தீண்டாமைக்குத் தீர்வு என்ன?

தீண்டாமைக்குத் தீர்வு என்ன?, ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பதிப்பகம், பக். 96, விலை 60ரூ. இந்தியாவில் தீண்டாமை என்பது நீண்டகால விவாத பொருளாக இருந்துவருகிறது. அது இந்து மதத்தோடு இணைத்து பார்க்கப்படுகிறது. உண்மையில், இந்து மதத்தில் தீண்டாமை இல்லை. ஞானிகள் அதை அங்கீகரிக்கவில்லை என, ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த கீழ்குலத்தவராக கருதப்பட்ட மாறநேர் நம்பியின் இறுதிச் சடங்குகளை செய்த பெரிய நம்பி, அவரை கடவுளான நம்பெருமாள் அங்கீகரித்தது, நந்தனார் வரலாறு, திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் வரலாறு, ஆதிசங்கரர் – புலையன் விவாதம், பல்வேறு ஆதாரங்களை நூலாசிரியர் […]

Read more

ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ஸ்ரீராமானுஜ தாஸர்கள்

ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ஸ்ரீராமானுஜ தாஸர்கள், முனைவர் இரா. அரங்கராஜன், பக். 188, விலை 150ரூ. ஸ்ரீ வைஷ்ணவம் எனும் விசிஷ்டாத்வைதம், ராமானுஜரால் புத்துயிர் அளிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிலை பெற்றுள்ளது. அதற்கு அடிப்படையாக இருந்த, கைங்கர்யத்தில் ஊன்றிய ஸ்ரீவைஷ்ணவ தாசர்கள், 50பேரின் பெருமைகளைக் கூறுகிறது இந்த நூல். கர்மயோகிகளுக்கும், கைங்கர்ய நிஷ்டர்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுவதும் (பக். 3), ‘ஏறுதிருவுடையான்’ என்ற ஆண்டாள் பாசுரத்தின் சொல்லிற்கு, சரியான பொருள் விளக்குவதும் (பக். 30), தாழ்த்தப்பட்டவரான மாறநேர் நம்பியின் உயர்குணங்களை விளக்குவதும் […]

Read more

O.C. என்ற C.M.

O.C. என்ற C.M., மலையாள மூலம் பி.டி.சாக்கோ(குஞ்சூஞ்சு கதைகள்), தமிழில் ஜி.வி.ரமேஷ் குமார், தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு, பக். 80, விலை 50ரூ. கிட்டத்தட்ட பக்கத்து வீட்டுக்காரர்! ‘உம்மன் சாண்டியும் கலாமும் நீண்ட கால நண்பர்கள். கலாம் இறந்தபோது, உம்மன் சாண்டியும், கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனும் ஒரே ஹெலிகாப்டரில் வந்து, அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.’ இந்த நுாலின், 62ம் பக்கத்தின் கடைசிப் பகுதியில் வரும் இந்தப் பகுதிதான் இந்தப் புத்தகத்தின் செய்தியாக இருக்கும் என, நம்புகிறேன். இந்தச் செய்தி மாற்றுக் […]

Read more

உங்களில் ஒருவன்

உங்களில் ஒருவன், மாமணி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. வறுமையில் வென்று, முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு தூண்டுதலாய் இருக்கும் தன் வரலாற்று நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 27/4/16.   —- முதல் மனித வெடிகுண்டு: பி. சந்திரசேகரன், தமிழில் ராஜசியாமளா, குமுதம் பு(து)த்தகம், பக். 272, விலை 580ரூ. பெண் ஒருத்தி மனித வெடிகுண்டாக மாறி உலகத் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்காந்தியைக் கொலை செய்த பின்னணியை அலசி ஆராய்ந்து உண்மையை உலகுக்கு உணர்த்திய முதல் நூல். இந்த வழக்கில் தடயவியல் […]

Read more

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்திபெற்ற திருத்தலங்களும்

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்திபெற்ற திருத்தலங்களும், S.L.S.பழனியப்பன், S.L.S. பதிப்பகம், பக். 74, விலை 60ரூ. செட்டிநாட்டில் உள்ள பிரசித்திபெற்ற கோயில் தலங்கள், அரண்மனை, அழகிய வீடுகள், அருங்காட்சியம் போன்ற அனைத்தையும் விவரித்து, அவற்றை காணச்செல்வோருக்கு உதவும் வகையில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக விளங்கும் நூல். நன்றி: குமுதம், 27/4/16.   —- அக்னிக் குஞ்சுகள், ஏம்பல் ராஜா, பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 232, விலை 150ரூ. சமுதாயத்திற்கான குரலாக ஒலிக்கும் கவிதைகளின் தொகுப்பு இவை. சமூக விடுதலையில் கவிஞருக்குள்ள அக்கறை வெளிப்படும் […]

