எட்டு வயதில் முன்னறிவிப்பின்றி அரங்கேற்றமான எம்.எஸ்.,சின் மேடைக்கச்சேரி (பக்.35), எம்.எஸ்.,சின் முதல் இசைத்தட்டுகளை எச்.எம்.வி., நிறுவனம் வெளியிட்டது (பக். 41), சென்னை மியூசிக் அகாடமியில் 1932ம் ஆண்டு, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் […]

Read more

நந்தனின் பிள்ளைகள் பறையர் வரலாறு 1850-1950,

நந்தனின் பிள்ளைகள் பறையர் வரலாறு 1850-1950, ராஜ்சேகர் பாசு, தமிழில் அ. குமரசேன், கிழக்கு பதிப்பகம், பக். 560, விலை 500ரூ. அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்த பறையர்கள் வசதியற்றவர்களாக, நிலமற்றவர்களாக இருந்த தமிழக பறையர்கள் விவசாயிகளாக உயர்ந்து, பக்கத்து நாடுகளுக்குக் கூலித் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்து, பிறகு படிப்படியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் கொல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ்சேகர் பாசு. ஆய்வுக்காக அவர் எடுத்துக்கொண்ட காலகட்டம் 1850 முதல் 1956 வரை. ‘சேஜ் இந்தியா’ வெளியிட்டு வரும் நவீன […]

Read more

கரப்பான் பூச்சி நகைக்குமோ?

கரப்பான் பூச்சி நகைக்குமோ?, நீதியரசர் பிரபா ஸ்ரீ தேவன், கவிதா பதிப்பகம், பக். 280, விலை 225ரூ. அனுபவ அறிவும் அக்கறையும் ‘எனக்கு ஏதாவது பெருமை இருக்குமானால், எனது எண்ணத்தில் தெளிவும், செயல்பாடுகளில் நேர்மையும், தீர்ப்புகளில் நியாயமும் இருக்குமானால், அதற்குக் காரணம் நான் வி.கிருஷ்ணஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி என்பது தான்’ (பக்.80) என்று பெருமையுடன் கூறும் நூலாசிரியர், தினமணி நாளிதழில் எழுதிய 45 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘அவர்கள் குரல்களைக் கேளுங்கள். அவை நம்பிக்கையின் சவங்களுக்கு ஊதும் சங்கா இல்லை சமூகத்தை […]

Read more

சிதைந்த கூடு முதலிய கதைகள்

சிதைந்த கூடு முதலிய கதைகள், ரவிந்தீரநாத் தாகூர், தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி, சாகித்ய அகாடமி வெளியீடு, பக். 288, விலை 175ரூ. தாகூர் நல்ல படைப்பாளி. கவிதை, கதை, நாடகம் போன்றவற்றில் முத்திரை பதித்தவர். அவர், இந்த சிறுகதைத் தொகுதியில், பெண்கள் தம் வாழ்க்கைப் போக்குகளில் எதிர்கொள்ளும் கொடுமைகள், துயரங்கள், தன்னிச்சையான மனநிலை, இவற்றோடு லட்சியத்தாகம் முதலானவற்றை வெளிப்படுத்தியுள்ளார். பெண்களை மையப்படுத்திய இச்சிறுகதைகள் யதார்த்தமான தளத்தில் நகர்கின்றன. தாகூரின் கதைகளில் பெண்களுக்கான பரிவும், பாசமும் பல கதைகளில் தென்படும். இந்நூலில் அமைந்துள்ள பத்துக் கதைகளும் […]

Read more
1 479 480 481 482 483 505