கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை, ராஜம் முரளி, எழுத்தாக்கம் பிரேமா நாராயணன், விகடன் பிரசுரம், பக். 168, விலை 110ரூ. அழகைப் பராமரிப்பது என்றதுமே நமக்கு உடனே இந்த ஷாம்புவைப் பயன்படுத்துங்கள். இந்த சோப்பை உபயோகியுங்கள் என்பன போன்ற விளம்பரங்கள்தாம் நினைவுக்கு வரும். இதற்கு மாறாக, தலை முதல் பாதங்கள் வரை அழகுபடுத்த இந்நூலாசிரியர் சொல்லியிருக்கும் அழகு சாதனப் பொள்கள் எல்லாமே நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண, இயற்கைப் பொருள்கள்தாம். அந்த இயற்கை அழகு சாதனப் பொருள்களைத் […]

Read more

வரலாறு படைத்த வைர மங்கையர் (2 தொகுதிகள்)

வரலாறு படைத்த வைர மங்கையர் (2 தொகுதிகள்), பேராசிரியர் பானுமதி தருமராசன், புதுகைத் தென்றல், பக். 304, 208, விலை 200ரூ, 150ரூ. வரலாறு படைத்த இந்திய பெண்களின், வாழ்க்கை வரலாறு, இரண்டு நூல்களில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில், ஆங்கிலேயரை தோற்கடித்த முதல் பெண்ணான வேலு நாச்சியாரில் துவங்கி, ராமநாதபுர மாவட்டத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மணிமுத்தாறு அணைத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, தீக்குளிப்பு போராட்டம் வரை சென்ற ரமணி நல்லதம்பி எம்.எல்.ஏ., வரை மொத்தம் 38 பெண்களின் வரலாறு இரு பாகத்திலும் இடம்பெற்றுள்ளது. […]

Read more

சில பாதைகள் சில பயணங்கள்

சில பாதைகள் சில பயணங்கள், பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சமூகத்தாக்கத்தோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள, மதுவிலிருந்து மீள வழிகாட்டும் சாந்தி ரங்கநாதன், அமில வீச்சுக்கு ஆளான அர்ச்சனா குமாரி, பாலியல் தொழிலாளர் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சோம்லே மாம், தேவதாசி ஒழிப்பில் வெற்றிகண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமையல் புத்தகம் முதலில் எழுதிய மீனாட்சி அம்மாள், கர்நாடக சங்கீதக் கலைஞர் வீணை தனம்மாள், கம்யூனிஸ்ட் பார்வதி […]

Read more

நல்லது நடந்தால் நல்லது

நல்லது நடந்தால் நல்லது, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஏர்வாடி ராதாகிருஷ்ணன், சிறந்த கவிஞர் என்பதை அனைவரும் அறிவர். உரைநடையிலும் அவருக்கு மிக்க ஆற்றல் உண்டு என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இதில் 23 கட்டுரைகள் உள்ளன. எல்லாமே கருத்தாழம் மிக்க கட்டுரைகள். தமிழால் முடியும் என்ற கட்டுரையில் கீழ்க்கண்ட தகவல்களைக் கூறுகிறார். உலக மொழிகள் 2800ல் செம்மொழி என்கிற சிகரச் சிறப்பைப் பெற்ற மொழிகள் 6 மட்டுமே. அந்த ஆறில் ஒன்று தமிழ் என்பது தமிழுக்குப் பெருமை. சில […]

Read more

மீண்டும் ஒரு மழைக்காலத்தில்

மீண்டும் ஒரு மழைக்காலத்தில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 210ரூ. கவிஞர் தியாரூ எழுதிய 21 சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொறு சிறுகதையையும் சமுதாயக் கண்ணோட்டத்துடனும், ஆழ்ந்த மனித நேயம் வெளிப்படும் விதமாகவும் எழுதியுள்ளார். சிறுகதை வளர்ச்சிக்கு ஆசிரியரின் அழகிய பங்களிப்பு இந்த நூல் என்றால் அது மிகையல்ல. எழுத்து என்பது சமூக நோக்கிற்கான ஓர் உபகரணம்-கருவி என்பதே உண்மை என்று அணிந்துரையில் கவுதம நீலாம்பரன் கூறி இருப்பதை உண்மை ஆக்கியருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   […]

