விமர்சனப் புயல்

விமர்சனப் புயல், க. நா. சு. இராம. இலக்குவன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 272, விலை 200ரூ. நூலாசிரியர் முனைவர் பட்டம் பெற க.நா.க.வின் திறனாய்வுப் பணிகள் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வே இந்த நூல். வணிக, கலை இகழ் படைப்பாளிகளின் உள்ளங்களை அசைத்தும், அதிரவும் வைத்த க.நா.சு. தரமான புதினங்கள் இவை என சுட்டிக்காட்டியதுடன் தரமற்றவற்றைக் கடுமையாக விமர்சித்து உலகத் தரம் நோக்கி நம் எழுத்தாளர்கள் கவனம் செல்ல வேண்டும் என்றும் உரைத்தவர். சிறந்த முதல் தரச் சிறுகதையாளர் […]

Read more

இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள்

இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள், தமிழ் உயராய்வு மையம், நாகர்கோவில். இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஒரு குடும்பக் கதையாக அமைந்தாலும், அதனுள் மூவேந்தர்கள், மூன்று நாடு, மூன்று தமிழ் என பல மூன்றின் தன்மைகள் காணப்படுகின்றன. இரண்டு நூலையும் சேர்த்து, இரட்டைக் காப்பியங்கள் என்று உரைப்பது மரபு. இதனுள் பல மதிப்பீடுகள் பேசப்படுகின்றன. சமயம், நாடு, மன்னன், குலம், தனிமனிதன் என பல நிலைகளை […]

Read more

ஆன்மாவின் பயணங்கள்

ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 280, விலை 210ரூ. ஆன்மா பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; என்றும் இருப்பது. நமது ஆடை நைந்து போன பிறகு அதனைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய ஆடையை அணிவதுபோல, ஆன்மாவின் ஆடை போன்ற இந்த உடல் சாய்ந்துபோன பிறகு புதிய உடலுக்குள் புகுந்து ஆன்மா இயங்குகிறது என்று கூறுகிறது பகவத்கீதை. அமெரிக்க மனநல மருத்துவரான பிரைன் வைஸ் எழுதிய Many lives Many Matters. Only love is Red ஆகிய நூல்கள் […]

Read more

இராமாயணம்

இராமாயணம், வெளியிட்டோர் சஞ்சீவியார், சென்னை, விலை 400ரூ. வடமொழியில் வான்மீகி முனிவர் எழுதிய இராமாயண இதிகாசம் 24,000 சுலோகங்களைக் கொண்டது. கம்பர் இக்காவியத்தை ஆறு காண்டங்களாக 12,000 விருத்தப்பாக்களால் பாடியுள்ளார். அவர் இந்நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம். இராமபிரானை மனிதத் தன்மையிலேயே வைத்து போற்றியவர் வான்மீகி முனிவர். கம்பர் இராமபிரானைத் தெய்வமாகப் போற்றியவர். கம்பரின் கவிதை கடவுள் பற்றை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் மக்கள் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. எனவே எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இராமாயணத்தைப் படித்து, இன்புறுமாறு உரைநடை வடிவில் […]

Read more

இராஜாராம்

இராஜாராம், (சமூகவியல் நோக்கில் ராஜராஜ சோழன் வரலாறு), வெ. ஜீவகுமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 60ரூ. ஒளிக்கப்பட்ட தியாகங்கள் இராஜராஜ சோழனால் கி.பி. 1004ம் ஆண்டு கட்டத் துவங்கி, கி.பி. 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, தமிழர்களின் தனிப்பெருமையாய் இருக்கும் தஞ்சை பெரிய கோயிலின் பின்னணியை விமர்சனபூர்வமாக ஆராய்கிறது இந்நூல். கோயில் கட்டிய மன்னக் பெயர், கோயிலுக்கு நிதி உதவி செய்த அரசன் வீட்டுப்  பண்கள் உட்பட நிதியாளர்களின் பெயர்களையெல்லாம் பொறித்த அரசன், கோயில் கட்டிய தொழிலாளர்களின் […]

