எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்

எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள், கமலா கந்தசாமி, விசா பப்ளிகேஷன்ஸ், விலை 105ரூ. நடிகராக இருந்தபோதும், முதல்-அமைச்சராக பதவி வகித்தபோதும் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த ருசிகர சம்பவங்கள் ஏராளம். அவற்றை தொகுத்துத் தந்துள்ளார் கமலா கந்தசாமி. சம்பவங்கள் காலவரிசைப்படி எழுதப்பட்டுள்ளதால், வரிசையாகப் படிக்கும்போது, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது. 28-ம் பக்கத்தில், எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் சிரிப்பு நடிகராக நடித்து வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை ஆரம்பித்தபோதும், கிருஷ்ணன் தி.மு.க.விலேயே இருந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், 1/9/1957ல் காலமாகிவிட்டார். எம்.ஜி.ஆர். […]

Read more

திரை இசைத் திலகங்கள்

திரை இசைத் திலகங்கள், வி.ராமமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.224. விலை ரூ.180. இசையமைப்பாளர்கள் ஜி.ராமநாதன் முதல் இளையராஜா வரையிலான ஐம்பத்திரண்டு இசைக்கலைஞர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர்களின் பங்களிப்புகள்; அனுபவங்கள் குறித்து விவரிக்கும் நூல். இசையமைப்பாளர்கள் தவிர, பாடி நடித்த நடிகர்- நடிகைகள் மற்றும் பிரபல பின்னணி பாடகர்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா, என்.சி.வசந்தகோகிலம், எம்.எல்.வசந்தகுமாரி, பி.ஜெயச்சந்திரன் முதலானவர்கள் குறித்த தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சி.ஆர் சுப்பராமனின் திடீர் மறைவுக்குப் பின் அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி தனித்து இசையமைக்கத் தொடங்கியது, எம்.ஜி.ஆர். படத்துக்கு […]

Read more

ஏவுகணை தந்தை அப்துல் கலாம்

ஏவுகணை தந்தை அப்துல் கலாம், தொகுப்பு  சிவரஞ்சன், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. கடந்த சில ஆண்டுகளில் யாரைப் பற்றிய புத்தகம் இந்தியாவில் அதிக அளவில் வந்துள்ளது என்று கேட்டால் தயக்கமின்றி கூறலாம் “அப்துல்கலாம் அவர்களைப் பற்றிய புத்தகங்கள்தான்” என்று. புத்தக ஆசிரியர்கள் அவரவர் கோணத்தில் அப்துல் கலாம் சிறப்புகளைக்கண்டு மகிழ்ந்து எழுத்தில் வடிக்கிறார்கள். சிவரஞ்சன் தொகுத்துள்ள இந்த நூல், சிறப்பாக அமைந்துள்ளது. அப்துல் கலாம் வரலாறு, அவருடைய சாதனைகள், அவர் எழுதிய புத்தகங்கள், அவருக்குப் பிடித்தமான புத்தகங்கள்… இப்படி அப்துல் கலாம் பற்றி […]

Read more

நினைவில் நிலைத்தவர்கள்

நினைவில் நிலைத்தவர்கள், வாசகன் பதிப்பகம், விலை 100ரூ. எழுத்தாளர்கள் பொன்னீலன், மெர்வின், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், நாட்டுப்புற இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி உள்பட 29 பிரமுகர்களின் சிறப்பை விவரிக்கிறார் நூலாசிரியரும், பத்திரிகையாளருமான அகநம்பி. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   மாவலி பதில்கள், நக்கீரன் பதிப்பகம், விலை 125ரூ. ‘நக்கீரன்’ இதழில் வெளியான கேள்வி – பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மாவலி என்ற பெயரில் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கோவி. லெனின். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில் சுவையாகவும், சிந்தனையைத் […]

