நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி

நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி, தமிழில் பூ. சோமசுந்தரம், அலைகள் பதிப்பகம், விலை 140ரூ. ஜான் ரீடைப் போலவே ரஷ்யப் புரட்சியைப் பற்றி மிக விரிவாக எழுதிய மற்றொரு எழுத்தாளரும் அமெரிக்காவைச் சேர்ந்தவரே அவர் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம்ஸ், ஜான் ரீடின் வழிகாட்டலில் வந்தவர். இருவருமே ரஷ்யப் புரட்சியை நேரில் கண்டவர்கள். ரஷ்யா பற்றியும், அந்நாட்டில் புரட்சியை வழிநடத்திய லெனின் பற்றியும் நிலவிய பல்வேறு தவறான நம்பிக்கைகள், சித்திரங்களை மாற்றியதில் ரைஸ் வில்லியம்ஸின் எழுத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ரஷ்யப் புரட்சிக்குப் பின்னால் 1922- […]

Read more

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், ஜான் ரீடு, மலையாளம் யூமா. வாசுகி, தமிழில் ரா. கிருஷ்ணையா, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 250ரூ. நவம்பர் புரட்சியின் சாட்சியங்கள் ரஷ்யப் புரட்சி பற்றி மிக விரிவாகவும், அதைப் பற்றி முழுமையானதொரு சித்திரத்தையும் தருகிறது ஜான் ரீடு எழுதிப் புகழ்பெற்ற இந்த நூல். இந்த நூலும் நூலின் தலைப்பும் காலம்காலமாக உச்சரிக்கப்படுவதாகவும் உத்வேகம் ஊட்டக் கூடியதாகவும் இருந்துவருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் – சோஷலிசவாதி ஜான் ரீடு, ரஷ்யாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து அந்நாட்டுக்குச் சென்று […]

Read more

பார் போற்றும் பகலவன் பாபா சாகேப் பயணப் பாதை

பார் போற்றும் பகலவன் பாபா சாகேப் பயணப் பாதை, எம்.ஏ. பாலசுப்பிரமணியன், சித்தார்த்த பதிப்பகம், பக். 655, விலை 450ரூ. 14.4.1891 முதல் 6.12.1956 வரையிலான சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கைப் பயணத்தை தேதி வாரியாக தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். நூலின் ஒவ்வொரு பக்கங்களும் அம்பேத்கர் எத்தகைய இடர்பாடுகளையெல்லாம் கடந்து தாழ்த்தப்பட்டவர்களை மிளிரச் செய்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. 1905-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் அம்பேத்கர் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர், “அவரிடம் தாழ்ந்த மஹர் இனத்தில் பிறந்த நீ படிப்பதனால் […]

Read more

மரணத்தின் மீது உருளும் சக்கரம்

மரணத்தின் மீது உருளும் சக்கரம், தோப்பில் முஹம்மது மீரான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 128, விலை 80ரூ. பல்வேறு இதழ்களில் வந்த சிறு கதைகளின் தொகுப்பு. சில கதைகள், நூலாசிரியரின் அனுபவத்தை கூறுவதாக உள்ளது. நன்றி: தினமலர், 13/11/2016.   —-   சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம், முடிகொண்டான் வெங்கட்ராம சாஸ்திரிகள், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 65ரூ. எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கியவர் சாணக்கியர். அவர்சொன்ன வழியில் இன்றைய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

காந்திஜியின் கனவு நனவாகட்டும்

காந்திஜியின் கனவு நனவாகட்டும், முனைவர் அ. பிச்சை, சபாநாயகர் செல்ல பாண்டியன் அறக்கட்டளை, பக். 144, விலை 70ரூ. காந்தி விரும்பியது என்ன? ‘ஏழ்மை ஒழிக்கப்படவில்லை என்றால், தீண்டாமை முழுக்கத் துடைத்து எறியப்படவில்லை என்றால் நாம் சுதந்திரம் பெறுவதில் பொருளே இல்லை’ என, முழங்கியவர் காந்தி மகான். ‘என் அரிஜன சகோதரர்களை உள்ளே அனுமதிக்காத பூரி ஜகந்நாதர் கோவிலுக்குள், கஸ்தூரிபா, என்னை மீறி எப்படிப் போகலாம் என மனம் வருந்தியும், கடிந்தும் பேசியவர் அவர். தீண்டாமை ஒழிப்பை ஓர் இயக்கமாகவே நடத்தியவர். அவர் கண்ட […]