Read more

அகத்தியர் முதல் ஆதித்தனார் வரை

அகத்தியர் முதல் ஆதித்தனார் வரை, காவ்யா, சென்னை, விலை 480ரூ. பழைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் சிறப்புகளை இந்த நூலில் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர் எழிலமுதன் தொகுத்து வழங்கியுள்ளார். இயல், இசை, நாடகம், அறிவியல், ஆய்வு என ஐந்து தமிழுக்கும் நெல்லைத் தமிழ் தலைமை தாங்குகிறது. கவிதைக்குப் பாரதி, கதைக்குப் புதுமைப்பித்தன், நாடகத்துக்குச் சுந்தரம் பிள்ளை, அறிவியலுக்கு அப்புசாமி, சு. முத்து, ஆய்வியலுக்கு தி.க. சிவசங்கரன், தொ.மு. சி. ரகுநாதன் இப்படி நீள்கிறது, பட்டியல். ஜனநாயகத்திற்கேற்ப இதழியலை ஜனரஞ்சகமாக்கியவர் ஆதித்தனார். பாமரரென்று ஒதுங்கிக்கிடந்த […]

Read more

வர்ம விமானம்

வர்ம விமானம், இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் தாணுவாலஜி, சென்னை, விலை 10,000ரூ. வர்மம் என்றால் நரம்பில் எழும் பிணக்கம். நம் உடலில் எண்ணிறைந்த நரம்புகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. உடலில் படும் பல்வேறு பாதிப்புகள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. வர்ம பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வர்ம மருத்துவத்தால் மட்டுமே சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும். அந்த வகையில் 828 வர்மங்களின் இலக்கணம், பாதிப்பால் நிலவும் நிலைமை, சிகிச்சை வகைகள், பல்வேறு மருந்துகள் போன்றவை குறித்து இந்த நூலில் டாக்டர் எஸ். சிதம்பர தாணுப்பிள்ளை விரிவாக எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பொருள் […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா, டாக்டர் இரா.மோகன், சாகித்ய அகாதெமி, பக். 112, விலை 50ரூ. பேராசிரியர் மீரா எப்படி கவிஞராய், போராளியாய், கட்டுரை ஆசிரியராய், பத்திரிகையாளராய், பதிப்பாளராய் பல்வேறு அவதாரங்கள் எடுத்து, அதில் வெற்றியும் கண்டார் என்ற வரலாற்றை டாக்டர் இரா. மோகன், நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து எழுதியுள்ளார். மீரா கவிதைகளில் அவரது மரப்புத் திறமையும் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் நூலில் அவரது வசன கவிதைத்திறனையும், குக்கூ, ஊசிகள் அங்கதச் சுவையின் அணிவகுப்பையும், கட்டுரைகளில் அவரது மொழி வீச்சையும், இந்நூலாசிரியர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் தந்துள்ளது மீரா பற்றிய […]

Read more

தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு

தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு, ஐ. ஜோப் தாமஸ், காலச்சுவடு, பக். 264, விலை 475ரூ. கலை வரலாற்றை ஆவணப்படுத்த முடியும் நம் வரலாற்றை நாம் தெரிந்து வைத்துகொள்வதில் இருக்கும் ஆர்வத்தை விட, மேலைநாட்டு வரலாற்றை ஆய்வாளர்களுக்கு ஆர்வம் அதிகம். தென்னிந்திய கலை குறித்த ஆய்வு ஆவணங்கள் குறித்து வெளிவந்த ஆங்கில நூல்களோடு, இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நூல்களை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சும். இந்திய மண்ணில் ஓவியங்கள் குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. ஆனால் தமிழக மண்ணில் இதுவரை ஓவியங்கள், கலை செய்லபாடுகள் பற்றிய […]

Read more

நான் சுவாசிக்கும் சிவாஜி

நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய். ஜீ. மஹேந்திரா, கண்ணதாசன் பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. ரசிகர்கள் பார்வையில், சிவாஜியை பார்ப்பது ஒரு பரிமாணம். அவரை சந்தித்தவர்கள் பார்வையில் அவரை பார்ப்பது, வேறொரு பரிமாணம். அவருடன் நெருங்கி பழகிய குடும்ப நண்பர், சிவாஜியுடன், 33 படங்களில் நடித்தவர் என்ற முறையில் நூலாசிரியரின் எழுத்தில் நாம் பார்க்கும், சிவாஜியோ, முப்பரிமாணமாக, மனதுள் விரிகிறார். பொதுவாக சிவாஜியின் நடிப்பை வியந்திருக்கும் ரசிகர்களுக்கு, அவர் நடிப்பில் காட்டிய நுணுக்கங்களையும், மேதைமைகளையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நூலாசிரியர் விவரிக்கையில், அட, ஆமாம்ல […]

Read more
1 46 47 48 49 50 84