ஸ்ரீ ராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்

ஸ்ரீ ராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர், கே.எஸ்.எல். மீடியா லிமிடெட், விலை 300ரூ. ஹிந்து மதத்தில், தீண்டாமை கொடுமைகள் அதிகம் இருந்த காலத்திலேயே, அதை மறுத்து, புரட்சி செய்து வழிகாட்டிய மகான் ஸ்ரீ ராமானுஜர். அவரின் ஆயிரமாண்டு விழாவில், ராமானுஜர் பற்றிய தொகுப்பை, இந்த நூல் காட்டுகிறது. ராமானுஜர் பற்றி, உபன்யாசகர்கள், தமிழறிஞர்கள் கூறியுள்ளது, மிக சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. திருமலையில் ஜீயர் மடத்தை ராமானுஜர் ஸ்தாபித்தது பற்றி விளக்குகையில், திருப்பதி கோவில் அதிகாலை திறப்பு நடைமுறையை ஏற்படுத்தி, அது இன்றளவும் பின்பற்றப்படுவதை அந்த அந்த […]

Read more

வகாபிசம் எதிர் உரையாடல்

வகாபிசம் எதிர் உரையாடல், ஹெச்.ஜி.ரசூல், பாரதி புத்தகாலயம், பக். 160, விலை 140ரூ. மார்க்ஸியவாதியான இந்நூலாசிரியர் இப்படியொரு நூலை எழுதியுள்ளது ஆச்சரியப்படத்தக்கது. ‘இஸ்லாம்’ மூடநம்பிக்கைகளை அகற்ற மட்டுமின்றி, உலகில் அமைதியை நிலைநாட்டவும் தோன்றிய மார்க்கம். ஆனால், இன்று அம்மார்க்கம், அப்படிப்பட்டதா, இல்லையா என்ற விவாதத்திற்கு ஆளாகியுள்ளது. காரணம், இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாமிய நாடுகளிலேயே நடக்கும் தீவிரவாதச் செயல்களால், இஸ்லாமிய மக்களே கணிசமான அளவில் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள். ஓர் இறை நம்பிக்கைகயையும், அழகிய வாழ்வியலையும் முழுமையான முறையில் போதித்த இம்மார்க்கத்தின் ‘ஈமான்’ என்ற […]

Read more

கீத கோவிந்தம்

கீத கோவிந்தம் (ஜெயதேவரின் கீத கோவிந்தம்- அஷ்டபதி விளக்க உரை), வ.ந.கோபால தேசிகாசாரியார், வானதிபதிப்பகம்,  பக். 216,  விலை ரூ150. கிருஷ்ண பக்தரான ஜெயதேவர் இயற்றிய கீதகோவிந்தம் என்பது அஷ்டபதி என்றும் கூறப்படும். 12 சர்க்கங்களைக் கொண்டது. ஒவ்வொரு சர்க்கத்திலும் எட்டு பாடல்களைக் கொண்டும், ஒன்றிரண்டு பகுதிகளில் மட்டும் எட்டுக்கும் அதிகமான பாடல்களைக் கொண்டிருப்பதால் இந்தப் பகுதிகள் ‘அஷ்ட பதிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. மொத்தம் 24 அஷ்டபதிகள் இந்தக் காதல் காவியத்தை அலங்கரிக்கின்றன. வடமொழியில் செவிக்கு மதுரமான சொற்றொடர்களைக் கொண்ட இந்த கீதகோவிந்தம் கண்ணன்- […]

Read more

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம், சி.எஸ்.தேவ்நாத், புதிய புத்தக உலகம், பக். 256, விலை 120ரூ. மனிதர்கள் நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு இன்னும் உலகில் மானுடவியலாளர்கள் விடை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர். அறிவியலில் ஆயிரம் பிரிவுகள் முயன்ற போதும், கடலின் மடியில் மறைந்து கிடக்கும் செல்வங்களை மதிப்பிட முடியாததைப் போல், வானிலும், மண்ணிலும் இன்னும் அறியப்படாத ரகசியங்கள் பொதிந்திருப்பதைப் போல, ஆன்மாவும் இருக்கிறது. அது தன்னுள் பல சக்திகளை தேக்கி வைத்திருக்கிறது, உண்மைகளை அடுக்கி வைத்திருக்கிறது என்று […]

Read more

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு, வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. துளசியைப் பற்றிப் பல நுால்கள் வந்திருந்தபோதிலும், இந்த நுால் சற்று வித்தியாசமானது. இதை ஆன்மிகமும், அறிவியலும் கலந்த கலவையாக உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்நுாலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பல தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். முதல் பகுதி – இலக்கியம், இதிகாசம், புராணங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள துளசியின் பெருமையை விவரிக்கிறது. இரண்டாம் பகுதி – துளசி வழிபாடு, ஸ்தோத்திரங்கள், வழிபட வேண்டிய முறை, அதனால் பெறப்படும் பலன்கள் […]

