தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1. அரசமரம்

தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1. அரசமரம், இரா.பஞ்சவர்ணம், தாவர தகவல் மையம், பக். 180, விலை 150ரூ. தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் எனும் பொதுத்தலைப்பில் ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல் என்ற அடிப்படையில், முதலாவதாக அரசமரம் பற்றி தொகுத்தளிக்கப்பட்டுள்ளது இந்த நூல். அரச மரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய ஆய்வுக் களஞ்சியமாக வந்திருக்கிறது. அரச மரம் குறித்தான தாவர விளக்கம், தமிழ் பெயர் (அரசு, ஆலம்) ஆங்கில பெயர் (சேக்ரட் பிக்), தாவர பெயர் (பைகஸ் ரிலிஜியோசா), வழக்கத்திலுள்ள இதர தமிழ் பெயர்கள், […]

Read more

மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம்

மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம், தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, பக். 704, விலை 300ரூ. கைம்பெண் நோன்பின் கடுமையை விட உடன்கட்டை ஏறுதல் உயர்ந்ததோ? சங்ககாலத்தில், கற்றவராகவும், கவிஞராகவும், காதல் சமத்துவம் உடையவராகவும் பெண்கள் இருந்தனர் என்பதை, பல அகச்சான்றுகளோடு நிறுவுகிறார், நூலாசிரியர் தாயம்மாள் அறவாணன். சங்ககால மகளிர், அனைத்து நிலையிலும் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பதற்கு, நூலின் தலைப்பே, கட்டியம் கூறுகிறது. பிற்காலத்து பெண்டிர் கல்வி கற்பது மறுக்கப்பட்ட சூழலில், சங்ககாலப் பெண்டிர், ஒரு தடையும் இல்லாமல், ஆணுயக்கு நிகராக கற்றிருந்தனர். பொருளாதார […]

Read more

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை), தொகுப்பும் உரையும் – ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 284, விலை 215ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-349-5.html சங்ககாலம் என்பது புனைவானது. சமயவாதிகளால் இட்டுக்கட்டப்பட்டதுதான் மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றெல்லாம் கருதும் சில ஆய்வாளர்களின் கருத்துகளை மறுத்து, ஆதாரங்களுடன் பல உண்மைகளை முன்வைக்கிறது தொகுப்புரை. சங்க காலத்தில் நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், தொகுப்பாளரின் […]

Read more

இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் தொழிலாளர் நிலை

இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் தொழிலாளர் நிலை, குமரி அனந்தன், பூம்புகார் பதிப்பகம், பக். 395, விலை 320ரூ. எல்லா நூற்றாண்டிலும் சுரண்டல் கி.பி. 19ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சிக்கு பின்னர், உலக அளவில் தொழிலாளர்களின் உரிமை குரல்கள், ஓங்கி ஒலிக்க துவங்கியது. அதன் ஒரு பகுதியாக, 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், தமிழகத்திலும் தொழிலாளர் நலன், அவர்களின் முக்கியத்துவம், வாழ்நிலை, துன்பத்துக்கான காரணம், அதற்கான மீட்சி போன்றவை குறித்த கருத்தாடல்கள் எழ துவங்கின. திரைப்படம், இலக்கியம், நாடகம் போன்ற கலை வடிவங்களிலும் அவை எதிரொலித்தன. […]

Read more

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

சாகுந்தல நாடக ஆராய்ச்சி, மறைமலை அடிகள், சேகர் பதிப்பகம், பக். 168, விலை 125ரூ. சமஸ்கிருதத்தை வெறுத்தவரே மொழிபெயர்த்தார் கடந்த 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வடமொழி மகாகவி காளிதாசரின், சாகுந்தலம் காவியத்தை, 100 ஆண்டுகளுக்கு முன் அழகு தமிழில், மறைமலையடிகள் அதே பெயரில் செய்யுளாக ஆக்கினார். அந்த நூல், தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது. தனித்தமிழ் இயக்கத்தை துவக்கிய மறை மலையடிகளின் தூய தமிழ் நடையை அறிய, இந்த நூலைப் படித்து மகிழலாம். தமிழனின் வீர விளையட்டான ஜல்லிக்கட்டை பார்ப்பதுபோல், படிப்பவரை சிலிர்க்க வைக்கும் […]

