வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும் (திருப்பாவை விளக்கவுரை)

வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும் (திருப்பாவை விளக்கவுரை) , சீ.சுந்தரம், வித்யுத் பதிப்பகம்,  பக்.584, விலை  ரூ.500. ஆண்டாளும் கிருஷ்ணனும் என்பதுதான் “வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும்’ என்று நூலின் தலைப்பாகியிருக்கிறது. திருப்பாவைக்கு விளக்கவுரை இந்நூல் என்று கூறுவதைவிட, மிக அற்புதமான தத்துவக் கருத்துகளை விளக்கும் அரிய ஆராய்ச்சி நூல் என்றே கூறலாம். ருப்பாவைக்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஆறாயிரப்படி வியாக்கியானம், திருநாராயணபுரத்து ஆய் என்றழைக்கப்படும் தேவராஜர் வழங்கியுள்ள ஈராயிரப்படி மற்றும் நாலாயிரப்படி எனப் பல […]

Read more

லட்சியப் பெண்டிர்

லட்சியப் பெண்டிர். தாயம்மாள் அறவாணன். தமிழ்க் கோட்டம்,  பக்.160, விலை ரூ.125. பெண்ணினம் பயனுற வேண்டும் என்பதற்காக எழுதுகிற நூலாசிரியையின் புதிய, அரிய படைப்புதான் இந்நூல். அகத்திணைப் பாடல்களில் பாலைத்திணைப் பாடல்களே அதிகமாக இருப்பதற்கான காரணங்களை முள்ளியூர்ப்பூதியார் கட்டுரை விளக்குகிறது; தொல்காப்பியமும் மகளிரும்; காலந்தோறும் இலக்கிய மகளிரின் நிலைமை; பெருங்காப்பியங்கள் எல்லாம் ஏன் பெண்களையே முன்நிறுத்தி எழுதப்பட்டன என்பற்கான விளக்கம்; சங்க காலத்தில் பெண் கல்வி எவ்வாறு இருந்தது என்பதற்கான விளக்கம்; ஒüவையாரின் கல்வி ஒழுக்கத்தில் கூறப்பட்டுள்ள முதன்மையான கருத்துகள்; சங்க பெண்பாற் புலவர்களின் […]

Read more

வாதி பிரதிவாதி நீதி

வாதி பிரதிவாதி நீதி, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ந. ராஜா செந்நூர் பாண்டியன், குமுதம் வெளியீடு, வலை 350ரூ. பாதைகளை ஆக்கிரமித்து கடை நடத்துகிறார்கள். மதுபோதையில் அதிக வேகத்துடன் வாகனங்களை ஓட்டுகிறார்கள். நாம் ஒருவரைப் பற்றி காவல்நிலையத்தில் புகார் செய்யப் போனால் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள். இப்படி வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள சட்டம் எந்த வகையில் உதவி செய்ய முடியும்? இப்படிப்பட்ட பிரச்னைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்ட தீர்ப்புகள் எவை? என்பன போன்றவற்றை […]

Read more

எழுச்சிநாயகன் விவேகானந்தர்

எழுச்சிநாயகன் விவேகானந்தர்  சி.எஸ்.தேவநாதன், எஸ்.எஸ்.பப்ளிகேஷன்,  பக்.192, விலை ரூ.120. விவேகானந்தரின் இளமைக் காலத்திலிருந்து அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சொல்லும் வாழ்க்கை வரலாற்று நூல் என்றும் இதனைச் சொல்லலாம். ஆனால் அந்த எல்லையோடு இந்நூல் நின்றுவிடவில்லை. விவேகானந்தரின் சிந்தனைகள் வளர்ந்தவிதம், ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் அவருடைய தெளிவான கருத்துகள் தோன்றியவிதம் ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. விவேகானந்தரின் வாலிபப் பருவத்தில், அவரை விரும்பி அவர் இருக்கும் இடத்துக்கு இரவில் வந்த ஓர் இளம் பெண்ணைப் பார்த்து, “”அம்மா, இது தகாத காரியம் என்பதை உணருங்கள். உடனே இங்கிருந்து […]

Read more

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்,  கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் தனது முகநூல் பக்கத்தில் இளைஞர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். அவற்றில் 32 கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் கேள்விகள் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் என தங்களுடைய முன்னேற்றத்துக்கானதாகவும் இருக்கின்றன. கூட்டுக் குடும்பத்தின் தேவை, பெண்களின் நிலை, நிறுவனங்களில் தலைமைப் பதவிக்கு வருபவர்களுக்கான தகுதிகள் என பொதுவான விஷயங்களைப் பற்றியதாகவும் இருக்கின்றன. கேள்விகள் எப்படியிருப்பினும், அதற்கான பதில்கள் பிரச்னைகளை அறிவியல்ரீதியான முறையில் […]

