கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ. To buy this Tamil book : http://www.nhm.in/shop/1000000022780.html ஏவி. எம். அறக்கட்டளை சார்பில் கம்பன் விழாவை ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2014 ஜுலை மாதம் நடைபெற்ற கம்பன் விழாவில், இந்நூலாசிரியர் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பே இந்நூல். சென்னை உயர் நிதிமன்றத்தின் நீதிபதியான இந்நூலாசிரியர், நீதித் துறையில் மட்டுமல்ல, இலக்கியம், இசை, ஆன்மீகம், இந்தியக் கலாச்சார மரபு, […]

Read more

ஒடுக்கப்பட்ட சாதிகள்:இறையாண்மை அரசு அமைப்புகள்

ஒடுக்கப்பட்ட சாதிகள்:இறையாண்மை அரசு அமைப்புகள், ச. சிவலிங்கம், புலம் வெளியீடு, விலை 180ரூ. இரு துருவங்களின் இணைப்பு சாதியின் தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பைப் பற்றிதான் எவ்வளவு விவாதங்கள்! சாதியும் வர்ணமும் மனித நாகரிகத்துக்கு இந்தியா அளித்துள்ள கொடை என்று உலகத்திடம் விவாதிக்கிற இந்திய அறிவாளிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும், நம்பிக்கை அளிக்கும் மாற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. தலித் சுயமரியாதை சக்தியின் மூலமாக மக்கள் பணியாற்றும் இந்த நூலின் ஆசிரியர் ஒரு கல்லூரி ஆசிரியரும்கூட. அவர் இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர். ஆனால், சமூகப் […]

Read more

முக்கோணக் கிளிகள்

முக்கோணக் கிளிகள், சி.ஜெயபாரதன்(கனடா), தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 92, விலை 75ரூ. முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணலாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இம்முக்கோணக் காதல் கதை படக் கதையாக நூல் வடிவம் பெற்றுள்ளது. கனடா எழுத்தாளர் சி. ஜெயபாரதன், சிவா-சித்ரா-அவள் தாய் புனிதா ஆகியோரின் முக்கோணக் காதலில் ஜெயிப்பது யார்? என்ன காரணம்? அது சரியா? என்பதை சுவைபட எழுதியுள்ளார். ஓவியர் தமிழின் ஓவியங்கள் கதைக்கு உயிரூட்டுகின்றன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/6/2015.   —- மனஅலசல், க. செல்லப் […]

Read more

கம்பன் கவியமுதம்

கம்பன் கவியமுதம், பேராசிரியர்கள் இரா.மோகன், நிர்மலாமோகன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 80ரூ. கம்பன் காவியத்தை முழுமையாக கற்கும் பேறு எல்லாருக்கும் கிடைப்பது அரிது. அது படிக்க படிக்க விரிந்து கொண்டே இன்பம் சேர்க்கும் பாடற்கடல். அதில் நூலாசிரியர்கள் நீந்தி தாங்கள் பருகியதை, அதன் சுவையை இனிமை குன்றாது, நமக்கும் தரும் அரிய நூல் இது. தெய்வப் புலவர் கம்பருயை சொல்லழகையும் பொருளழகையும் நமக்கு விளக்கும் இடம் சவை. கம்பர் தரும் செஞ்சொற் கவியின்பத்தையும், நடைச்சித்திரத்தையும் இவர்கள் தரும் எடுத்துக்காட்டுடன் படிக்கப் படிக்க […]

Read more

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம்

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, விலை 250ரூ. பூலோக வைகுந்தம் என்று வர்ணிக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். அதைப்பற்றிய அபூர்வ தகவல்களுடன் அரங்கமா நகருளானே என்ற தலைப்பில் அரிய புத்தகம் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ரங்கம் பற்றிய அனைத்து விவரங்களுடன், முழுவதும் ஆர்ட் பேப்பரில் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. புத்தகத்தை எழுதிய வேதா டி.ஸ்ரீதரனம் வெளியிட்ட பதிப்பகத்தாரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —-  ஆடும் மயில், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, […]