Read more

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு, ச. சுஜாதா, சேகர் பதிப்பகம், பக். 240, விலை 180ரூ. நூலின் முன்னுரை, குமரி மாவட்டத்தின் பூகோளம், வரலாறு, நாடார் மக்கள் சமூக வரலாறு, மொழியின் இயல்பு போன்றவற்றை விளக்குவதாகவும், ஆய்வு அடிப்படையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. ‘கன்னியாகுமரி மாவட்ட மொழிச்சூழல்’ என்னும் தலைப்பில் அங்கு வழங்கும் தமிழ், மலையாளம், சில பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் போன்றவற்றின் மொழி இயல்புகள் விளக்கப்படுகின்றன. ஹசிறிஸ்தவ நாடார் வட்டார வழக்கின் இயல்புகள்’ என்னும் தலைப்பில், மொழி இயல்புகள், இரட்டை வழக்கு, வட்டார […]

Read more

ஆயுஷ் குழந்தைகள்

ஆயுஷ் குழந்தைகள் (சித்த மருத்துவ குழந்தை வளர்ப்பு முறைகள்), டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ், ஷன்லாக் பப்ளிகேஷன்ஸ், பக். 620, விலை 390ரூ. குழந்தைகளை பராமரிக்க உதவும் மருத்துவ களஞ்சியமாக, முழு தொகுப்பாக இந்த பெரிய நூலை நூலாசிரியர் எழுதியுள்ளார். கரு உருவாவதிலிருந்து மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு முறைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், கற்றல் குறைபாடுகள், நோய் தடுப்பு முறைகள், குழந்தைகளுக்காக விற்கப்படும் பொருட்கள், அவற்றின் பாதுகாப்புத் தன்மை, குழந்தைகளின் சட்ட உரிமைகள் என, அனைத்தையும் விளக்கி உள்ளார். ஒவ்வொரு பக்கத்திலும், […]

Read more

இதயமே இதயமே

இதயமே இதயமே, டாக்டர் எஸ். தணிகாசலம், தொகுப்பு: அகில் அரவிந்தன், குமுதம் பு(து)த்தகம், பக். 64, விலை 70ரூ. பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் இதயத்திற்கு நேர்கின்ற சிக்கலைப்பற்றியும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளையும் எளிய முறையில் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 27/4/16.   —- திருக்குறள்: தமிழர்களின் அறிவுக் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், பக். 280, விலை 175ரூ. திருக்குறளின் தமிழ் மூலப்பாடலுடன் ஆங்கில உரையாக்கம், தமிழ் தெரிந்த பிறமொழியினரும் திருக்குறளை எளிதில் அறிந்துகொள்ள இந்த உரை உதவும். நன்றி: […]

Read more

சொக்கப்பனை

சொக்கப்பனை, கடங்கநேரியான், வலசை பதிப்பகம், விலை 60ரூ. அறவெழுச்சிக் கவிதைகள் கவிஞர் கடங்கநேரியானின் மூன்றாவது தொகுப்பாக வெளிவந்திருக்கும் சொக்கப்பனையில் முந்தைய இரண்டு தொகுப்புகளையும் விட கவிமொழியில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். தான் வாழும் காலத்தில் நடக்கும் சமகால அரசியலை, நிகழ்வுகளை முடிந்த அளவுக்கு கவிதைகளில் படைத்திருப்பதாகச் சொல்லும் இவரது கவிதைகளில் வாழ்நிலத்தின் கூறுகள் நிரம்பிக்கிடக்கின்றன. மேகாற்றில் வேப்பம்பூ உதிரும் கிணற்றைக் கொண்டவள் நீ! அண்டங்காக்கைகள் அறிந்தே அடைகாக்கும் குயிலின் முட்டைகளை! மின்னல் கள்ளருந்திச் சென்ற மொட்டைப்பனை! இவ்வாறாக தெறிக்கும் வாழிடம் சார்ந்த காட்சிகளின் ஊடே […]

Read more

M.G.R. எழுத்தும் பேச்சும்

M.G.R. எழுத்தும் பேச்சும், தொகுப்பாசிரியர் வே. குமரவேல், முல்லை பதிப்பகம், விலை 250ரூ. எழுத்தும் பேச்சும் எம்.ஜி.ஆர். இன்று வழிபடப்படும் ஓர் அரசியல் பிம்பம். அவரது பேச்சும் எழுத்தும் என்று எதுவும் இன்றைய இளைஞர்கள் அறிய அரசியல் அரங்கில் முன்வைக்கப்படுவதில்லை. இந்த இடைவெளியை நிரப்பக்கூடியது எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும் என்கிற இருபாகமாக வந்திருக்கும் தொகுப்பு. எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்குவதற்கும் மன்னும் பின்னுமாக நிறைய நேர்காணல்கள், கட்டுரைகள், அறிக்கைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்பாடலில் இருந்திருக்கிறார். வெறுமனே தன்னுடைய திரைபிம்பம் எழுப்பித் தந்த கவர்ச்சியை மட்டும் […]

Read more
1 491 492 493 494 495 505