Read more

கூரேசை விஜயம்

கூரேசை விஜயம், ஆசிரியர் ஆங்கிலத்தில் டாக்டர் கே.பி. வாசுதேவன், தமிழில் பி.வி. ஓம் பிரகாஷ் நாராயணன், கலைஞன் பதிப்பகம், பக். 500, விலை 500ரூ. குரு பக்தி மற்றும் குரு – சிஷ்ய உறவின் அருமை, பெருமைகளை உணர்த்தும் நுாலாக இந்நுால் அமைந்துள்ளது. கூரேசர் என்று அழைக்கப்படும், ஸ்ரீ கூரத்தாழ்வாரின் வாழ்க்கையும், அவருடன் இணைந்து வாழ்க்கைப் பயணம் செய்த, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கையும், இந்நுாலில் இரண்டறக் கலந்து விவரிக்கப்பட்டுள்ள அழகு பெரிதும் பாராட்டுதற்குரியது. டாக்டர் பி.கே.வாசுதேவன் எழுதிய ஆங்கில நுாலின் தமிழாக்கமாக இந்நுால் வெளிவந்துள்ள போதிலும், […]

Read more

திருமுறைத் திருத்தலங்கள்

திருமுறைத் திருத்தலங்கள், சுவாமி சிவராம்ஜி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 128, விலை 80ரூ. பதினெட்டாயிரத்து இருநுாற்று அறுபத்தேழு பாடல்களைக் கொண்ட திருமுறைகளில் இருந்து, சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற திருத்தலங்களைப் பற்றியும், அங்கு குடி கொண்டுள்ள ஈசனின் கருணாகடாட்சங்களைப் பற்றியும் ஆன்மிக அன்பர்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 5/11/201

Read more

108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்கள்

108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்கள்,  இரா.இளையபெருமாள்,  சகுந்தலை நிலையம், பக்.440. விலை ரூ.300. மானிட சரீரத்தோடு போக முடியாத திருப்பாற் கடல், இப்பூவுலகில் இல்லாத திருப்பரமபாதம் ஆகிய இரு திவ்ய தேசங்கள் உட்பட, 108 திவ்யதேசங்களைப் பற்றிய விரிவான நூல் இது. சோழநாட்டுத் திருப்பதிகள், நடுநாட்டுத் திருப்பதிகள், தொண்டைநாட்டுத் திருப்பதிகள், வடநாட்டுத் திருப்பதிகள், மலைநாட்டுத் திருப்பதிகள், பாண்டிய நாட்டுத் திருப்பதிகள், திருநாட்டுத் திருப்பதிகள் ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டு, இந்த திருப்பதிகள் – திவ்ய தேசங்கள்- அமைந்திருக்கும் இடம், அதற்குச் செல்லும் வழிகள், போக்குவரத்து வசதிகள், […]

Read more

ஆன்மிகம் அறிந்ததும் அறியாததும் 2

ஆன்மிகம் அறிந்ததும் அறியாததும் 2, மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், தாமரை பிரதர்ஸ், பக். 72, விலை 70ரூ. தினமலர் – ஆன்மிக மலர் இதழில் வெளியாகிறது, ‘கேளுங்க சொல்கிறோம்’ எனும் பகுதி. கோவில், தெய்வங்கள், மந்திரம், வாஸ்து, பரிகாரம் என, பல வகையில் வாசகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும், அவர்களின் பிறவகையான கேள்விகளுக்கும் வேத வித்தகர், ‘மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்’ தந்த பதில்களே, ‘அறிந்ததும் அறியாததும் – 2’ என்னும் இந்த நுால். ஏற்கனவே பகுதி – 1 வெளியாகி, வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. […]

Read more

சிவபெருமானுடன் ஒரு திருநடனம்

சிவபெருமானுடன் ஒரு திருநடனம், சத்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமி எழுதிய Dance with siva, தமிழில் கே.என்.ஸ்ரீநிவாஸ், பக். 648, விலை 425ரூ. அமெரிக்க கலிபோர்னியாவில், 1927ல் பிறந்து, பாலே நடனக் கலைஞராய் பரிமளித்து, இந்து மத ஈடுபாட்டால், 1949ல் யாழ்ப்பாண ஞானியார், யோக சுவாமிகளால் சன்னியாச தீட்சை பெற்று, பிரதான பாடம் எனும் மூன்று தொகுப்புகளால் ஆங்கிலத்தில் வெளியான, நுாலின் முதல் பாகமான, ‘DANCING WITH SIVA’ தற்போது தமிழ் வடிவம் பெற்றுள்ளது. ‘மனம் முழுக்க காழ்ப்பினை சுமந்து செல்லும் தியான முயற்சிகளில் […]

Read more
1 43 44 45 46 47 128