பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (எ) துளசிதாசரின் அஷ்டப் பிரபந்தம்

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (எ) துளசிதாசரின் அஷ்டப் பிரபந்தம் , தொகுப்பாசிரியர்: கோ. எழில்வேந்தன், கவிதா பப்ளிகேஷன், பக்.416; விலை ரூ.300 அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன் என்னும் புகழ்ச் சொல்லுக்கு உரியது இந்நூல். இதை இயற்றிய பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் திவ்யகவி அதாவது தெய்வத் தன்மை பெற்ற கவி எனப் புகழப்படுபவர். நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்குப் பிறகு தமிழ் வைணவ நூல்களில் மிகவும் போற்றுதற்குரியதாக அஷ்டப் பிரபந்தம் விளங்குகிறது. பிரபந்தத்தின் கருத்துச் செறிவு, வைணவ குருபரம்பரையைச் சேர்ந்த அருளாளர்களின் வைபவங்கள் அடங்கியது இது. திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து […]

Read more

கந்தரலங்காரம் மூலமும் உரையும்

கந்தரலங்காரம் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ. கந்தன் என்ற சொல்லுக்கு பற்றுக்கோடானவன் என்பது பொருளாகும். கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன். பல்வேறு மலர்களைக் கொண்டு, பூமாலை கட்டி அழகனுக்கு அணிவித்து அழகு செய்வது போல, முருகனின் பல செயல்களைக் கொண்டு செய்யுளால் அலங்காரம் செய்து அருணகிரிநாதரால் பாடப்பட்டது கந்தரலங்காரம். கந்தரலங்காரத்தில் முருகனுடைய அடி முதல், முடி வரை வருணிக்கப்பட்டுள்ளது. யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, யம பயம் நீங்குதல் போன்ற வாழ்வியல் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. […]

Read more

ஆண்டாள்

ஆண்டாள், பேரா.ஜெய.குமார பிள்ளை, சங்கர் பதிப்பகம், பக்.112, விலை 100ரூ. தமிழ்மொழியின் வளமைக்கும், உயிர்ப்புக்கும் பெருமை சேர்த்தோர் ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆவர். தமிழ் மொழியின் இருண்ட காலமான களப்பிரர்கள் காலத்தில், தமிழை அழியாமல் காத்தவர்கள் அவர்கள். பாவைப் பாடல் என்ற புதிய இலக்கிய மரபைத் தமிழுக்குத் தந்த பெருமை ஆண்டாள் நாச்சியாருக்கே உரியது. அக்றிணை பன்மைக்கு, ‘கள்’ விகுதி சேர்த்து எழுதும் முறையை ஆண்டாள் பாடலால் அறியலாம் என்று பெரியோர் கூறுவர். அத்தகு ஆண்டாளின் திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் விளக்கும் உரை நுாலாக, இந்நுால் […]

Read more

திருக்கோயில்கள் – தேவாரத் திருமுறைகள் கண்ட திருத்தலங்கள்

திருக்கோயில்கள் – தேவாரத் திருமுறைகள் கண்ட திருத்தலங்கள் (மூர்த்தி, தலம், தீர்த்தம்), உரையாசிரியர்: அ.ஜம்புலிங்கம், இந்துமதி பதிப்பகம், பக்.528, விலை ரூ.500. சைவ சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும் பல ஊர்களுக்கும் சென்று அங்குள்ள இறைவன் மீது பக்திப் பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம்எனவும், அவர்களால் பாடப் பெற்ற ஊர்கள்பாடல் பெற்ற தலங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்நூலில் ஒவ்வொரு தலத்தின் இயற்பெயர், அதற்கு தற்போது வழங்கப்படும் பெயர், அவ்வூரின் அமைவிடம், அங்குள்ள இறைவன், இறைவியின் […]

Read more

ராமாநுஜர்

ராமாநுஜர், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், பக்.176, விலை ரூ.160. ராமாநுஜரின் வாழ்க்கை, சிந்தனை, ஆற்றிய அரும் பணிகள் ஆகியவற்றை எளிமையான முறையில் மக்களுக்குக் கொண்டு செல்லும்வகையில் நாடக வடிவத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை போன்று, தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் எப்படி நமக்குச் சம காலத்தவராய் ;இருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்நாடகத்தின் நோக்கமாகஇருக்கிறது. ராமாநுஜர் ஜாதி வேறுபாட்டை ஒழிக்கும் வகையில், வைணவம் அனைவருக்கும் உரித்தானது என்று அறிவித்தார். சமூக விளிம்பிலிருந்த பஞ்சமர்களையும் வைணவர்களாக்கி அவர்களைத் திருக்குலத்தார் என்றழைத்தார் என்று முன்னுரையில் […]

