இன்றும் காந்தியம்

இன்றும் காந்தியம், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், பக். 96, விலை 70ரூ. இன்றைய சமூகத்தில், காந்தியம் கவைக்கு உதவாது என்று பலர் நினைக்கலாம். இந்தச் சூழலிலும் கூட, காந்திய தத்துவங்களும் போராட்ட வழிகளும் எவ்வளவு நடைமுறை சாத்தியமானவை என்று, நூலாசிரியர் இந்த நூல் மூலம் சிந்திக்க வைக்கிறார். உதாரணமாக, அகிம்சையின் அடிப்படைத் தத்துவம், தன்னை வருத்திக் கொண்டு எதிரியின் மனதில் நியாய உணர்வை விழிப்புறச் செய்வது தான். ‘நியாய உணர்வு’ என்பது, ‘தர்மம்’ என்ற வார்த்தையின் பொருளாக கருதலாம். சிறிதும் தவறற்ற சிந்தனை அது. […]

Read more

பிம்பச் சிறை

பிம்பச் சிறை, பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை பதிப்பகம், விலை 225ரூ எம்.ஜி.ஆர். பற்றிய ஆய்வு நூல் தமிழ்நாட்டில் முதலில் சினிமாவிலும், பிறகு அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் எம்.ஜி.ஆர். அவரைப்பற்றி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆய்வு செய்து, ஆங்கிலத்தில் எழுதிய நூல், இப்போது தமிழில் “பிம்பச் சிறை” எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும், அரசியலிலும் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. தமிழில் மொழி பெயர்த்தவர் பூ.கொ. சரவணன். திரை உலகில் எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றியை விரவாகக் கூறும் பாண்டியன், அவருடைய […]

Read more

பிம்பச் சிறை

பிம்பச் சிறை, எம்.எஸ். பாண்டியன், பிரக்ஞை பதிப்பகம், பக். 248, விலை 225ரூ. திராவிட இயக்க ஆய்வாளரான இந்நூலாசிரியர் 24 ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஜி.ஆரைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல், தமிழில் இப்போது வெளிவந்துள்ளது. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல நிகழ்விலிருந்து தொடங்குகிறது இந்நூல். எம்.ஜி.ஆர். மீது தமிழக மக்கள் வைத்திருந்த அபரிமிதமான பற்று (எம்.ஜி.ஆர். இறந்தபோது ஏராளமானோர் மொட்டையடித்துக் கொண்டது, 31 பேர் தற்கொலை செய்து கொண்டது), எம்.ஜி.ஆர். தனது படங்களுக்கு அடித்தட்டு மக்களிடமிருந்தே தலைப்புகளைப் பெற்றது (“தொழிலாளி’‘, “விவசாயி’‘, “படகோட்டி‘’), ஆரம்ப காலப் […]

Read more

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன்

எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ. எம்.ஜி.ஆர். வரலாறு புத்தி கூர்மை, சாதுர்யம், சாதக சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுதல், தகுந்த சூழ்நிலைக்காகக் காத்திருத்தல், மீன் கொத்திய வேகத்தில் தூண்டிலை ‘சரக்கென்று’ வெளியே வீசி எடுக்கும் தூண்காரனைப்போல சாதகச் சூழ்நிலை அமைந்த வேகத்தில் அதைப் பயன்படுத்தி நினைத்ததை ஜெயித்தல், எதிரிகளை வசப்படுத்துதல், வளைந்தும், நெளிந்தும், நிமிர்ந்தும் தனது பயணப் பாதைக்கு பங்கம் வராதபடி தொடர்ந்து முன்னேறுதல் – எல்லா வாழ்வியல் வித்தைகளும் அறிந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வாழ்க்கையில் நடந்த […]

Read more

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள், கி. வீரமணி, திராவிடக் கழக வெளியீடு, விலை 150ரூ. 20-ம் நூற்றாண்டின் பகுத்தறிவுப் பகலவனாகத் திகழ்ந்தவர் தந்தை பெரியார். அவருடைய வாழ்க்கை, தமிழ்நாட்டின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்ததாகும். அவருடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை சுவைபட எழுதியுள்ளார், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி. பெரியாரின் தொலைநோக்கு பார்வை, அஞ்சாமை, நேர்மை, சிக்கனம், சமத்துவம் முதலிய பண்புகளை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு சமயம் அவர் வாயில் புற்றுநோய் ஏற்பட்டு, அதில் இருந்து அவர் மீண்ட தகவலும் புத்தகத்தில் இடம் […]

