சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, (அடித்தட்டுக் கண்ணோட்டத்தில் சமய நல்லுறவு உரையாடல்), ஆங்கில மூலம் ஆ. அலங்காரம், தமிழில் அ. அந்தோனி குருசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  சென்னை, விலை 180ரூ. அனைத்து சமயங்களிலும் உள்ள சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகளை கொடுமைகளைப் போக்க சமயங்களின் மூலமாகவே என்ன செய்ய வேண்டும்? என்று ஆராயும் நூல். விவேகானந்தர் தன்னுடைய சீடர்களிடம், ஏழைகளுக்கும் துன்புறுவோர்களுக்கும் பணி செய்வதே உங்கள் தொழில். அதில் சாதி அல்லது நிறவேறுபாடு பார்க்கவும் கூடாது என்று கூறியிருப்பது […]

Read more

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும், இரா. பன்னிருகை வடிவேலன், தமிழாய்வு மன்றம், பக். 104, விலை 100ரூ. பழந்தமிழ் இலக்கிய, இலக்கண, நிகண்டு நூல்கள், அவை தொடர்பான ஆய்வுகள் போன்றவை தற்போது பெருமளவில் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவுகிறதோ இல்லையோ, பழந்தமிழ் நூல்கள் அழிந்துவிடாமல் அவற்றைப் புதுப்பொலிவுடன் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும் உதவுகின்றன என்பது முற்றிலும் உண்மை. அந்த வரிசையில் பலரும் அறியாத ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, நிரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு ஆகிய நிகண்டு நூல்கள் […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. இலக்கியங்களை ஆய்வு செய்து கட்டுரைகள் வடிப்பதில் புகழ் பெற்ற மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதிய சிறந்த இலக்கியக் கட்டுரைகள் கொண்ட நூல் கயல் பருகிய கடல். இதில் மாலன் முக்கியமாக ஆராய்ந்துள்ள விஷயம், தமிழில் வெளியான முதல் சிறுகதை எது? அதை எழுதியவர் மகாகவி பாரதியாரா? அல்லது வ.வே.சு. அய்யரா? தமிழ் இலக்கியவாதிகள் நீண்ட காலமாக சொல்லி வருவது, தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு. அய்யர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்பதாகும். […]

Read more

அறவாணரின் படைப்பிலக்கியங்கள்

அறவாணரின் படைப்பிலக்கியங்கள், தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், தலைசிறந்த ஆய்வறிஞர், மொழிபெயர்ப்பாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர் க.ப. அறவாணன். கலையும், இலக்கியமும் வாழ்க்கைக்காக என்னும் கருத்துடைய அறவாணரின் சிறுகதை மற்றும் நாவல்களை ஆராய்ந்து வீர. ஆதிபராசக்தி இந்த நூலைப் படைத்துள்ளார். அறன், அன்பு, ஒழுக்கம், நேர்மை, கடமை தவறாமை போன்றவை அவரது படைப்புகளில் பரிணமிக்கின்றன. படைப்பிலக்கியங்களில் மனித சமுதாயத்தை முன்னேற்றிச் செல்ல வேண்டும் என்பதற்கு அவரது சிறுகதைகளும், நாவல்களும் முன்னோடிகளாக அமைந்துள்ளன என்பதை இலக்கிய தராசில் நூலாசிரியர் […]

Read more

எதிர்க்குரல் எதிர்க்குரலாளர்கள்

எதிர்க்குரல் எதிர்க்குரலாளர்கள், காவ்யா, சென்னை, விலை 350ரூ. ஒடுக்கப்படுவதும், அடக்கப்படுவதும் எல்லை மீறும்போதுதான் எதிர்க்குரலாளர்கள் தோன்றுகிறார்கள். அத்தகைய சமூகப் புரட்சியாளர்களான மகாத்மா காந்தி, அம்பேத்கார், மாசேதுங், நெல்சன் மண்டேலா, பெரியார், லெனின், சேகுவாரா போன்றவர்களின் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமைப் பண்புகளை இந்த நூல் ஆராய்கிறது. அதோடு அந்தச் சமூகப் புரட்சியாளர்களின் குரலோடு, புதுச்சேரி ஹைக்கூ (துளிப்பா) கவிதைகளின் பாடுபொருள் ஒத்துப்போவதை முனைவர் கு. தேன்மொழி இந்த நூலில் மிக விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.   —- சங்கத் தொன்மம், கெ. […]