Read more

ஏன் எதற்கு

ஏன் எதற்கு, டி.வி.பாலசர்மா, நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விளக்கமான பதில்கள் புராணங்களில் இருந்தும், வேதங்களில் இருந்தும் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. கடவுள், கோவில், வழிபாட்டு முறைகள், சம்பிரதாயங்கள், விசேஷங்கள், பாவம், புண்ணியம், தானம், விதி, புணூல் போன்றவை குறித்து எதிர்மறையாக எழுப்பப்படும் கேள்விகளுக்கும் கூட தெளிவாக புரிந்துகொள்ளும் விதமாக விளக்கங்கள் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. ஆன்மிகம் பற்றி இந்துக்கள் அவசியம் அறிந்துகெள்ளவேண்டிய அறிவுப்பூர்வ தகவல்களும் நூலில் விளக்கப்பட்டு இருக்கிறது. பொருள் பொதிந்த பதில்கள் சிந்தனையையும் தூண்டுகின்றன. நூலைப் போலவே […]

Read more

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல், பேரா. க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 148, விலை 120ரூ. அவ்வையாரின் விநாயகர் அகவல் இசை நயம் மிக்க தோத்திரப் பாடலாகவும், யோக ரகசியங்கள் பொதிந்த சாத்திர நுாலாகவும் உள்ளது. 72 வரிகள் கொண்ட அகவற்பாவுக்கு, ஆசிரியர் பொழிப்புரை, விரிவுரை இரண்டையும் அழகுற அமைத்துள்ளார். அகவுதல் என்றால் அழைத்தல் என்ற பொருளும் உண்டு. இறுதி அடியில், ‘வித்தக விநாயக, உன் மணம் மிக்க திருவடியில் சரண் புகுகிறேன்’ என்று அகவல் முடிகிறது. முதல் இரண்டு வரிகளில் விநாயகரின் திருவடியைச் சிறப்பித்து, இறுதி […]

Read more

தாமிரபரணி புராணம்

தாமிரபரணி புராணம், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக்.216, விலை 200ரூ. மகா புஷ்கரம் விழா கண்ட தாமிரபரணி நதிக்குப் பல பெருமைகள் உள்ளன. கரைப் பகுதிகளில் பாடல் பெற்ற சிவன், பெருமாள் கோவில்கள் அமைந்த சிறப்புக்குரியது. இந்த நதிக் கரையில், உலகப் பொதுமறை நுாலுக்கு பிழை திருத்தம் செய்யப்பட்டது மட்டுமன்றி, அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்துள்ளனர் என்பது வரலாறு. பாபவிசை தீர்த்த மகிமை, ஐந்து வகை நிலங்களும் தாமிரபரணியும், தாமிரசபை சிற்பங்கள், தாமிரபரணி நதி உற்பத்தி புராணம், நதியோரம் கிடைத்த நாணயங்கள், தாமிரபரணி […]

Read more

பகவான் புத்தர்

பகவான் புத்தர், தர்மானந்த கோஸம்பி, தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ, சாகித்திய அகாதெமி, பக்.334, விலை ரூ.270. பகவான் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். தர்மானந்த கோஸம்பி எனும் பாலி மொழி அறிஞர் மராட்டி மொழியில் எழுதியதன் தமிழாக்கம்.பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் அந்தக் காலத்து அரசியல் நிலை, சமயநிலை, ஆன்மவாதம், கர்ம யோகம், சாதிப் பிரிவினை போன்ற தலைப்புகளில் அக்காலத்திய சமூகச் சூழல் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தர் குறித்து இதுவரை கூறப்பட்டு வரும் பல செய்திகள் தவறானவை என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய […]

Read more

மதுரைக் கோயில் வரலாறு

மதுரைக் கோயில் வரலாறு, இரா.இளங்குமரன், செல்லப்பா பதிப்பகம், விலை 120ரூ. கோவில் நகரம் என்று புகழ்பெற்ற மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகள், அந்தக் கோவில் தொடர்பான வரலாறு போன்றவை விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. கட்டுரை வடிவில் தராமல் பேசிக்கொள்வது போன்ற நடையில் இந்த புத்தகத்தை அமைத்து இருப்பதால், படிக்க சுவையாகவும் ருசிகரமாகவும் உள்ளது. மதுரைக்கோவிலை நேரில் கண்டது போன்ற உணர்வை இதன் மூலம் பெறலாம். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027254.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more
1 33 34 35 36 37 128