திருநெல்வேலி-நீர்-நிலம்-மனிதர்கள்

திருநெல்வேலி-நீர்-நிலம்-மனிதர்கள், இரா.நாறும்பூநாதன், சந்தியா பதிப்பகம், பக். 270, விலை ரூ.270. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மண்ணின் சிறப்புகள் பற்றிய 41 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு முதல் குற்றால குறவஞ்சி வரை தெரிந்த விஷயங்கள் பற்றிய தெரியாத விவரங்களை சுவாரசியமாகத் தந்திருப்பது சிறப்பு. தஞ்சையில் பிறந்து திருநெல்வேலிக்கு வந்து ஏழை, எளிய மக்களுக்கு கல்விக் கொடையளித்த கிளாரிந்தா, ஆசியாவிலேயே பெரிய கண் பார்வையற்றோர் பள்ளியை பாளையங்கோட்டையில் தொடங்கிய ஆஸ்க்வித் ஆகியோரின் வரலாறு, நெல்லைச் சீமையில் 19-ஆம் நூற்றாண்டில் பல்வேறு கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட […]

Read more

திருக்கோவையார்

திருக்கோவையார், பேரின்பப் பொருள் விளக்கம், எட்டாம் திருமுறை, இரண்டாம் பாகம்,  அ.ஜம்புலிங்கம், இந்துமதிபதிப்பகம், பக்.408,  விலை ரூ.600. பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் இடம்பெறும் திருவாசகம் பேசப்படும் அளவுக்குத் திருக்கோவையார் பேசப்படவில்லை என்பதற்குக் காரணம், அது ஐந்திணை ஒழுக்கம் பற்றிய சிற்றிலக்கிய நூல் என்ற தவறான கருத்து மக்களிடம் நிலவி வருவதால்தான். ஆனால், சிற்றிலக்கியத்தின் மூலம் மாணிக்கவாசகர் பேரின்ப- மெய்ஞ்ஞான தத்துவங்களையே சொல்லியிருக்கிறார், அது பேரின்பப் பெருநூலே என்று நுண்மாண்நுழைபுலம் கொண்டு அதை ஆய்ந்த சைவப் பேரறிஞர்களான யாழ்ப்பாணம் நவநீத கிருஷ்ண பாரதியார், கா.சு.பிள்ளை, […]

Read more

பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமை நலம்

பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமை நலம், முதுமுனைவர் பால் வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.150 அறிவியக்க பேரவை தலைவராகவும், டில்லி பல்கலைக் கழக தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றியவர் பேராசிரியர் சாலை இளந்திரையன். அறிவியல் ரீதியான சிந்தனையை வளர்க்க முயன்றனர். அவரது இணையர் பேராசிரியை சாலினி இளந்திரையனுடன் இந்த பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்களின் தமிழ் மற்றும் அறிவியக்கத் தொண்டு மற்றும் வாழ்க்கை பற்றி எடுத்துக் கூறும் நுால். சிறு கிராமத்தில் பிறந்து, கல்வியால் உயர்ந்தவர். உரைவீச்சு என்ற அறிவு எழுச்சிக் கவிதைகள் […]

Read more

முடங்கலில் மலர்ந்த மலர்கள்

முடங்கலில் மலர்ந்த மலர்கள் (வாழ்வியல் கட்டுரைகள்), தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக்.208, விலை ரூ. 200. பொதுமுடக்க காலத்தில் எழுதப்பட்ட இருபத்தெட்டு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பிரபல ஆளுமைகள் குறித்து 13 கட்டுரைகளும், திருக்குறள், சைவம் – வைணவம் குறித்த பெருமைகளைவிளக்கி ஒரு கட்டுரையும், தனிப்பாடல்கள், தாய்மை, ரமலான் ஆகியவை குறித்த 5 கட்டுரைகளும் தவிர, மற்றவை சமூகம் சார்ந்தவை என்று, இந்நூலின் வாழ்த்துரையில் உச்சநீதிமன்ற நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் பட்டியலிட்டுள்ளார். இது தவிர, இக்கட்டுரைகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் நூலாசிரியர் உழைப்பு தெரிவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். […]

Read more

எனக்கு மட்டுமே தெரிந்த எம்ஜிஆர்

எனக்கு மட்டுமே தெரிந்த எம்ஜிஆர்.,  ஜானகி எம்ஜிஆர்., தாய் வெளியீடு,   பக்.152,  விலை குறிப்பிடப்படவில்லை;  தாய் வார இதழில் எம்.ஜி.ஆர்.குறித்து அவரது மனைவி ஜானகி எழுதிய தொடரின் தொகுப்பே இந்நூல். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் குறித்து எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் எம்ஜிஆரின் மனைவி என்கிற முறையில் ஜானகி எழுதியுள்ளதால் உணர்வுபூர்வமாக மட்டுமல்லாது பல்வேறு அரிய தகவல்கள், புகைப்படங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கர்நாடக இசையை திரைப்படங்களில் ஒலிக்கச் செய்த பாபநாசம் சிவனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவரது தொண்டை பாராட்டி நிதி […]

