கவி கா.மு.ஷெரீப் கட்டுரைகள்

கவி கா.மு.ஷெரீப் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 911, விலை  ரூ.900. கவி.கா.மு.ஷெரீப் எழுத்தின் மீது கொண்ட தாகத்தால் “ஒளி’, “தமிழ் முழக்கம்’, “சாட்டை’, “திங்கள்’ ஆகிய இதழ்களை அவர் நடத்தினார். அவற்றில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். “தமிழரின் நெறி”, “ஒளி தலையங்கங்கள்’, “தமிழரசுக் கழகம் ஏன் வந்தது?’, “இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’, “இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?’, “பத்ர் போரின் விளைவுகள்’, “வள்ளல் சீதக்காதி வரலாறு’ ஆகியவற்றுடன் புதுவை வானொலியில் தொடர்ந்து இவர் நிகழ்த்திய சீறாப்புராணச் சொற்பொழிவுகளும் இதில் அடக்கம். […]

Read more

உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட)

உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட), மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், விலை 150ரூ. சித்த மருத்துவர் என்ற அடையாளத்தில் இருந்து சமூக மருத்துவர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர் கு. சிவராமன். சித்த மருத்துவத்தை மற்றவர்களைப் போல இவரும் முதலில் ஆர்வமாக, தொழிலாகப் படிக்கத் தொடங்கி இருப்பார். ஆனால், அவர் பார்த்த சமூகம் அவரை அப்படி இருக்க விடவில்லை. தொழிலைத் தாண்டி வரவைத்தது. வந்த சிவராமன், இன்றைய தமிழ்ச் சமூகத்துக்குச் செய்துவரும் சேவை என்பது இன்னொரு கால் நூற்றாண்டுகள் கழித்துத்தான் முழு முக்கியத்துவத்தை அடையும். […]

Read more

பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, வெ.சாமிநாத சர்மா,  இலக்கியச் சோலை, பக்.80, விலை ரூ.60 சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்திய, ஐரோப்பிய சக்திகளால் தொடங்கி வைக்கப்பட்டது பாலஸ்தீனப் பிரச்னை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனத்தில், உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து யூதர்களைக் கொண்டு வந்து குடியமரச் செய்தார்கள். குடியேறிய யூதர்கள் சொந்த மண்ணின் மக்களை அகதிகளாக்கினர். அவர்களின் உரிமைகளைப் பறித்தனர். இழந்த உரிமைகளையும் நிலங்களையும் பெறுவதற்காக பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னையை 75 ஆண்டுகளுக்கு முன்பே நூலாசிரியர் வெ.சாமிநாத […]

Read more

மதுரை அரசியல்

மதுரை அரசியல்,  ப. திருமலை, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,  பக்.336, விலை ரூ.250. மதுரையைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமெனில் ராணி மங்கம்மாளையும், காந்தியின் அரை ஆடைக்கான வரலாற்றையும் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். இந்நூலில் அவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்புக்குரியது. நூலாசிரியர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால், தன் கண் முன்னே நிகழ்ந்த பல சம்பவங்களை அற்புதமாக விவரித்திருக்கிறார். குறிப்பாக அரசியல் கொலை, கூலிப்படை கலாசாரம் தொடர்பாக எழுதும்போது அவர்களுடைய சங்கேத வார்த்தைகளைக் கூட எழுதியிருக்கிறார். மதுரை ஆலயப் பிரவேசம், கக்கன் வரலாறு குறித்த பதிவுகள் அருமை. மௌலானா […]

Read more

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும், பிரேம், ரமேஷ், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 120, விலை 100ரூ. இசைக்கும் சமூகத்துக்குமான உறவு, இசைக்கும் கலாசாரத்துக்குமான உறவு, காலந்தோறும் இசை மாறி வந்த விதம் ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. இளையராஜாவின் இசைப் பங்களிப்பு, அவர் உருவாக்கியவை, சாதித்தவை, நாட்டுப்புற இசையை பிற இசையமைப்பாளர்கள் பயன்படுத்தியதற்கும் இளையராஜா பயன்படுத்தியதற்குமான வேறுபாடு, அவரின் தனித்துவம் பற்றியெல்லாம் இன்னொரு கட்டுரை சொல்கிறது. இளையராஜா பற்றி 2002 ஆம் ஆண்டு அ. மார்க்கஸ், முன் வைத்த பார்வைகளை விமர்சனம் செய்யும் கட்டுரையும் […]

