ஸ்ரீரமண அருள் வெள்ளம்

ஸ்ரீரமண அருள் வெள்ளம், ஸ்ரீதர் – சாமா, விருட்சம் வெளியீடு, பக். 100, விலை 70ரூ. பகவானைப் பற்றிய பல அருமையான தகவல்கள் அடங்கிய நுால். படிப்போரின் ஆன்மிக உணர்வுகள் பெருகும். ‘நீங்கள் என்னை ஒரு உடம்பாகப் பார்க்கிறீர்கள். நான் ஒரே நேரத்தில், 20 லோகங்களில், 20 சரீரத்தில் வசிக்கிறேன்’ என்று சொன்ன ரமணர் ஒரு அதிசய புருஷர். பகவான் அதிசயங்களைப் பெரும்பாலும் தவிர்த்ததுடன் தன் சீடர்களும் அவற்றைப் பிரசாரம் செய்யக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார். பல அதிசயங்கள் அவர் முன்னர் அரங்கேறின. […]

Read more

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல், நீ.சீ.சுந்தரராமன், பன்னிரு திருமுறை மன்றம், பக். 208, விலை 100ரூ. விநாயகர் வழிபாட்டில், தமிழ் மூதாட்டி அவ்வை எழுதிய விநாயகர் அகவலுக்கு முக்கிய இடம் உண்டு. விநாயகர் அகவலை தினமும் படித்தால், வாழ்க்கையில் தோல்வியே ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. விநாயகர் அகவல் தமிழில் இருந்தாலும், அதை புரிந்து கொள்வது கடினம். யோக அடிப்படையில், விநாயகரை பற்றி அவ்வை பாடியுள்ளார். அந்த வகையில், விநாயகர் அகவலுக்கு இந்நுாலில் சிறப்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் அகவல் படிப்பவர்கள், இந்நுாலை படித்தால், விளக்கம் அறிந்து […]

Read more

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம், இந்திரா சவுந்தர்ராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 272, விலை 150ரூ. காலத்தால் அழிந்திடாத வெகு சில நுால்களில் மகாபாரதமும் ஒன்று. மானுடத்தின் மலிவான சங்கதிகளில் இருந்து, தெய்வீகத்தின் உன்னதம் வரை சகலத்தையும் இது தன் வசம் கொண்டிருக்கிறது. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இதன் மூலக்கதை தெரிந்த அளவு, கிளைக்கதைகள் பலருக்கு தெரியவில்லை. பல துணைப்பாத்திரங்கள் அறியப்படாமலேயே வியாசரின் மூல நுாலில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களையும் பிரபலப்படுத்தி இருக்கிறது இந்த நுால். இதைப் படித்து முடிக்கையில், […]

Read more

இஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மஹாத்ம்யம்

இஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மஹாத்ம்யம், லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி) லிட்., பக்.272, விலை ரூ.150. ‘கோயில்‘ என்றாலே வைணவர்களுக்கு ‘ஸ்ரீரங்கம்‘தான். இக்கோயின் சிறப்பை ‘ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்; அம்புயத்தோன் அயோத்தி மண்ணில் களித்த கோயில்; செழுமறையின் முதலெழுத்துச் சேர்த்த கோயில்; தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோயில்; திருவரங்க மெனத் திகழுங் கோயில்தானே‘ என அதிகார சங்கிரகம் போற்றுகிறது. ஸ்ரீரங்கமே வைணவர்களுக்குப் பெரிய கோயிலாகும். ‘பேரும் பெரியது, ஊரும் பெரியது‘ என்று சொல்வது வழக்கம். காரணம் ‘கோயில் -பெரியகோயில்; பெருமாள் – […]

Read more

மாணிக்க மணிமாலை(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்)

மாணிக்க மணிமாலை(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்), இடைமருதூர் கி.மஞ்சுளா, செம்மூதாய் பதிப்பகம், பக்.232, விலைரூ.100. பல்வேறு பன்னாட்டுக் கருத்தரங்குகளில், மாநாடுகளில் வாசிக்கப்பட்ட, இலக்கிய இதழ்களில் எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சேரமான் பெருமாள் நாயனாரின் "திருக்கயிலாய ஞான உலா' தமிழின் முதல் உலா என்றும் ஞான உலா என்றும் கருதப்படுகிறது. இது, வயதுக்கேற்ப ஏழு பிரிவினராக பிரிக்கப்பட்ட பெண்கள், சிவபெருமான் உலா வருவதைப் பார்த்து, கொள்ளும் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. நூலாசிரியர் இந்த உலாவில் கூறப்படும் சைவ சித்தாந்தக் கருத்துகளை தெளிவாக விளக்கியுள்ளார். உயிர்கள் எல்லாம் […]