Read more

மகாபாரதம் மாபெரும் விவாதம்

மகாபாரதம் மாபெரும் விவாதம், பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 310, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-182-5.html இந்நூலாசிரியரின் பிறமொழி கலப்பில்லாத தெள்ளு தமிழும், ஆற்றொழுக்கு நடையும், புதிய சிந்தனையும் வாசகனை வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. மகாபாரதம் எண்ணற்ற கதாபாத்திரங்களைக் கொண்ட கதை. ஆனாலும் எந்த ஒரு கதாபாத்திரமும் குறைவற்ற நிறைவான உயர்வு நிலையைக் கொண்டவையாக அமைக்கப்படவில்லை. கடவுள் அவதாரமாகக் கூறப்படும் கிருஷ்ண பகவானின் பாத்திரத்திலுள்ள குறைகள் கூட துரியோதனால் சுட்டிக்காட்டி விமர்சிக்கப்படுகிறது. இப்படி எல்லா […]

Read more

உலகப்பன் காலமும் கவிதையும்

உலகப்பன் காலமும் கவிதையும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-7.html புதுவைக்குயில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளைப் படிப்போர் மதுவை உண்ட வண்டுபோல மயங்குவர் என்பது திண்ணம். பாடாத பொருளில்லை எனச் சொல்லும் அளவுக்கு, அந்த எழுச்சிக் கவிஞர் எழுதிக் குவித்த, முதல் கவிதை தொடங்கி அத்தனைக் கவிதைகளையும் ஆய்வுக்கு உள்ளாக்கியுள்ளார் நூலாசிரியர். இந்தக் கவிதைகள் படைக்கப்பட்ட சூழல், பாரதிதாசனின் வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவை அந்தக் காலகட்டத்தில் நிலவிய அரசியல் […]

Read more

திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு

திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு, வக்கீல் செ. வந்தகுமாரி செல்லையா, டாக்டர் ஏ.இ. செல்லையா கல்வி அறக்கட்டளை, சென்னை, விலை 250ரூ. திருக்குறளை ஆராய்ந்து அதில் பல அறிஞர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொகுத்து தனது கருத்துக்களையும் இணைத்து அரிய நூலாக எழுதியுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வள்ளுவத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் எளியநடையில் தொகுத்துள்ளார். இந்த நூலைப் படிப்பதன் மூலம் திருக்குறள் பற்றி அறிந்த கருத்துக்களை ஆழப்படுத்திக் கொள்வதுடன், அறியாதவற்றை அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட பயனுள்ள நூலாகும். நன்றி: தினத்தந்தி, […]

Read more

மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும்

மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும், தொகுப்பும் பதிப்பும்- த. கருப்பையா, செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 375, விலை 300ரூ. தமிழ் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்கென்று ஒரு தனித்த இடம் உண்டு. கடந்த மாதம் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரி தமிழ்த்துறை நடத்திய மனோன்மணியம் சுந்தரனார் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பேராசிரியர் சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணியம் நாடகம், தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்ச் சமூக வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மனோன்மணியத் தமிழ்த்தாய் வணக்கமும் திராவிட […]

Read more

வீரக்கதைப் பாடல்கள் விளக்கவியல்

வீரக்கதைப் பாடல்கள் விளக்கவியல், திருமலர் எம்.எம். மீறான் பிள்ளை, சேகர் பதிப்பகம், சென்னை, பக்.152, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-362-4.html தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றிலும், பண்பாட்டிலும் தனித்துவத்துடன் விளங்குவதும், இன்னும் ஆழமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய துறை நாட்டுப்புற இயல். கதைப்பாடல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய துறை நாட்டுப்புற இயல். கதைப் பாடல் ஆய்வு நூலாக நூலாசிரியரின் விளக்கத்துடன் வெளிவந்துள்ளது இந்நூல். பொதுவாக இந்த நாட்டுப்புறப் பாடல்கள் தென்னிந்திய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நபிகள் நாயகத்தின் அருமைப் […]

Read more
1 51 52 53 54 55 84