ஊழலுக்கு ஒன்பது வாசல்

ஊழலுக்கு ஒன்பது வாசல், ப. திருமாவேலன், விகடன் பிரசுரம், விலை 205ரூ. ஊழல் தேசியமயமாகி விட்டது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் சில அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கையும், தேர்தல் கூட்டணிக்காக அவர்கள் அடித்த அந்தர் பல்டிகளையும், அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு அவர்கள் செய்த ஊழல்கள் பற்றியும் ப. திருமாவேலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

கல்விச்செல்வம் தந்த காமராசர்

கல்விச்செல்வம் தந்த காமராசர், ஈசாந்திமங்கலம் முருகேசன், மீனாட்சி பதிப்பகம், விலை 160ரூ. தமிழ்நாடு கல்வியில் முன்னேற அரும்பாடுபட்டு, அதில் வெற்றியும் கண்டவர் பெருந்தலைவர் காமராஜர். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஏறத்தாழ 10 ஆண்டுகள் பதவி வகித்தார். அது ஒரு பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. இலவச கல்வி, இலவச மதிய உணவு திட்டம் ஆகியவற்றுக்கு முன்னோடி. அரசியல் வாழ்க்கையில் தூய்மையை கடைப்பிடித்தவர். “கிங்மேக்கர்” (அதாவது பல பிரதமர்களை உருவாக்கியவர்) என்று புகழ் பெற்றவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார், ஈசாந்திமங்கலம் முருகேசன். படிக்க வேண்டிய […]

Read more

தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி

தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி, மா.பா.குருசாமி, காந்திய இலக்கியச் சங்கம், பக்.10, விலை ரூ.100. ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இரா.கனகசபாபதி. ஆனால் அதற்குப் பின்பு கல்விப் பணியிலும், சமூக சேவைப் பணியிலும் ஈடுபட்டவர். அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், இரா.கனகசபாபதியின் காந்தியப் பற்றையும், சேவைகளையும் இந்நூலில் சுவைபட விவரித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் காந்தியச் சிந்தனையில் சான்றிதழ், பட்டயப் படிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, அவர் பணிபுரிந்த ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரியிலும் […]

Read more

எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்

எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள், கமலா கந்தசாமி, விசா பப்ளிகேஷன்ஸ், விலை 105ரூ. நடிகராக இருந்தபோதும், முதல்-அமைச்சராக பதவி வகித்தபோதும் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த ருசிகர சம்பவங்கள் ஏராளம். அவற்றை தொகுத்துத் தந்துள்ளார் கமலா கந்தசாமி. சம்பவங்கள் காலவரிசைப்படி எழுதப்பட்டுள்ளதால், வரிசையாகப் படிக்கும்போது, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது. 28-ம் பக்கத்தில், எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் சிரிப்பு நடிகராக நடித்து வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை ஆரம்பித்தபோதும், கிருஷ்ணன் தி.மு.க.விலேயே இருந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், 1/9/1957ல் காலமாகிவிட்டார். எம்.ஜி.ஆர். […]

Read more

என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான்

என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான், சித்தார்த் மெடிகேர் வெளியீடு, விலை 210ரூ. ராஜீவ் காந்தி பற்றிய புத்தகம் முன்னாள் பிரதமரும், இந்திரா காந்தியின் மூத்த மகனுமான ராஜீவ் காந்தியின் வாழ்க்கையையும், அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னணியையும் விளக்கும் புத்தகம் “என்னுடைய பாரதம் மஹான்; என்னுடைய ராஜீவ் மஹான்.” இந்த நூலை டாக்டர் ஷரத் ராம்தேவ் சிக்ஜி இந்தியில் எழுத, இராமலட்சுமி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பு சிறப்பாக உள்ளது. புத்தகத்தின் தலைப்புதான் புரியும்படி இல்லை. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.

