தெய்வ வழிபாட்டு தத்துவ இரகசியங்கள்

தெய்வ வழிபாட்டு தத்துவ இரகசியங்கள், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், பக்.384, விலைரூ.200. அமரகவி சித்தேஸ்வரரின் நிஜானந்த போதம் நூலைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இந்த தெய்வங்களுக்கு ஏன் இத்தனை கைகள், தலைகள், ஆயுதங்கள், வாகனங்கள் என ஆன்மிக அன்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் எழக்கூடிய கேள்விகளுக்கு விடைதருவதாக அமைந்துள்ளது இந்நூல்.  இந்நூலில் விரவிக்கிடக்கும் ஆன்மிக முத்துக்குவியலில் இருந்து சில முத்துகள். இறைவன் எல்லையற்ற ஞானம் மிக்கவன், எல்லையற்ற பேராற்றல் படைத்தவன், எங்கும் நீக்கமற நிறைந்தவன். கோயில், குளங்களை சுற்றிவருவதும், […]

Read more

பரமாத்துவிதம் ஒரு சைவ நெறி

பரமாத்துவிதம் ஒரு சைவ நெறி, கி.முப்பால்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.222, விலை ரூ.180. உலகாயதம், சித்தாந்த சைவம், வைணவம், சங்கரமதம் ஆகியவற்றை மறுத்து 16 ஆம் நூற்றாண்டில் எழுந்த நெறிதான் பரமாத்துவிதம். பரமாத்துவித நெறியைப் பின்பற்றுபவர் உலகின் எப்பொருளும் தம்மிடத்திலும், தாம் உலகின் எல்லாப் பொருள்களிலும் இருப்பதாக உணர்வார்கள். பிரம்மம் என்பது எல்லாமான பூரணமாக உள்ளது. "பிரபஞ்சம் முழுவதும் உள்ள பூரணம் செயல் தன்மையானது. அதனுடைய இருப்பும், விளக்கமுமே பிரபஞ்சப் பொருள்களின் வாழ்வும், பண்புமாகும். பிரம்மம், பூரணம் தன்னை […]

Read more

ஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை

ஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை, குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 125ரூ. இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நலிந்து கிடந்த இந்து மதத்தைக் காப்பாற்றிய ஆதிசங்கரரின் 33 ஆண்டுகால வரலாறு விவரமாகத் தரப்பட்டுள்ளது. அவரது பிறந்த ஆண்டு எது என்ற முரணான கருத்துக்கள் பற்றியும், அவர் காஞ்சியில் தான் முக்தி அடைந்தார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்தும் தரப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது வரை உள்ள மடாதிபதிகளின் முழு விவரமும், காஞ்சி மடத்தின் கிளைகள் எங்கே இருக்கின்றன என்ற தகவலும் இதில் காணக்கிடைக்கின்றன. […]

Read more

63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள், சிவ.சுந்தரம், சுந்தரா பதிப்பகம், பக். 496, விலை 330ரூ. முக்கடவுள்களில் சிவனையே முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபட்டு, சிவனை நேரில் கண்டும், அசரீரி வாக்கைக் கேட்டும் வாழ்ந்த 63 நாயன்மார்களைப் பற்றி, முதலில் சுந்தரரால் பாடப்பெற்றது ‘திருத்தொண்டர் தொகை’. அதன் பிறகு 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வப் புலவர் சேக்கிழார், இந்த நாயன்மார்களைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு, அவர்கள் வாழ்ந்த தலங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைச் சேகரித்து, நான்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களடன் ‘பெரிய புராணம்’ என்ற மகாகாவியத்தை இயற்றினார். இதில் உயர் […]

Read more

தணிகாசல புராணம்

தணிகாசல புராணம், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, விலை 100ரூ. 18-ம் நூற்றாண்டில் திருத்தணியில் வாழ்ந்த திருத்தணிகைக் கந்தப்பையர் இயற்றிய தணிகாசல புராணம், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் குறிப்புரை முதலியவற்றுடன் 1939-ம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. இப்போது 2 வது பதிப்பாக வெளிவந்துள்ளது. திருத்தணி முருகன் புகழ் பாடும் இந்த நூலில் உள்ள பாடல்களின் பதங்களுக்கு அடிக்குறிப்புடன் விளக்கம் கொடுத்து இருப்பதால், எளிதாக புரிந்து படிக்க முடிகிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