Read more

பிம்பச் சிறை, (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்)

பிம்பச் சிறை, (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்), எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை, விலை 225ரூ. “மூன்றெழுத்தில் மூச்சு இருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்” என்று பாடியவர் எம்.ஜி.ஆர். அவரது மூச்சுக்காற்று முடிந்தபிறகும் அவரைப் பற்றிய பேச்சு மட்டும் குறையவே இல்லை. இன்னும் சொன்னால், அவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். ‘எம்.ஜி.ஆருக்கு சாவு கிடையாது’ என்பது கிராமத்து ஐதீகங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. எம்.ஜி.ஆரைப் போல எத்தனையோ கதாநாயகர்களைத் தமிழ் சினிமா பார்த்துவிட்டது. […]

Read more

பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, வெ.சாமிநாத சர்மா,  இலக்கியச் சோலை, பக்.80, விலை ரூ.60 சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்திய, ஐரோப்பிய சக்திகளால் தொடங்கி வைக்கப்பட்டது பாலஸ்தீனப் பிரச்னை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனத்தில், உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து யூதர்களைக் கொண்டு வந்து குடியமரச் செய்தார்கள். குடியேறிய யூதர்கள் சொந்த மண்ணின் மக்களை அகதிகளாக்கினர். அவர்களின் உரிமைகளைப் பறித்தனர். இழந்த உரிமைகளையும் நிலங்களையும் பெறுவதற்காக பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னையை 75 ஆண்டுகளுக்கு முன்பே நூலாசிரியர் வெ.சாமிநாத […]

Read more

மதுரை அரசியல்

மதுரை அரசியல்,  ப. திருமலை, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,  பக்.336, விலை ரூ.250. மதுரையைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமெனில் ராணி மங்கம்மாளையும், காந்தியின் அரை ஆடைக்கான வரலாற்றையும் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். இந்நூலில் அவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்புக்குரியது. நூலாசிரியர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால், தன் கண் முன்னே நிகழ்ந்த பல சம்பவங்களை அற்புதமாக விவரித்திருக்கிறார். குறிப்பாக அரசியல் கொலை, கூலிப்படை கலாசாரம் தொடர்பாக எழுதும்போது அவர்களுடைய சங்கேத வார்த்தைகளைக் கூட எழுதியிருக்கிறார். மதுரை ஆலயப் பிரவேசம், கக்கன் வரலாறு குறித்த பதிவுகள் அருமை. மௌலானா […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே

காஷ்மீர் இந்தியாவுக்கே, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 304, விலை 250ரூ. இந்திய பாகிஸ்தான் பகைக்கு முக்கிய காரணமே காஷ்மீர் பிரச்னைதான். இதை வைத்துத்தான் இந்தியா மீது நேரடியான மற்றும் மறைமுகமான போர்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்த காஷ்மீர் பிரச்னை எப்படி உருவானது, இது தொடர்பான இந்திய தரப்பு நியாயங்கள் என்ன, இதில் பாகிஸ்தானின் சதித்திட்டங்கள், அத்துமீறல்கள், ஆக்ரமிப்புகள், போர்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், இந்திய அரசியல்வாதிகளின் தவறுகள், பிரிட்டிஷாரின் தந்திரங்கள், ஐ.நா.சபை விவாதங்கள், அதன் தீர்மானங்கள், ஆர்ட்டிகிள் 370… […]

Read more

நந்தனின் பிள்ளைகள் பறையர் வரலாறு 1850-1950,

நந்தனின் பிள்ளைகள் பறையர் வரலாறு 1850-1950, ராஜ்சேகர் பாசு, தமிழில் அ. குமரசேன், கிழக்கு பதிப்பகம், பக். 560, விலை 500ரூ. அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்த பறையர்கள் வசதியற்றவர்களாக, நிலமற்றவர்களாக இருந்த தமிழக பறையர்கள் விவசாயிகளாக உயர்ந்து, பக்கத்து நாடுகளுக்குக் கூலித் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்து, பிறகு படிப்படியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் கொல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ்சேகர் பாசு. ஆய்வுக்காக அவர் எடுத்துக்கொண்ட காலகட்டம் 1850 முதல் 1956 வரை. ‘சேஜ் இந்தியா’ வெளியிட்டு வரும் நவீன […]

Read more
1 15 16 17 18 19 44