படைப்பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராஜன்

படைப்பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராஜன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 120ரூ. இசைஞானி இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜன். பாடலாசிரியர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், பாடகர், கிராமிய இசையமைப்பாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர் பாவலர். அவரைப் பற்றி கே.டி.கே. தங்கமணி, எம். கல்யாண சுந்தரம், நல்லகண்ணு, ஐ. மாயாண்டி பாரதி, எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூலை சங்கை வேலன் தொகுத்துள்ளார். பொதுவுடைமைக் கருத்துகளில் பாவலர் வரதராஜன் அளப்பரிய ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது படைப்புகள், […]

Read more

பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா

பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா, எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், சென்னை, பக். 888, விலை 500ரூ. சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவர், பிரம்மாவின் புத்திரர். ஜோதிட ஞானத்தின் கரையற்ற கடல் போன்றவர் என போற்றப்படுபவர். அவர் வடமொழியில் இயற்றிய இந்த நூல், மிக எளிமையாகவும், அருமையாகவும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஒரு லக்னத்திற்கு, 108 வித பலன்கள். இப்படி 12 லக்னங்களிலும், ஒன்பது கிரகங்கள் இருப்பதால் விளையும் பயன்கள் என, 1296வித பலன்களை, பிருகு முனிவர் இந்த நூலில் […]

Read more

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், கிருபாகர், சேனானி, காலச்சுவடு பதிப்பகம், பக். 215, விலை 175ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-7.html கடந்த 1997ல், பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர், சேனானி இருவரும், வீரப்பனால் கடத்தப்பட்டனர். மொத்தம் 14 நாட்கள் அவர்களை தனது பிடியில் வீரப்பன் வைத்திருந்தான். அப்போது நடந்த சம்பவங்கள், சுவையான விறுவிறுப்பான மொழிநடையில் தொகுக்கப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்களை கடத்த வீரப்பன் திட்டமிட்டது, அதை கிருபாகரும் சேனானியும் கெடுத்தது, வீரப்பனின் உடன் இருந்த மாதேஷ், அன்புராஜ், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்டோர், […]

Read more

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு, ஜி. விஜயபத்மா, விகடன் பிரசுரம், பக். 175, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-233-6.html 1790ம் ஆண்டு, ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதிதான், முதன்முதலாக, முல்லை பெரியாற்றில், அணை கட்டுவது குறித்து சிந்தித்தவர். அதையடுத்து, 1876-78ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சென்னை மாகாணப் பெரும்பஞ்சம் அல்லது தாது வருடப் பஞ்சம்தான், பிரிட்டிஷ்காரர்களை, முல்லை பெரியாறு அணை கட்டுவதை துரிதப்படுத்தியது என, ஆதாரத்துடன் நிறுவுகிறார் நூலாசிரியர். கடந்த 1807ம் ஆண்டு துவங்கி 1870ம் ஆண்டு வரை ஜேம்ஸ் கார்ட்வெல், […]

Read more

தலைப்பற்ற தாய்நிலம்

தலைப்பற்ற தாய்நிலம், மஞ்சுள வெடிவர்தன, தமிழில் ஃபஹீமா ஜஹான், எம். ரிஷான் ஷெரீப், நிகரி எழுநா வெளியீடு, சென்னை, விலை 50ரூ. கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து? என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன. இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். மேரி எனும் மரியா என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் […]

Read more

உழைப்பின் நிறம் கருப்பு

உழைப்பின் நிறம் கருப்பு, ஆரிசன், தளிர் பதிப்பகம், சாத்தூர், பக். 112, விலை 100ரூ. அருகில் வரும் வானம் நுட்பமான மன உணர்வுகளைச் செறிவாக மொழியில் சிற்சில சொற்களில் எழிலுறச் சித்தரித்தல் ஹைக்கூ கவிதையின் சிறப்பு. அவ்வகையில் ஆரிசன் எழுதியுள்ள உழைப்பின் நிறம் கருப்பு எனும் ஹைக்கூ கவிதைத் தொகுப்பு வித்தியாசமான பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது. உலகமயமாதல், இயற்கையை நேசித்தல், உழைப்பின் மேன்மை ஆகிய தளங்களில் கவிஞரின் பார்வை சிறகடித்துப் பறப்பதைக் காணலாம். தவிர தினந்தோறும் அலுக்காமல் சலிக்காமல் உழைக்கும் அந்த வர்க்கத்துக்காக ஆரிசன் குரல் […]

