மாணவரை ஆற்றுப்படுத்துதல் கையேடு

மாணவரை ஆற்றுப்படுத்துதல் கையேடு, ஜே.பிரான்சிஸ் சேவியர் நெல்சன், அனல் வெளியீடு, விலை 250ரூ. படிப்புத் தொடர்பாகவும், பாலியல் கொடுமை, போதைப் பழக்கம், அலைபாயும் மனம், ஆடம்பரத்தில் கவர்ச்சி போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவ சமுதாயம், அவற்றை வெற்றி கொள்வது எவ்வாறு என்ற அரிய யோசனைகள் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. இந்தத் துறைகளில் வல்லுனர்களாகத் திகழும் பயிற்சியாளர்கள் 20 வகுப்புகளில் தெரிவித்த கருத்துகள், மாணவர்கள் மனதில் எளிதில் பதியும் வண்ணம் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. பள்ளிக்கூடம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவிலான மாணவ, […]

Read more

கம்பன் : புதிய பார்வை

கம்பன் : புதிய பார்வை, அ.ச.ஞானசம்பந்தன், வைகுந்த் பதிப்பகம், விலை 345ரூ. முதுபெரும் தமிழ் அறிஞர் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் எழுதியதும், சாகித்திய அகாதமி பரிசு பெற்றதுமான இந்த நூலில் கம்பரின் புதிய பரிணாமத்தைக் காண முடிகிறது. புலனடக்கத்திற்குக் கம்பன் கொடுத்த முக்கியத்துவம் நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கடவுளர்களை இந்த உலகத்திற்குக் கொண்டுவந்து அவர்களை நாயகர்களாக ஆக்கியதில் உலக இலக்கியங்கள் வெற்றிபெறாத நிலையில், கம்பர் மட்டும் வெற்றி பெற்றதும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ராமரைப் பற்றிய கதைகள் சங்க கால இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் மிகுதியாக […]

Read more

இலக்கியச் சாதனையாளர்கள்

இலக்கியச் சாதனையாளர்கள், க.நா.சுப்ரமண்யம், சந்தியா பதிப்பகம், விலை: ரூ.175 க.நா.சு. வரைந்த உயிர்க்கோடுகள். நகுலன், ‘அதிகமாகப் பேசாமல் நிதானமாகப் பதற்றமின்றி ஒருவருடன் இருப்பது ஒரு தத்துவம்’ என்று ‘ஐந்து’ கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பார். இன்னொருவருடன் அல்ல, தன்னுடனேயே ஒருவர் பேசாமல் இருக்க முடியக் கூடிய சூழல் தொலைந்துவிட்ட இந்த நாட்களில், க.நா.சுப்ரமண்யம் எழுதியிருக்கும் இந்த நூலில் 41 எழுத்தாளுமைகளைப் பற்றிய சிறு கட்டுரைகளின் முக்கியத்துவம் புலப்படுகிறது. க.நா.சு.வால் அப்படி இருக்க முடிந்ததோடு அவர்களைத் துல்லியமாக மதிப்பிடவும் முடிந்திருக்கிறது. தமிழில் கடந்த நூற்றாண்டில் நுண்கலை, இலக்கியத் […]

Read more

மருதநாயகம்

மருதநாயகம், சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், விலைரூ.500 அ.மாதவையாவின் கான்சாயபு கம்மந்தான், துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமியின் கான்சாகிபு கம்மந்தான், பேரா. ந.சஞ்சீவியின் கும்மந்தான் கான்சாகிபு, பேராசிரியர் ந.வானமாமலையின் கான்சாகிபு சண்டை, முனைவர் ந.இராசையாவின் மருதநாயகம் உண்மை வரலாறு என்னும் ஐந்து நுால்களையும் ஒன்றாக பதிப்பித்து தொகுப்பாக வந்துள்ள நுால். மருதநாயகம் வரலாற்றை, நுாலில் முதல் பகுதியில், 35 பக்கங்களில் விரிவாக எழுதியுள்ளார் பதிப்பாசிரியர். அது ஒரு தனி வரலாற்று நுாலாகும் அளவிற்கு அமைந்துள்ளது. மருதநாயகம் யார், எந்த மதத்தைச் சேர்ந்தவர், எப்படிப்பட்டவர் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் […]

