நடிகைகளின் கதை

நடிகைகளின் கதை, யுவகிருஷ்ணா, சூரியன் பதிப்பகம், விலை 150ரூ. சில நடிகைகளின் சொந்த வாழ்க்கை அவர்கள் நடித்த படங்களைவிட வியப்பும், திகைப்பும் நிறைந்தவையாக இருக்கும். உதாரணமாக, “சிவந்த மண்” காஞ்சனா, பல படங்களில் நடித்து சிறைய சம்பாதித்தார். அதையெல்லாம் அவருடைய அப்பாவே அபகரித்துக்கொண்டார். சட்டத்தின் துணையுடன் போராடி, ரூ.15கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டார். அதை அப்படியே திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டு, பெங்களூரு புறநகரில் சிறிய வாடகை வீட்டில் வசித்தார். கன்னட திரை உலகின் கனவு கன்னியாகத் திகழ்ந்த கல்பனா, யாரும் எதிர்பாராத விதமாக […]

Read more

வழிகாட்டும் வள்ளுவம்

வழிகாட்டும் வள்ளுவம், வானதி பதிப்பகம், விலை 170ரூ. திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் புதுப்புது தகவல்களைக் கூறும் அரிய நூல் இது. பேராசிரியர் இரா. மோகன், அவர் மனைவி பேராசிரியர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர். திருக்குறளுக்கு அறிஞர் – பெருமக்கள் எழுதிய உரைகளை ஆராய்ந்து, நாமக்கல் கவிஞர் சில குறள் பாக்களுக்கு எழுதியுள்ள நுட்பமான உரையை சுட்டிக்காட்டுகிறார்கள். திருவள்ளுவருக்கும், சீன அறிஞர் கன்பூசியசுக்கும் (கி.மு.551 – கி.மு.479) உள்ள ஒற்றுமைகள் பற்றியும் எடுத்துக் கூறுகிறார்கள். சுருக்கமாகக் கூறினால், திருவள்ளுவர் […]

Read more

விடுதலை

விடுதலை, சமன் நாஹல், தமிழில் பிரேமா நந்தகுமார், சாகித்திய அகாதெமி, பக். 384, விலை 200ரூ. புகழ்பெற்ற எழுத்தாளர் சமன் நாஹல், ‘ஆஸாதி’ என்ற பெயரில் எழுதிய நாவலின் தமிழ் வடிவம். சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த தேசப் பிரிவினையின்போதும் உருவான அரசியல் மாற்றங்களைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டிருக்கும் இந்த நாவல், சாகித்திய அகாதெமி விருது பெற்றது. நாட்டை பிளவுபடுத்தியதால் விளைந்த ரணங்களையும் வேதனைகளையும் கதையினூடே காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். சுதந்திரத்துக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் லாலா கன்ஷிராம் என்ற தானிய […]

Read more

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்

பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும், ம.பொ.சிவஞானம், சந்தியா பதிப்பகம், பக். 160, விலை 130ரூ. அந்நிய ஏகாதிப்த்தியத்திடமிருந்து இந்தியா விடுதலை பெற்றது ஒரு மகத்தான வரலாறு. சுதேசமன்னர்களின் எதிர்ப்புப் போராட்டம், பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்த இந்திய வீரர்களின் கலகம், காங்கிரஸ் மகாசபையின் தோற்றம் ஆகியவற்றை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வின் உடனடி வெளிப்பாடாக, நாட்டின் பல இடங்களில் ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் தலைதூக்கின. பகத்சிங், வாஞ்சிநாதன் போன்றோர் இதற்கு உதாரணங்கள். ஆனால் அவை முளையிலேயே கொடூரமாக நசுக்கப்ட்டன. இந்த நேரத்தில்தான் அகிம்சையை ஆயுதமாகக் கொண்ட காந்தியின் இந்திய […]

Read more

இந்து தர்மத்தின் மேன்மையான வாழ்க்கை முறைகள்

இந்து தர்மத்தின் மேன்மையான வாழ்க்கை முறைகள், ஆற்காடு ஸ்ரீநாத், டாக்டர் பாலசந்தர், பதிப்பாசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. பிரம்மம், மனிதன், ஆன்மிகம், தியானம், பக்தியோகம் உள்பட 14 தலைப்புகளில் இந்து தர்மத்தின் மேன்மையான தகவல்கள் தொகுக்கப்பட்ட நூல். படித்து கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.   —- அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு. அருணாசலம்பிள்ளை, முல்லை பதிப்பகம், விலை 100ரூ. தம் முயற்சியால் பெரும் பொருள் ஈட்டி, அப்பொருளைக் கல்வி வளர்ச்சி மற்றும் […]

