வைரமுத்து சிறுகதைகள்

வைரமுத்து சிறுகதைகள், கவிஞர் வைரமுத்து, சூர்யா வெளியீடு, விலை 300ரூ. உலக சிறுகதைகளோடு ஒப்பிடத் தக்கவை! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025177.html கவிதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்த தொகுப்பிலுள்ள 40 கதைகளுக்குமான களங்கள் வேறுவேறு.காலங்களும் வேறுவேறு. ஆனால் இவற்றுக்கிடையேயான பொதுப்பண்பு, இவை மானுடத்தைப் பேசுகின்றன என்பதே. […]

Read more

திருப்புகழ்

திருப்புகழ், வி.எஸ். கிருஷ்ணன், உமா பதிப்பகம், பக். 408, விலை 200ரூ. அருணகிரிநாதர் பெண் பித்தர் அல்லர்! மிக இளம் வயதிலேயே முருக பக்தியில் மூழ்கி, திருப்புகழை ஓதுவதால் ஏற்படும் இன்பத்தையும், ஆன்ம லாபத்தையும் உணர்ந்த இந்த நூலாசிரியர், ஆங்கிலம் மட்டுமே அறிந்திருப்போரும். திருப்புகழின் பெருமையை உணர்ந்து உய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். திருப்புகழோடு, அருணகிரியார் அருளிச் செய்த கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களின் அருமையையும், பல கோணங்களில் அலசி ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதியிருக்கிறார். […]

Read more

மிளிர்கல்

மிளிர்கல், ஞாநி, பொன்னுலகம் பதிப்பகம். கார்ப்பரேட் நிறுவனத்தோடு காப்பியத்தின் பயணம் பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, இரா.முருகவேள் எழுத்திய, மிளிர்கல் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். கண்ணகியை மையமாகக் கொண்ட கதை. கண்ணகி குறித்து, சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் என பகுதிக்கு ஏற்றவாறும், வணிகர்கள், மீனவர்கள் என, இனத்துக்குத் தக்கவாறும் கருத்துக்கள் நிலவுகின்றன.அந்த கருத்துக்களை எல்லாம் திரட்டி, ஒருமுகப்படுத்தும் புதிய முயற்சியில், பெண் ஆய்வாளர் ஒருவர் செல்கிறார். அவருடன் நவரத்தின கல் ஆய்வாளரும் செல்கிறார். இவர்கள் பற்றியதுதான் கதை. கண்ணகியைத் தேடி செல்லும் இவர்கள், […]

Read more

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன், வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. ராஜராஜ சோழனை விட, அதிக வெற்றிகளை குவித்தவன், அவன் மகன் ராஜேந்திர சோழன். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என, பெருமையோடு அழைக்கப்பட்டவனின் வரலாற்றை தெளிவுபட விவரிக்கிறது இந்த நூல். ராஜேந்திர நோழன் கட்டிய கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவிலை கட்டிய சிற்பி, குணவன். ஆட்சி நிர்வாகத்திற்காக, தன் நாட்டை, ஒன்பது மண்டலங்களாக பிரித்தார். இலங்கை, மும்முடி சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது உள்ளிட்ட, ஏராளமான வரலாற்று தகவல்கள், […]

Read more

ஆசிரியர்களே அச்சாணிகள்

ஆசிரியர்களே அச்சாணிகள், சுவாமி விமூர்த்தானந்தா, ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு, பக். 205, விலை 75ரூ. பள்ளிகளில்தான், நாட்டின் எதிர்காலம் உள்ளது. ஆசிரியர்களின் தோள்களின்மீது, சிறந்த இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு உள்ளது. தேவையான உதாரண புருஷர்களை உருவாக்குவரா அல்லது எப்போதும் தேர்விற்கான தயாரிப்பிலேயே மூழ்கி விடுவரா? மதிப்பெண் வாங்கி தருவதிலேயே அவர்களுக்கு முழு மகிழ்ச்சி கிட்டுகிறதா? இக்கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில், சிறந்த ஆசிரியர்கள் பலரின் அனுபவங்கள், கட்டுரைகளாக இந்த நூலுள் மலர்ந்துள்ளன. சிறந்த ஆசிரியராக முன்னேற, நான்கு முக்கிய அம்சங்களைப் பின்பற்ற வேண்டும். கற்பித்தலை […]