Read more

பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 288, விலை 170ரூ.   To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024596.html இன்றும்கூட ஆணாதிக்கம் இந்த சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. ஆணாதிக்கத்தின் அடிமைகளாய் கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் பெண்கள் கட்டுண்டு கிடக்கின்றனர் என்பதை நூலாசிரியர் இந்நூலில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லத் துடிக்கும் பெண்கள், அதற்கான வாய்ப்புகளைத் தேடி கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். ஆனால் பெண் என்பதால் அவர்கள் எத்தகைய துன்பங்களை […]

Read more

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், வெ. தமிழழகன், விவேக் எண்டர்பிரைசஸ், பக். 176, விலை 125ரூ. படித்து பணியில் உள்ள பெண்களுக்குக்கூட சட்டக் கண்ணோட்டம் இல்லாத இந்த நாளில், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய நூல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கான வாழ்வுரிமைச் சட்டங்கள், பணிப் பாதுகாப்புச் சட்டங்கள், சொத்துரிமைச் சட்டங்கள், பாலியல் வன்முறைச் சட்டங்கள், தலித் மகளிருக்கான சட்டங்கள் என, ஏராளமாக வந்துள்ளன. இந்த நூலில் இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் உள்ளிட்ட, 19 தலைப்புகளில் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப வன்முறைச் சட்டம் […]

Read more

இலட்சியப் பெண்டிர்

இலட்சியப் பெண்டிர், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 125ரூ. சங்க காலம் முதல் இன்று வரை இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய பெண்கள் ஏராளம். அது பற்றிய அரிய செய்திகள் பலவற்றை இந்த நூலில் கூறுகிறார் தாயம்மாள் அறவாணன். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்கள்தான். அதிலும் பெண்கள் 3 சதவீதம் பேர்களே கல்வி கற்றவர்கள். பெண்கள், பள்ளிக்கூடத்துக்கு சென்று படிக்கும் வழக்கம் வெள்ளையர்களின் வருகைக்குப்பின்னரே ஏற்பட்டது. கி.பி. 1657ல் ஹென்றிக் பாதிரியார், தூத்துக்குடிக்கு அருகில் உள்ள புன்னைக் […]

Read more

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே, வி. நடராஜன், சாந்தா பப்ளிஷிர்ஸ், சென்னை, பக். 336, விலை 200ரூ. குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை எப்படி வளர்க்க வேண்டும்? என்று வழிகாட்டும் நூல். குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்கு அவர்களுக்கு சிறந்த சூழ்நிலை அமைய வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் பெற்றோரே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வளரும் காலத்தில் தன்னுடன் பிறந்தவர்களுடன் குழந்தைகள் சண்டை போடுவார்கள். சாப்பிட மாட்டார்கள். எந்தப் பொருளையும் உடைத்துவிடுவார்கள். சில குழந்தைகள் பிற குழந்தைகளுடன் நன்றாகப் பழக மாட்டார்கள். பெரியவர்களின் கவனத்தைத் […]

Read more

பிஸினஸ் மகாராணிகள்

பிஸினஸ் மகாராணிகள், சு. கவிதை, குமுதம் புது(த்)தகம், பக். 136, விலை 95ரூ. தாங்கள் வாழும் சூழ்நிலையை மீறி, ஜெயிக்கும் பெண்கள் பற்றிய சாதனைத் தொகுப்பு இந்நூல். குமுதம் சிநேகிதியில் தொடராக வந்தபோது பல பெண்களின் வாழ்வில் சாதிக்க தூண்டுகோலாகவும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருந்தது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் எல்லாம் பெண்களும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய கிரண் மஜுர்தார்ஷா வினிதாபாலி, லீனாநாயர், இந்திராநூயி உள்ளிட்ட பல பிஸினஸ் மகாராணிகளின் அனுபவங்கள் தன்னம்பிக்கை ஊட்டுவன. அவர்கள் தரும் சக்ஸஸ் டிப்ஸகள், சவால்களை […]

Read more
1 7 8 9 10 11 14