டோக்கன் நம்பர் – 18

டோக்கன் நம்பர் – 18, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 160, விலை 100ரூ. திருச்சி மாவட்டத்தில், தனித் திறமையுடன் சிறுகதைகளை எழுதும் எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் 10பேரின் மிகச் சிறந்த சிறுகதைகள் தலா இரண்டாக மொத்தம் 20 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதைகயும் ஒவ்வொரு தளத்தில் பயணிக்கின்றன. இவை கதைகள் என்பதைவிட மனித வாழ்க்கையின் எதார்த்தங்கள் என்று கூறுவது மிகைப் பொருத்தமானது. ஒவ்வொரு எழுத்தாளர்களின் கதை தொடக்கத்திலும், அவர்களைப் பற்றிய சிறப்புகள் சிறு குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கதையான […]

Read more

நம்பிக்கை நாயகன்

நம்பிக்கை நாயகன், ராம.ஹேமமாலினி, சென்னை புக்ஸ், விலை 50ரூ. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற். அவரது வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், அவரைப் பற்றிய பிறரின் கண்ணோட்டங்கள், பேட்டிகள் ஆகியவற்றை பதிவு செய்திருக்கும் நூல்.மோடி மிகப்பெரிய சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர். ஆனால் அவற்றை தனக்குச் சாதகமான வாய்ப்புக்காக மாற்றிக்கொண்டது எப்படி, அரசியல் பின்புலமோ செல்வமோ செல்வாக்கோ பாரம்பரியமோ ஏதுமின்றி பிரதம வேட்பாளர் வரை முன்னேறியது எப்படி, ஏழைக் குடும்பத்தில் பிறந்த மோடி, தன்னிகரில்லா தேசியத் தலைவராக உயர்ந்தது எவ்வாறு? இவற்றுக்கு விடை […]

Read more

தலையில்லாப் போராளி

தலையில்லாப் போராளி, பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ஸ்லீப்பி ஹாலோ’ என்ற ஆங்கிலப் படத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட திரில்லர் படக் கதை. சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு போராளி தலையில்லா உடலாக குதிரை மீது அமர்ந்து வந்து கதிகலக்குவது போல உருவாக்கப்பட்டுள்ள இந்தியப் படக்கதைக்கு உயிரோட்டமான ஓவியம் மிகவும் உதவுகிறது. லயன் காமிக்ஸ் புத்தகத்துக்கே உரிய அத்தனை அம்சங்களையும் இதில் காண முடிகிறது. நன்றி:தினத்தந்தி, 20/4/2016.   —- அகந்தையின் அழிவும் அறிவின் உதயமும், சிதம்பர குற்றாலம், மணிமேகலைப் பிரசுரம், […]

Read more

எம்.ஜி.ஆர். திரைப்பட கருவூலம்

எம்.ஜி.ஆர். திரைப்பட கருவூலம், இதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், விலை 150ரூ. எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, அவரைப் பற்றிய நூல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க நூல், இதயக்கனி எஸ். விஜயன் தயாரித்துள்ள இந்தப் புத்தகம். உண்மையில் இது கருவூலம்தான். எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் சதிலீலாவதி. அதில் போலீஸ் அதிகாரியாக சிறு வேடத்தில் தோன்றினார். அதில் இருந்து எம்.ஜி.ஆர். நடித்த ஒவ்வொரு படத்தின் ‘ஸ்டில்’களும் இதில் இடம் பெற்றுள்ளன. படங்கள் பெரிய அளவில் அழகாக அச்சிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிக்குறிப்பை படித்தாலே, எம்.ஜி.ஆரின் […]

Read more

தம்பலா

தம்பலா, பாரதிவசந்தன், மேன்மை வெளியீடு, விலை 150ரூ. புதுவை எழுத்தாளர் பாரதிவசந்தன் எழுதிய “தம்பலா” சிறுகதைக்கு, ஒரு தனிச்சிறப்பு உண்டு. இக்கதை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது. எனவே ‘மூன்று மொழிகளில் வெளிவரும் தமிழின் முதல் சிறுகதை’ என்ற சிறப்பை ‘தம்பலா’ பெற்றுள்ளது. தீண்டாமைக்கும், சாதி வெறிக்கும் எதிராக இக்கதையை எழுதியிருக்கிறார், பாரதி வசந்தன். வேகமான நடை, அருமையான வர்ணனைகள். தற்கால தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சிறந்த கதை இது. நன்றி:தினத்தந்தி, 20/4/2016.   —- தெருவோரங்கள், […]

