முதல் தலைமுறை மனிதர்கள்

முதல் தலைமுறை மனிதர்கள், சேயன் இப்ராஹீம், நிலவொளி பதிப்பகம், விலை 200ரூ. முதல் தலைமுறை மனிதர்களிடமிருந்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள, ஏராளமான தகவல்களைத் தேடி அலைந்து சேகரித்து இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். தமிழகத்தின் தவிர்க்க இயலாத சக்திகளாகத் திகழ்ந்த 30 இஸ்லாமிய ஆளுமைகளின் வரலாறு இந்நூலில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் போராட்டம், அரசியல், கல்வி, சமூக சேவை, சமுதாயச் சேவை… என்று பல தளங்களில் இந்த முதல் தலைமுறையினரின் பங்களிப்புகளுடன், அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர, அன்றைய தமிழக […]

Read more

திருவருட்பா பதிப்புச் சோலை

திருவருட்பா பதிப்புச் சோலை, இராம.பாண்டுரங்கன், ஐந்திணை வெளியீட்டகம், பக்.224, விலை ரூ.200. காலந்தோறும் ஆவணப்படுத்துதல் என்பது இன்றியமையாத ஒன்று. வரலாறுகளை ஆவணப்படுத்துதலின் மூலமாகவே பல்வேறு வரலாறுகளை அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் தமிழ் வரலாறுகளின், தமிழ் ஆய்வுகளை ஆவணப்படுத்தலின் தேவையை இந்நூல் வலியுறுத்துகிறது. 1867 முதல் 1972 வரை வெளியான திருவருட்பா பதிப்புகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வள்ளலாரின் "திருவருட்பா' தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய செல்வம். தாயுமானவர், பாரதியார், வானமாமலை, ம.பொ.சி. முதலியோர் பார்வையில் வள்ளலார் குறித்த விரிவான விளக்கம் சிறப்பு. தமிழ் நூல் […]

Read more

கதைகளின் கதை

கதைகளின் கதை, ம. மணிமாறன், விஜயா பதிப்பகம், பக். 224, விலை 160ரூ. முப்பத்தியிரண்டு தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனப் பார்வையை நம் முன் வைக்கிறார், ம.மணிமாறன். சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் – மனிதர்களின் உணர்ச்சி பெருக்கை கதைகளமாக்கிய மவுனி – அகத்தின் கேள்வியை புறத்தே கண்டெழுதிய, ந.பிச்சமூர்த்தி – பெண் உலகின் மாயங்களை கண்டெழுதிய, கு.ப.நா., – தஞ்சை பெருவெளியின் அதீத கணங்களை, கதை ஆக்கிய, தி.ஜானகிராமன். மனிதகுலம் சுமக்கிற புறக்கணிப்பின் சொற்களை கதை ஆக்கிய, கிருஷ்ணன் நம்பி – அழகின் […]

Read more

மனம் ஒரு மகாத்மா

மனம் ஒரு மகாத்மா, முனைவர் பா. மஞ்சுளா, விஜயா பதிப்பகம், விலை 70ரூ. வள்ளலாரின் வழியை பின்பற்றி வரும் நூலாசிரியரான தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பா. மஞ்சுளா, வள்ளலாரின் 43 அமுதுமொழிகளை தேர்வு செய்து, அதனை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாக தொகுத்துள்ளார். அதில் ‘துணையினை தூயமனதோடு நேசியுங்கள்’, ‘மனிதரை நேசித்தால் இறைவன் உங்களை நேசிப்பான்’, ‘எல்லோரும் ஜெயிக்க நினைப்பவன், ஒருபோதும் தோற்பதில்லை’ போன்ற வரிகளுக்கு விளக்கம் தந்திருப்பது மனதை தொடுகிறது. தற்போதைய தண்ணீர் பஞ்சத்தை நினைவூட்டும் வகையில் ‘குடிக்கின்ற நீர்ள்ளக் […]

Read more

யானைச் சொப்பனம்

யானைச் சொப்பனம், இரா.நாறும்பூநாதன் நூல் வனம், பக்.176, விலை ரூ.120. நூலாசிரியர் முகநூலில் எழுதிய 59 பதிவுகளின் தொகுப்பு.நூலாசிரியரோடு தொடர்புடைய ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடைய/ தொடர்பில்லாத மனிதர்கள், இடங்கள், அவர் சந்திக்க நேர்ந்த உலக நடப்புகள் என பலவும் இந்தப் பதிவுகளின் பேசுபொருள்களாகியுள்ளன. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, அயோத்திதாச பண்டிதர், குன்றக்குடி அடிகளார் ரசிகமணி டி.கே.சி, போன்றோருடன் அவருடைய ஆசிரியர்கள், நண்பர்கள் என பலரும் இப்பதிவுகளில் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றனர். பாளையங்கோட்டையில் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு தனிப் பள்ளியைத் தொடங்கிய அனி ஜேன், திருநெல்வேலியில் இரயில்வே […]

