திருப்புகழில் திருமால்

திருப்புகழில் திருமால், டாக்டர் எஸ். ஜெகத் ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம் வெளியீடு, பக். 128, விலை 80ரூ. திருப்புகழ், முருகப் பெருமான் மீது பாடப்பட்ட கவியானாலும், அதில், கணபதி, சிவன், அம்பிகை, சூரியன், திருமால் ஆகிய எல்லா கடவுளுக்கும் இடமுண்டு. ‘முத்தைத்தரு’ என்ற முதல் பாடலிலேயே, ராமன் மற்றும் கண்ணனை, அருணகிரிநாதர் போற்றுவதை, நூலாசிரியர் மிக அழகாக விளக்குகிறார். பாற்கடல் வாசம், பாம்பணை நேசம், ராமனின் வீரம், கண்ணனின் கருணை, மகாலட்சுமியின் மாண்பு, கஜேந்திரனுக்கு அருளியது, அனுமனது வீரம், ஆழ்வாரின் சொல் கேட்டு […]

Read more

ஜெயகாந்தனும் நானும்

ஜெயகாந்தனும் நானும், தேவபாரதி, கலைஞன் பதிப்பகம். ஜெயகாந்தனின் காலம் பொற்காலம்! தேவாரதி எழுதிய ‘ஜெயகாந்தனும் நானும்’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜெயகாந்தன் என்ற ஆளுமை, தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமானவர். அவர், மற்றவர்களை போல அல்லாமல், அரசியல்வாதியாக, இயக்குனராக, பேச்சாளராக, எழுத்தாளராக புகழ் பெற்றவர். தேவபாரதி, ஜெயகாந்தனுடன் பழகியபோது நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வுகளை, நாவல்போல, சுவைபட இந்த நூலில் கூறுகிறார். கண்ணதாசனின் ‘வனவாசம்’ மிகவும் வெளிப்படையாக இருக்கும். அது, ரகசியமான அழகியலோடு பேசுகிறது. ஒருமுறை தேவபாரதி, ஜெயகாந்தனின் […]

Read more

வாதி பிரதிவாதி நீதி

வாதி பிரதிவாதி நீதி, வழக்கறிஞர் ந. இராஜா செந்தூர் பாண்டியன், குமுதம் பு(து)த்தகம், பக். 296, விலை 350ரூ. நீதி இலக்கியத்துக்கு ராஜபாட்டை! ‘இந்திய அரசியலமைப்பு சட்டம்’ எனப்படும், நமது நாட்டின் அதிகாரப்பூர்வமான சட்ட வேதத்தின் சாரமாக, சமீபகால தமிழ் வரலாற்றில் கிடைக்காத பொக்கிஷமாக அமைந்திருக்கிறது வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன் எழுதிய, ‘வாதி, பிரதிவாதி, நீதி!’ நூல். ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் தொடராக வெளிவந்து, தற்போது சில நாட்களுக்கு முன் நூல் வடிவம் பெற்றது. சமீபத்திய சென்னை புத்தக கண்காட்சியில், அதிக பிரதிகள் […]

Read more

கவிஞர் அறை சுஜா – கோபி

கவிஞர் அறை சுஜா – கோபி, கோபி கண்ணதாசன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 112, விலை 90ரூ. கண்ணதாசனின் மட்டுப்பட்ட மதுப்பழக்கம் பிரபலமான மனிதர்களின் சாதாரண விஷயங்கள் கூட பதிவாகி விடுகின்றன. சாதாரணமான மனிதர்களின் அபூர்வமான விஷயங்கள் கூடப் பதிவாவதில்லை. இது ஒரு சமூக முரண். இந்தச் சூழலில், கவிஞர் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் சேர்ப்பது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கவிஞரின் உணவுப் பழக்கம், மட்டுப்பட்ட மதுப் பழக்கம் எனப் பல சுவாரசியமான […]

Read more

பிம்பச் சிறை, (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்)

பிம்பச் சிறை, (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்), எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை, விலை 225ரூ. “மூன்றெழுத்தில் மூச்சு இருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்” என்று பாடியவர் எம்.ஜி.ஆர். அவரது மூச்சுக்காற்று முடிந்தபிறகும் அவரைப் பற்றிய பேச்சு மட்டும் குறையவே இல்லை. இன்னும் சொன்னால், அவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். ‘எம்.ஜி.ஆருக்கு சாவு கிடையாது’ என்பது கிராமத்து ஐதீகங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. எம்.ஜி.ஆரைப் போல எத்தனையோ கதாநாயகர்களைத் தமிழ் சினிமா பார்த்துவிட்டது. […]

