வாதி பிரதிவாதி நீதி

வாதி பிரதிவாதி நீதி, வழக்கறிஞர் ந. இராஜா செந்தூர் பாண்டியன், குமுதம் பு(து)த்தகம், பக். 296, விலை 350ரூ. நீதி இலக்கியத்துக்கு ராஜபாட்டை! ‘இந்திய அரசியலமைப்பு சட்டம்’ எனப்படும், நமது நாட்டின் அதிகாரப்பூர்வமான சட்ட வேதத்தின் சாரமாக, சமீபகால தமிழ் வரலாற்றில் கிடைக்காத பொக்கிஷமாக அமைந்திருக்கிறது வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன் எழுதிய, ‘வாதி, பிரதிவாதி, நீதி!’ நூல். ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் தொடராக வெளிவந்து, தற்போது சில நாட்களுக்கு முன் நூல் வடிவம் பெற்றது. சமீபத்திய சென்னை புத்தக கண்காட்சியில், அதிக பிரதிகள் […]

Read more

கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்

கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர், இரா. மோகன், வானதி பதிப்பகம், பக்.208, விலைரூ.150. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட குறள், இந்தக் கணினி யுகத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில், அறிவுலகில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் குறள் உரக்கப் பேசுகிறது. குறிப்பாக, அதிகமாகவும், பரவலாகவும் விவாதத்துக்கு உள்படுத்தப்படும் “ஆளுமை வளர்ச்சி, மனித வள மேம்பாடு, விழுமியக் கல்வி (Value Education), தொடர்பியல் திறன்கள், உடன்பாட்டுச் சிந்தனை’ ஆகியவற்றுக்கு திருக்குறள் கருத்துகள் எவ்வாறு வலுசேர்க்கின்றன என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றன மேற்கண்ட தலைப்புகளிலான கட்டுரைகள். […]

Read more

மைதானம்

மைதானம் (விளையாட்டுக் கட்டுரைகள்) , சந்திரா மனோகரன், ஓவியா பதிப்பகம், பக்.144, விலை  ரூ.100. கிரிக்கெட்டில் தொடங்கி, கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, தடகளம், செஸ், கார் பந்தயம் என பல்வேறு விளையாட்டுகளை பற்றி இந்நூல் அலசுகிறது. மேற்கண்ட விளையாட்டுகளுடன் தொடர்புடைய உலகக் கோப்பைகள், ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி தொடர்பான விவரங்கள், அதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களைப் பற்றியெல்லாம் நூலாசிரியர் விவரித்திருக்கிறார். டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, தமிழகத்தைச் சேர்ந்த கார் பந்தய […]

Read more

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும், பிரேம், ரமேஷ், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 120, விலை 100ரூ. இசைக்கும் சமூகத்துக்குமான உறவு, இசைக்கும் கலாசாரத்துக்குமான உறவு, காலந்தோறும் இசை மாறி வந்த விதம் ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. இளையராஜாவின் இசைப் பங்களிப்பு, அவர் உருவாக்கியவை, சாதித்தவை, நாட்டுப்புற இசையை பிற இசையமைப்பாளர்கள் பயன்படுத்தியதற்கும் இளையராஜா பயன்படுத்தியதற்குமான வேறுபாடு, அவரின் தனித்துவம் பற்றியெல்லாம் இன்னொரு கட்டுரை சொல்கிறது. இளையராஜா பற்றி 2002 ஆம் ஆண்டு அ. மார்க்கஸ், முன் வைத்த பார்வைகளை விமர்சனம் செய்யும் கட்டுரையும் […]

Read more

இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள்

இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், பக். 160, விலை 125ரூ. 2012-2015ஆம் ஆண்டு காலகட்டத்தில் தினமணி, ஜனசக்தி, சொல்வனம் வலைப்பின்னல் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பனை, சந்தனம், யூகலிப்டஸ், செம்மரங்கள் குறித்த பல்வேறு வகையான செய்திகளை சங்க காலம், தொட்டு தற்காலம் வரை புள்ளி விவரங்களுடனும், அறிவியல் பூர்வமாகவும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இயற்கை வளங்களையும், சுற்றுச்சுழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், இயற்கையோடு ஒன்றி மனிதன் வாழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. 1972-இல் பிரேசிலில் தொடங்கியு […]

Read more

கரப்பான் பூச்சி நகைக்குமோ?