Read more

மாடர்ன் தியேட்டர்ஸ்

மாடர்ன் தியேட்டர்ஸ், விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ- திரைப்படத் தயாரிப்பில் ஜெமினி, ஏவி.எம்., பட்சிராஜா, ஜுபிடர் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலக் கட்டத்தில், அவர்களுடன் முன்னணியில் இருந்த நிறுவனம் “மாடர்ன் தியேட்டர்ஸ்.” இதன் அதிபரான டி.ஆர். சுந்தரம், 97 படங்களைத் தயாரித்து வெளியிட்டார். அவர் மறைவுக்குப் பின் நிர்வாகத்தை ஏற்ற அவர் மகன் ராமசுந்தரம், படங்களின் தயாரிப்பு எண்ணிக்கையை 118 ஆக உயர்த்தினார். தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தைத் தயாரித்தவர் டி.ஆர். சுந்தரம்தான். மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றிய கலைஞர் மு. […]

Read more

ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி

ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி, வி கேன் புக்ஸ், விலை 90ரூ. மறைந்த முதல் – அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அதே சமயம் மனதைத் தொடும்படியும் விவரிக்கும் நூல். ஜெயலலிதாவின் இளமைப்பருவம், திரைப்படத் துறையில் பெற்ற தொடர் வெற்றிகள், அரசியல் பிரவேசம், முதல் – அமைச்சர் பதவி, அண்மையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மறைவு… இப்படி, ஜெயலலிதா வாழ்க்கை முழுவதையும் இந்த 108 பக்க நூலில் ஒரு நாவலுக்குள்ள விறுவிறுப்புடன் எழுதியுள்ளார், குகன். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கும், ஜெயலலிதா மீது பற்று கொண்டவர்களுக்கும் இது […]

Read more

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை, மு. நியாஸ் அகமது, விகடன் பிரசுரம், பக். 192, விலை 140ரூ. “நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன்‘’- இது தனக்கு மிக நெருங்கியவர்களுடன் ஜெயலலிதா பகிர்ந்து கொண்ட வாசகம். அந்த நரகங்கள் எவை, அவற்றை எப்படித் தாண்டிக் குதித்துத் தப்பித்து வந்தார் என்பதை விவரிப்பதுதான் இந்த நூல். இரண்டாவது வயதில் தந்தையை இழந்தது, தாயார் வேதவல்லி, “சந்தியா’‘ என்கிற பெயர் தாங்கி படங்களில் நடித்தது, சர்ச் பார்க் கான்வென்டில் ஜெ.யின் படிப்பு, […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், விகடன் பிரசுரம், விலை 160ரூ. இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புகழ் தேடித்தந்தவர் சத்யஜித் ரே. 1954-ல் அவருடைய முதல் படமான “பாதேர் பாஞ்சாலி” வெளிவந்தது. சர்வதேச பட விழாக்களில் பல பரிசுகளை வாங்கிக் குவித்தது. வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கார் பரிசு இவருக்குக் கிடைத்தது. உடல் நலம் இல்லாத காரணத்தால், ஆஸ்கார் குழுவினரே கல்கத்தாவில் உள்ள அவர் வீட்டக்கு நேரில் சென்று பரிசை வழங்கினர். “திரைப்பட உலகின் மகத்தானவர் சத்யஜித் ரேதான்” என்று உலகப்புகழ் பெற்ற ஜப்பானிய டைரக்டர் […]

Read more

தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை

தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை, தொகுப்பு திருமயம் பெ. பாண்டியன், அட்டமா, பக். 72, விலை 40ரூ. கவலைகளை மறந்து சிரிக்கும் மனிதனுக்குத்தான் பல்வேறு வெற்றிகள் சாத்தியம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த நோயற்ற வாழ்வுக்கு அடிகோலுவது மனமகிழ்ச்சிதான். இன்றைக்கு எல்லா பத்திரிகைகளிலும் ஜோக்ஸ் இடம் பெறுகின்றன. அதைப் படிப்போர் மன நிம்மதியும் உற்சாகமும் அடைவது உறுதி. அப்படி மக்களை மகிழ்விக்கும் ஜோக்குகளை எழுதி அனுப்புவோர் எப்படி இருப்பார்கள், அவர்களின் பணி என்ன, அவர்கள் செய்து வரும் செயல்கள் எவை […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா. கணேசன், விகடன் பிரசுரம், பக். 216, விலை 160ரூ. இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல். கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் […]

Read more
1 14 15 16 17 18 46