Read more

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம், எஸ்.என். பி.ஜெயசிங், ஆனந்த நிலையம், சென்னை, விலை 60ரூ. ராமபிரானுக்காக சீதாதேவியிடம் அனுமன் தூது சென்ற காண்டத்தின் பெயர் இந்நூலின் தலைப்பாக இடம் பெற்றிருந்தாலும், ராமாயணத்தின் ஆறு காண்டங்களும் இந்த புத்தகத்தில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —- அமுதமொழிகளின் அற்புத வரிகள், குந்தவையார் பதிப்பகம், தஞ்சாவூர், விலை 90ரூ. பயனுள்ள பொன்மொழிகளின் தொகுப்பு நூல் இது. நாமறிந்த வழக்கமான பொன்மொழிகளுடன், நூலாசிரியர் தஞ்சை பா.திருநாவுக்கரசு, திரட்டிச் சேகரித்த ஏராளமான அற்புத வரிகள் நூலுக்கு பெருமை சேர்க்கின்றன. நன்றி: […]

Read more

இந்தியக் கல்வி வரலாறு

இந்தியக் கல்வி வரலாறு, எஸ். சுப்பிரமணியன், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 35ரூ. கல்வியின் வரலாறு சிந்து சமவெளி காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரைக்குமான காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி என்பது என்னமாதிரியான மாற்றங்களுக்கு ஆட்பட்டுவந்துள்ளது என்பதைச் சுருக்கமாகவும் ஆழமாகவும் எடுத்து வைக்கும் நூல். வேத காலக் கல்வி, புத்த, சமணத் துறவிகள் பரப்பிய பள்ளிக் கல்வி, நமது முன்னோர்கள் பயின்ற திண்ணைப் பள்ளிகள் என ஒரு நீண்ட காலகட்டத்தின் முக்கியமான சம்பவங்களை நமக்கு முன்னால் வைக்கிறார். இன்றைய கல்வி முறையின் பிரச்சினைகளையும் அவற்றுக்கான […]

Read more

திருக்குறளில் காமம்

திருக்குறளில் காமம், இ.கி.இராமசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 188, விலை 125ரூ. ஒரு பொருள் பற்றிய இருபத்து மூன்று அறிஞர்களின் கட்டுரை தொகுப்பு இந்த நூல். திருக்குறளில், காமத்துப்பாலின் சிறப்பு, காமமும், இன்பமும் ஒன்றா, காமம் இழிபொருளாக எப்போது மாறியது, காமம் தரும் கனிந்த வாழ்வு, காமத்துப் பாலும் கானல்வரியும், அகத்திணை மரபும், காமத்துப்பாலும் எனப் பல்வேறு தலைப்புகளில், திருக்குறள் கருத்துக்கள் ஆராயப்பட்டு உள்ளன. காமம் என்பதற்கு சரியான பொருள், நூலின் முதலிலேயே கருத்துரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கிறது. மனமொத்து இருபாலும் […]

Read more

எழில் மரம்

எழில் மரம், ஜேம்ஸ் டூலி, தமிழில் லியோ ஜோசப், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக். 414, விலை 360ரூ. இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் கல்வி தனியார்மயமாகி வரும் வேளையில் அதை நியாயப்படுத்தும் விதமாக வெளிவந்திருக்கும் நூல். உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகளைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட நூலாசிரியர், ஏழைக் குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பான கல்வியைக் கற்றுத் தருகின்றன என்கிறார். ஏழை மக்கள் தங்களுடைய முன்னேற்றத்துக்கு அரசாங்கத்தைச் சாந்திராமல், சுய உதவியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சுய உதவிப் […]

Read more

வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள்

வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள், கவின் மீடியா ஓர்க்ஸ், சென்னை, விலை 50ரூ. கடும் உழைப்பும், ஆர்வமும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று கூறுகிறார், காரையடி செல்வன். புத்தகத்தின் பெயர் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று சூட்டப்பட்டிருந்தாலும், அதை எளிமையாகக் கூறினால் வெற்றி பெற்றவர்கள் வரலாறு என்றே கூறவேண்டும். பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களை பேட்டிகண்டு, வெற்றியுடன் ரகசியத்தை கதைபோல் கூறுகிறார் ஆசிரியர். வாழ்வில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு, இந்தப் புத்தகம் சிறந்த டானிக். நன்றி: தினத்தந்தி, 17/6/2015.   —- சொல்லுக்குள் ஈரம், வானதி பதிப்பகம், […]

Read more
1 45 46 47 48 49 84