முயற்சியே முன்னேற்றம்

முயற்சியே முன்னேற்றம், மெர்வின், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டும் நூல்களை எழுதுவதில் புகழ்பெற்ற மெர்வின் எழுதிய புத்தகம் இது. “முயற்சி திருவினையாக்கும்” என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இப்புத்தகத்தின் விலை 60ரூ. “உழைப்போம் உயர்வோம்” விலை 80ரூ. உயர்வு தரும் உன்னத சம்பவங்கள் விலை 70ரூ ஆகிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். மூன்று புத்தகங்களையும் வெளியிட்டோர் குமரன் பதிப்பகம். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.   —- அனைத்து நோய்களுக்கும் யோகாகசன மருத்துவம், ஜவ்வை இஜெட், முஜீப் இந்தியா கிரியேசன், […]

Read more

சங்கீத வித்துவான்கள் சரித்திரம்

சங்கீத வித்துவான்கள் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், பதிப்பாசிரியர் மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, சென்னை, பக். 112, விலை 80ரூ. இசையும் தமிழ்த் தாத்தாவும் தமிழ், தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர வாய்ப்பாடு மற்றும் வாத்திய இசை வித்துவான்கள் 402 பேர்களைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய குறிப்புகளின் தொகுப்புதான் ‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’ என்ற நூல். 1914ல் எழுதப்பட்ட வித்துவானக்ள் பற்றிய குறிப்புகள் இப்போதுதான் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சாவின் […]

Read more

மகாபாரதம் மாபெரும் விவாதம்

மகாபாரதம் மாபெரும் விவாதம், பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. பன்முக திறமை கொண்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா எழுதியுள்ள இந்த ஆய்வு நூலின் மிக பழமைவாய்ந்த மகாபாரம் இதிகாசத்தை இதுவரையில் யாரும் செய்யாத அளவுக்கு அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து புகழ் மாலையும் சூடியிருக்கிறார். ஆங்காங்கு பல கண்டன கணைகளையும் வீசியிருக்கிறார். மகாபாரதம் என்ற ஆழ்கடலில் மூழ்கி அங்கு இருக்கும் முத்துக்களை மட்டுமல்லாமல், விமர்சனத்துக்குரிய பல கருத்துக்களையும் அடையாளம் காட்டியிருக்கிறார். மகாபாரதத்தை நேசிப்பவர்களுக்கும், அதை முழுமையாக எல்லா கோணங்களிலும் […]

Read more

சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள்

சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள், தி. கல்பனாதேவி, இராசகுணா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. சித்தர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் எழுதிய நூல்கள், மருத்துவ விளக்கங்கள், சமயம், உயிர்களின் பிறப்பு போன்ற பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சாதக அலங்காரத்தை முதன்மையாக எடுத்துக்கொண்டு அதில் மருத்துவம், மந்திரம், ஜோதிடம் என்ற பிரித்து ஆராயப்பட்டுள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு, சித்தர்கள் செய்த அஷ்டகர்மம் என்ற எட்டுவகைச் செயல்களும் விளக்கப்பட்டுள்ளன. சமய வழிபாட்டு முறைகள், புத்திரப்பேறு மற்றும் திருமணத் தடைகளுக்கு அரசமர வழிபாடு, நாகப் பிரதிஷ்டை […]

Read more

ஆன்மாவின் பயணங்கள்

ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 280, விலை 210ரூ. நம் உடலை இயக்கும் ஆன்மா குறித்து, இந்த நூல் தெளிவாகக் கூறுகிறது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள சில பயிற்சிகள், தனக்கும் கடினமாக இன்று வரை இருந்து வருவதாகவும், வாசகர்கள் சலிப்படைய வேண்டாம் என்றும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார் (பக். 19). ஆன்மா உடலை விட்டு நீங்கியபின், பல்வேறு உணர்வு நிலைக்கு செல்கிறது, தலைகீழாக எண்ணுவது ஒரு சிறந்த ஆழ்நிலை ஏற்படுத்தும் உத்தி, நெற்றியில் தட்டுவதன் மூலம், மனோவசிய நிலை மேலும் ஆழமாகி, […]

