தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை

தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை, தொகுப்பு திருமயம் பெ. பாண்டியன், அட்டமா, பக். 72, விலை 40ரூ. கவலைகளை மறந்து சிரிக்கும் மனிதனுக்குத்தான் பல்வேறு வெற்றிகள் சாத்தியம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த நோயற்ற வாழ்வுக்கு அடிகோலுவது மனமகிழ்ச்சிதான். இன்றைக்கு எல்லா பத்திரிகைகளிலும் ஜோக்ஸ் இடம் பெறுகின்றன. அதைப் படிப்போர் மன நிம்மதியும் உற்சாகமும் அடைவது உறுதி. அப்படி மக்களை மகிழ்விக்கும் ஜோக்குகளை எழுதி அனுப்புவோர் எப்படி இருப்பார்கள், அவர்களின் பணி என்ன, அவர்கள் செய்து வரும் செயல்கள் எவை […]

Read more

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது. தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த ஆய்வு […]

Read more

பெரியார் ஒளிமுத்துக்கள்

பெரியார் ஒளிமுத்துக்கள், திராவிடர் கழக வெளியீடு, விலை 70ரூ. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் கொண்ட புத்தகம். சுயமரியாதை, பொதுத்தொண்டு, சமுதாயச் சீர்திருத்தம், இலக்கியம், திருக்குறள், பொருளாதாரம் முதலிய தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   பொது அறிவுப்பூங்கா, ஸ்ரீ ரங்கம் காயத்ரி, காய்த்ரி பப்ளிகேஷன்ஸ், விலை 70ரூ. பொது அறிவு சம்பந்தமான 1000 கேள்வி – பதில்கள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Read more

பாரதியார் பெருமை

பாரதியார் பெருமை, முல்லை, பி.எல்.முத்தையா, முல்லை பதிப்பகம், பக்.143, விலை 60ரூ. பாரதியின் நண்பரான பரலி சு. நெல்லையப்பர் தொடங்கி, திரு.வி.க. , டி.கே.சி., ராஜாஜி, கவிமணி, ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணா, கல்கி, மு.வ., வையாபுரிப்பிள்ளை, ம.பொ.சி., ஜீவா, கி.வா.ஜ., புதுமைப்பித்தன், குன்றக்குடி அடிகளார், ரா. கனகலிங்கம், திருலோக சீதாராம், முல்லை முத்தையா என்று பல அறிஞர் பெருமக்கள் அவ்வவ் காலங்களில் பாரதிபற்றி புலப்படுத்திய கருத்துக்களைத் தொகுத்து பாரதியாருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். பாரதியார் பற்றிய கருத்துப்பெட்டகமான இந்நூல் பாரதியின் நூற்றாண்டு விழா நினைவாக மறுமுறை […]

Read more

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம்,

ரகுநாதம் கட்டுரை கவிதை நாடகம், பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 1120, விலை 1100ரூ. படைப்பாற்றலும் விமர்சனக் கூர்மையும் ஒருங்கே பெற்றவர் தொ.மு.சி. ரகுநாதன். முதுபெரும் எழுத்தாளரான தொ.மு.சி. பொதுவுடமைக் கருத்துக்களை எந்த சமரசமும் செய்யாமல் விதைத்த புரட்சியாளர். புதுமைப்பித்தனை இனம் கண்டவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என பரந்துபட்ட இலக்கிய ஆளுமையாக ஆட்சி செய்தவர். அந்த வகையில் அவரது 100 கட்டுரைகள், 2 நாடகங்கள், 56க்கும் மேற்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலை 320ரூ. தமிழ் இதழியல் உலகில், பொது அறிவு களஞ்சியமாக வெளிவந்தது, ‘கல்கண்டு’ வார இதழ். அந்த இதழ் மலர துவங்கிய காலத்தில் இருந்தே, தமிழ்வாணனின், ‘என்னை கேளுங்கள்’ என்ற கேள்வி – பதில் பகுதி துவங்கியது. அப்பகுதி, தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், நகைச்சுவை, பொது என, மூன்று பிரிவுகளில், கேள்வி – பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘காமராஜருக்கு, சொந்த ஊரான விருதுநகரில், அவருக்கு மதிப்பு உண்டா’ என்ற கேள்விக்கு, ‘ஆப்பிள் பழம், காய்த்து […]

