பாரதிதாசன் காப்பியங்கள்

பாரதிதாசன் காப்பியங்கள், பேரா.சு. சண்முக சுந்தரம், காவ்யா, பக். 376, விலை 1300ரூ. புரட்சிக்கவி பாரதிதாசன் எழுதிய காப்பியங்களின் மொத்தத் தொகுப்பு இது. இதில் எதிர்பாராத முத்தம், பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, உள்ளிட்ட 9 பெருங்காப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. 1930ல் அவர் முதன் முதலாக எழுதிய ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி’ உள்ளிட்ட ஆறு சிறுகாப்பியங்களும் அடங்கும். காப்பியங்கள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டில் பாரதிதாசன் விரும்பிய சமுதாய மாற்றங்களைப் பாடுபொருளாகக் கொண்டவை. சமுதாய மாற்றத்திற்கு உறுதுணையாக நிற்பவை. நன்றி: குமுதம், 17/8/2016.

Read more

கடைசி நமஸ்காரம்

கடைசி நமஸ்காரம், தமிழில் புவனா நடராஜன், சாகித்திய அகாடமி, விலை 415ரூ. 1972-ம் ஆண்டு வங்க மொழிக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல். கொஞ்சம் வேதனை, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் தேடுதல், கொஞ்சம் உணர்ந்து கொள்ளுதல், கொஞ்சம் புரிந்துகொள்ளுதல் இவையும் வாழ்க்கைதானே. அவற்றை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் வங்க எழுத்தாளர் சந்தோஷ்குமார்கோஷ். இதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் புவனா நடராஜன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- சர்க்கரை நோய், தொகுப்பாசிரியர் மரு.கு. கண்ணன், பாப்பா பதிப்பகம், விலை 145ரூ. சர்க்கரை நோய் […]

Read more

உச்சாடனம்

உச்சாடனம், கா.சு. வேலாயுதன், கதை வட்டம் வெளியீடு, விலை 150ரூ. மந்திரங்களை உச்சரிக்கும் கலையின் மறுபெயரே ‘உச்சாடனம்’. வித்தியாசமான தலைப்பை கொண்ட இந்த நூலை பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன் எழுதி உள்ளார். பத்திரிகை, படைப்பிலக்கியம், அரசியல், குடும்பம் என அனைத்திலும் சாதனை பல புரிந்து வயதிலும் நூற்றாண்டை நோக்கி நடைபோடுபவர் முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதி. இவருடைய நிருபர் சந்திப்பு கூட்டம் ஒன்றில் நூலாசிரியர் கேட்ட கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில் சுவாரஸ்யமாக இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Read more

காக்கியின் டைரி

காக்கியின் டைரி, சிங்கம்பட்டி பெ.மாடசாமி, நேசம் பதிப்பகம், விலை 200ரூ. ‘தேடுதலாக’ தேடிய தகவல்களின் தொகுப்பு நூல். அதில் விசித்திர வழக்கு, விநோத மனிதர், அரிய நிகழ்வு, அபூர்வ சம்பவம், வேடிக்கை,,, விநோதமென… – ‘இப்படியா? இருக்குமா? நடக்குமா? நடந்ததா?’ என்கிற கேள்விக்குறிகள் பல ஆச்சரியக்குறியாய் எழ, சிக்கின சிக்கல் வழக்குகள் சில. அவைகளை அருமையாக பரபரப்பூட்டும் செய்தியாக பதிவு செய்திருக்கிறார் உதவி ஆணையராக ஓய்வு பெற்ற சிங்கம்பட்டி பெ. மாடசாமி. அன்றாடச் செய்திகளில், இப்படியெல்லாம் ஏமாற்றுவார்களா? இப்படியும் ஏமாறுவார்களா? மற்றும் நினைத்துப் பார்க்க […]