Read more

தமிழர் பூமி

தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, பக்.373, விலை ரூ.350. ஈழப் போரின்போது இலங்கை அரசால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலம் மீண்டும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டதா என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்நூல். மீள்குடியேற்றம் முழுமையாக நடந்துவிட்டது என்றும் தமிழர்களின் நிலம் திருப்பியளிக்கப்பட்டு விட்டது என்றும் இலங்கை அரசு கூறி வருவது முழுவதும் உண்மையில்லை என்பதை நேரடி அனுபவத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர். தாய் நிலத்தை இழந்துவிட்டு வெறும் நினைவுகளை மட்டுமே சுமந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் வலிகளை உணர்த்தும் பதிவாக இந்நூல் உள்ளது. பிறந்த நாட்டுக்குள் […]

Read more

பயணம்

பயணம், சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி, சமர் யாஸ்பெக், தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, விலை 320ரூ. சிரியாவில் பிறந்து வளர்ந்த சமர் யாஸ்பெக்கின் மிக முக்கியமான பதிவு. போர்ச்சூழலில், கொஞ்சமும் நிச்சயமற்ற சூழலில் இருந்து தப்பி வந்து பாரீஸில் தஞ்சம் புகுந்தவர். சிரிய மக்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஈரமுடைய எவர் மனசுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாதபடிக்கு அங்கே எல்லாமுமே நடக்கிறது. சொந்தநாட்டிலேயே அகதிகளாய் வாழும் பெரும் சோகம் மக்களுக்கு நேர்கிறது. சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர், பயம் இன்றி மீண்டும் […]

Read more

திட்டங்களின் நாயகன் மோடி

திட்டங்களின் நாயகன் மோடி, மானோஸ், புத்த யோகா டிரஸ்ட், விலை 150ரூ. ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகி, அரசியலில் மெல்ல மெல்ல முன்னேறி குஜராத் முதல் மந்திரி ஆனார் நரேந்திர மோடி. 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று பிரதமரானார். அது முதல் இந்த நாள் வரை அவர் அறிவித்த திட்டங்களையும் அதன் சிறப்புகளையும் இந்த நூலில் எழுத்தாளர் மனோஸ் விரிவாக எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கை ஏற்படுத்தும் திட்டமான ‘ஜன்தன் யோஜனா’, சிறுதொழில் முனைவோருக்கு கடன் […]

Read more

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை, மு. நியாஸ் அகமது, விகடன் பிரசுரம், பக். 192, விலை 140ரூ. “நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன்‘’- இது தனக்கு மிக நெருங்கியவர்களுடன் ஜெயலலிதா பகிர்ந்து கொண்ட வாசகம். அந்த நரகங்கள் எவை, அவற்றை எப்படித் தாண்டிக் குதித்துத் தப்பித்து வந்தார் என்பதை விவரிப்பதுதான் இந்த நூல். இரண்டாவது வயதில் தந்தையை இழந்தது, தாயார் வேதவல்லி, “சந்தியா’‘ என்கிற பெயர் தாங்கி படங்களில் நடித்தது, சர்ச் பார்க் கான்வென்டில் ஜெ.யின் படிப்பு, […]

Read more

லீ குவான்யூ, பெருந்தலைவன்

லீ குவான்யூ, பெருந்தலைவன். பி.எல். ராஜகோபாலன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 200ரூ. எதுவுமே இல்லை என்ற நிலையிலிருந்து எல்லாமே சாத்தியம் என்பதை சாதித்துக் காட்டியவர் லீ குவான்யூ. அவருடைய வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நூல். நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை கீழே வைக்க முடியாத அளவுக்கு எளிமையும், சுவையும் ஈர்ப்பும் கொண்டதாக இருக்கிறது இந்நூல். 1959-இல் அவர் பிரதமராகப் பதவியேற்றபோது எதிர்கொண்ட சவால்கள், சூதாட்ட விடுதிகளை தொடங்க அனுமதி மறுத்தது, பொது இடங்களில் எச்சில் […]

Read more
1 12 13 14 15 16 44