Read more

கிளாரிந்தா

கிளாரிந்தா, அ. மாதவையா, தமிழில் சரோஜினி பாக்கியமுத்து, அடையாளம், பக்.284, விலை ரூ.230. இந்த புதினம், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் வரலாற்று நாவலாகும். 1978-இல் முதல் பதிப்பாக கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் சார்பில் இந்நாவல் வெளியிடப்பட்டது. அதன் மறுபதிப்பு இந்நூல். கி.பி.1746-ஆம் ஆண்டு தொடங்கி 1806-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், கர்நாடக நவாபின் வாரிசு மயூஸ்கான் தலைமையில் இந்தியப் படைக்கும், என்ஜினியர் பராடிஸ் தலைமையில் பிரெஞ்சுப் படைக்கும் நடந்த கடும் போருடனும், தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் ஆட்சியின் பின்னணியில், “கிளாவரிந்தாபாய்’ […]

Read more

தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர்.இரகுநாதன்,  ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக்.240, விலை  ரூ.150. தமிழ் இதழியல் குறித்து பல நூல்கள் வெளிவந்திருப்பினும், இந்த நூல் எழுத்தின் வரலாற்றில் தொடங்கி இன்றைய இதழியல் போக்குவரை அலசி ஆராய்ந்திருப்பது தனிச்சிறப்பு. விடுதலைப் போரில் இதழ்களின் பங்களிப்பு முதல் பத்திரிகையாளர்களின் சர்வதேச ஒருமைப்பாடு தினம் வரையிலான 20 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளன. தமிழ் இதழியல் முன்னோடிகளான திரு.வி.க., பாரதி, வ.உ.சி., சுப்பிரமணியசிவா, தினமணி ஏ.என்.சிவராமன், ராஜாஜி, புதுமைப்பித்தன் என அனைவரைப் பற்றிய பல அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. மது […]

Read more

கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்

கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர், இரா. மோகன், வானதி பதிப்பகம், பக்.208, விலைரூ.150. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட குறள், இந்தக் கணினி யுகத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில், அறிவுலகில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் குறள் உரக்கப் பேசுகிறது. குறிப்பாக, அதிகமாகவும், பரவலாகவும் விவாதத்துக்கு உள்படுத்தப்படும் “ஆளுமை வளர்ச்சி, மனித வள மேம்பாடு, விழுமியக் கல்வி (Value Education), தொடர்பியல் திறன்கள், உடன்பாட்டுச் சிந்தனை’ ஆகியவற்றுக்கு திருக்குறள் கருத்துகள் எவ்வாறு வலுசேர்க்கின்றன என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றன மேற்கண்ட தலைப்புகளிலான கட்டுரைகள். […]

Read more

மைதானம்

மைதானம் (விளையாட்டுக் கட்டுரைகள்) , சந்திரா மனோகரன், ஓவியா பதிப்பகம், பக்.144, விலை  ரூ.100. கிரிக்கெட்டில் தொடங்கி, கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, தடகளம், செஸ், கார் பந்தயம் என பல்வேறு விளையாட்டுகளை பற்றி இந்நூல் அலசுகிறது. மேற்கண்ட விளையாட்டுகளுடன் தொடர்புடைய உலகக் கோப்பைகள், ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி தொடர்பான விவரங்கள், அதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களைப் பற்றியெல்லாம் நூலாசிரியர் விவரித்திருக்கிறார். டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, தமிழகத்தைச் சேர்ந்த கார் பந்தய […]

Read more

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை , ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்,  தமிழில் – அனிதா பொன்னீலன், புலம் வெளியீடு,  பக்.208, விலை  ரூ. 170. போர்க்களச் சூழலில், 13 வயதுச் சிறுமி எழுதிய நாட்குறிப்புகள் தாம் இந்நூல். அவர், ஸ்லெட்டா ஃபிலிப்போவிக். யுகோஸ்லாவியாவிலிருந்து விடுதலையடைந்த போஸ்னியா, ஹெர்ஸகோவினா என்ற சின்னஞ்சிறிய நாடுகள் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என விரும்பி செர்பியர்கள் நடத்திய போர்தான் நாட்குறிப்பின் அடிப்படை. 1991 முதல் 1993 வரை நடந்த போரில் ஏற்பட்ட துயர அனுபவங்கள்தாம் […]

Read more
1 477 478 479 480 481 505