சங்க இலக்கியத்தில் பெண் மறுப்பு

சங்க இலக்கியத்தில் பெண் மறுப்பு, சு. தாமரைப் பாண்டியன், அருள் பதிப்பகம், பக். 118, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-335-9.html கவுரவ கொலைகள் சங்க காலத்திலும் நிகழ்ந்ததா? பண்டைக் காலந்தொட்டே, தமிழ் சமூகத்தில் ஆண்டிகளும் மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர். இதற்கு காரணம், கீழ்த்தட்டு மக்களின் இனப்பற்றும், குல மானமும், குலத் தூய்மையுமே ஆகும். மேலும், அனைத்து இனங்களும், சம்பந்த வழி உறவுடைய கிளையினருடன் மட்டுமே, மண உறவு வைத்து கொள்கின்றனர். “புல்லு அறுத்தா தொழுபட்டிக்குத் தான் […]

Read more

அச்சுவெல்லம்

அச்சுவெல்லம், பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 145, விலை 176ரூ. சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக உருப்பெறுகின்றன. அந்த வகையில் பா. முருகானந்தம், 15 சிறுகதைகளை, அச்சுவெல்லம் எனும் தலைப்பில் சிறுகதைகளாக தொகுத்து அளித்துள்ளார். தலைப்பு கதையான, ‘அச்சுவெல்ல’த்தில் பண்ணையார் வீட்டிற்கு போகும் ஒவ்வொரு அச்சுவெல்லத்திலும், கரிகாலன் கலக்கும் ‘பதம்’, அடிமைத்தனத்திற்கு எதிராகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் மிக அழுத்தமாக படைக்கப்பட்டுள்ளது. ‘முதுகு வலி’ கதையில், ‘உடம்பில் இயல்வு நிலையிலேர்ந்து மாறுபட்டா அதைப் புரிஞ்சுக்கிட்டு மீண்டும் […]

Read more

மக்கள் தோழர் ஜோதிபாசு

மக்கள் தோழர் ஜோதிபாசு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 170ரூ. மேற்கு வங்க மாநிலத்தின் வரலாற்றோடு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய அரசியல் வரலாற்றோடு கலந்து விட்ட மகத்தான தலைவர் ஜோதி பாசு. இந்தியாவில் கம்யூனிச இயக்கத்திற்கு மிகப்பெரும் கவுரவத்தை ஏற்படுத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிச்சுடராக திகழ்ந்த ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. லண்டனில் சட்டம் பயின்ற ஜோதி பாசு வக்கீல் தொழிலை தூக்கியெறிந்துவிட்டு மக்கள் பணிக்காக  களத்தில் குதித்தார். சட்டமன்ற உறுப்பினராகி துணை முதல்வரானார். பின் முதல்வரானார். 23 ஆண்டுகள் மாநில […]

Read more

தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு

தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 180, விலை 160ரூ. லெமூரியாக் கண்டம் கடலில் மூழ்கிய சர்ச்சையைத் தவிர்த்தும், தமிழர் நாகரிகம் ஆப்பிரிக்கர், ஆஸ்திரேலியர் உள்ளிட்டோருடன் எப்படியெல்லாம் தொடர்புடையதாக உள்ளது என்பதை, பிறப்பு, இறப்பு, திருமணம் மற்றும் வழிபாடுகள் உள்ளிட்ட சான்றுகளுடன் நூலாசிரியர் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார். திராவிடர்கள் வெளியிலிரந்து வந்தவர்களா? தமிழகத்தின் பூர்வீகக் குடிகளா? என்ற வாதத்தை மையமாக்கி, அறிஞர்களின் அனுமானங்களை வைத்து திராவிடர் தமிழக பூர்வகுடிகளே எனக் கூறும் நூலாசிரியர், அதை […]

Read more

தொல்காப்பியத்தில் இசை

தொல்காப்பியத்தில் இசை, முனைவர் இராச. கலைவாணி, ஏழிசை இசை ஆய்வகம், தமிழ்க் கலையகம், மயிலாடுதுறை, பக். 608, விலை 350ரூ. சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் இசை பற்றிய செய்திகள், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த வகையில் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் நாடக வழக்கையும், உலகியல் வழக்கையும் ஆராய்ந்து ஐந்திணை நில அமைப்பு, அதற்குரிய பண்கள், இசைக்கருவிகள் பற்றி பல நூற்பாக்களில் கூறியிருக்கிறார். அத்தகைய நூற்பாக்களை மேற்கோள்காட்டி, இசை, பாவகைகள், பண்கள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசைக்கலைஞர்கள், கூத்துகள் முதலியவற்றை மிகவும் […]