Read more

குஷ்பு பக்கம்

குஷ்பு பக்கம், குஷ்பு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 120ரூ. சாமானியர்களுக்குள் எழும் உணர்ச்சிகளை எல்லாம், அவர்களின் பக்கம் நின்று அழுத்தமாய் சொல்லியிருக்கிறது, இந்த நூல். ‘இவரின் துணிச்சலும், போர்க்குணமும் தான், இவரை நக்கீரன் ஏந்தியதற்கு காரணம்!’ எனும், முதற்பக்கத்தோடு துவங்குகிறது இந்த நூல்; ஆம், நக்கீரன் இதழில், குஷ்பு எழுதிய தொடர் தான், இந்த நூல். 20 தலைப்புகள் இதில் உள்ளன.நிறவெறியின் வால் பிடித்தே பயணிக்கும் ஒரு கூட்டத்தையும், படையெடுத்து நிற்கும் உலக பிரச்னைகள் அனைத்தையும் எளிதாய் கடந்துவிட்டு, ‘நாங்கள் கலாசார […]

Read more

கலாம் கனவு நாயகன்

கலாம் கனவு நாயகன், ரமேஷ் வைத்யா, விகடன் பிரசுரம், பக். 159, விலை 185ரூ. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக, அவரே சொல்வதாக, ரமேஷ் வைத்யா எழுத்தில், காமிக்ஸாக 60 பக்கங்களில் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் ஆற்றிய உரைகளின் பகுதிகள், அவர் அளித்த பேட்டிகள், சுட்டிக் குழந்தைகளின், பொதுமக்களின் கேள்விகளுக்குச் சொன்ன பதில்கள், அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின்போது வந்திருந்தவர்களிடையே அவர் ஏற்படுத்திய உத்வேகமான உணர்வுகள், நம் நாட்டின் மீது அவர் கொண்டிருந்த பெருமிதமான கருத்துகள் என்று பல பரிமாணங்களிலும் படைப்புகளை […]

Read more

உறக்கத்திலே வருவதல்ல கனவு

உறக்கத்திலே வருவதல்ல கனவு, ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், விகடன் பிரசுரம், பக். 263, விலை 130ரூ. நான் விளக்காக இருப்பேன்! முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தமிழகத்தின் பல்வேறு பள்ளி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்பு தான் இந்த நூல். வாழ்க்கையில் வெற்றிபெற நான்கு விஷயங்கள் முக்கியம் என்கிறார் கலாம் 1. வாழ்வில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும்; சிறிய லட்சியம் குற்றமாகும் 2. அறிவைத் தேடித்தேடிப் பெறல் வேண்டும் 3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் 4. விடா முயற்சி […]

Read more

அம்பேத்கரின் அரிய கருத்துரைகள்

அம்பேத்கரின் அரிய கருத்துரைகள், அருள்மொழிப் பிரசுரம், விலை 60ரூ. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை டாக்டர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். அவருடைய அரிய கருத்துக்களை தொகுத்துள்ளார் அச்சுதமங்கலம் சச்சிதானந்தம். சாதிப்பாகுபாடு, கல்வி, பொருளாதாரம், நாடு, மதம் குறித்து அம்பேத்கர் தெரிவித்த 282 கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

Read more

கலாம் அடிச்சுவட்டில்,

கலாம் அடிச்சுவட்டில், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், விலை 150ரூ. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன், நூலாசிரியர் சந்திப்புகள், கடிதத் தொடர்புகள், வாழ்க்கை பற்றிய புதுவிபரங்கள், சுய அனுபவம் சார்ந்த தகவல்களை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயன் தரும் வகையில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/6/2016.   —- விதவை என்பதால் வீழ்வேன் என்று நினைத்தாயோ?, வி. ஷீலாமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. தலைப்பிலேயே புரட்சிரமான கருத்து ஒலிக்கிறது. இந்த புத்தகத்தில் உள்ள 21 சிறுகதைகளும் நல்ல கருத்துக்களை வலியுறுத்துகின்றன. […]

Read more

கிராம ஊராட்சி நிர்வாகம்,

கிராம ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.344; ரூ.260. அரசின் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள், பணிகளைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள், நிதி ஒதுக்கீட்டு முறை ஆகியவை குறித்த விவரங்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கிராமப் பொதுமக்கள் தெரிந்து கொள்வது அவசியம். இது குறித்து இந்த நூல் அலசி ஆராய்கிறது. ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோரின் செயல்பாடுகள், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள், மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் எளிய நடையில் […]

Read more
1 22 23 24 25 26 63