தமிழ்ச் சான்றோர்கள்

தமிழ்ச் சான்றோர்கள், ஆர். குழந்தை அருள், செந்தமிழ் பதிப்பகம், பக். 176, விலை 160ரூ. உலக மனித இனத்திற்கே முதல் இனம் தமிழ் இனம். உலக மொழிகளுக்கெல்லாம் முதல் தொன்மையான மொழி நம் தமிழ் மொழி என பெருமைப்பட்டுக் கொண்டாலும், அந்த மொழி வளர்ச்சிக்கு தற்போது கொடுத்துக் கொண்டிருக்கும் வலிமை குறைவே என்றால் அது மிகையாகாது. தமிழ்ச் சான்றோர்கள் எனும் இந்த நுாலில், 21 தமிழ் அறிஞர்களின் வரலாறும், தமிழ் வளர்க்க அவர்கள் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மகா வித்வான் […]

Read more

தாம்பிரவன்னி மகத்துவம்

தாம்பிரவன்னி மகத்துவம், புலவர் வே.மகாதேவன், இந்து கலாசாரம் மற்றம் இந்தியவியல் ஆய்வு மையம், பக். 121. தாமிரபரணி வரலாற்றை விளக்கும் நுால்களில் இடம்பெறாத சில சிறப்புச் செய்திகள், இந்நுாலாசிரியரால் சொல்லப்பட்டுள்ளது பாராட்டிற்குரியவை. கன்னடியன் கால்வாய் பற்றி கூறியுள்ள வரலாற்று செய்தி (பக்., 50 – 55) முக்கியத்துவம் பெறுகிறது. தோழி தாமிரபரணி என்பதையும், அகத்திய முனிவர் விமானத்தில் பயணித்ததையும், சகலகோடித் தீர்த்தம் தாமிரபரணி என்பதையும் (பக்., 69), இந்த நதியின் மகத்துவத்தை பட்டியலிடுகிறது இந்நுால் நன்றி: தினமலர், 7/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

சிவாஜி ஆளுமை பாகம் 3

சிவாஜி ஆளுமை, பாகம் 3, மு.ஞா.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ. நடிப்புக்காகவே பிறந்த சிவாஜியின் நாடகம், திரையுலக வாழ்க்கை மட்டுமல்ல, அரசியல் பணிகள், தலைவர்களுடன் நட்பு என பல பரிணாமங்களையும் 348 பக்கங்களில் ஆழமாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல். சிவாஜி பற்றி நாம் அறியாத பல தகவல்களை தேடிக்கண்டுபிடித்து அருமையாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். எம்.ஜி.ஆர். படத்துக்காக தி.மு.க.அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளை அடைத்து போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி என்பது அனைவருக்கும் தெரியும். […]

Read more

தமிழக வரலாற்றில் பெரம்பலூர்

தமிழக வரலாற்றில் பெரம்பலூர்,  ஜெயபால் இரத்தினம், விச்சி பதிப்பகம், பக்.572, விலை ரூ.700.  255, பெரம்பலூர் வட்டாரத்தின் வரலாற்றைச் சொல்லும் இந்நூலில், முதலில் பெரம்பலூர் பகுதியின் நிலவியலமைப்பு விவரிக்கப்படுகிறது. பழைய கற்காலத்திலேயே பெரம்பலூர் வட்டாரத்தில் மக்கள் பரவி வாழத் தொடங்கிவிட்டதையும், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்படைக் காலங்களில் ஊர்கள் உருவாகிவிட்டதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. சங்க காலத்தில் இவ்வட்டார நிலப்பரப்பில் விச்சி, கண்டீரம் மற்றும் பிடவூர் ஆகிய மூன்று குறுநில அரசுகள் அமைந்திருந்தன, எஞ்சியுள்ள பகுதிகள் மலையநாட்டின் ஒரு பகுதியாகவும், சோழ நாட்டின் ஒரு […]

Read more

உலகின் இருபெரும் போர்கள்

உலகின் இருபெரும் போர்கள், மதிமாறன், வேமன் பதிப்பகம், விலை 200ரூ. புத்தகத்தின் தலைப்பு, முதல் மற்றம் இரண்டாம் உலகப் போர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுவதாக இருந்தாலும், இந்தப்புத்தகம் உலக வரலாறு, மனித இனத் தோற்றம், வரலாற்றில் இடம் பெற்ற வியட்நாம் போர், உள்ளிட்ட பல போர்கள், போர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் என்று பல விஷயங்களையும் அலசுகிறது. போர்கள் பற்றிய முழுவிவரங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாரதி உள்ளம்