Read more

வினாடிக்கு 24 பொய்கள்

வினாடிக்கு 24 பொய்கள், இயக்குனர் மிஷ்கின், எஸ். தினேஷ், பேசாமொழி வெளியீடு, பக். 102, விலை 100ரூ. சினிமா பார்த்து சினிமாவை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆனால், அது சார்ந்த புத்தகங்களை படித்து தான், சினிமாவை புரிந்து கொள்ள முடியும். சினிமா என்பது, இயக்குனரின் ஒரு பார்வை மட்டுமே. புத்தகங்கள் தான், சினிமா சார்ந்த இரண்டாயிரம் பார்வைகளை கொடுக்க வல்லது’ என்பது, எஸ்.தினேஷின் ஒரு கேள்விக்கு, மிஷ்கின் அளித்த பதிலின், ஒரு பகுதியாக வருகிறது. இவ்வாறு, சினிமா பற்றிய மிஷ்கினின் பார்வையை வாசகர் முன் […]

Read more

கந்தர்வன்

கந்தர்வன், ஜன நேசன், சாகித்திய அகாதெமி, பக்.112, விலை 50ரூ. எழுத்தாளர் கந்தர்வனின் இயற்பெயர் க. நாகலிங்கம் என்பதாகும். வானம் பார்த்த வறண்ட பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் கிராமத்தில் பிறந்தவர் கந்தர்வன். 60 ஆண்டு காலமே வாழ்ந்த எழுத்தாளர் கந்தவர்வன் எழுதிய, 30 ஆண்டுகளில், 62 கதைகள், 100கவிதைகள் மற்றும் நாடகம், கட்டுரை, நூல் மதிப்புரைகள் எழுதி இருக்கிறார். கந்தர்வனின் கடிதங்களும், சிறப்புத் தன்மை வாய்ந்தவை. சி.ராஜநாராயணன், தி.க.சி., வல்லிக்கண்ணன், செயப்பிரகாசம் முதல், இன்று சிறந்த படைப்பாளிகளாகக் கருதப்படும் வண்ணதாசன் உட்பட எண்ணற்ற […]

Read more

ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின் உரைக்கோவை

ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின் உரைக்கோவை, தொகுப்பாசிரியர் க.ஹரி தியாகராசன், வானதிபதிப்பகம், பக்.296, விலை ரூ.200. பண்பாட்டு நகரமாம் மதுரையில் கல்விச் சேவையுடன் தமிழ் தொண்டாற்றிய கருமுத்து தியாகராசரின் சொற்பொழிவுகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தியாகராசர் வெவ்வேறு விழாக்களில் ஆற்றிய உரைகளை கல்வி, இலக்கியம், ஆலை, மாநாடுகள், சங்கங்கள், பொது நிகழ்வுகள், வானொலி மற்றும் மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோருக்கு அவர் எழுதிய கடிதங்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 37 கட்டுரைகளாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. தேவகோட்டை தமிழிசைப் பள்ளியில் பேசிய தியாகராசர், இசை என்றால் என்ன? அதன் வளர்ச்சி, […]

Read more

அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்

அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும், கவி. வளநாடன், இருவாட்சி பதிப்பகம், பக். 110, விலை 90ரூ. ‘பேஸ்புக்’ என்ற சமூக வளைதளத்தில் தான் பதிவு செய்தவற்றை, புத்தகமாக வெளியிட்டுள்ளார். நீண்ட நெடிய கட்டுரைகள் இதில் இடம் பெறவில்லை. இந்த நூல் மூலம், முகம் தெரியாத, மண்ணின் மைந்தர்கள் நமக்கு அறிமுகம் ஆகின்றனர். பேச்சு மொழியில் இடம் பெற்றிருக்கும் துணுக்குகள் ரசிக்க வைக்கும். நன்றி: தினமலர், 8/1/2017.

Read more
1 18 19 20 21 22 63