Read more

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர் தான்

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர் தான், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.200. நேரத்தின் முக்கியத்துவம் உணர்ந்தால் முன்னேற்றம் சுலபமாகும். இந்த பேருண்மையை, பொருண்மையாக்கியுள்ள நுால். கவரும், 91 தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உள்ளது. ‘குமுதம்’ இதழில் தொடராக வந்தது. படித்தால், முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை உடையும். அன்றாடம் தவறும் சிறு விஷயங்களையும் கவனித்து, அனுபவத்துடன் கோர்த்து, வாழ்க்கை பாடமாக எழுதப்பட்டுள்ளது. சுலபமாக புரியும் மொழிநடையில் உள்ளது. ‘புத்தகம் வாங்குவது செலவல்ல, முதலீடு. ஒரு புத்தகத்தில் கிடைக்கும் அனுபவப்பாடம், வாழ்க்கை பார்வையையே மாற்றிவிட வல்லது. இந்த புதிய […]

Read more

சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே, டாக்டர் து.சி.இராமையா, நெய்தல் பதிப்பகம், விலைரூ.150 கூட்டாஞ்சோறு போல கவிதை, பாட்டு, துளிப்பா, கட்டுரை, துணுக்கு, சிறுகதை, பாரம்பரிய உணவுகள் என பல்சுவையாக படைக்கப்பட்டுள்ள நுால்; உருக்கமான கட்டுரைகளும் உண்டு. ‘என்னை குனிந்து பார் உன்னை பிறர் அண்ணாந்து பார்க்கும் நிலைக்கு வைப்பேன்’ என, முன்னாள் ஜனாதிபதி, மறைந்த அப்துல் கலாம் பற்றிய குறுங்கவிதையும் இந்த நுாலில் உள்ளது. – சுப வெங்க் நன்றி: தினமலர், 6/9/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030691_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும்

உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும், பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100. கொரோனா என்ற தீநுண்மி நோயால் உலகம் முழுதும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். ஆண்டு தோறும், 30 நாட்கள் கட்டாய ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற பரிந்துரையுடன் முடித்துள்ளார். கொரோனா அச்சம் ஏற்பட்டதில் இருந்து, நடந்த எல்லா மாற்றங்களையும் தொகுத்துள்ளார். படங்களையும் இணைத்துள்ளார். மனிதாபிமானம் மற்றும் இயற்கை ஆர்வம் சார்ந்த கண்ணோட்டம் புத்தகம் முழுதும் உள்ளது. ஆய்வு பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. தொற்று நோய், உலகில் ஏற்படுத்திய மாற்றங்களை […]

Read more

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.120. கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா என்ற நுண்ணுயிரி பற்றி விளக்கும் அறிவியல் நுால். எட்டு தலைப்புகளில் உள்ளது. ‘அறிவு என்பது அறியாமையை மேலும் வெளிப்படுத்துவது’ என்ற பொன்மொழியுடன் துவங்குகிறது. மனித உடலில் உள்ள செல்களை விட, உடலில் வாழும் நுண்ணுயிரிகள் பல மடங்கு அதிகம் என்ற வியப்பூட்டும் உண்மை விளக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில், ‘உடலே ஒரு வனம்’ என்ற பகுதியிலிருந்து…உடலில் எத்தனை வகை பாக்டீரியாக்கள் வசிக்கின்றன என்பதைக் கணக்கிட முடியவில்லை. ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் […]

Read more

ஆளும் திறனை வளர்ப்பது எப்படி?

ஆளும் திறனை வளர்ப்பது எப்படி?, பொ.பொன்முருகன், இளையோர் இலக்கியம், விலைரூ.120. அன்றாட நடவடிக்கை, செயலை கூர்ந்து கவனிப்பதால் வாழ்க்கை பாதை மாறுமா… மாற்றலாம் என நிறுவ முயல்கிறது இந்த நுால். வெறுப்பை துறந்து, வெற்றிப் படிகளில் ஏற வைக்கும் மந்திரங்களை விளக்குகிறது. ஈடுபாட்டுடன் வாழ்ந்து, அன்றாட நிகழ்வு களை அணுக கற்றுத்தருகிறது. புரியும் வகை விளக்கப்படங்களுடன் மிக எளிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. குறுந்தலைப்புகளில், தகவல்கள் தொகுத்து கூறப்பட்டுள்ளன. சிறு செயல்களை கவனிப்பதால், பெரிய மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எண்ணம், சொல், செயல், […]

Read more

செய்தி எழுதப் பழகுவோம்

செய்தி எழுதப் பழகுவோம், ஆ.குணசீலன், வசந்தா பிரசுரம், விலைரூ.90 பத்திரிகைகளுக்கு செய்தி எழுதுவது குறித்து அனுபவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நுால். பத்து தலைப்புகளில் சிறு கட்டுரைகளை உள்ளடக்கியது. ஈர்க்கும் வகையில் எளிமையாக செய்திகள் எழுதுவது பற்றி விளக்குகிறது. பத்திரிகைத்துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு உதவும். நன்றி: தினமலர், 18/10/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 20 21 22 23 24 88