Read more

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல, உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம் என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்தியலின் ஒளியில் ஆன்மாவின் – உயிரின் – தரத்தை மேம்படுத்தும் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இக்காலத்திலே மனிதன் மன அழுத்தத்திலும், கவலையிலும் சிக்கித் தவிக்கிறான். புற வளர்ச்சியில் இமாலய உச்சியைத் தொட்டிருந்தாலும், அக உலகில் மயக்கத்திலும், கலக்கத்திலும், குழப்பத்திலும், நடுக்கத்திலும் அகப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது புலம்புகிறான். […]

Read more

சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள்

சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 400ரூ. 4-5 மி.மீ. குறுக்களவுள்ள கோள வடிவிலான ‘நாணயங்கள்’ சிலவற்றைப் பற்றிய விவரங்களைப் படிக்கும்போது வியப்பாக இருக்கிறது. இவற்றின் எடை கூட ஒரு கிராமில் ஆறில் ஒரு பங்குக்கும் சற்றே கூடுதலாகத்தான் இருந்திருக்கிறது. 4மி.மீ. என்பது சராசரியான ஒரு நெல்மணியின் நீளம்தான் இருக்கும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வாக்கிலேயே தமிழகத்தில் இப்படிப்பட்ட நாணயங்களை உருவாக்கி இருக்கிறார்கள். சின்னஞ்சிறியதாக இந்த மாதிரி ஒரு பொருள் நதிப்படுகைகள் போன்ற […]

Read more

துளு நாட்டு வரலாறு

துளு நாட்டு வரலாறு, மயிலை சீனி. வேங்கடசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 108, விலை 75ரூ. பண்டைய தமிழக வரலாற்றைப் போலவே துளு நாட்டு வரலாறும் சங்க இலக்கியங்கள் மூலம் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. தற்போதைய தென் கன்னடத்தை துளு நாடாகக் காட்ட நூலாசிரியர் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியப் பாடல்களின் சான்றுகள் இப்போதும் மிகவும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன. துளு நாட்டின் பெயரை மாமூலனார் தனது பாடலில் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டும் நூலாசிரியர், அதைப் பல பாடல்களின் மூலம் உறுதிப்படுத்துகிறார். […]

Read more

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள்

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள், முனைவர் ந. முருகேசபாண்டியன், செல்லப்பா பதிப்பகம் வெளியீடு, பக். 168, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-462-7.html அதியமானுடன் அவ்வைக்கு காதலா? இன்றைய பெண்கள், அழகு தேவதைகளாக, ஆராதனை சிலைகளாக, நுகர்வு தீனிகளாக, வேலியற்ற வேட்டை களமாக மாற்றப்பட்டுள்ளனர். இத்தகு சூழலில், 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த போற்றத்தக்க பெண் கவிஞர்களை, அவர்களின் பாடலோடு இந்த நூல் அற்புதமாய் படம்பிடித்து காட்டுகிறது. கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற்றண்டு வரை, 400 […]

Read more

ஞாயிறு போற்றுதும்

ஞாயிறு போற்றுதும், எ.வேலாயுதன், முருகம்மை இல்லம், புதுக்கோட்டை, பக். 72, விலை 25ரூ. உலக இருளைப் போக்கி ஒளி வழங்கி, உயிர்களை உய்விக்கும் சூரியனை, சூரிய வழிபாடு என்ற பெயரில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தொன்றுதொட்டு வணங்கி வருகின்றனர். பகைவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும், போரில் வெற்றிபெறவும் பாராயணம் செய்ய வேண்டிய வடமொழி மந்திரப்பாடல் ‘ஆதித்த ஹிருதயம்’தான் என்று கூறுவர். இதை வான்மீகி தன் காப்பியத்தில் வழங்கியுள்ளார். இராமன் ஆதித்திய ஹ்ருதயம் படித்தே இராவனணைப் போரில் வென்று, சீதையை மீட்டான் என்கிறது வான்மீகி […]

Read more
1 47 48 49 50 51 84