வரலாறு கற்பித்தலில் புதுமைகள்

வரலாறு கற்பித்தலில் புதுமைகள், வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 320, விலை 200ரூ. ஆசிரியர் பணிக்குப் படிப்பவர்களுக்காக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின்படி வரலாறு கற்பிப்பதைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூல். வரலாறு கற்பித்தலில் புதுமைகள் என்று தலைப்பு இருந்தாலும், கற்பித்தலில் இன்றைய புதுமை எப்படி படிப்படியான வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டது என்பதை நூல் விளக்குகிறது. கிரேக்க, ரோமானிய, இடைக்கால, மறுமலர்ச்சி கால, நவீன கால வரலாற்று எழுத்தாண்மைகளை நூல் விளக்குகிறது. இந்தியாவிலும்கூட கல்ஹனா, அபுல்பஃஸல் காலத்திலிரந்து அர்.சி. மஜும்தார் […]

Read more

இராமன் கதை

இராமன் கதை, முனைவர் ச.லோகாம்பாள், அருள் பதிப்பகம், பக். 576, விலை 430ரூ. ராமாயணத்தை பல கோணங்களிலும் நுணுக்கமாக ஆராய்ந்தெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ராமாயண பாத்திரங்கள் ஒவ்வொன்றையும், கதைப் போக்குடன் தம் ஆய்வுக் கருத்துகளை நிறுவுகிறார் நூலாசிரியர். ராமபிரானின் குணநலன்களை அடுக்கிக் கூறும் நுலாசிரியர், ராமன் மாபெரும் மன்னன் என்ற இறுமாப்பின் உருவகமாகவே காட்சியளிக்கிறான் என்றும், கோபத்தால் பொறுமை இழந்து அரக்கர் முதலானோரைக் கொன்று குவித்த கொடியவன் ராமன் என்று கூறும் கருத்துகள், இந்த நூலை படிப்போருக்கு நெருடலாகவே இருக்கும். தசரதன், […]

Read more

திருத்தொண்டகம் பாசுரங்களும் விளக்கங்களும்

திருத்தொண்டகம் பாசுரங்களும் விளக்கங்களும், கலியன் எதிராசன்(எதிராஜுலு), கங்கை புத்தக நிலையம், சென்னை, பக். 278, விலை 100ரூ. கலியன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட திருமங்கையாழ்வாரின் 30 பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்துக்கு பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையுடன் இந்நூலை யாத்திருக்கிறார் கலியன் எதிராசன் என்ற புனைபெயர் கொண்ட எதிராஜுலு. வடிவவில், சைவ நாயன்மார் அப்பரின் தாண்டகங்களை ஒத்த இத்திருநெடுந்தாண்டகம், திருமங்கையாழ்வாரின் கடைசிப் படைப்பு மட்டுமல்ல, நாலாயிர திவ்யப்பிரபந்தத்தின் கடைசிப் பிரபந்தம் என்பதையும் வைணவ ஆசார்யார் பராசர பட்டரால் சாத்திரம் என்று போற்றப்பட்டது என்பதையும் […]

Read more

தொல்காப்பியத்தில் இசை

தொல்காப்பியத்தில் இசை, முனைவர் இராச. கலைவாணி, ஏழிசை இசை ஆய்வகம், தமிழ்க் கலையகம், மயிலாடுதுறை, பக். 608, விலை 350ரூ. சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் இசை பற்றிய செய்திகள், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த வகையில் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் நாடக வழக்கையும், உலகியல் வழக்கையும் ஆராய்ந்து ஐந்திணை நில அமைப்பு, அதற்குரிய பண்கள், இசைக்கருவிகள் பற்றி பல நூற்பாக்களில் கூறியிருக்கிறார். அத்தகைய நூற்பாக்களை மேற்கோள்காட்டி, இசை, பாவகைகள், பண்கள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசைக்கலைஞர்கள், கூத்துகள் முதலியவற்றை மிகவும் […]

Read more

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், எஸ். குருபாதம், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 304, விலை 200ரூ. போதி தர்மர் பற்றிய விவரங்களைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள அற்புதமான நூல். தமிழகத்தில் ஆன்மிக அறிவு பெற்று, அதனை சீனாவில் முழுமையாக அதாவது ‘சென்’மதக் கோட்பாட்டை உருவாக்கியவர் என்ற பெருமை படைத்தவர் போதிதர்மர். ஆன்மிகப் போதனைக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற முதல் இந்திய ஞானி இவர். நோக்கு வர்மக் கலையின் முன்னோடி, கராத்தே என இப்போது பிரபலமாகியுள்ள தற்காப்புக் கலையின் தந்தை, சிறந்த மருத்துவ அறிஞர், அக்குபஞ்சர் […]