Read more

jk பார்வைகள் பதிவுகள்

jk பார்வைகள் பதிவுகள், தொகுப்பாசிரியர் கோ.எழில்முத்து, வேமன் பதிப்பகம், பக்.240, விலை ரூ.150. மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றிய அற்புதமான பதிவு இந்நூல். ஜெயகாந்தனின் நேர்காணல்கள், நமது பண்பாடு, நமது சமயம், குடும்பம் குறித்து ஜெயகாந்தனின் சிந்தனைகள் என மறைந்த அந்த எழுத்தாளரின் நேரடியான பதிவுகள் ஒருபுறம் என்றால், ஜெயகாந்தனைப் பற்றி தமிழின் பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள் இன்னொருபுறத்தில் பதிவாகியுள்ளன. ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடலூரில் முருகேசனாக இருந்த ஜெயகாந்தன், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்; […]

Read more

கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை

கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை, க. அருச்சுனன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 110ரூ. கல்லூரி படிப்பு முடித்தவர்களே சாதிக்க முடியும் என்பதல்ல. கல்லூரி காணாதவர்களும் நம் நாட்டில் சாதித்துள்ளனர். அந்த வகையில் கல்லூரிக்குச் செல்லாமல், தனது அனுபவப் படிப்பு காரணமாக சாதனை புரிந்த வள்ளலார், ஈ.வே.ரா. பெரியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜர், கிருபானந்த வாரியார், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகிய 9 பேரை தேர்ந்தெடுத்து இந்த நூலில் என்ஜினீயர் க. அருச்சுனன் எழுதியுள்ளார். […]

Read more

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்

தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள், மெகஸ்தனிஸ் முதல் மா ஹுவான் வரை, தொகுப்பும் பதிப்பும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, தமிழில் மு.இரா.பெருமாள் முதலியார், அடையாளம், பக்.520, விலை ரூ.390. மிகச் சிறந்த வரலாற்றாசிரியரான நூலாசிரியர் தொகுத்தளித்திருக்கும் இந்நூல் தென்னிந்திய வரலாற்றில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சுகிறது.இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் பலரின் குறிப்புகளை இப்போது படிக்கிறபோது, வியப்பு ஏற்படுகிறது. சிலநேரங்களில் அதிர்ச்சியும். உதாரணமாக, கி.பி.673 இல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த இட்சிங் அன்றைய கல்விமுறையை இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு இந்தியா வழிவழியாகக் கடைப்பிடிக்கும் முறைகள் […]

Read more

குட்டிக் கதைகளும் சுவையான விஷயங்களும்

குட்டிக் கதைகளும் சுவையான விஷயங்களும், அரிமா கே. மூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. மேடைப் பேச்சாளர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும்போது, இடையிடையே குட்டிக் கதைகள் சொன்னால்தான் கூட்டம் கலையாமல் இருக்கும். அத்தகைய குட்டிக்கதைகளுடன், சுவையான துணுக்குச் செய்திகளும் இதில் நிறைந்துள்ளன. இதில் உள்ள குட்டிக்கதைகளும், துணுக்குகளும் மொத்தம் 339. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விஷயங்கள். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

வாங்க பேசலாம் செல்லம்ஸ்

வாங்க பேசலாம் செல்லம்ஸ், இளங்கோவன் கீதா, படி வெளியீடு, விலை 100ரூ. இளங்கோவன் முகநூலில் எழுதிய குறிப்புகள் வானத்திற்குக் கீழான அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசுகின்றன. வகைப்படுத்த முடியாதபடிக்கு ஆவேசமும், அன்பும், கருணையும், விவாதமும் கொண்ட பகுதிகள். மெல்லிய புன்னகையோடு ரொம்பவும் உள்புகுந்து வருந்தாமல் செல்கிற சுலபமான பத்திகள். எல்லோருடைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் உடைய பகுதிகளைப் பற்றி பேசுவதால் நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன. எப்போதுமே உண்மைக்கு அருகில் இருப்பவை சுவாரஸ்யம் நிரம்பியவை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாகப் பார்த்து, முன் பின்னாய் யோசித்துப் பார்த்து எழுதப்பட்டவை. காதலர் தின […]

Read more
1 16 17 18 19 20 63