விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம், சுவாமி தயானந்த சரசுவதி, தமிழில் பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 1000ரூ. மகாபாரதம் அனுசாசன பர்வத்தில் இடம் பெற்று இருப்பது விஷ்ணு சஹஸ்ரநாமம், பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர், அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாகக் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம், இந்துக்களின் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றதாகும். விஷ்ணுவைக் குறிக்கும் இந்த ஆயிரம் நாமங்களும், அவற்றுக்கு சுவாமி தயானந்த சரசுவதி அளித்த விரிவான விளக்கங்களும் இந்த நூலில் சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. விஷ்ணுவின் வழிபாட்டில் ஒவ்வொரு நாமத்துக்கும் என்ன பொருள் என்பதோடு, […]

Read more

மகான் பாம்பன் சுவாமிகள்

மகான் பாம்பன் சுவாமிகள், முனைவர் ஆ. சந்திரசேகர், செம்மூதாய் பதிப்பகம், பக். 160, விலை 50ரூ. பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் அனைத்தும் மந்திரங்கள். அவருடைய பல பாடல்களில், சில பாடல்களையாவது நித்திய பாராயணம் செய்தால், நமக்கு, அளவு கடந்த பலன்கள் கிட்டும். பகைக்கடிதல், குமாரஸ்தவம், சண்முகக் கவசம் ஆகிய இந்த மூன்று பாடல்களுக்கும், சிறப்பாக விரிவுரை எழுதியுள்ளார் ஆசிரியர். குமாரஸ்தவம் – இம்மைத் துன்பம், பிறவித் துன்பம் எனும் வெப்பங்களைப் போக்கும். பக்தி இலக்கியம். – எஸ்.குரு. நன்றி: தினமலர், 3/3/2019. இந்தப் புத்தகத்தை […]

Read more

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்,எஸ்.ஸ்ரீகுமார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.448; ரூ.420; வைணவ தத்துவம், வைணவத் திருத்தலங்கள் பற்றிய இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. முதற்பகுதியில் வைணவ தத்துவம் பற்றிய விளக்கம், வைணவ ஆகமங்கள், வைணவத்தின் சடங்குகளும் மந்திரங்களும், வைண விழாக்கள், ஆலய வழிபாடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில் திருவரங்கம்,திருக்குடந்தை, திருநந்திபுர விண்ணகரம், திருவெள்ளியங்குடி, திருக்கச்சி, திருநின்றவூர், காஞ்சிபுரம், திருநீர்மலை, திருப்பதி, திருப்புலியூர் உள்ளிட்ட 108 வைணவத் திருப்பதிகளைப் பற்றி விரிவான தகவல்களைக் கூறுகின்றன. ஒவ்வொரு திருப்பதியின் முக்கியத்துவம், மூலவர், உற்சவர், தாயார், […]

Read more

இஸ்லாமும் வீரசைவமும்

இஸ்லாமும் வீரசைவமும், டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 140ரூ. இஸ்லாத்தின் கொள்கைகளும், நடைமுறைகளும் தென்னக மக்களைப் பெரும் மாற்றங்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும் கொண்டுசென்றன. இதன் விளைவாக சமய மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு வீரசைவம் தோன்றியது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் பசவண்ணர், வீரசைவத்திற்குப் புத்துயிர் அளித்தார். அவர் ஒரு சமூகப் போராளியாக – வீரசைவம் என்ற பதாகையின் கீழ் இந்திய நாட்டின் சமூக அமைப்பில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். பசவண்ணரின் சமூகப்புரட்சிக்குப் பக்கபலமாக அமைந்தது, இஸ்லாமிய மார்க்கத்தின் தனிச்சிறப்பான கொள்கைகளும், நடைமுறைகளும் என்பது ஆராய்ச்சியாளர்களின் […]

Read more

இராமாயணக் கதைகள்

இராமாயணக் கதைகள், கல்யாணி மல்லி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ. பாரத நாட்டின் இலக்கியச் செழுமைமிக்க உயரிய படைப்பாக கருதப்படுவது இராமாயணம். இராமாயணத்தின் பசுமையான கிளைகளாக விரியும் பரவசமான கதைகள், காலம் காலமாக பல தரப்பினராலும் படித்தும் கேட்டும் ரசிக்கப்படுகின்றன. எக்காலத்திய வாழ்வியலுக்கும் பொருந்தக்கூடிய தத்துவங்களும், வழிகாட்டுதல்களும் நிறைந்தவை என்பதால், அவற்றில் வரும் பல சம்பவங்கள் இன்றளவிலும் சிறுகதை வடிவங்களாக படிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னுமொரு நுால் இது. வழிப்பறி கொள்ளையர், வால்மீகி முனிவரானதும், இராமாயணம் எழுதியதும், இராமனின் பிறப்பும் மகிமையும் […]