Read more

பறவைகளும் சிறகுகளும்

பறவைகளும் சிறகுகளும், பாஸ்கர் சக்தி, கயன் கவின் புக்ஸ், சென்னை, பக். 152, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-865-9.html பெண்கள் பறவைகளாக… தேடல் சிறகுகளாக… நீ உன் சொந்த விஷயத்தை எழுதலாம். ஆனால் உன் எழுத்து அதை ஒரு பொது அனுபவமாக மாற்ற வேண்டும்.  இல்லாவிடில் அது வெறும் சுயபுராணமாகிவிடும் என்ற எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாஸ்கர்சக்தியின் அனுபவம் பொது அனுபவமாக மாறும் மந்திரம்தான் இக்கட்டுரைகளின் சிறப்பும். இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்யும் கட்டுரைகள் […]

Read more

தனிமையின் நூறு ஆண்டுகள்

தனிமையின் நூறு ஆண்டுகள், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில்-ஞலன் சுப்பிரமணியன், சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 350ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-161-2.html கதை சொல்லும் முறையில் புதிய திசைகள் திறந்துவிட்ட எழுத்து மார்க்கேஸுடையது. மகோந்தா என்ற நகரம் உருவாவதிலிருந்து அழிவது வரை அதை உண்டாக்கிய குடும்பத்தின் வழிவழியாய் வருகிற மனிதர்களைச் சுற்றிப் போகிறது கதை. ஒரே மூச்சில் படித்து மூடும் வேகம் கொண்டவர்களுக்கல்ல இந்தப் புத்தகம். ஒரு நகரத்தின் பிறப்பு, எழுச்சி, வீழ்ச்சி என்பது எந்தவொரு நாடு, […]

Read more

அகம் புறம் அந்தப்புரம்

அகம் புறம் அந்தப்புரம், முகில், சிக்ஸ்த் சென்ஸ், பக். 1032, விலை 999ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-202-3.html அந்தப்புரத்திற்கு எத்தனை பெயர்கள் நபா, தோல்பூர், அல்வார், பரத்பூர், ஐதராபாத், இந்தூர், கபுர்தலா, புதுக்கோட்டை, பரோடா, பாட்டியாலா, மைசூர், ஜெய்ப்பூர் ஆகிய இந்திய சமஸ்தானங்களின் வரலாறுகளையும், ஒவ்வொரு மகாராஜாவின் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து கிடக்கும் செய்திகளையும், காலனியாதிக்க காலகட்டத்தையும் குறித்து, நூலாசிரியர், குமுதம் ரிப்போட்டர் வார இதழில், தொடராக எழுதியது, தற்போது ஒரே நூலாக வெளிவந்திருக்கிறது. 1527ல் தோல்பூரை முகலாய பேரரசர் […]

Read more

நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள்

நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள், சா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 304, விலை 375ரூ. தமிழில் கலை தொடர்பான ஆய்வுகள் குறைவு. அதிலும் கோவில் தொடர்பான பண்பாட்டுக் கலை பற்றிய ஆய்வு மிக குறைவு. நூலாசிரியர் இந்த துறையில் கவனம் செலுத்தி, நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள் குறித்து, ஓர் அருமையான ஆய்வு நூலை படைத்துள்ளார். நூலுக்கு ஈழத்து தமிழறிஞர் கா. சிவத்தம்பி அளித்த அணிந்துரையில் இதுவரை நுண்ணாய்வு செய்யப்படாத ஒரு துறை இது என கூறியிருப்பது முக்காலும் உண்மை. நாயக்கர் கால […]

Read more
1 668 669 670 671 672 841