கரப்பான் பூச்சி நகைக்குமோ?, நீதியரசர் பிரபா ஸ்ரீ தேவன், கவிதா பதிப்பகம், பக். 280, விலை 225ரூ. அனுபவ அறிவும் அக்கறையும் ‘எனக்கு ஏதாவது பெருமை இருக்குமானால், எனது எண்ணத்தில் தெளிவும், செயல்பாடுகளில் நேர்மையும், தீர்ப்புகளில் நியாயமும் இருக்குமானால், அதற்குக் காரணம் நான் வி.கிருஷ்ணஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி என்பது தான்’ (பக்.80) என்று பெருமையுடன் கூறும் நூலாசிரியர், தினமணி நாளிதழில் எழுதிய 45 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘அவர்கள் குரல்களைக் கேளுங்கள். அவை நம்பிக்கையின் சவங்களுக்கு ஊதும் சங்கா இல்லை சமூகத்தை […]

Read more

காலம் தோறும் நரசிங்கம்(பண்பாட்டுக் கட்டுரைகள்)

காலம் தோறும் நரசிங்கம்(பண்பாட்டுக் கட்டுரைகள்), ஜடாயு, தடம் பதிப்பகம், பக். 203, விலை 130ரூ. ஒவ்வொரு சிந்தனையுடன், வரலாறு, பண்பாடு, கலாசாரம், மதம், வழிபாடு உள்ளிட்டவற்றை பார்க்கும் போது, அதன் வடிவம் வேறுபடும். அவ்வாறு, ஆசிரியர் ஜடாயு தனது பார்வையில் பண்பாடு சார்ந்த சிந்தனைகளை கட்டுரைகளாக வடித்துள்ளார். பல்வேறு காலங்களில் அவர் எழுதி வெளிவந்த பண்பாட்டுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, நூல் வடிவில் வெளியாகி இருக்கின்றன. காந்தியின் கிராம ராஜ்ய கனவு முதல், வேதநெறி, அப்துல் கலாம், ஹிந்துத்துவம் என, பலதரப்பட்ட விஷயங்களை எடுத்துரைக்கிறார். ராமன், […]

Read more

செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்

செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்,  பதிப்பாசிரியர்  த.மலர்க்கொடி, அய்யா நிலையம்,  பக். 296, விலை ரூ.300. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை உயராய்வு மையமும் இணைந்து (மூன்று நாள்கள் மார்ச் (4-6, 2015) நடத்திய கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. பண்டைத் தமிழர்களுடைய வாழ்க்கை, மரபு வழிப்பட்ட வாழ்க்கை. சங்ககாலம் தொடங்கி,இக்காலம் வரை அவர்கள் நடைமுறைப்படுத்திய மரபுகள் சில கொள்ளப்பட்டன; சில தள்ளப்பட்டன. இதற்குக் காரணம், தலைமுறை இடைவெளி என்றுகூடச் சொல்லலாம். மேலும், ஆணாதிக்கம் தலைதூக்கி […]

Read more

வாழ்வின் புதிய பாதையில் பயணிப்போம் வாருங்கள்!

வாழ்வின் புதிய பாதையில் பயணிப்போம் வாருங்கள்!, தேவிசந்திரா, மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. வாழ்வியல் மற்றும் சமூக முன்னேற்றச் சிந்தனைகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு. வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கு தன்னம்பிக்கை, தைரியம், லட்சியம் மிகவும் அவசியம் என்பதை மனதில் அழகாக விதைக்கும் விதமாக 32 கட்டுரைகளில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் தேவி சந்திரா. நன்றி: தினத்தந்தி, 11/5/2016.   —- ஓலைச் சுவடியின் இரகசியங்கள், முனைவர் தமிழ் இனியன், அறிவுக்கடல் பதிப்பகம், விலை 150ரூ.(ஒவ்வொன்றும்) ஓலைச்சுவடி வடிவில் புத்தகங்கள் ஓலைச்சுவடி போன்ற வடிவமைப்பில் 3 புத்தகங்களை […]

Read more

தீர்க்க சுமங்கலி பவ!

தீர்க்க சுமங்கலி பவ!, ப்ரியா கல்யாணராமன், குமுதம் புது(த்)தகம், பக். 160, விலை 150ரூ. பெண்களுக்கும் அம்மன்களுக்கும் உள்ள நெருக்கத்தை பக்தி என்ற ரீதியில் மட்டும் காட்டாமல், மகளுக்கும் தாய்க்குமான பாசம் என்ற ரீதியிலும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் ப்ரியா கல்யாணராமன். பெண்களுக்கு உரிய காலத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், நோய்களில் இருந்து விடுதலை, பில்லி சூனியம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான பலன்களை அள்ளித்தரும் தெய்வங்களைப் பற்றியும் திருத்தலங்கள் பற்றியும் பக்திமணம் கமழ, குமுதத்தில் வாரந்தோறும் எழுதிவந்தது, இப்போது நூலாக வந்துள்ளது. தம்பதியர் […]

Read more
1 8 9 10 11 12 88