Read more

வைணவக் கலைச்சொல் அகராதி

வைணவக் கலைச்சொல் அகராதி, தெ.ஞான சுந்தரம்,சந்தியா பதிப்பகம், பக்.228, விலை ரூ.220. தமிழ் வைணவ நூல்களுக்குத் தனித்துவமான மொழி உண்டு. வைணவ சமய சிந்தனைகளை தமிழில் அளிப்பதில் புதிய நயங்கள், சொல்லாடல்கள் ஆகியவற்றுக்குத் தனி வரலாறு உண்டு. இந்நூலாசிரியர் வடித்த ஓர் வைணவ ஆய்வு நூலின் பகுதியாக வைணவ அருந்தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் தொகுத்தார். அப்பகுதியின் மறுபதிப்பு இந்த நூல். பின்னிணைப்பாகப் பாராட்டைப் பெற்ற பகுதி தனி நூலானதும் வலுவிழந்ததாகவே உள்ளது. அருந்தமிழ்ச் சொல் அகர வரிசையில் உரப்பு என்கிற சொல்லுக்கு ‘உறுதி’ என […]

Read more

காவிரி மகாத்மியம்

காவிரி மகாத்மியம், வே.மகாதேவன், இந்து கலாச்சாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வுமையம், பக்.208, விலை 100ரூ. அண்மையில், நடைபெற்ற காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்நுால், காவிரியின் பெருமையைப் புராண, வரலாற்றுச் சான்றுகளோடு மேற்கோள் பாடல்களுடன் விரிவாகப் படைக்கப்பட்டுள்ளது. குரு பகவான், 12 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நதியில் புஷ்கர மேளா தீர்த்தவாரி நிகழ்வது பற்றி குறிப்பிடுகையில், 12 ராசிகளிலும் குரு இருக்கும்போது ஒவ்வொரு புண்ணிய நதியில் புஷ்கரம் உருவாக ஏற்பாடாகி, அதன்படி குரு மேஷத்தில் இருக்கும்போது கங்கைக்கு விசேஷம். ரிஷபத்தில் நர்மதை, […]

Read more

திருக்குர்ஆனில் மறுமை

திருக்குர்ஆனில் மறுமை,  தமிழில் கே.எம். முகம்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 210ரூ. மறுமை குறித்து சிந்திக்காத முஸ்லிம் யாரும் இருக்க முடியா. இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில், இறைநம்பிக்கையுடன், மறுமையின் மீதுள்ள நம்பிக்கையும் இணையும் பொழுதுதான் அது முழுமை பெறுகிறது. ஒவ்வொரு தனிமனிதனின் மறுமை வாழ்வு அவனது மரணத்தில் இருந்துதான் தொடங்குகிறது. மறுமை எப்படி நிகழும்? உலக அழிவு எப்படி இருக்கும்? என்பன போன்ற கேள்விகளுக்கு கேரள இஸ்லாமிய அறிஞர் கே.சி. அப்துல் லாஹ் மவுலவி அழகிய முறையில் விளக்கம் அளித்துள்ளார். அவர் எழுதிய […]

Read more

கடவுளால் முடியாத செயல்கள்

கடவுளால் முடியாத செயல்கள், முரு.பழ.ரத்தினம் செட்டியார், பதிப்பாசிரியர் சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமன்றம், விலை 125ரூ. மயிலம், பொம்மபுர ஆதினத் திருமடத்தில் நடந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 12ம் ஆண்டு விழா மாநாட்டில் வெளியிடப்பட்ட நூல். சைவ சித்தாந்த ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல ஆய்வுப் பெட்டகமாகவும், ஆய்வு அணுகுமுறைகளோடு சைவ சித்தாந்தத்தை உணர வைக்கிறது. அத்துடன் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைகளை ஆராய்பவர்கள் ஆராய்ச்சி முறைகளுக்காகவும், தெளிவுக்காகவும் படிக்க வேண்டிய புத்தகம். முரு.பழ.ரத்தினம் செட்டியார் […]

Read more

தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு

தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு, அருள்நிதி மன்னார்குடி பானுகுமார், அழகு பதிப்பு, விலை 250ரூ. “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே”. இதுவே தாயுமானவரின் அடிப்படை நோக்கமாகவும், தாரக மந்திரமாகவும் இருந்தது. திருச்சி மலைக்கோட்டையில் கோவில் கொண்டிருக்கும் இறைவன் பெயருடன் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தாயுமானவர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) இவருடைய சொந்த ஊர். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், அவர் பாடல்களின் சிறப்பையும் அழகு நடையில் எழுதியுள்ளார், அருள்நிதி மன்னார்குடி பானுகுமார். நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more
1 42 43 44 45 46 128