திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம்

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் தெளிபொருள் விளக்கம், கருத்துரை குறிப்புரை கோ. வடிவேலு செட்டியார், தொகுதி 1, பக். 872, தொகுதி 2, பக். 888, இரண்டு தொகுதிகளும் விலை ரூ 1400. பல்கலை வித்தகரான கோ.வடிவேலு செட்டியார் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக வாழ்ந்தவர். இலக்கியம், இலக்கணம், சித்தாந்தம், வேதாந்தம் முதலியவற்றில் கரைகண்ட வித்தகர். இவர், திருக்குறள் பரிமேலழகர் உரைக்குச் செய்துள்ள தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் அடங்கிய நூல், பல்லாண்டுகளாகத் தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்டும், பின்பற்றப்பட்டும், பாராட்டப்பட்டும் வந்த பெருமைக்குரியது. இந்நூலில் திருக்குறளின் […]

Read more

என் பெயர் நம்பிக்கை

என் பெயர் நம்பிக்கை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக், 120, விலை 80ரூ. நூலாசிரியர் தான் சந்தித்த மனிதர்களையும் அவர்கள் தந்த அனுபவங்களையும் பாடங்களையும் நம்பிக்கை தரும் வகையில் முகநூலில் எழுதி வந்ததன் தொகுப்பு இந்நூல். நம்பிக்கையான அனுபவங்களும் சம்பவங்களும் படிக்கப் படிக்க ஆர்வம். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

மேதைகளின் குரல்கள்

மேதைகளின் குரல்கள், தமிழில் ஜா. தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 170ரூ. உலகின் சிறந்த திரைப்பட இயக்குனர்கள் 20 பேரின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்ட நூல். அன்பையும், அறத்திணையும் தங்கள் காட்சிகளின் பேசுபொருளாக இந்த இயக்குனர்கள் கையாள்கிறார்கள். இவர்கள் கட்டுப்பாடில்லாத கனவு காண்பவர்களாகவும் இருப்பதுடன், சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும், தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துவது இந்த நூலின் வெளிப்பாடாகும். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- நலம் தரும் நாட்டு மருந்துகள், டாக்டர் கலைமதி, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. ஒவ்வொரு நோய்க்கும் என்ன மருந்து […]

Read more

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள்

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள், சிவம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 30ரூ. திருப்புல்லாணி ராமர், மதுராந்தகம் ராமர், கடையம் ராமசாமி கோவில் மற்றும் தமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர் கோவில் உள்ளிட்ட 23 கோவில்களின் சிறப்புகள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —-   தெருவென்று எதனைச் சொல்வீர், தஞ்சாவூர்க் கவிராயர், காலச்சுவடு பதிப்பகம். விலை 180ரூ. மனிதர்களுக்குச் சம்பவங்கள் நேரலாம். அவற்றை நினைவுகூரவும் செய்யலாம், அதனை நூலாசிரியர் இலக்கியமாகப் படைத்து வெற்றி கண்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

பாரதியும் ஆங்கிலமும்

பாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பூங்கொடி பதிப்பகம், விலை 30ரூ. சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் எழுதிய நூல்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. “பாரதியும், ஆங்கிலமும்” என்ற தலைப்பில் ம.பொ.சி., எழுதிய நூலில், பாரதியார் கவிஞர் மட்டுமல்ல, பல ஆற்றல்கள் படைத்தவர் என்பதை விளக்குகிறார். இந்நூல் விலை 30ரூ. “மொழிச் சிக்கலும், மாநில சுயாட்சியும்” என்ற நூலில் மாநில சுயாட்சியின் அவசியத்தை வலிமை மிக்க சொற்களால் வலியுறுத்தி உள்ளார். நூல் விலை 35ரூ. சுதந்திரப் போராட்டத்தின்போது, பங்கிம் சந்திரரால் இயற்றப்பட்ட […]

