வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு

வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு, ரகசியன், பொன்னி வெளியீடு, சென்னை, விலை 60ரூ. கனவுகள் சுமந்து வனம் திரிபவன் தனிமனித வாழ்வு இயற்கையின் ஒவ்வோர் அங்கத்தோடும் தான் கொள்ளும் இயைபை அல்லது இயற்கை தனக்குள் கிளர்த்தும் நெருக்கத்தை மொழிவழி வெளிப்படுத்துகின்றன. குடிப்பெயர்ச்சியால் ஊரமைத்து வாழ்கிறான் மனிதன். அவன் வருகைக்கு முன்பே, பின் உருக்கொள்ளும் ஊருக்கும் அடையாளமாய் இருப்பவை மலைகள். அவ்வகையில் தன் ஊருக்கு அடையாளமாய் நிற்கும் கோழி குத்து மலையைப் பற்றிய இருவேறு கவிதைகள் முக்கியமானவை. ஒரு குடியின் பல தலைமுறைகளின் மனதில் நிலைகொண்டிருக்கும் […]

Read more

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், தமிழாய்வு மன்றம், விலை 100ரூ. நோக்கு நூல்கள் ஒரு மொழியின் மேம்பட்ட நிலையை விளக்குவனவாக அமைவன. அந்த வகையில், மரபும் புதுமையும் என்னும் இந்நூல் நிகண்டுகள் குறித்தும் கணினி வழி நூலடைவு உருவாக்கம் குறித்தும் பல தகவல்களை உள்ளடக்கி, மொழியின் பழமையையும் வளர்ந்துவரும் அறிவியல் யுகத்திற்கு ஈடுகொடுக்கும் புதுமையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்படாத ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, நீரார் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு ஆகியவை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் […]

Read more

1001 இரவுகள்

1001 இரவுகள், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. அரபு மன்னர் ஷாரியாருக்கு பெண்கள் மீது அடங்காத மோகம். தினம் ஒரு பெண்ணை மணப்பது, மறுநாள் காலை அவளைக் கொன்று விடுவது என்று பெண்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். அவரைத் திருத்த எண்ணிய அமைச்சரின் மகள் ஷாரஜாத், மன்னரை மணந்து கொள்கிறாள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதை சொல்கிறாள். கதை கேட்கும் ஆவலில் அவளை கொல்லாமல் விடுகிறார். மொத்தம் 1001 நாட்கள் கதைகள் தொடர்கின்றன. அந்தக் கதைகளை கேட்டதும் மன்னன் மனம் மாறுகிறார். பெண்கள் […]

Read more

தமிழன் குரல்

தமிழன் குரல், ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 60ரூ. தமிழர்களைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் ம.பொ.சிவஞானம் அக்கறையுடன் எழுதியிருக்கும் ஏழு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழர்களின் சமயக் கொள்கை, தேசியக் கொள்கை, தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கு பேசுவோரின் பழக்க வழக்கங்கள், சித்தூர் ஜில்லாவின் வரலாறு, சித்தூர் முதல் திருப்பதி வரை பெரும்பாலோர் தெலுங்கு பேசுவோராயிருப்பதற்கான காரணம், முத்தமிழ் வளர்த்த கோயில்கள் மூடத்தனத்தை வளர்க்கும் கூடங்களாக மாறிப்போனது. தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தாத தமிழ் நாடகங்கள் இப்படி எல்லாத் துறைகளையும் பற்றி தெளிவாகவும் […]

Read more

தஞ்சைப் பெரிய கோயில்

தஞ்சைப் பெரிய கோயில், வி.அ. இளவழகன், பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 220, விலை 160ரூ. தஞ்சைப் பெரிய கோயிலின் பெருமையும் சிறப்பும் அனைவரும் அறிந்ததே. சைவ சமய இலக்கியக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சிற்பங்களையும், ஓவியங்களையும் கொண்ட சிவ தத்துவத்தின் வெளிப்பாடாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதை, தான் மொழி பெயர்த்த திருவாசக நூலின் முன்னுரையில் ஜி.யு.போப் கூறியுள்ளார். வெளிநாட்டவர்களுக்கு நம் கோயில்களின் அருமை பெருமைகள் தெரிந்துள்ள அளவு தமிழ்நாட்டவர்க்குத் தெரியவில்லை என்பது கவலைக்குரியது. […]

