ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி, டாக்டர் கீதா அர்ஜுன், ஹேமா நரசிம்மன், திருமகள் நிலையம், பக். 336, விலை 350ரூ. கர்ப்பத்தை ஒரு தாய் உணர்வது எப்படி? மகப்பேறு அடைவது, சாதாரண விஷயம் அல்ல. இப்போதெல்லாம், காற்று மாசு, மன அழுத்தம் உட்பட பல காரணங்களால், கர்ப்பம் தரிப்பதே தாமதமாகிறது என்று கூறப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி, கர்ப்பம் தரித்தால், அந்த சிசுவை வயிற்றில் பத்திரமாகப் பாதுகாத்து வெளிக்கொணர்வது, மறு ஜென்மம் எடுப்பதற்கு ஒப்பாகிவிடுகிறது. இதனால் கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண், பல கட்டப் போராட்டத்திற்கும், […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், நாகமணி மருத்துவமனை, சென்னை, விலை 1000ரூ. 1217 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான மருத்துவ நூல் இது. நூலாசிரியர் டாக்டர் ஞானசவுந்தரி மகப்பேறு மருத்துவத்தில் நீண்ட அனுபவம் உடையவர் என்பதுடன் 30 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்தவர். திருமணத்தின்போதும், கர்பிணியாக இருக்கும்போதும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை தெளிவாகச் சொல்கிறார். சுகப்பிரசவத்துக்கான யோசனைகளைக் கூறுகிறார். நுட்பமான விஷயங்களை படத்துடன் விளக்குகிறார். இது மருத்துவத்துறையில் முக்கியமான புத்தகம். புத்தகத்தின் வடிவமைப்பு, மேல்நாட்டுப் புத்தகங்களுக்கு சவால் விடும் விதத்தில் சர்வதேசத் தரத்துடன் அமைந்துள்ளது. […]

Read more

தமிழில் சிறுபத்திரிகைகள்

தமிழில் சிறுபத்திரிகைகள், அர்ஜித் பதிப்பகம், நாகர்கோவில், விலை 190ரூ. சிறுபத்திரிகைகள்தான் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடுகின்றன என்பது, இலக்கிய விமர்சகர்களின் பொதுவான கருத்து. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, பிச்சமூர்த்தி முதலான இலக்கிய முன்னோடிகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி போன்றவை சிறுபத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். சிறு பத்திரிகைகளின் இலக்கியப்பணி குறித்து, முதுபெரும் எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வல்லிக்கண்ணன் அந்தக் காலத்து சிறு பத்திரிகைகளுடனும், சிறு பத்திரிகைகளில் எழுதி வந்த பெரிய எழுத்தாளர்களுடனும் நேரடி தொடர்பு கொண்டிருந்தவர். எனவே, அவர் எழுதியுள்ள […]

Read more

தாய்மை

தாய்மை, பத்மா பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-368-1.html பேறு கால பராமரிப்பும், குழந்தை வளர்ப்பும் குறித்து டாக்டரும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான வெ. குழந்தைவேலு எழுதிய நூல். கருவுற்ற காலம் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கருவுற்ற நாளில் இருந்து அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிடக்கூடாது என்பன போன்ற நலம் பயக்கும் அறிவுரைகள். இதைத் தொடர்ந்து குழந்தையை […]

Read more

முதல்பெண்

முதல்பெண், பேரா. சோ. மோகனா, புக்ஸ் பார் சில்ட்ரன், சென்னை, விலை 50ரூ. முன்னோடிப் பெண்களின் வரலாறு பெண் இனத்தின் வரலாறு வெளிப்படும்போதுதான், பெண்மீதான இன்றைய மதிப்பீடு மாறும். இதன் ஒரு முயற்சியாகப் பேராசிரியை சோ. மோகனா எழுதிய முதல்பெண் என்ற நூல். முதல் பெண் அறிவியலாளர், கணிதவியலாளர், விண்வெளி விஞ்ஞானி, அறுவை சிகிச்சை மருத்துவர், இலக்கியவாதி, விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆகியோரை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அகழ்வாய்வின் மூலமாகக் கிரேக்கத்திலும், எகிப்திலும், சைப்ரஸ் தீவிலும் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை ஆதாரமாகக் கொண்டு இந்த நூலை […]