Read more

இராமன் கதை

இராமன் கதை, முனைவர் ச.லோகாம்பாள், அருள் பதிப்பகம், பக். 576, விலை 430ரூ. ராமாயணத்தை பல கோணங்களிலும் நுணுக்கமாக ஆராய்ந்தெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ராமாயண பாத்திரங்கள் ஒவ்வொன்றையும், கதைப் போக்குடன் தம் ஆய்வுக் கருத்துகளை நிறுவுகிறார் நூலாசிரியர். ராமபிரானின் குணநலன்களை அடுக்கிக் கூறும் நுலாசிரியர், ராமன் மாபெரும் மன்னன் என்ற இறுமாப்பின் உருவகமாகவே காட்சியளிக்கிறான் என்றும், கோபத்தால் பொறுமை இழந்து அரக்கர் முதலானோரைக் கொன்று குவித்த கொடியவன் ராமன் என்று கூறும் கருத்துகள், இந்த நூலை படிப்போருக்கு நெருடலாகவே இருக்கும். தசரதன், […]

Read more

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ்., விகடன் பிரசுரம், விலை 90ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-284-4.html உலக அதிசயங்கள் ஏழு என்கிறோம். ஆனால் இந்த ஏழு அதிசயங்களைத் தவிர வேறு பல அதிசயங்களும் இருக்கின்றன. அவற்றில் பல மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட மர்மங்கள் குறித்து இந்நூல் ஆசிரியர் ஜி.எஸ்.எஸ். சுவைபட எழுதியிருப்பதோடு, மர்மமுடிச்சுகளையும் அவிழ்க்கிறார். நன்றி: தினத்தந்தி.   —- நீதிநூல் களஞ்சியம், கொற்றவை வெளியீடு, விலை 720ரூ. மனிதர்கள் இந்த உலகில் வாழ்வாங்கு வாழ வழிவகைகளைக் […]

Read more

தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்

தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள், பாஷா சிங், தமிழில் விஜயசாய், விடியல் பதிப்பகம், பக். 400, விலை 300ரூ. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் அனுப்பும், இந்த நவீன அறிவியல் உலகிலும், மனிதனின் கழிவை மனிதன் அள்ளும் சமூக கொடுமை இன்னும் ஒழிந்தபாடில்லை. இங்குள்ள அரசியல் கட்சிகளும் அவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுக்க உள்ள மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து, இந்த நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்நிலை, எதிர்கொள்ளும் பிச்னைகள், அவர்கள் […]

Read more

வடலிமரம்

வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ. இலக்கியவாதிகளான தகழி, கேசவ, தேவ், வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோரின் நாவல்களைப் படித்தபோது அடைந்த இலக்கிய இன்பத்தை, இந்த நாவலைப் படித்த போதும் அடைந்தேன். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்க துவங்குகின்றனர் கதாநாயகன் அனந்தகிருஷ்ணனும், கதாநாயகி சொர்ணாவும். அனந்தகிருஷ்ணனின் தந்தை காதலுக்கு எதிராக நிற்கிறார். ஜாதி ஆதிக்கமும், பண ஆதிக்கமும் காதலர் பாதையில் குறுக்கிடுகின்றன. பள்ளிப் பருவத்திலேயே ஊரை விட்டுப் போய் வேற்றூரில் கல்யாணம் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். அங்கும் வந்து […]

Read more

சகுனி

சகுனி, விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 543, விலை 410ரூ. மாபெரும் இந்திய இதிகாசமான மகாபாரதத்தில், சகுனி கதாபாத்திரம் முக்கியமானது. சூது, வஞ்சத்தின் தலைவனாக, சகுனி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். சகுனியின் மறுபக்கத்தை அலசியிருக்கிறார் ஆசிரியர். காந்தார நாட்டுத் தலைவன், காந்தாரியின் மகன், துரியோதனனின் தாய் மாமன் சகுனி என்ற அறிமுகம் சிறப்பாக உள்ளது. தான் கொண்ட சபதத்தை நிறைவேற்ற, பொறுமை காப்பதிலும், திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் சகுனி தீர்க்கமானவர் என்கிறார் ஆசிரியர். தங்கையின் வாழ்விற்காக, சகுனி செய்யும் காரியங்கள் அனைத்தையும் வாசிப்பவர் ஏற்கும்படி தர்க்க ரீதியில் […]

Read more
1 50 51 52 53 54 84