கண்ணன் கதை

கண்ணன் கதை, ருக்மணிசேஷசாயி, சாயி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. நவீன மொபைல் போன் மற்றும் கணினியில் மூழ்கி கிடக்கும் நம் குழந்தைகள், நம் நாட்டு இதிகாசங்களின் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அதிலும், மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், மனிதன் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை, ‘பகவத் கீதை’ என்ற பாடமாக நமக்கு தந்தவர் கிருஷ்ணர். இந்த நுாலில் இடம்பெறும் கிருஷ்ணரின் அவதாரத்தின் இளம் பருவ வரலாற்றை, சிறுவர்கள் […]

Read more

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், முகிலை ராசபாண்டியன், முக்கடல், பக். 192, விலை 150ரூ. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது. பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர். சைவத்தை வளர்த்தால் […]

Read more

ராமாநுஜர்

ராமாநுஜர், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 160ரூ. ராமானுஜரின் எண்ணங்கள் சம காலச் சிந்தனைக்கு மிகவும் பொருந்தி வரும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது இந்நாடகம். வைணவ நெறியைப் பாமரரும் அறியும் வண்ணம் அச்சமயத்தின்பால் மக்களைத் திருப்பியதில் ராமானுஜரின் பங்கு குறிப்பிடத்தக்து. அவர் வாழ்ந்த காலத்தில் அவரது அணுகுமுறை ஏழை எளியவரையும் சென்றடைந்தது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடப்பட்ட தருணத்தில் இந்நாடகம், இரண்டாவது பதிப்பாக வந்தாலும், இந்திரா பார்த்தசாரதியின் நாடக ஆக்கம், படிக்கத் துாண்டும் விதத்திலும், ராமானுஜரின் பணியைப் போற்றும் […]

Read more

சிவபூமியாம் இலங்கை

சிவபூமியாம் இலங்கை, மேருபுத்திரி, டாக்டர் மயூரநாதன் வெளியீடு, பக். 136. திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடிய திருகோணமலை, திருக்கேதீசுரம் ஈழ நாட்டு சிவத்தலங்கள். சைவ பக்தி மிக்க யாழ்ப்பாணத் தீவுக்கு அருகில் உள்ள, காரைத் தீபத்தில் வாழ்ந்து சமாதி அடைந்தவர் சுவாமி முருகேசப் பெருமாள். இவர் தன் அருள் ஆற்றலால் பல அற்புதங்கள் செய்து காட்டியவர். பலருக்கும் ஞான வழிகாட்டிய மகான். இவரது ஆசிரமத்தில் வாழும் பெண் அடியார்களுள் தலைசிறந்த தவச் செல்வி மேருபுத்திரி. இவர் இயற்றிய தெய்வப் பாடல்களைக் கொண்டது இந்நுால். இவரது பாடல்களில் […]

Read more

தலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணித்தலங்கள்

தலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணித்தலங்கள், கே.சாய்குமார், விலை 140ரூ. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 300 சைவ, வைணவ தலங்களுக்கான வழிகாட்டியாக அமைகிறது இந்நூல். தலத்தின் பெயர், தலத்துக்கு செல்லும் வழி, தலக்குறிப்பு, சாமி அம்பாள் பெயர், நடை திறக்கும், அடைக்கும் நேரம் மற்றும் ஆலய நிர்வாகிகள், அர்ச்சகர்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றை எளிய நடையில் அட்டவணைப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். அது மட்டும் இன்றி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள தலங்களில் நீராடி வழிபடுவதால் என்னென்ன பயன்கள் என்றும், தமிழ் மாதங்கள் வாரியாக எந்தெந்த தலங்களில் […]

