பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை, பதிப்பாசிரியர் இராம லெட்சுமணன், சகுந்தலை நிலையம், விலை 1200ரூ. திருஞான சம்பந்தர் – திருநாவுக்கரசர் – சுந்தரர் ஆகியோரின் தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார், திருவிசையப்பா, திருமூலர் திருமந்திரம் தொடங்கி பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் வரலாறு, அறுபத்து மூவர் வரலாறு என்று மொத்தம் 18,375 பாடல்கள் அனைத்தும் ஒரே புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் சைவர்களுக்கும் நல்விருந்து என்றே சொல்ல வேண்டும். உரையையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் இன்னம் பெருவிருந்தாக அமைந்திருக்கும். தமிழுக்கு வைசம் செய்துள்ள அருந்தொண்டின் தொகுப்பே இந்நூல். […]

Read more

இறைவன் எழுந்தருளும் இனிய கோவில்கள்

இறைவன் எழுந்தருளும் இனிய கோவில்கள், கவிஞர் சீனு.செந்தாமரை, செந்தமிழ் இலக்கிய பேரவை, விலை 100ரூ. தமிழகத்தின் சக்தி வாய்ந்த, பிரபல கோவில்களின் சிறப்பு பற்றி எளிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர் கவிஞர் சீனு.செந்தாமரை. ஒவ்வொரு கோவில் பற்றியும் நறுக்கு தெறித்தாற்போல், நுணுக்கமான, அரிய தகவல்கள், கோவிலின் மூலவர் மற்றும் கோபுரங்கள் புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டு உள்ளன. மாமரம், நெல்லி, மூங்கில் ஆகியவற்றை ஸ்தல விருட்சங்களாக கொண்ட அபூர்வ கோவில்கள் குறித்த தகவல்களை திரட்டி இருப்பது கோவில்களை உடனடியாக சென்று தரிசிக்கும் ஆர்வத்தை புத்தகத்தை படிப்போரிடம் ஏற்படுத்துகிறது. […]

Read more

திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்)

திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்), மறைமலையடிகள், சிவாலயம் வெளியீடு, பக். 432, விலை 280ரூ. திருவாசகத்தின் 51 பதிகங்களுள் முன்நான்கு அகவல்களான சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் ஆகியவற்றிற்கான உரைவிளக்கம் இந்நூல். சங்க இலக்கியத்திலும், சமய இலக்கியத்திலும், சைவ சித்தாந்தத்திலும் ஆழங்காற்பட்ட மறைமலையடிகள், திருவாசகத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். ;சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து' படித்து, இவ்விளக்க உரையை எழுதியுள்ளார். மறைமலையடிகளார் தாம் எழுதிய இந்நான்கு அகவல்களுக்கான உரை நூலை, 1902இல் ஞானசாகர வெளியீடாகக் கொண்டுவந்தார். அதன்பின் மூன்று பதிப்புகள் வந்துள்ளன. இது நான்காவது […]

Read more

செம்பியன் மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி 2 பாகம் 3,

செம்பியன் மாதேவி கலைக்கோவில்கள் தொகுதி 2 பாகம் 3,முனைவர் கோ.எழில் ஆதிரை, ரோகிணி பதிப்பகம், பக். 156, விலை 100ரூ. தமிழக வரலாற்றில் செம்பியன் மாதேவி செய்த அறப்பணிகளும், கலைத் தொண்டும் அளவிற்கரியன. இந்நூலாசிரியர் செம்பியன் மாதேவி எடுப்பித்த கோவில்களையும், செப்புத் திருமேனிக பற்றிய செய்திகளையும் முன்னரே பெருநூலாக எழுதியுள்ளார். இந்நூலில், செம்பியன் மாதேவி ஊரில் உள்ள கைலாசநாதர் கோவில் பற்றித் தனித்து ஆராய்ந்து உள்ளார். அங்கு அவர் அமைத்த சிற்பங்கள், கட்டடங்கள், கல்வெட்டுச் செய்திகள் முதலியவற்றோடு வரலாற்றுச் செய்தியையும் தக்க சான்றுகளோடு தந்து […]