Read more

தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்

தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம், முனைவர் தேவிரா, நந்தினி பதிப்பகம், விலைரூ.300. தமிழ் இலக்கிய வரலாற்று செய்திகளை சிறிய தகவல்களாக தொகுத்து கூறும் நுால். பத்தி அமைப்புக்கு உட்படாமல் தகவல் அமைப்புடன் உள்ளது. ஒரு தகவல் இரண்டு அடிக்குள் சொல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு குடிமைப்பணி தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணி, பேராசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு போன்றவற்றுக்கு தயாராவோருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில், இலக்கியங்கள், இலக்கணங்கள், நாட்டுப்புறவியல், பிற்கால புலவர்கள், உரையாசிரியர்கள், உரைநடை, திறனாய்வு, பெண்ணியம், இதழ்கள், இயக்கங்கள், மாநாடு, […]

Read more

மாசாணியம்மன் வழிபாடு

மாசாணியம்மன் வழிபாடு, தே.ஞானசேகரன், காவ்யா, விலைரூ.170 கோவை சொக்கம்புதுாரில் வாழும் தேவேந்திரர்களின் குலதெய்வம் என்னும் துணைத் தலைப்புடன் வெளிவந்திருக்கும் நுால் மாசாணியம்மன் வழிபாடு. மாசாணியம்மன் வழிபாடு பற்றி தெரிவிப்பதற்கு முன், பழங்காலம் முதல் இருந்து வரும் சிறுதெய்வ வழிபாட்டையும் தொன்மத்தையும் விளக்குகிறது. பெருந்தெய்வ வழிபாட்டிற்கும், சிறுதெய்வ வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளையும், தெய்வ நம்பிக்கையுடன் கூடிய சடங்குகளின் விளக்கங்களையும் வரையறுக்கிறது. கொங்குநாட்டில் வாழும் தேவேந்திர குல வேளாளர் வரலாற்றைத் தெளிவுபடுத்துகிறது. மாசாணியம்மன் தொடர்பான கதைகளையும், கதைப் பாடல்களையும், போற்றிப் பாடல்களையும் தேவைப்படும் இடங்களில் எல்லாம் பயன்படுத்தியுள்ளது. […]

Read more

தூண்டிலில் சிக்கிய கிளிஞ்சல்கள்

தூண்டிலில் சிக்கிய கிளிஞ்சல்கள், தொகுப்பு ஆசிரியர் மு.முருகேஷ், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. கவிக்கோ பிறந்த நாளையொட்டி நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட 100 கவிஞர்கள் எழுதிய 500 ஹைக்கூ கவிதைகள் இந்த நூலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நூலின் தொகுப்பு ஆசிரியர் மு.முருகேஷ், 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானிய மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் உருவான ஹைக்கூ கவிதைகள், பின்னர் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை ஆய்வு நோக்கில் விரிவாகச் சொல்லி இருக்கிறார். அனைத்து ஹைக்கூ கவிதைகளும், கருத்தை அழகாகச் சொல்வதால், […]

Read more

அபூர்வ சக்திகள் அமானுஷ்ய ஆற்றல்கள்

அபூர்வ சக்திகள் அமானுஷ்ய ஆற்றல்கள், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 200ரூ. அபூர்வ மனிதர்கள் சிலரிடம் காணப்பட்ட அமானுஷ்ய சக்திகளை இந்த நூல் பதிவு செய்து இருக்கும் அதே நேரத்தில், இந்த நூல் அதீத புலனாற்றலைக் கற்றுக் கொள்வதற்கான கையேடு அல்ல என்பதையும் சொல்கிறது. இந்த நூலில் காணப்படம் ஆச்சரியமான அனுபவங்களும், விலங்குகளின் அதீதப்புலன் உணர்வுத்திறன் உள்ளிட்ட தகவல்களும் வியப்பை அளிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 31/10/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031469_-15/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

கர்ஜனை

கர்ஜனை (பாகம் – 1) (பாகம் 2), இளையவேள் ராதாரவி, நக்கீரன் பதிப்பகம், விலைரூ.560 நடிகர் ராதாரவியின் வாழ்க்கை சம்பவங்களை சுவாரசியமாகக் கூறும் நுால். இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. ‘நக்கீரன்’ இதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. பிரபல நடிகர் எம்.ஆர்.ராதா, சிறையில் இருந்து விடுதலையானதில் இருந்து துவங்குகிறது. தகவல்கள் பரபரப்பு சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. இயல்பான செய்தி மொழியில் மொத்த வாழ்க்கை வரலாறும் சொல்லப்பட்டு உள்ளதால், வாசிக்க சுலமாக உள்ளது. முதல் புத்தகம் 60 இயல்களைக் கொண்டுள்ளது. இரண்டாவது பாகம், துணிவே துணை என நம்பிக்கை […]

Read more
1 47 48 49 50 51 505