Read more

தினம் ஒரு மந்திரம்

தினம் ஒரு மந்திரம், தொகுப்பு திலகவதி, அட்சரா பதிப்பகம், விலை 200ரூ. பத்தாம் திருமுறையான திருமந்திரம், தமிழ் மெய்யியலின் முதன்மை நூல்களில் ஒன்று. அன்பே சிவம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலரின் மந்திரங்கள் இன்னும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன. மெய்யியலோடு வாழ்வியல் நெறிகளையும் அன்றைய நாளின் மருத்துவம், வானியல் கருத்துகளையும் போதிக்கும் திருமந்திரம், 3000 மந்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரத்தைப் படித்து பயனடையும்வகையில் 365 மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து எளிய உரையையும் அளித்துள்ளார் திலகவதி. நன்றி: தமிழ் இந்து, 9/2/19. […]

Read more

தமிழச்சி ஆண்டாள்

தமிழச்சி ஆண்டாள், ப்ரியா கல்யாணராமன், குமுதம் வெளியீடு, விலை 290ரூ. கடவுள் என்றால் நம்மை காப்பவன், நம் வேண்டுதலுக்கு, துயரங்களுக்கு ஆறுதல் அளிப்பவன், வரம் தருபவன், நமக்கு நல்லன எல்லாம் செய்பவன்… இப்படித்தான் கடவுளை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருத்தி மட்டும் கடவுளிடம் தனக்கு வேண்டியதை எதுவுமே கேட்கவில்லை. அவன் நன்றாக இருக்க வேண்டும் என, விரும்புகிறாள். அவன் நலனில் மட்டுமே அக்கறை கொள்கிறாள். அவனுக்கு உணவு படைக்கவில்லை என்றால், இவள் கவலை கொள்கிறாள். அவனுக்கு மாலை சூட நேரமானால் முகம் […]

Read more

முக்தி அளிக்கும் மலை! முதல்வனாய் நின்ற மலை!

முக்தி அளிக்கும் மலை! முதல்வனாய் நின்ற மலை!, கோ.தியாகராஜன், நந்தினி பதிப்பகம், பக். 80, விலை 90ரூ. திருமாலும், பிரம்மாவும் அடிமுடி காண முடியாத இறைவன் அருள் பாலிக்கும் மலை திருவண்ணாமலை. அண்ணாமலையாரின் சிறப்பு மட்டுமல்லாமல், அவரின் பல்வேறு பெருமைகளை தனித்தனி தலைப்புகளில் அழகாக நமக்கு தந்திருக்கிறார் நுாலாசிரியர். சிவ பக்தர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 10/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 100ரூ. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடியபோது, சமுதாய சீர்திருத்த எண்ணங்களை மக்களிடம் விதைத்து மறுமலர்ச்சி உண்டாக்கிய பகவான் வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மனதைத் தொடும் வகையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கிறது. புத்தகத்தில் ஆங்காங்கே பகவான் வைகுண்டரின் அகிலத்திரட்டில் இருந்து சிந்தனையைத் தூண்டும் வாசகங்களைக் கொடுத்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 5/2/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027989.html […]

Read more

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்

வைணவமும் வைணவத் திருத்தலங்களும், எஸ்.ஸ்ரீகுமார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 420ரூ. உலகின் மிகப் பழமையான சமயங்களில் ஒன்றான வைணவ சமயத்தின் தனித்துவங்கள், அவை தொடர்பான விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆலய வழிபாடு, பன்னிரு ஆழ்வார்கள், வைணவ பெரியோர்கள், குரு பரம்பரை ஆகிய அனைத்தும் மிக விரிவாக இந்த நூலில் தரப்பட்டுள்ளன. அத்துடன் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவ திருத்தலங்கள், அவை தொடர்பான வரலாறு, அந்த ஆலயங்கள் அமைந்து இருக்கும் இடம், அவற்றுக்கு எப்படிச் செல்வது என்பது போன்ற அனைத்து பயனுள்ள தகவல்களும் இதில் […]

Read more
1 30 31 32 33 34 128