தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுமை

தமிழ்நாடு அரசாங்கம் நிர்வாகம் ஆளுமை, க.வெங்கடேசன், வர்த்தமானன் பதிப்பகம், பக்.534, விலை ரூ.425. தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்த பலருக்கும் – அவர்கள் வாழுமிடம் பற்றிய தகவல்கள் கூட தெரியாமல் இருக்கும் இக்காலத்தில், இந்நூல் தமிழ்நாட்டைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்துத் தந்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஆட்சியமைப்பு வரலாறு சங்க காலத்திலிருந்து இன்று வரை கால வரிசையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது, தமிழ்நாடு அரசாங்கம், அது செயல்படும்விதம், பல்வேறு துறைகள், அவை இயங்கும் முறைகள், மாவட்ட, ஊராட்சி நிர்வாகங்களின் அமைப்புமுறை, அவை செயல்படும்விதம், கிராம நிர்வாக அலுவரில் இருந்து […]

Read more

வளரும் ஒலிபரப்புக்கலை

வளரும் ஒலிபரப்புக்கலை, கோ. செல்வம், விஜயதிருவேங்கடம், வானதி பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. சோ.சிவபாதசுந்தரம் 1954 இல் எழுதிய “ஒலிபரப்புக்கலை‘’ என்ற நூலின் தொடர்ச்சியாக – அதன் வளர்ச்சிநிலையாக – இந்நூல் மலர்ந்திருக்கிறது. ஒலிப்பரப்புத்துறையில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற நூலாசிரியர்கள் இந்த நூலை எழுதியுள்ளார்கள். ஒலிபரப்புத்துறையின் பல்வேறு அங்கங்களை இந்நூல் விரிவாக விளக்குகிறது. வானொலி அறிவிப்பாளர் அல்லது தொகுப்பாளர் குரல் வளம், நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, சேர்ந்திசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்விதம், வானொலிக்கு எழுதும் முறை, வானொலிப் பேச்சின் தன்மை, வானொலி […]

Read more

மேடைப்பேச்சு

மேடைப்பேச்சு, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.204, விலை ரூ.170. சிறந்த மேடைப் பேச்சாளர்களில் ஒருவரான நூலாசிரியர், மேடைப் பேச்சு தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். தலைவர்களின் மேடைப் பேச்சுகள் சுதந்திரப் போராட்ட காலத்தில் எவ்வாறு பயன்பட்டன? சுதந்திரப் போராட்ட காலத்தில் “மேடை ஏறியோர்க்கு மேடையில் ஏறுவது தெரியும்; இறங்கியவுடன் எங்கு போவோம் என்பது தெரியாது. ஏறினால் ரயில் – இறங்கினால் ஜெயில்’‘ என்ற நிலை அப்போது இருந்தது என்பன போன்ற பல தகவல்கள் வியக்க வைக்கின்றன. […]

Read more

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், பதிப்பாசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 512, விலை 320ரூ. கல்கண்டு வார இதழின் ஆசிரியராக இருந்த தமிழ்வாணன் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு இந்நூல். அரசியல் கேள்விகள், நகைச்சுவை கேள்விகள், பொது கேள்விகள் என மூன்று பிரிவுகளாக கேள்விகள் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்த சுவையான பதில்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. “தி.மு.க.வைச் சமாளிக்க நான் ஒருவனே போதும் என்கிறாரே காமராஜர்?’, “இந்த நாட்டில் நீடித்து நிற்கப்போகிற கட்சி எது?‘’,”தி.மு.க.அழிந்தால் அண்ணா எந்தக் கட்சியில் சேருவார்?’‘, “இந்தி […]

Read more

ரகுநாதம்

ரகுநாதம், தொகுப்பாசிரியர் காவ்யா சண்முக சுந்தரம், காவ்யா, விலை 1100ரூ. எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், விமர்சகர், மேடைப் பேச்சாளர் என்னும் பன்முகம் கொண்டவர் தொ.மு.சி.ரகுநாதன். அவரது கட்டுரை, கவிதை, நாடகங்களை ‘ரகுநாதம்’ என்ற பெயரில் காவ்யா சண்முக சுந்தரம் நூலாகத் தொகுத்துள்ளார். இதில் 100 கட்டுரைகளும், 2 நாடகங்களும், 56 கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இவரது எழுத்துகளில் நாட்டுப்பற்று, விதவை மறுமணம், சாதி மறுப்பு, விடுதலை உணர்வு ஆகியவைகளை வெளிப்படுத்தியுள்ளார். ‘ரகுநாதனின் தமிழ் நடை அழகியது. இனியது. ஜீவன் நிறைந்தது. […]