பாரதி உள்ளம்,  வி.ச.வாசுதேவன், சந்தியா பதிப்பகம், பக். 144, விலை ரூ.135. தமிழின் மகாகவியான பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகளானாலும் அவரது படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் அவரது கவித்துவம் நிரம்பிய தூய உள்ளம். அவருடைய உள்ளத்தில் அன்பு, கடவுள் பக்தி, நகைச்சுவை உணர்வு, தாய்ப்பாசம் போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கியிருந்தன. அவற்றைப் பற்றி எழுதியுள்ளார் முதுபெரும் பாரதி அன்பரான வி.ச. வாசுதேவன். பாரதியாரைப் பற்றிய பல்வேறு தகவல்கள், அவரது குரு பரம்பரை, அவரது பழக்க வழக்கங்கள், நண்பர்கள் என்று பல விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறது […]

Read more

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு),  பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக்.458, விலை ரூ.300. தமிழ்மொழி, தமிழ் நூல்கள் எவ்வாறு வளர்ச்சியுற்றன; தமிழ் மொழியின் பழைமை, மாண்பு; முற்கால, இடைக்கால, பிற்கால நூல்கள், அவற்றை இயற்றிய ஆசிரியர்கள்; இக்காலப் புலவர்கள், அவர்களுடைய நூல்கள்; தமிழ் நாட்டின் தொன்மை, சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறை முதலியனவற்றை இலக்கிய வரலாற்றைக் கூறுவது போலக் கூறாமல், சுவையான செய்திகளையும், பாடல்களையும், மேற்கோள்களையும் இணைத்துக் கூறியிருப்பது, இந்நூலின் சிறப்பு. சங்க காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை […]

Read more

அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்.

அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்., நாஞ்சில் பி.சி. அன்பழகன், கண்மணி பதிப்பகம், விலை 250ரூ. திரைப்பட இயக்குநரும் அதிமுக பேச்சாளருமான பி.சி.அன்பழகனின் கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகளின் தொகுப்பு. சினிமா, ஆன்மிகம், வரலாறு என்ற கூட்டுக் கலவையில் நடப்பு அரசியலின் காரமும் நெடியும் கொஞ்சம் தூக்கலாகவே உண்டு. நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிவாஜியின் அரசியல் அத்தியாயம்

சிவாஜியின் அரசியல் அத்தியாயம், மு.ஞா.செ.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ. சிவாஜி ஆளுமை 3-வது பாகத்தில் சிவாஜியின் அரசியல் பிரவேசம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. மிகச் சிறந்த இந்திய நடிகரான சிவாஜிக்கு அரசியலில் நடிக்கத் தெரியாது என்பதை அவரது ஒவ்வொரு அரசியல் முடிவுகளும் எடுத்துக்காட்டுகின்றன. காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸை ஆதரித்தது தவறான முடிவு என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் பேசுகிறது. ‘ஏற்றுக்கொண்ட தலைமைக்கு சிவாஜி இறுதிவரை விசுவாசமாக இருந்தார். காங்கிரஸ் தன்னை மட்டம் தட்டியபோதெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல் அவமானங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தலைமைக்கு […]

Read more

பேதமறுத்த பிராமணன்

பேதமறுத்த பிராமணன், ஆச்சாரியர் பிரம்மதர்மதாசன்(எழிலரசு), வேங்கடாசலம் பிள்ளை நினைவு வெளியீடு,  பக்.360, விலை ரூ.200. இந்திய வரலாற்றில் மேற்கு வங்க மாநிலம் பல மகத்தான மனிதர்களை உருவாக்கியிருக்கிறது. சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், பக்கிம் சந்திரர் என்ற அந்த வரிசையில் மற்றுமொரு மகத்தான மனிதர் ராஜா ராம்மோகன் ராய். அவரது வாழ்க்கை வரலாற்றை முப்பத்தைந்து அத்தியாயங்களில் முழுமையாகப் பதிவு செய்கிறது இந்நூல். ராஜா ராம்மோகன் ராய் ஸதி எனப்படும் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க பாடுபட்டவர் என்பது உலகமறிந்ததுதான். ஆனால் அவரது சாதனை […]

Read more
1 25 26 27 28 29 104