Read more

இசை முரசு நாகூர் ஹனீபா

இசை முரசு நாகூர் ஹனீபா, செ. திவான், சுஹைனா பதிப்பகம், விலை 350ரூ. ஆரம்ப காலத்தில் இருந்து, தி.மு.கழகத்தில் விசுவாசத்துடன் பணியாற்றியவர். “இசை முரசு” நாகூர் அனீபா. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோருடனும், மற்ற தலைவர்களுடனும் நெருங்கிப்பழகியவர். திரைப்படங்களில் பாடி புகழ் பெற்றவர். தி.மு.கழக மாநாடுகளில் அவரது இசை நிகழ்ச்சி தவறாது இடம் பெறும். நாகூர் ஹனீபாவின் வாழ்க்கை வரலாற்றை, வரலாற்று ஆசிரியர் செ. திவான் பெரு நூலாக எழுதியுள்ளார். இதைப் படிப்பதன் மலம் நாகூர் ஹனீபாவின் வரலாற்றை மட்டுமல்ல, […]

Read more

பாட்டுடைத் தலைவி

பாட்டுடைத் தலைவி, லட்சமி ராஜரத்தினம், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான லட்சுமி ராஜரத்தினத்தின் கற்பனையில் விளைந்த கருத்தோவியம்தான் இப்“பாட்டுடைத்தலைவி” என்ற நெடுங்கதை. அமுத மலர் பத்திரிகையின் துணை ஆசிரியர் ரவி என்னும் ரவிச்சந்திரன், இக்கதையின் நாயகன். “பாட்டுடைத் தலைவி”யாம் நிர்மலா கதையின் நாயகி. ஆனால் ரவியின் மனைவியாகவில்லை. “மனத்தாலே வாழ்ந்து விடச்” செய்யும் தியாக வாழ்வு பாத்திரமாகையால் அனைவர் மனத்திலும் ஜீவ ராகமாக ஒலிக்கிறாள். ராதா, ரவியின் மனைவியாகிறாள். ரவிக்கு நேர்மாறான குணம் படைத்தவளான ராதா அதிகம் முரண்டு […]

Read more

இஸ்லாமிய சட்டக் கருவூலம்

இஸ்லாமிய சட்டக் கருவூலம், தமிழில் மவுலவி நூஹ், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், விலை 150ரூ. இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் எழுதிய நூல் ‘பிக்ஹுஸ் சுன்னா.’ இதைத் தமிழில் மவுலவி நூஹ் மஹ்லரி மொழிபெயர்த்துள்ளார். இது ஏழாவது பாகமாகும். இந்த நூலில் மண விலக்கு குறித்த அனைத்து செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மணவிலக்கு (தலாக்), மணவிலக்கின் முறை, குழந்தை பராமரிப்பு, பராமரிப்பதற்கான நிபந்தனைகள் போன்ற அனைத்து சட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்து தமிழ் முஸ்லிம்களிடம் சென்று சேர வேண்டும். அவர்களுக்குப் […]

Read more

ஆ. மாதவன் இலக்கியத் தடம்

ஆ. மாதவன் இலக்கியத் தடம், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, அருள் பதிப்பகம், விலை 200ரூ. படாடோபம், பந்தாக்கள் ஏதுமின்றி, அமைதியும், எளிமையுமான வெளிப்படையான பேச்சும், எந்தத் துறையிலும், சபையிலும் தன்னை வலியப் புகுத்திக்கொள்ளாத தன்னடக்கமும் மிக்கவர் முதுபெரும் எழுத்தாளர் ஆ. மாதவன். அவரின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் ஆகியவை தொடர்பாக அவ்வப்போது அவரது சக எழுத்தாளர்கள், அறிஞர்கள், அறிவார்ந்த வாசகர்கள் அனுப்பிய கருத்தாக்கங்களும், விவாதங்களும் பல்வேறு தளங்களில் பதிவாகியுள்ளன. அத்தகைய இலக்கியப் பதிவுகளை செம்மையுறத் தொகுத்தளித்துள்ளார் விஞ்ஞானியும், எழுத்தாளருமான நெல்லை சு. முத்து. […]

Read more

திருக்குறள் பரிமேலழகர் உரை

திருக்குறள், பரிமேலழகர் உரை, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், உலகின் தலைசிறந்த நீதி நூலாகப் போற்றப்படுகிறது. அதற்கு உரை எழுதிய அறிஞர்கள் பலர். பழங்காலத்தில் எழுதப்பட்ட உரைகளில், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பது தமிழறிஞர்களின் கருத்து. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பரிமேலழகர் உரை சிறந்த முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கு உரிய பணி. நன்றி: தினத்தந்தி, 11/5/2016.   —- வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 23ரூ. பொதுவாக பழமொழிகள் […]

Read more
1 493 494 495 496 497 505