Read more

தமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும்

தமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும், சுகுமாரன், தாமரை பப்ளிகேஷன்ஸ், பக். 134, விலை 115ரூ. சிறுவர் இதழ்கள் எங்கே போயின? மகாகவி பாரதியாருக்கு, ஒருநாள் அசா தாரணமான சூழ்நிலை ஏற்பட்டது. மனைவி செல்லம்மா வெளியில் போய்விட்டார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பாரதியாருக்கு. குழந்தையிடம், பாட்டுப் பாடட்டுமா என்று கேட்கிறார். இப்போது பாடக் கூடாது. தூங்கும்போதுதான் பாட வேண்டும் என்று குழந்தை அவருக்குச் சொல்கிறது. குழந்தையின் உலகத்தை விளக்கும் பதிவு இது. குழந்தைக்fகுப் பாட்டு எழுதும்போது, குழந்தையின் நிலையில் இருந்து துவங்கவேண்டும். […]

Read more

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார்

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார், வெ. மு.ஷா. நவ்ஷாத், ஓவியம் பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 110ரூ. தமிழ்த் திரை உலகில், பெரிய வாத்தியார் எம்.ஜி.ஆர்., சின்ன வாத்தியார் கே. பாக்யராஜ். இந்தியாவின் மிகச் சிறந்த திரைக் கதையாசிரியர்களில் ஒருவரான பாக்யராஜ், கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்கோவில் என்ற கிராமத்தில், 1953ல் பிறந்தார். சென்னைக்கு வந்த அவர், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து, சிறு சிறு பாத்திரங்களில் நடித்து, கதாநாயகன் பாத்திரம் ஏற்றும், பிறகு சொந்தமாகக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற […]

Read more

எடர்னல் அண்டு எவர் குரோயிங் பிராப்ளம்ஸ் ஆப் என்க்ரோச் மென்ட்ஸ் (ஆங்கிலம்)

எடர்னல் அண்டு எவர் குரோயிங் பிராப்ளம்ஸ் ஆப் என்க்ரோச் மென்ட்ஸ் (ஆங்கிலம்), நீதியரசர் எஸ். ஜெகதீசன், பாரதி நிலையம், பக். 128, விலை 200ரூ. இந்த நூல், தமிழகத்தில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளை பப்ற்றி பேசுகிறது. சாலையோரம், நடைமேடை என ஆக்கிரமிப்புகள் பற்றிய முதல் கட்டுரையில் துவங்கி, அரசு நிலங்கள், ஏரிகள், வழக்கறிஞர்களின் வரம்பு மீறிய செயல்பாடுகள், நீதிமன்ற ஆணைகளை புறக்கணிக்கும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகள் என, பல்வேறு விதமான பிரச்னைகளும், 12 கட்டுரைகளாக அலசப்பட்டுள்ளன. முதல் 72 பக்கங்கள் கட்டுரைகள், அடுத்த […]

Read more

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நினைவுகள்

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நினைவுகள், கல்யாணி இராமசாமி, வசந்தா பதிப்பகம், பக். 160, விலை 200ரூ. திரைப்பட உலகில் இன்று நிலவும் பகுத்தறிவு கருத்துகளுக்கு, வித்திட்டவர், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. அண்ணாதுரையின் வலதுகரமாகச் செயல்பட்டவர், கே.ஆர். இராமசாமி. பராசக்தி மற்றும் மனோகரா திரைப்படங்களில் தனக்கு வந்த வாய்ப்பை, அண்ணாதுரை சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக, சிவாஜி கணேசனுக்கு விட்டுக்கொடுத்தவர், அண்ணாதுரையின் நிழலாக வாழ்ந்தவர். காலமெல்லாம் தாம் சம்பாதித்த வருவாயை, கழகம் வளரவே செலவழித்தார். தனக்கொரு குடும்பம் இருக்கிறது என்பதையே மறந்து, தூய கழகத் […]

Read more

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, ஆங்கிலம் ஆ. அலங்காரம், தமிழாக்கம் அ. அந்தோணி குருசு, என்.சி.பி.எச்., வெளியீடு, பக். 226, விலை 180ரூ. தீண்டாமை இன்னும் ஒழியவில்லை சமயங்களுக்கான விடுதலையை அடிநீரோட்டமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பல தரவுகளையும் ஒருங்கிணைத்த ஆய்வு நூல். ஆறு இயல்கள் கொண்ட இந்த நூலின் முதல் இயலில், ஜாதி, சமயம் குறித்த விவேகானந்தரின் எண்ணங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான வெளிச்சக்கீற்றிற்கு அவை துணை செய்வனவாய் உள்ளன.ஆன்மிகமும் வேதாந்தமும் பின்னிப் பிணைந்த நவீன அறிவியலின் எல்லையை வரையறை […]

Read more
1 155 156 157 158 159 240