Read more

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், ஆர்.பொன்னம்மாள், கிரி டிரேடிங்ஸ், விலை 50ரூ. சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, முருகன் அவருக்கு அருளிய நிகழ்வுகள், சண்முக கவசத்தின் சக்தி போன்ற விவரங்களும், சுவாமிகளால் அரளப்பட்ட பரிபூரண பஞ்சாமிர்தவண்ணம், வேற்குழவிவேட்கை, பகைகடிதல் போன்ற பொருளுடனும், சஸ்திரகமல ரத பந்தங்களும் குமாரஸ்தவமும் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.   —- தன்னம்பிக்கை முழக்கம், முனைவர் பெ. ஆறுமுகம், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. ஆராய்ச்சி என்பது முடிவே இல்லாத மானுடத் தேடல். அறியாமையாலும், அறிவியல் தெளிவின்மையாலும், மனித வஞ்சகத்தாலும் மூடிக்கிடக்கும் […]

Read more

வளமான வாழ்வு பெற மந்திரங்கள்

வளமான வாழ்வு பெற மந்திரங்கள், ஆபஸ்தம்பன், அழகு பதிப்பகம், விலை 45ரூ. வாணிபம், தொழில் விவசாயம், வழக்குகளில் வெற்றி பெற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பலன்களையும் பெறுவதற்கு துணை நிற்கும் 112 மந்திரங்கள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.     —- யோக வாசிஷ்டம் ஞானத்தின் நுழைவாயில், சிவராமகிருஷ்ண சர்மா, நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. ஆத்ம தத்துவத்தை விரிவாகச் சொல்லும் நூல். சிறு சிறு கதைகள் மூலம் மிகப்பெரிய ரகசியங்களை தெளிவாக விளக்கப்பட்டுள்ளதால் ஆர்வமாக படித்தால் எளிதில் விளங்கும் வகையில் […]

Read more

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. அகில இந்திய கதர் மற்றும் கிராமத் தொழில் நிறுவனத்தை மகாத்மா காந்தியடிகள் நிறுவி அதற்குசெயலாளராக டாக்டர் ஜே.சி. குமரப்பாவை நியமித்தார். தமிழகத்தில் பிறந்த இவர், நாட்டுக்காக உழைத்த அறிஞர்களில் ஒருவர். காந்திய பொருளியலுக்கு உருவமும், உள்ளடக்கமும் கொடுத்தவர். அவருக்கு ‘கிராமக் கைத்தொழிலின் டாக்டர்’ என்று காந்தியடிகளே பட்டம் அளித்தார். உலகம் முழுவதும் புவி வெப்பமடைதலைக் குறைத்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற […]

Read more

தீரன் திப்பு சுல்தான்

தீரன் திப்பு சுல்தான், குன்றில்குமார், சங்கர்பதிப்பகம், விலை 190ரூ. வெள்யைர் ஆட்சியை எதிர்த்துப் போர் புரிந்த மன்னர்களில் முக்கியமானவர் திப்பு சுல்தான். மனித நேயம் படைத்தவர். மத நல்லிணக்கம் கொண்டவர். எதிரிகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய பெண்ணையே மணந்து, தன் நன்றியறிதலைக் காட்டியவர். பகையரசு, குடும்பப் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற தன் படைத் தலைவனையே சுட்டுக்கொன்ற நீதிமான். அந்த மாவீரனின் வரலாற்றை வேகமும், விறுவிறுப்பும் கலந்த நடையில் எழுதியுள்ளார், குன்றில் குமார். படிக்கும்போது, காட்சிகள் திரைப்படம் போல நம் மனக்கண் முன் ஓடுகின்றன. […]

Read more

சங்க காலத்து தமிழ் நாணயங்கள்

சங்க காலத்து தமிழ் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, விலை 400ரூ. ‘தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சங்ககால தமிழ் நாணயங்கள் மற்றும் பழங்கால வெளிநாட்டு நாணயங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆங்கிலநூலை, நாணவியல் ஆராய்ச்சியில் முத்திரை பதித்துள்ள தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி எழுதி உள்ளார். இந்த நூலை படித்தால் பழங்கால நாணயங்கள் மட்டும் அல்லாமல் பண்டைய காலங்களிலும் நாணய புழக்கத்தை கையாண்டு உள்ள தமிழர்களின் பெருமையை நன்கு அறிய முடிகிறது. அபூர்வமான நாணயங்களின் படங்களும் இடம் பெற்றிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. ஆராய்ச்சியாளர்கள் […]

Read more
1 495 496 497 498 499 505