Read more

ஜீவா பார்வையில் கலை இலக்கியம்

ஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ. கலை இலக்கியம் குறித்து, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். சங்க இலக்கியம் முதல், தற்கால இலக்கியம் வரையிலும் வெளியாகியுள்ள அத்தனை படைப்புகள் பற்றிய தன் எண்ண ஓட்டங்களை, எழுத்தாக வடித்துள்ளார் ஜீவா. மனிதத்தை மேம்படுத்தும் இலக்கியங்களை நல்ல இலக்கியங்களாகவும், சமுதாய மேம்பாட்டிற்கு துணைபுரியாத இலக்கியங்களை, நசிவு இலக்கியங்களாகவும், ஜீவா இனங்காட்டியுள்ளார். உலகத்தின் இலக்கிய முன்னோடிகளையும், அவர்களின் படைப்புகளையும், […]

Read more

இரட்சணிய யாத்திரகம்

இரட்சணிய யாத்திரகம், பாரி நிலையம், சென்னை, விலை 500ரூ. கிறிஸ்தவ கம்பர் என்று அழைக்கப்படுகிற சிறப்பை பெற்றவர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை. பிறப்பிலே வைணவராக இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய இவர் படைத்த இட்சணிய யாத்திரம் கிறிஸ்தவ இலக்கியங்களில் உன்னதமான இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறது. 3766 பாடல்களை கொண்டு, ஜான் பனியன் எழுதிய திருப்பயணிகள் முன்னேற்றம், சாமுவேல் பவுல் ஐயரின் மோட்சப் பிரயாணம், பைபிள் ஆகிய 3 நூல்களின் வழி நூலாக அழகு தமிழ் காப்பியமாக, இயேசு பிரானுக்கு மணி மகுடமாக […]

Read more

நான் கண்ட ஜப்பான்

நான் கண்ட ஜப்பான், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் மீது 2 குண்டுகளை அமெரிக்கா வீசியது. அதனால் 2 நகரங்கள் அடியோடு அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். இப்படி பலத்த சேதம் அடைந்த ஜப்பான் கடுமையாக உழைத்து, இன்று பொருளாதாரத்தில் உலகில் மிக முன்னேறிய நாடாக விளங்குகிறது. இந்த நூலின் ஆசிரியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பான் சென்று திரும்பியவர். ஜப்பானின் சிறப்புகளை இந்நூலில் அழகிய […]

Read more

பாரதியார் ஆய்வுக்கோவை

பாரதியார் ஆய்வுக்கோவை, கங்கை புத்தகநிலையம், சென்னை, விலை 250ரூ. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் என்ற கொள்கையோடு உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப் புதுநெறி காட்டிய இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தமிழ்க்கவிஞர் மகாகவி பாரதியார். அவரது 125வது பிறந்த நாள் விழாவையொட்டிச் சிறப்பு வெளியீடாக வந்தது இந்த நூல். இதில் 80 அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. பாரதியாருடைய படைப்புகளைப்பற்றி மதிப்பீடாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன. அவரது கவித்திறம், உரைத்திறம், உவமைநலம், கற்பனை வளம், அணிநயம், பாரதியாரின் வரலாறு, வாழ்வியல் அனுபவங்கள், அவரது அரசியல், ஆன்மிக, […]

Read more

புதையல் ரகசியம்

புதையல் ரகசியம், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 165ரூ. 5000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆட்சி செய்த மன்னர்களும், ராணிகளும் தலைநகர் கெய்ரோவுக்கு 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்சார் என்ற இடத்தில் புதைக்கப்பட்டனர். அவர்கள் மரணத்திற்குப் பிறகும் சொர்க்கத்தில் வாழ்வார்கள் என்று எண்ணி அவர்கள் உடலோடு விலை மதிப்பில்லாத புதையல்களும் புதைக்கப்பட்டன. இத்தகைய கல்லறைகளை உள்ளடக்கிய பிரமிப்பை தரும் பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் இளம் வயதில் அரியணை ஏறிய மன்னர் டூடங்காமுன் […]

Read more
1 48 49 50 51 52 84