மூலிகைக் காற்று வீசட்டும்

மூலிகைக் காற்று வீசட்டும், ஜெ.ஜெய வெங்கடேஷ், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.110, விலை 100ரூ. சுற்றுச்சூழல் மாசாகி வரும் இக்காலத்தில் சுத்தமான காற்று எங்கே கிடைக்கிறது? தனிமனித முயற்சியால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என, இந்த நுால் மூலம் வழிகாட்டுகிறார், சித்த மருத்துவரான டாக்டர் ஜெயவெங்கடேஷ். ராசிக்கு பொருத்தமான மரத்தையோ, குலதெய்வத்தின் தலவிருட்சத்தையோ வீட்டில் நட்டு பராமரியுங்கள். மூலிகைச் செடிகளை வளருங்கள். சுத்தமான மூலிகை காற்று உங்களை சுற்றி வீசும் என்கிறார். நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், வேதங்களில் தாவரங்கள் என அபூர்வமான தகவல்களுடன் தாவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. […]

Read more

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள், முனைவர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 600ரூ. சைவ சமயம் உலகில் உள்ள எல்லா சமயங்களுக்கும் முற்பட்ட தொன்மையை உடையது. தமிழும், சைவமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன. சைவத்தமிழின் சிறப்பை பறைசாற்றும் வகையில் 78 கட்டுரைகள் சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள் என்ற நூல் தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சைவத்தமிழ் இலக்கியங்கள், திருமந்திரத்தின் தனிச்சிறப்புகள், சைவத் தமிழ் அறிஞர்கள் ஆகிய தலைப்புகளில் பகுக்கப்பட்டு அறிவு நிறை ஆய்வாளர்களால் படைக்கப்பட்டு இருக்கிறது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் வேறு, […]

Read more

தமிழ்நாடு திருத்தலங்கள் வழிகாட்டி (பாகம்-1)

தமிழ்நாடு திருத்தலங்கள் வழிகாட்டி (பாகம்-1), வடகரை செல்வராஜ்,ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்: 1021, விலை ரூ.900. ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்களுக்குத் தேவையான குறிப்புகளை விளக்கமாகச் சொல்லும் நூல் இது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள முக்கியமான கோயில்கள் இதில் இடம் பெற்றுள்ளன. திருக்கோயில்களில் காணப்படும் முக்கிய அம்சங்கள், கோபுரம், தல விருட்சம், திருக்குளம், தேர், ஆலயமணி, நந்தவனம், உள்வீதி, வெளிவீதி, மடப்பள்ளி, அபிஷேகம், அலங்காரம், பிரசாதம், பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்என்று ஒவ்வொன்றும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. சிவபெருமான், விஷ்ணு, பிள்ளையார், முருகன், பிரம்மா, […]

Read more

பச்சைநிற மரகத பாபா

பச்சைநிற மரகத பாபா, எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன், ஸ்ரீ சாய்ஜர்னல் சென்டர், பக்.96, விலை ரூ.100. ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவது என்பது மிகவும் சிரமமானது. ஆனால், ஸ்ரீசாயி மார்க்கம்எனும் ஆன்மிகப் பத்திரிகை கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை 16 ஆண்டுகள் தொய்வில்லாமல் தொடர்ந்து வெளிவருவதற்குக் காரணம், பச்சைநிற மரகத சாயி பாபாதான் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஸ்ரீசாயி மார்க்கம் பத்திரிகையின் ஆசிரியரும், பச்சை நிற மரகத சாயிபாபா ஆலயத்தின் நிறுவனருமான எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன். நூலின் முற்பகுதியில், ஷீரடியில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சைநிற மரகத சாயிபாபா சென்னைக்கு வந்து […]

Read more

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம், எஸ்.சென்ன கேசவ பெருமாள், நர்மதா பதிப்பகம், பக். 480, விலை 300ரூ. இறையன்பர்கள், சான்றோர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் ஆகியோர் அருளிய சமய தத்துவங்கள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் நாளிதழ்கள், வார இதழ்கள், திங்களிதழ்கள், ஆண்டு மலர்கள் ஆகியனவற்றில் இடம் பெற்ற இந்து சமயம் தொடர்பான செய்திகள் முதலியனவற்றை நிரல்பட தொகுத்து, ஆங்காங்கே குறிப்புகளையும், விளக்கங்களையும் தந்து நுாலாக்கிய ஆசிரியரின் அளப்பரிய முயற்சி பாராட்டுக்குரியது. ‘இறைவனைக் காண இயலாது; உணர முடியும்’ என, விளக்கியுள்ள பாங்கும், ராமகிருஷ்ண […]

Read more
1 34 35 36 37 38 128