Read more

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மன்னை.மு. அம்பிகாபதி

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மன்னை.மு. அம்பிகாபதி (தேர்வு செய்யப்பட்ட உரைகள் பகுதி 1), தொகுப்பாசிரியர் மு.அ. பாரதி, இயல் வெளியீடு, பக். 364, விலை 250ரூ. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 1977 முதல் 1980 வரை மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த மன்னை.மு.அம்பிகாபதி, மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள், இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே அவர் சட்டமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்துதல், தனியார் பேருந்துகளை […]

Read more

யாப்பு

யாப்பு டொனமூர் முதல் சிறிசேனா வரை, மு. திருநாவுக்கரசு, ஆகுதி பதிப்பகம், விலை 120ரூ. அரசியல் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் தொடர் தோல்வியைத் தழுவிய நிலையில் கையறு நிலையில் நிற்கிறான் ஈழத்தமிழன். அதற்கு அகத்திலும் புறத்திலும் ஆயிரம் காரணங்கள். எது காரணமாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? சோகத்தைச் சுமந்து சுணங்கிப் போக முடியுமா? சுணக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வந்திருக்கிறது மு. திருநாவுக்கரசுவின் இந்தப் புத்தகம். ஈழத்தமிழர் வாழ்க்கையை தமிழ் உணர்ச்சிமயமாக இல்லாமல், சிங்கள இனவாதமாக பார்க்காமல் மிக நுண்மையாக ஆராய்கிறார் […]

Read more

உரிமைக்குரல்

உரிமைக்குரல், சுந்தரம் வெளியீடு, விலை 350ரூ. 2006-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 144-வது வட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சு.மங்களராஜ். அவர் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடுத்த உரிமைக்குரல்”களையும் அதற்காகமேயர் மா. சுப்பிரமணியன் அளித்த பதில்களையும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள நூல். அதன் விளைவு, சென்னை வாழ்மக்களுக்கு மட்டுமின்றி மாநகராட்சியை சார்ந்த பல்வேறு துறை ஊழியர்களும் பயன் பெற்றனர் என்பதை அறிய முடிகிறது. அத்தகைய ஜனநாயகம் மீண்டும் வருமா? நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும்

நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 176, விலை 135ரூ. லட்சியத்துக்காக வாழ்வதென்பது அண்மைக்காலமாக அனைத்து அரசியல் கட்சிகளிலும் அருகி வருகிறது. இந்நிலையில், பொதுவுடைமை இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணம் செய்த தியாகிகளின் வரலாறு, இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. ப.ஜீவானந்தம், கே.பாலதண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சி.எஸ்.சுப்பிரமணியம், சாம்பவான் ஓடை சிவராமன், சின்னியம்பாளையம் தியாகிகள் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த அற்புதமான மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன. இவை ஜனசக்தி, தாமரை உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானவை. பொதுவுடைமை சித்தாந்தம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, […]

Read more

பிம்பச் சிறை

பிம்பச் சிறை, எம்.ஜி.ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும், எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை, பக். 248, விலை 250ரூ. மூன்றெழுத்தில் மயங்கிய ரசிகர்கள்! எம்.ஜி.ஆர்., என்ற பெயர் தமிழகத்தில் எளிதில் அழிக்க முடியாத பெயராக நிற்கிறது என்பது உண்மை. கடந்த, 1953 – 72 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்.ஜி.ஆர்., உறுப்பினராக இருந்தார். அந்த காலகட்டத்தில் தி.மு.க.,வின் கொள்கை களான இறையாண்மை மிக்க தமிழகம், நாத்திகம், சுயமரியாதை, மொழிப் பற்று ஆகியவற்றை தனது திரைப்படங்களில் நீர்த்துப் போன வடிவில் பரப்பினார் எம்.ஜி.ஆர்., […]

Read more
1 14 15 16 17 18 44