Read more

கிளாரிந்தா

கிளாரிந்தா, அ. மாதவையா, தமிழில் சரோஜினி பாக்கியமுத்து, அடையாளம், பக்.284, விலை ரூ.230. இந்த புதினம், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் வரலாற்று நாவலாகும். 1978-இல் முதல் பதிப்பாக கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் சார்பில் இந்நாவல் வெளியிடப்பட்டது. அதன் மறுபதிப்பு இந்நூல். கி.பி.1746-ஆம் ஆண்டு தொடங்கி 1806-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், கர்நாடக நவாபின் வாரிசு மயூஸ்கான் தலைமையில் இந்தியப் படைக்கும், என்ஜினியர் பராடிஸ் தலைமையில் பிரெஞ்சுப் படைக்கும் நடந்த கடும் போருடனும், தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் ஆட்சியின் பின்னணியில், “கிளாவரிந்தாபாய்’ […]

Read more

தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர்.இரகுநாதன்,  ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக்.240, விலை  ரூ.150. தமிழ் இதழியல் குறித்து பல நூல்கள் வெளிவந்திருப்பினும், இந்த நூல் எழுத்தின் வரலாற்றில் தொடங்கி இன்றைய இதழியல் போக்குவரை அலசி ஆராய்ந்திருப்பது தனிச்சிறப்பு. விடுதலைப் போரில் இதழ்களின் பங்களிப்பு முதல் பத்திரிகையாளர்களின் சர்வதேச ஒருமைப்பாடு தினம் வரையிலான 20 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளன. தமிழ் இதழியல் முன்னோடிகளான திரு.வி.க., பாரதி, வ.உ.சி., சுப்பிரமணியசிவா, தினமணி ஏ.என்.சிவராமன், ராஜாஜி, புதுமைப்பித்தன் என அனைவரைப் பற்றிய பல அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. மது […]

Read more

கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்

கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர், இரா. மோகன், வானதி பதிப்பகம், பக்.208, விலைரூ.150. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட குறள், இந்தக் கணினி யுகத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில், அறிவுலகில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் குறள் உரக்கப் பேசுகிறது. குறிப்பாக, அதிகமாகவும், பரவலாகவும் விவாதத்துக்கு உள்படுத்தப்படும் “ஆளுமை வளர்ச்சி, மனித வள மேம்பாடு, விழுமியக் கல்வி (Value Education), தொடர்பியல் திறன்கள், உடன்பாட்டுச் சிந்தனை’ ஆகியவற்றுக்கு திருக்குறள் கருத்துகள் எவ்வாறு வலுசேர்க்கின்றன என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றன மேற்கண்ட தலைப்புகளிலான கட்டுரைகள். […]

Read more

மைதானம்

மைதானம் (விளையாட்டுக் கட்டுரைகள்) , சந்திரா மனோகரன், ஓவியா பதிப்பகம், பக்.144, விலை  ரூ.100. கிரிக்கெட்டில் தொடங்கி, கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, தடகளம், செஸ், கார் பந்தயம் என பல்வேறு விளையாட்டுகளை பற்றி இந்நூல் அலசுகிறது. மேற்கண்ட விளையாட்டுகளுடன் தொடர்புடைய உலகக் கோப்பைகள், ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி தொடர்பான விவரங்கள், அதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களைப் பற்றியெல்லாம் நூலாசிரியர் விவரித்திருக்கிறார். டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, தமிழகத்தைச் சேர்ந்த கார் பந்தய […]

Read more

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை , ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்,  தமிழில் – அனிதா பொன்னீலன், புலம் வெளியீடு,  பக்.208, விலை  ரூ. 170. போர்க்களச் சூழலில், 13 வயதுச் சிறுமி எழுதிய நாட்குறிப்புகள் தாம் இந்நூல். அவர், ஸ்லெட்டா ஃபிலிப்போவிக். யுகோஸ்லாவியாவிலிருந்து விடுதலையடைந்த போஸ்னியா, ஹெர்ஸகோவினா என்ற சின்னஞ்சிறிய நாடுகள் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என விரும்பி செர்பியர்கள் நடத்திய போர்தான் நாட்குறிப்பின் அடிப்படை. 1991 முதல் 1993 வரை நடந்த போரில் ஏற்பட்ட துயர அனுபவங்கள்தாம் […]

Read more
1 107 108 109 110 111 180