Read more

நேசமணியின் வாழ்வும் பணியும்

நேசமணியின் வாழ்வும் பணியும், ஜி.ஐசக் அருள்தாஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 174, விலை 130ரூ. தமிழகத்துக்கு கன்னியாகுமரி என்றொரு மாவட்டம் கிடைக்கவும், கேரள மாநிலத்திலிருந்து அம்மாவட்டப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கவும் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் முக்கியமானதும் முதலாவதுமான பெயர் நேசமணி, அவரது இளைப்பாறல் இல்லாத போராட்டத்தின் மூலம்தான் தமிழகத்தின் தெற்கு எல்லை நெல்லை என்ற வரையறையில் இருந்தது, கன்னியாகுமரிவரை நீண்டது. தனது வாழ்வை, தனக்கு மட்டுமே பயனுள்ளது என்ற அளவில் தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல், தான் பிறந்த […]

Read more

அதிசயம் நிகழ்ந்த அற்புத திருக்கோயில்கள்

அதிசயம் நிகழ்ந்த அற்புத திருக்கோயில்கள், சிவப்பிரியா, தென்னவர் திருநெறிப் பதிப்பகம், புதுதில்லி, பக். 752, வி 380ரூ. நாட்டின் வட கோடி எல்லையில் உள்ள கயிலை மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள அமரநாதம் தொடங்கி தென் கோடியில் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதர் கோயில் வரை 300க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று வழிபட்டு அக்கோயில்களின் சிறப்பைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் சமயக் குரவர்கள் பாடியுள்ளதை (உ.ம்: ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும், தாயே ஆகி வளர்த்தனை போற்றி […]

Read more

தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு

தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 180, விலை 160ரூ. லெமூரியாக் கண்டம் கடலில் மூழ்கிய சர்ச்சையைத் தவிர்த்தும், தமிழர் நாகரிகம் ஆப்பிரிக்கர், ஆஸ்திரேலியர் உள்ளிட்டோருடன் எப்படியெல்லாம் தொடர்புடையதாக உள்ளது என்பதை, பிறப்பு, இறப்பு, திருமணம் மற்றும் வழிபாடுகள் உள்ளிட்ட சான்றுகளுடன் நூலாசிரியர் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார். திராவிடர்கள் வெளியிலிரந்து வந்தவர்களா? தமிழகத்தின் பூர்வீகக் குடிகளா? என்ற வாதத்தை மையமாக்கி, அறிஞர்களின் அனுமானங்களை வைத்து திராவிடர் தமிழக பூர்வகுடிகளே எனக் கூறும் நூலாசிரியர், அதை […]

Read more

நல்ல நிலம்

நல்ல நிலம், பாவை சந்திரன், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், பக். 838, விலை 600ரூ. காமாட்சி எனும் ஒரு பெண்ணைச் சுற்றி நிகழும் துன்பமும் இன்பமும் கசப்பும் களிப்புமான வாழ்க்கைதான் இந்நாவல். இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு, நாகப்பட்டினத்தின் ஊரகப் பகுதிக்குச் செல்வதில் தொடங்கி, மகனின் திருமணம் வரையிலான முடிவற்ற சிக்குகளில் சிக்கியும் சிதையாமல் தன்னை நிறுத்திக்கொள்ளும் ஓர் ஆளுமையின் கதை. உதவுபவளாக ஆலோசனை சொல்பவளாக, கண்டிப்பவளாக, எதிர் நிற்பவரின் மனவோட்டங்களைப் புரிந்து பதிலடி கொடுப்பவளாக, சொல்லாமல் வீட்டைவிட்டே வெளியேறிய கணவன் காணாமல் போகும்போது திடம் […]

Read more

சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், தி. பரமேசுவரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 220, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-305-5.html பெண்ணுரிமை, சமூகம், அரசியல், கலை, இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் வாள்களைச் சுழற்றிக் கொண்டு வரும் கட்டுரைகளின் தொகுப்பு. பெண்ணை மனித உயிராக மதிக்காமல், அவள் ஆண்களுக்காகப் படைக்கப்பட்டவள் என்ற ஆணாதிக்கப் போக்கை எதிர்த்து, கறுப்பு நிறம் என்றால் தாழ்ந்தது என்ற மனப்பான்மையை எதிர்த்து, உழைக்கும் பெண்களின் அவலநிலையைக் குறித்து, பெண் படைப்பாளர்கள் அவமானப்படுவதை எதிர்த்து […]

Read more
1 615 616 617 618 619 841