Read more

கன்னியாகுமரிக் கோயில்

கன்னியாகுமரிக் கோயில், சி.பிரதாபசிங், காவ்யா, பக்.432, விலை 430ரூ. கன்னியாகுமரிக் கோயில் என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம் இந்நூல். கன்னியாகுமரிக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி தெய்வத்தின் கோயிலின் வரலாற்றை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே கன்னியாகுமரிக் கோயில் இருந்திருக்கலாம் என்று கருதும் நூலாசிரியர், அதற்குப் பின் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் கோயிலைப் பற்றி ஆய்வு செய்கிறார். கோயில் தோன்றிய காலத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்கள் கோயில்களில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார். இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளை […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், ஆர்.சுப்பிரமணியம், சஞ்சய் புக்ஸ், விலை100ரூ. திருமால் அவதாரத்தில் கிருஷ்ணர் முக்கிய பங்கு வகிக்கிறார். கிருஷ்ணரின் பெருமைகளை வர்ணிக்கும் புராணம் ஸ்ரீமத் பாகவதம். இந்நூலில், கண்ணனின் பல நாமங்களை குறிப்பிடும் ஆசிரியர், விஷ்ணு சகஸ்ரநாமத்திலிருந்து மேற்கோள்களையும், பகவத் கீதையிலிருந்து சில ஸ்லோகங்களையும் எடுத்துக்காட்டாக விளக்கியிருக்கிறார். நன்றி: தினமலர், 15/10/2017

Read more

திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம்

திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம், புலவர் இரா.நாராயணன், வனிதா பதிப்பகம், விலை 160ரூ. திருநாவுக்கரசர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்; நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். 81 அகவை வாழ்ந்து பக்தி இயக்கத்தில் தொண்டினை இணைத்தவர். சிவ நெறிக் குடியில் பிறந்த இவர், இளமையில் சமண சமயத்தின் உயிரிரக்கக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து சிறப்பு மிகப்பெற்று, தருமசேனர் எனும் பெயருடன் வாழ்ந்தார். பெற்றோர் இட்டபெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியார் வேண்டுதலால், சிவன் தருமசேனருக்கு சூலை நோய் தந்து, சிவனருள் திருநீற்றால் நோய்க் கொடுமையிலிருந்து […]

Read more

வாழ வைப்பாள் ஸ்ரீ வாராஹி

வாழ வைப்பாள் ஸ்ரீ வாராஹி, பரத்வாஜ் ஸ்வாமிகள், சங்கர் பதிப்பகம், பக். 176, விலை 160ரூ. வாராஹி வடிவங்களின் தத்துவம், கலப்பையால் கவலை நீக்குபவள், உலக்கையால் ஊழ்வினை நீக்குபவள், வரும் பகையை அழித்து நல்வழி காட்டுபவள். வாராஹியை எப்படி வழிபட வேண்டும் என்பதை கூறுகிறது, இந்நூல். வேத தத்துவத்தை மிகவும் எளிமையாக்கி உலக மாந்தர்களுக்கு அளித்திருக்கிறது எனலாம். நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை

கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – விளக்கவுரை, உ.வே.சாமிநாதையர், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக்.1144, விலை ரூ. 500. கம்பராமாயணத்திலேயே மிகச்சிறந்த பகுதி, சீதையின் குணநலன்களையும் அநுமனின் பெருமைகளையும் கூறும் சுந்தரகாண்டமே ஆகும். அநுமனுக்கு ‘சுந்தரன் 39’ என்று ஒரு பெயர் வழங்கப்படுவதால் அவனுடைய வீர தீரச் செயல்களை விரிவாகக் கூறும் பகுதி ’சுந்தரகாண்டம் 39’ என்று வழங்கப்படலாயிற்று. இக்காண்டத்தை நாள்தோறும் படிப்பவருக்கு நல்லன எல்லாம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற கம்பராமாயணத்தின் பல பிரதிகளை ஆராய்ந்து ‘தமிழ்த்தாத்தா 39’ உ.வே.சாமிநாதையர் […]

Read more

கன்னியாகுமரிக் கோயில்

கன்னியாகுமரிக் கோயில், பேராசிரியர் சி.பிரதாபசிங், காவ்யா, விலை 430ரூ. இந்தியாவின் தென்கோடியில் அமைந்து இருக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய சிறப்பான ஆய்வு நூல். கோவில் தோன்றிய காலம், அந்தக் கோவிலில் காணப்படும் சிலைகள், கல்வெட்டுக்கள், வாகனங்கள், இசைக்கருவிகள் குறித்த நுணுக்கமான தகவல்கள், அங்கு பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் விழாக்கள், அதில் பங்கேற்றவர்கள் பற்றிய விவரம், கோவில் தொடர்பாக கூறப்படும் கதைகள் என அனைத்தும் ஆய்வு நோக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றாலும், ஆன்மிகம் மற்றும் வரலாற்று […]

Read more
1 44 45 46 47 48 128