Read more

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும்

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128,விலை 60ரூ. மனிதனுக்க வரக்கூடிய மாரடைப்பு, மூளை அடைப்பு, நீரிழிவு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களை உணவு, உடற்பயிற்சி, பழக்கவழக்கங்கள் மூலம் எவ்வாறு நோய்வரும் முன் தடுக்க முடியும் என்பதை எடுத்துக்கூறுகிறார் நூலாசிரியர். நோய்த் தடுப்புக்கான வழிகாட்டி நூல் இது. நன்றி: குமுதம், 4/1/2017.   —-   உள்ளம் உலகம், சேகர் பதிப்பகம், விலை 125ரூ. “உருவகக் கடல் கவியரசு” என்று புகழ் பெற்ற […]

Read more

பாரதியார் பெருமை

பாரதியார் பெருமை, முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், பக். 143, விலை 60ரூ. பாதியாரின் நண்பரான பரலி சு. நெல்லையப்பர் தொடங்கி, திரு.வி.க., டி.கே.சி., ராஜாஜி, கவிமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணா, கல்கி, மு.வ.., வையாபுரிப்பிள்ளை, ம.பா.சி., ஜீவா, கி.வா.ஜ., புதுமைப்பித்தன், குன்றக்குடி அடிகளார், ரா. கனலிங்கம், திருலோக சீதாராம், முல்லை முத்தையா என்று பல அறிஞர் பெருமக்கள் அவ்வவ் காலங்களில் பாரதி பற்றி புலப்படுத்திய கருத்துக்களைத் தொகுத்து பாரதியாருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். பாரதியார் பற்றிய கருத்துப் பெட்டகமான இந்நூல் பாரதியின் நூற்றாண்டு […]

Read more

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம்

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம், பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 1120, விலை 1100ரூ. படைப்பாற்றலும் விமர்சனக் கூர்மையும் ஒருங்கே பெற்றவர் தொ.மு.சி. ரகுநாதன். முதுபெரும் எழுத்தாளரான தொ.மு.சி. பொதுவுடமைக் கருத்துக்களை எந்த சமரசமும் செய்யாமல் விதைத்த புரட்சியாளர். புதுமைப்பித்தனை இனம் கண்டவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என பரந்துபட்ட இலக்கிய ஆளுமையாக ஆட்சி செய்தவர். அந்த வகையில் அவரது 100 கட்டுரைகள், 2 நாடகங்கள், 56க்கும் மேற்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

அறிஞர் அண்ணாவின் சுய முன்னேற்ற சிந்தனை

அறிஞர் அண்ணாவின் சுய முன்னேற்ற சிந்தனை, சாலமோன் மனுவேல், பக். 448, விலை 80ரூ. குமரி மாவட்டத் தமிழரின் படைப்பு இந்நூல். நூலின் முதல் 80 பக்கங்கள் அணிந்துரை, கருத்துரை, மதிப்புரை, என்னுரை, முன்னுரை என, தனி நூலளவுக்கு நீளுகிறது. அண்ணாவின் பிறப்பு, வளர்ப்பு, இளமைப்பருவம், கல்வி, அரசியல், பேச்சுகள், எழுத்துகள் என்று தொடரும் நூலில், ஆங்காங்கே அண்ணாவின் சிந்தனைகளும், அவற்றில் சுய முன்னேற்றம் அடங்கி இருப்பதும் எழுதப்பட்டு உள்ளது. புத்தகங்கள் இல்லாத அறை ஆன்மா இல்லாத உடல். இதயத்தின் மகிழ்ச்சியே முகத்தின் மலர்ச்சி. […]

Read more

எப்போ வருவாரோ

எப்போ வருவாரோ, தொகுப்பாசிரியர் வள்ளி முத்தையா, தோழமை வெளியீடு, பக். 112, விலை 150ரூ. எம்.எஸ்.சுப்புலட்சுமி சதாசிவம் தம்பதியருக்கு ரசிகமணி டி.கே.சி. எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்நூல். இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ரசிகமணி எழுதிய கடிதங்கள், ஒரு பல்சுவை விருந்து. பல தனிப்பட்ட சம்பவங்களை அவை கூறும்போது, சரித்திர நிகழ்வுகளாக அவை நிழலாடுகின்றன. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அவர் எழுதும் கடிதங்கள், “அருமைப் புதல்வி குஞ்சம்மாளுக்கு’ எனத் தொடங்குகின்றன. டி.சதாசிவத்துக்கு எழுதும் கடிதங்கள் “அருமை நண்பர் சதசாசிவத்துக்கு’ என்று தொடங்குகின்றன. கடிதங்களின் முடிவில் “அன்புள்ள, டி.கே.சிதம்பரநாதன்’ என்றே எழுதி […]

Read more
1 19 20 21 22 23 63