Read more

கம்பனைத் தேடி

கம்பனைத் தேடி, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 175ரூ. பிர்மஸ்ரீ வாசுதேவ் கோவிந்தாச்சார்யா, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா உள்பட 9 பேரின் படைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கம்பனில் சட்டம் என்ற கட்டுரை, ராம காவியத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் நிகழ்த்திய சூழ்ச்சிகள் எந்தெந்த குற்றப் பிரிவுகளில் வருகின்றன? தசரதன் கைகேயிக்குக் கொடுத்த வாய்மொழி ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகுமா? கம்பனின் படைப்பில், தசரதனின் காலத்திலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்த விதம் போன்றவற்றை விளக்கி நம்மை வியக்க […]

Read more

தமிழ் மென்பொருள்கள்

தமிழ் மென்பொருள்கள், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு, சென்னை, விலை 125ரூ. அச்சுப்பணி, தகவல் தொழில்நுட்பம் என்னும் இரண்டுக்கும் உதவும் கணினி, அலைபேசி, இணையம் எனப் பல ஊடகங்களிலும் செயல்படும் முக்கியக் கருவியான தமிழ் மென்பொருள்கள் குறித்த பல கருத்துகளை விளக்குவதாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. தமிழ் மென்பொருள்களுக்கு அடிப்படையான எழுத்துரு (font), குறியீட்டாக்கம் (Encoding), விசைப்பலகை (keybord), குறித்தும் இம்மூன்று அடிப்படைக் கூறுகளுக்கான ஒருங்குறி (Unicode) பங்களிப்பு குறித்தும் விரிவான பல கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன. கணினியைத் தமிழில் இயங்கவைக்கும் […]

Read more

நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை

நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை, வெள்உவன், தமிழினி, சென்னை, விலை 80ரூ. பண்பாட்டை அறிய உதவும் சொற்கள் மொழி என்றாலே பேசு எனப் பொருள் கொள்ளலாம். ஆனால் இன்று மொழி, பேச்சு, எழுத்து என இரு வடிவங்களில் வெளிப்படுகிறது. எழுத்து வடிவத்திற்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பேச்சுக்கு எல்லைகள் இல்லை ஆக பேச்சு வடிவத்தில் மொழி அதன் அத்தனை சாத்தியங்களையும் கண்டடைய முயலும். ஒவ்வொரு பகுதிக்கும் தமிழ் ஒரு தனித்த மொழி வெள்ப்பாட்டைக் கொண்டுள்ளது. அதை வட்டார வழக்கு என்கிறோம். இவ்வட்டார […]

Read more

பழந்தமிழர் வாழ்வில் பக்தி இயக்கம்

பழந்தமிழர் வாழ்வில் பக்தி இயக்கம், முனைவர் தா. நீலகண்டப் பிள்ளை, செம்மூத்தாய் பதிப்பகம், சென்னை 59, பக். 266, விலை 450ரூ. தமிழை பக்தியின் தாய்மொழி என்று போற்றுவர். பழந்தமிழர், 3000 ஆண்டுகளாக பக்தியை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதை 33 ஆய்வுக் கட்டுரைகளில் இந்த நூல் அழகுடன் விளக்குகிறது. தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்கள் காட்டும் சமயச் செய்திகளை ஆதாரப் பாடல்களுடன் கட்டுரைகள் அருமையாய் விளக்குகின்றன. இயற்கை, விலங்கு, அணங்கு, பெருதெய்வம், சிறுதெய்வம், பலியிடம், […]

Read more

கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள்

கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள், பெஸ்ட் போட்டோ கிராபி டுடே, பக். 196,விலை 200ரூ. புகைப்பட கலைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழில் வெளிவரும் பெஸ்ட் போட்டோகிராபி டுடே குழுமத்தில் இருந்து வந்துள்ள புதினம்தான், இந்த நூல். வைல்டு லைப் போட்டோகிராபி எனப்படும் கானுயிர் புகைப்பட கலை, தற்போது அதிகம் பேசப்படும் ஒரு அற்புதமான புகைப்பட கலை. தங்களின் மனதிருப்திக்காக, பெரும்பாலும் இவர்கள் படம் எடுத்தாலும், சுற்றுச்சூழலுக்கு இவர்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கிறது. இவர்களுக்குள் ஒரு அறிமுகமும், தொடர்பும் இல்லாத நிலை இருப்பதால், வீண் அலைச்சல், செலவு […]

Read more
1 667 668 669 670 671 841