Read more

தந்தை பெரியாரின் 100 அறிவுரை

தந்தை பெரியாரின் 100 அறிவுரை, தொகுப்பு கவிஞர் கலி. பூங்குன்றன்,பெரியார் சுய மரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, விலை 15ரூ, விலை 10ரூ. தமிழ்ச் சமுதாயத்துக்கு தந்தை பெரியார் வழங்கிய அறிவுரைகள் ஏராளம், ஏராளம். அவற்றில் 100 அறிவுரைகளை தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் கலி. பூங்குன்றன். உணவு பற்றாக்குறை தீர, வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழிய, கலவரங்களைக் களைய, வகுப்பு வாதம் ஒழிய, ஒழுக்கம் வளர… இப்படி பல பிரச்சினைகளுக்கு தீர்வு கூறுகிறார் பெரியார். சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். விலை 15ரூ. “பெரியார் ஒரு […]

Read more

பெரியார் கணினி

பெரியார் கணினி, புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 650ரூ. பகுத்தறிவு தந்தை என்றும், பகுத்தறிவு பகலவன் என்றும் போற்றப்பட்டவர் தந்தை பெரியார். அவர் உதிர்த்த ஐயாயிரம் பொன் மொழிகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அரசியல், அறிவியல், கடவுள், கல்வி, சமூக சீர்திருத்தம், சாதி, சுயமரியாதை, தமிழர் நாத்திகம், நரகம் மோட்சம், மதம், பகுத்தறிவு, புராண இதிகாசங்கள், பொதுவுடைமை, மூடநம்பிக்கை என்பன போன்ற தலைப்புகளில் பெரியார் மொழிந்த மொழிகளை புலவர் நன்னன் இந்த நூலில் அழகுற தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நூல் குறித்து […]

Read more

கலைவாணி டீச்சர்

கலைவாணி டீச்சர், திருவாரூர் பாபு, சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. பல்வேறு பத்திரிகைகளில் வெளியான கலைவாணி டீச்சர் உள்ளிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலை எழுதியுள்ள திருவாரூர் பாபு, மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதை ஒவ்வொரு கதையைப் படித்து முடித்தபோதும் உணர முடிகிறது. கதாபாத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன. நெடுநேரம் அந்த கதாபாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டகலாமல் உயிர் பெற்று உலா வருகின்றன. புத்தக வடிவமைப்பு பிரமாதம். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —- சென்னை வானொலிப் பொழிவுகள், ஏகம் பதிப்பகம், விலை 30ரூ. […]

Read more

கம்பரின் மறுபக்கம்

கம்பரின் மறுபக்கம், புலவர் ஆ. பழனி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. ராவணன் சிவபக்தன் அல்ல, சிலப்பதிகாரம் சமண நூல் அல்ல. வஞ்சி என்படுவது கரூர் அல்ல என்பன போன்ற பல புதிய மாற்றுக் கருத்துகளை சான்றுகளுடன் விளக்குகிறார், நூலாசிரியர் புலவர் ஆ. பழனி. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —-   ஒரு வரிச் செய்திகள், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, ஸ்ரீஅலமு புத்தகநிலையம், விலை 70ரூ. போட்டித் தேர்வுக்கு பயன்படும் செய்திகளை ஒரு வரிச் செய்திகளாக தொகுத்தளித்துள்ளார் கள்ளிப்பட்டி சு. […]

Read more

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர்

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர், கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 350ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நாடறிந்த தலைவர். நல்ல பேச்சாளர். சீரிய சிந்தனையாளர். டாக்டர் பட்டம் பெற்றவர். சிறந்த கல்வியாளர். அவரைத் தம் கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து மாணவர்களிடையே உரை நிகழ்த்தச் செய்ய அனைவரும் விரும்புகின்றனர். அவர்கள் அழைப்பை ஏற்று பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கின்றார். 25 கல்லூரிகளில் நிகழ்த்திய உரை இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. கல்லூரி அரங்கங்களில் மாணவர்கள் வினாதொடுப்பதும், கி.வீரமணி விடை நல்குவதும் அறிவார்ந்த […]

Read more
1 20 21 22 23 24 63