மலரும் நினைவுகளில் காமராஜர்

மலரும் நினைவுகளில் காமராஜர், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. காமராஜர் பற்றிய 100 நிகழ்வுகளைத் தொகுத்து மலரும் நினைவுகளாகத் தந்துள்ளார் நூலாசிரியர். தமிழக மக்களின் கல்விக் கண்ணைத் திறக்க அவர் உழைத்த உழைப்பு இங்கே சித்திரமாகக் காட்டப்பட்டுள்ளது. அவரது தியாகம், தொண்டு, எளிமை ஆகியவற்றைப் படிக்கப் படிக்க அது புதிய சரித்திரமாக நம்முன் வந்து நிற்கிறது. மனிதன் மனிதனாக வாழ விழிப்புணர்வு ஊட்டும் நூலாக அது விளங்கும் என்பது உண்மையே. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 512, விலை 320ரூ. இந்நூலாசிரியர் 1950-80-களில் தனது ‘கல்கண்டு’ பத்திரிகையில், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற செய்திகளை வெளியிட்டு, பத்திரிகை உலகின் பாராட்டைப் பெற்றவர். ஜோதிடம், நாடகம், திரைப்படம், சித்தமருந்து, பல்பொடி தயாரிப்பு… என்று பல துறைகளிலும் இறங்கி, சுமார் 500 நூல்களை எழுதி சாதனை புரிந்தவர். தமிழ் பத்திரிகை உலகில் கேள்வி – பதில் பகுதியை ‘கல்கண்டு’ பத்திரிகையில் அறிமுகம் செய்து, வாசகர்களில் பலவகையான கேள்விகளுக்கும் சுவையான பதில்களை அளித்தவர். […]

Read more

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 330ரூ. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் மனைவி சுகந்தி. சிற்நத கவிஞரான அவர், கவிதைகளுடன் சிறுகதைகளும் எழுதினார். அற்புதக் கவிஞராக புகழ் பெற்ற சுகந்தி திடீரென மனநிலை பாதிக்கப்பட்டார். அதன் பிறகும் கவிதைகள் எழுதினார். 11/2/2009ல் காலமானார். அவர் முன்பு எழுதிய ஆழமான கவிதைகளும், பிற்காலத்தில் எழுதிய கவிதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சுகந்தியின் கணவர் சுப்ரபாரதிமணியன் இந்நூலை தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017

Read more

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம், விகடன் பிரசுரம், விலை 125ரூ. புதிதாக மணம் செய்து கொண்டவர்கள், மணம் செய்யப்போகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல டாக்டர் டி. நாராயண ரெட்டி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். கேள்வி – பதில் பகுதியும் அடங்கியுள்ளது. ஷ்யாம் வரைந்துள்ள படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/3/2017   —-   இரா. இரவியின் படைப்புலகம், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், விலை 70ரூ. இரா.இரவி எழுதிய 10 நூல்களுக்கு இரா. மோகன் எழுதிய அணிந்துரைகள் […]

Read more

சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள்

சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள், அழகிய சிங்கர், விருட்சம்,  பக். 136, விலை ரூ.100. எழுத்தாளர் அழகியசிங்கரின் 27 கவிதைகள், 8 சிறுகதைகள், 12 கட்டுரைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இது. பெரும்பாலான சிறுகதைகள் மிகவும் எளிமையாகவும் நேரடித்தன்மையுடனும் இருக்கின்றன. எழுத்தாளரான வங்கி அதிகாரி மீது வாடிக்கையாளர் ஒருவர் புகார் கொடுக்க, அதனால் அவருக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட வங்கி ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் சேர்க்க முயற்சி செய்யும் வங்கி அதிகாரி முடிவில் தோல்வியடைவது […]

Read more

கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை

கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை, தொகுப்பாசிரியர்: இரா.சம்பத்,சாகித்ய அகாதெமி,  பக்.225, விலை ரூ.110. கவிஞர் கா.மு.ஷெரீப் கவிதை, காவியம், சமயம், திரையிசைப் பாடல்கள், கலை, இலக்கியம், இலக்கணம், அரசியல், பத்திரிகை, தலையங்கம், உரைகள் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்; பல்துறைகளிலும் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் . பத்திரிகையாளராகவும், காங்கிரஸ் கட்சி, ம.பொ.சி.யின் தமிழரசு கட்சி போன்றவற்றில் முக்கிய பங்காற்றியவராகவும், தமிழக எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதலிய போராட்டங்களில் பங்கேற்றவராகவும் அவர் அறியப்பட்டாலும், அவருடைய திரையிசைப் பாடல்களான ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயில […]

Read more

மாவலி பதில்கள்

மாவலி பதில்கள், நக்கீரன் பதிப்பகம், விலை 125ரூ. ‘நக்கீரன்’ இதழில் வெளியான கேள்வி – பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மாவலி என்ற பெயரில் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கோவி. லெனின். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில் சுவையாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Read more

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.184, விலை ரூ.140. தமிழ் இலக்கியத் திறனாய்வுகள், திறனாய்வு செய்பவரின் வாழ்க்கைப் பார்வையிலிருந்து பலவிதமாக வெளிவந்திருக்கின்றன. இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமர்சிப்பவர்களும், இலக்கியத்தின் வெளிப்பாட்டு அம்சத்தைப் பிரதானப்படுத்தி அழகியல் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும், இலக்கியம் எந்தக் கருத்தைச் சொல்கிறது என்ற அடிப்படையில் சமூகக் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்களே. ஆனால் இந்நூலின் விமர்சனப் பார்வை சற்றே வித்தியாசமானது. உளவியல் அறிஞர்களான ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகியோரின் உளவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான […]

Read more

நினைவில் நிலைத்தவர்கள்

நினைவில் நிலைத்தவர்கள், வாசகன் பதிப்பகம், விலை 100ரூ. எழுத்தாளர்கள் பொன்னீலன், மெர்வின், கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், நாட்டுப்புற இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி உள்பட 29 பிரமுகர்களின் சிறப்பை விவரிக்கிறார் நூலாசிரியரும், பத்திரிகையாளருமான அகநம்பி. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   மாவலி பதில்கள், நக்கீரன் பதிப்பகம், விலை 125ரூ. ‘நக்கீரன்’ இதழில் வெளியான கேள்வி – பதில்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மாவலி என்ற பெயரில் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் கோவி. லெனின். ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த பதில் சுவையாகவும், சிந்தனையைத் […]

Read more

ராமாமிர்தம்

ராமாமிர்தம், லா.ச.ரா. நாவல்கள், காவ்யா, பக். 720, விலை 700ரூ. தமிழ் இலக்கிய முன்னோடிகளில் முக்கியமான ஒருவர் லா.ச.ராமாமிர்தம். நம்மை உணர்ச்சிமயமாக்கி, ஒரு மாய உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் அவர் எழுத்துக்களுக்கு உண்டு. அவருடைய படைப்புகளை தொகுத்து, “ராமாமிர்தம்” என்ற தலைப்பில் பெருநூல்களாக வெளியிடுகிறது, “ராமாமிர்தம் 1” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதில் “புத்ர”, “அபிதா”, கல்சிரிக்கிறது”, “கேரளத்தில் எங்கோ”, “கழுகு”, “பிராயச்சித்தம்” ஆகிய 6 நாவல்கள் அடங்கியுள்ளன. ராமாமிர்தத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் அன்னைக்கு அணிவிக்கப்பட்ட […]

Read more
1 17 18 19 20 21 63