Read more

பெளத்தத்தின் மூவர் நெறி

பெளத்தத்தின் மூவர் நெறி,  வெ.வேதவல்லி, பூம்புகார் பதிப்பகம்,  பக்.508, விலை ரூ.390. ஆசிய ஜோதியாக விளங்கிய புத்த பெருமானையும், அசோக சக்கரவர்த்தியையும் , மணிமேகலையையும் அணிசேர்க்கும்விதமாக எளிய நடையில் ஆசிரியரால் இயற்றப்பட்டுள்ள நூல் இது. பெளத்த மதத்தின் கொள்கைகளையும், போதனைகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் புத்தபெருமானின் அருள் சிறப்பும், அசோகரின் வரலாற்றுப் பெருமைகளும், மணிமேகலையின் தூய வாழ்க்கைச் சிறப்பும் நயமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கதைநாயகனும், அருள் நெறியருமான புத்தபெருமானின் வாழ்க்கையில் தொடங்கி, அவர்தம் அறநெறி கருத்துகளையும், கொள்கைகளையும் எளிய நடையில் விரிவாக ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். […]

Read more

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்,  இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலைரூ.125. சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மணிவாசகரின் திருக்கோவையாரில் இடம் பெற்ற மீண்டாரென உவந்தேன் என்ற பாடலையும், அதன் பொருளையும் விளக்கும் தூண்டா விளக்கனையாய் என்ற கட்டுரையில் தொடங்கி, இறைவனின் இன்பமான இடபத்தை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் பெருமையைக் கூறும் இன்ப ஊர்தி என்ற கட்டுரை ஈறாக இருபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நூலாசிரியர் மேடையில் பேசியவை, தினமணியிலும் வேறு சிறப்பு மலர்களிலும் எழுதியவைகட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் சைவத்தின் […]

Read more

கண்ணன் பிறந்தான்

கண்ணன் பிறந்தான், எஸ்.சுதர்சனம், ஆலய தரிசனம் பதிப்பகம், விலை 200ரூ. கண்ணபிரான் பிறந்தது முதல் குருகுலவாசம் வரை உள்ள வரலாற்றை ஆசிரியர் சுவையாக விவரித்துள்ளார். இந்த கட்டுரை தொகுதி 41 அத்தியாயங்களின் தலைப்புகள் ஆழ்வார் பாசுரங்களில் இருந்தே கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் எளிய தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ளது. நூலின் கதை ஓட்டமும் நடையும் படிப்பவர் மனதை கவர்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் பல அறிவுரைகளை அழுத்தமாகவும், தெளிவாகவும் நயம்பட எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கூடு விட்டு கூடு பாயும் வித்தை

கூடு விட்டு கூடு பாயும் வித்தை, ஜெகாதா, அருணா பதிப்பகம், விலை 70ரூ. பிற தேகத்தில் கூடு விட்டு கூடு பாய்தல் என்பது அஷ்டா சித்தியில் பிரகாமியம் எனும் சித்தியில் அடங்குகிறது. இந்த கலை ஒரே நாளில் ஏற்படும் நிகழ்வு அல்ல. தனிப்பட்ட பயிற்சியும் இல்லை. பல சித்திகள் கைவரப்பெற்றதன் கூட்டு கலவையின் உச்ச சித்தியாகும். சித்தர்கள் அனுபவத்தில் கண்ட இந்த அற்புத கலையை அறிவியல் கூறுகளோடு ஒப்பிட்டு பார்த்து பிரமிக்கும் நிலையை இந்நூல் வாசிப்பில் உணரலாம். இந்நூலில் கூடு விட்டு கூடு பாயும் […]

Read more

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்,  டி.வி.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், பக். 120, விலை ரூ.80. திவ்யதேசம் நூற்றி எட்டினுள் ஒன்று திருக்கோளூர். நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட இந்த ஊருக்கு ஒருமுறை ஸ்ரீராமானுஜர் செல்லும் போது, அவ்வூரிலிருந்து பெண்மணி ஒருத்தி அவ்வூரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்துக் காரணம் கேட்கிறார். காரணம், ஒன்றா இரண்டா? முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன? என்று கூறும் அப்பெண்மணி, அருளாளர்கள் 81 பேரின் அருஞ்செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி, இவர்களைப் போல […]

Read more
1 32 33 34 35 36 128