Read more

இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள்

இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், பக். 160, விலை 125ரூ. 2012-2015ஆம் ஆண்டு காலகட்டத்தில் தினமணி, ஜனசக்தி, சொல்வனம் வலைப்பின்னல் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பனை, சந்தனம், யூகலிப்டஸ், செம்மரங்கள் குறித்த பல்வேறு வகையான செய்திகளை சங்க காலம், தொட்டு தற்காலம் வரை புள்ளி விவரங்களுடனும், அறிவியல் பூர்வமாகவும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இயற்கை வளங்களையும், சுற்றுச்சுழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், இயற்கையோடு ஒன்றி மனிதன் வாழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. 1972-இல் பிரேசிலில் தொடங்கியு […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே

காஷ்மீர் இந்தியாவுக்கே, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 304, விலை 250ரூ. இந்திய பாகிஸ்தான் பகைக்கு முக்கிய காரணமே காஷ்மீர் பிரச்னைதான். இதை வைத்துத்தான் இந்தியா மீது நேரடியான மற்றும் மறைமுகமான போர்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்த காஷ்மீர் பிரச்னை எப்படி உருவானது, இது தொடர்பான இந்திய தரப்பு நியாயங்கள் என்ன, இதில் பாகிஸ்தானின் சதித்திட்டங்கள், அத்துமீறல்கள், ஆக்ரமிப்புகள், போர்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், இந்திய அரசியல்வாதிகளின் தவறுகள், பிரிட்டிஷாரின் தந்திரங்கள், ஐ.நா.சபை விவாதங்கள், அதன் தீர்மானங்கள், ஆர்ட்டிகிள் 370… […]

Read more

அப்துல் கலாம் சாதிக்கலாம்

அப்துல் கலாம் சாதிக்கலாம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 176, விலை 140ரூ. ‘பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற தனது கூற்றுக்கு, தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். படகோட்டியின் மகனாகப் பிறந்து பாரதத்தின் முதல் குடிமகனாக உயர்ந்த இந்த மாபெரும் தலைவர், தன் நலன் கருதாது தேச நலனையே உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்தவர். தனது மறைவால் தமிழகத்தை மட்டுமன்றி, பாரதத்தின் குக்கிராமம் வரை பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி […]

Read more

தலைமைப் பண்புகளின் பேராசான் லால் பகதூர் சாஸ்திரி

தலைமைப் பண்புகளின் பேராசான் லால் பகதூர் சாஸ்திரி, அனில் சாஸ்திரி, தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன், விஸ்டம் வில்லேஜ், பக். 274, விலை 245ரூ. பிரதமர் கார் வாங்கிய கண்ணீர் கதை! நிர்வாகக் குறைபாடுகளுக்காகவும், ஊழல் விவகாரங்களுக்காகவும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை இங்கே காலம் காலமாக வைக்கப்படுகின்றது. அமைச்சர்கள் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கும் பழக்கமில்லை. என்பது ஒரு தற்காப்பு விதி. இதில் முக்கியமான விதிவிலக்கு, லால் பகதுார் சாஸ்திரி. கடந்த, 1956, நவ., 22-ம் தேதி, சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டது […]

Read more

வலம்

வலம், விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், பக். 336, விலை 310ரூ. அழகைப் புதைத்து எழுந்த நகரத்தின் கதை சென்னை நகரின் உருவாக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட விலைதான் ‘வலம்’ நாவலின் பின்னணி. நரிகளுக்கும், சென்னை கிராமப்புறங்களுக்கும் இருந்த உறவையும், அவை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட விதத்தையும் சுவாரசியமாகப் பேசுகிறது ‘வலம்’. கதை, நரிமேட்டுச் சித்தரில் தொடங்குகிறது. நரிகளுக்கும், இயற்கைக்கும், சுற்றி வாழ்ந்த மக்களுக்குமான உறவைப் பேசி, 18ம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. நரிமேடு தகர்க்கப்படுகிறது. நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. சென்னைப் பட்டணம் எழுகிறது. இதன் பிறகு, 19ம் நூற்றாண்டில் […]

Read more
1 478 479 480 481 482 505