Read more

சட்டம் உன் கையில்

சட்டம் உன் கையில், ஆதிலட்சுமி லோகமூர்த்தி, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்குள்ளேயே இருக்கும்போது, அது பிரம்மாண்டமாகத்தான் தெரியும். அதை விட்டு தள்ளி நிற்கும்போதுதான் பிரச்சினையின் உண்மையான வீரியம் பிடிபடும். இப்படி பெண்கள் தங்களைச் சூழ்ந்திருக்கிற பிரச்சினைகளில் இருந்து தள்ளி நின்று தீர்வு காண வழிகாட்டுகிறது வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி எழுதியிருக்கும் சட்டம் உன் கையில் புத்தகம். மூடப்பட்டிருக்கும் வீட்டின் ஜன்னல்கள் அடைபட்டு இருக்கும்போது, விசாலமாகத் திறக்கிற கதவைப்போலவே, பெண்கள் தங்கள் குடும்பத்திலும், அலுவலகத்திலும் சந்திக்க நேர்கிற பிரச்சினைகளுக்கு, […]

Read more

காதல் நதி

காதல் நதி, லோகம் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. தலைப்புக்கு ஏற்ப, காதல் கவிதைகள் நிறைந்த புத்தகம். மாதிரிக்கு ஒன்று, இளமையிற் கல் என்பதை உன்னைக் கண்டதும் இளமையில் காதல் எனத் திருத்திக் கெண்டேன். படங்கள், அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.   —- நூற்றாண்டு நாயகர் பேரறிஞர் அண்ணா, எம்.எஸ்.தியாகராஜன், தமிழ்ச்சோலை பதிப்பகம், சென்னை, விலை 215ரூ. தனது அறிவாற்றலாலும் அயராது நூல் வாசிப்பாலும், அரசியல் சாணக்கியத்தனத்தாலும், சட்டசபை, பாராளுமன்றத்தில் நுட்பமான உரைகளால், சர்வ கட்சித் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்று […]

Read more

நீங்களும் சிகரம் தொடலாம்

நீங்களும் சிகரம் தொடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், 9, ஜி. ஏ. ரோடு, சென்னை 21, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-9.html அனைத்து மனிதனும் தலைசிறந்த மனிதனாக உருவாக வேண்டும். அதற்கு தன்னம்பிக்கையே ஆதாரம் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில், உழைப்பு, வாய்ப்பு, நிர்வாகத்திறன், மனித நேயம் உட்பட 35 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வீழ்வதில் தவறில்லை. வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. மண்ணில் விழுந்த விதை தண்ணீர் கிடைத்ததும் முளைப்பதுபோல, உங்கள் […]

Read more

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15, சாய்சூர்யா, 204/43, டி7, பார்சன் குருபிரசாத் ரெசிடென்சியல் காம்ப்ளக்ஸ், டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18, விலை 450ரூ. இது புதுவிதமான நாவல். 1947 ஆண்டு 15ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்குமுன், 1922 ஆகஸ்ட் 15ந்தேதி பிறந்த கல்யாணம், பின்னர் மகாத்மா காந்தியின் காரியதரிசியாக இருந்திருக்கிறார். 2000வது ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி பிறந்த சத்யா இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம். பொதுவாக சரித்திரக் கதை என்றால், சரித்திரம் குறைவாகவும், கற்பனை அதிகமாகவும் இருக்கும். இதில் கற்பனை குறைவாகவும், […]

Read more

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள், ராகுல சாங்கிருத்யாயன், தமிழில் ர. சௌரிராஜன், அலைகள் வெளியீட்டகம், 25, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 85ரூ. ஒரு பெண்ணை நன்றாக வைத்துக்கொள்வது என்றால் நம் ஊரில் சொல்லக்கூடிய அதிகபட்ச வார்த்தை ராணி மாதிரி வச்சுக்கிறேன் என்பதுதான். ராணிகளை எப்படி வைத்திருந்தார்கள் என்று தெரிந்துகொண்டால் ஏன் அப்படி சொன்னார்கள் என்பது புரியும். புகழ்பெற்ற வரலாற்றுத் தத்துவ மேதையும் ஊர்சுற்றியுமான ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய இந்த நூல் ராஜஸ்தானத்து அந்தப்புரங்களில் வாழ்ந்த ராணிகளின் கதையைப் பேசுகிறது. அந்த […]

Read more
1 9 10 11 12 13 14