கு.மா. பாலசுப்பிரமணியம் திரை இசைப்பாடல்கள்

கு.மா. பாலசுப்பிரமணியம் திரை இசைப்பாடல்கள், கவிஞர் பொன். செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 90ரூ. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஜி.ராமநாதன் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், டி.ஜி.லிங்கப்பா முதலிய இசை அமைப்பாளர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில், சிறந்த பாடல்கள் எழுதிய கவிஞர்களில் கு.மா. பாலசுப்பிரமணியமும் ஒருவர். அவருடைய பல பாடல்கள் இன்னும் காலத்தை வென்று வாழ்கின்றன. அவற்றில் சில, சிங்காரவேலனே தேவா (கொஞ்சும் சலங்கை), அமுதைப் பொழிதும் நிலவே(தங்க மலை ரகசியம்), சித்திரம் […]

Read more

அட்டவீரட்டத் தலங்கள்

அட்டவீரட்டத் தலங்கள், அ. அறிவொளி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 152, விலை 45ரூ. சிவபெருமான் திருவிற்குடி, திருவதிகை, திருப்பறியலூர், திருக்கண்டியூர், திருக்குறுக்கை, திருவழுவூர், திக்கடவூர், திருக்கோவிலூர் ஆகிய எட்டுத் திருத்தலங்களில் நிகழ்த்திய வீரச் செயல்களை விளக்குவதால் இவ்வெட்டுத் தலங்களும் அட்டவீரட்டத் தலங்கள் எனப்படும். அட்டவீரட்ட திருத்தலங்களின் காரணங்களாக படைப்பு முழுவதற்கும் எட்டு ஆதாரங்கள் சொல்லப்பெற்றுள்ளன. அவை அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் ஒத்துவரும். இந்த எட்டிலும் இறைவனின் சக்திரகள் கலந்து நிறைந்துள்ளன. இவையே இந்தப் படைப்பைக் காத்து வருகின்றன. இப்படிப்படைப்பு முழுவதிலும் விரவிக்கிடக்கும் ஆதாரப் […]

Read more

சீனத்தின் குரல்

சீனத்தின் குரல், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 25ரூ. சீன நாட்டு வரலாற்றில் மகான் கம்பூஷியஸ் காலம் முதல் செஞ்சீனத்தலைவன் மா-சே-துங் காலம் வரையில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கத்தை சீனத்தின் குரல் என்ற தலைப்பில் நூலாசிரியர் சி.பி.சிற்றரசு தொகுத்துள்ளார். 20 மூல நூல்களிலிருந்து கடந்த 2500 ஆண்டுகளாக சீன நாடு எழுப்பிய குரல்களை, அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும்வகையில் எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடந்த முக்கியமான பிரச்சினைகளை நுட்பமாகத் தெரிந்து கொள்ள உதவும் புத்தகமாகும்.   —- […]

Read more

மனசே மருந்து

மனசே மருந்து (மனநோய்க்கு மருந்தில்லா மருத்துவம்-ஹிப்னோதெரபி, டாக்டர் வேத மாலிகா, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை 17, பக். 240, விலை 150ரூ. நம் மனதுக்கும், உடல்நலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதை உணர்த்தும் வகையில் உடல் நலத்துக்கு மனசே மருந்து என்கிறது இந்நூல். இயந்திரமயமாகிவிட்ட இன்றைய அவசர யுகத்தில், போதிய ஓய்வின்றி, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து முடித்துவிட வேண்டும் என டென்ஷனாகிறோம். டென்ஷனைக் குறைக்க மாத்திரைகளை விழுங்குகிறோம். மனநோய்க்கு தொடர்ந்து தரப்படும் மருந்துகளே நரம்பு தளர்ச்சி போன்ற பல புதிய நோய்கள் […]

Read more

நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும்

நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 100ரூ. ஆயிரம் பிறைகண்ட ஆரூர்தாஸ், ஆயிரம் படங்களுக்கு வசனம் எழுதி சாதனை படைத்தவர். மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பட அதிபர்களுடன் நெருங்கிப் பழகியவர். திரை உலகம் பற்றிய விவரங்கள் இவர் விரல் நுனியில் இருக்கும். ஏ.பீம்சிங், பி. மாதவன், எல்.வி. பிரசாத், தாதாமிராசி, புல்லையா, சி.ஹெச். நாராயண மூர்த்தி, திருலோகசந்தர், கிருஷ்ணன் பஞ்சு, கே. சங்கர், ஏ.எஸ்.ஏ. சாமி, […]

Read more

ஏழாம் பாவம்(களத்திர பாவம்)

ஏழாம் பாவம்(களத்திர பாவம்), பி.எஸ். கேசவன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, திருமலை நகர் அனெக்ஸ், பெருங்குடி, சென்னை 96, விலை 100ரூ. பெண் ஜாதகத்துக்கு அமையும் கணவன், ஆணின் ஜாதகத்துக்கு அமையும் மனைவி குறித்த விவரங்களுடன் ஒவ்வொரு கிழமைக்கும் உகந்த நாள், நட்சத்திர பலன்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், பரிகார முறைகள், திதிகள், சந்திராஷ்டமம், யோகங்கள், நேரங்கள், தோஷம், திருமண பொருத்தங்கள், தினப்பொருத்தம், கணப்பொருத்தம், சகுணங்கள், திருமண தடை நீங்க, ருது பலன்கள், பெண்கள் ஜாதக பலன்கள் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. நன்றி: […]

Read more

விளக்கு இங்கே ஒளி எங்கே?

விளக்கு இங்கே ஒளி எங்கே?, காஞ்சி அண்ணல், மணிவாசகர் பதிப்பகம், பக். 112, விலை 40ரூ. சமுதாயப் பொறுப்பு அதிகம் கொண்ட ஆசிரியர் கற்பனை, சிந்தனை உணர்ச்சிகள் கலந்து எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் இவை. காந்திஜியின் கடைசி நிமிடங்கள் குறித்து எழுதிய நாடகத்தின் கருவே, நூலின் தலைப்பாக உள்ளது. பொறுமை, அன்பு, நேசம் காக்க விரும்பும் அனைவரும் படிக்கலாம்.   —-   ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும், டாக்டர் கே.ஆர். விட்டல்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை […]

Read more

கனவுகள்

கனவுகள் (ஒரிய மொழி சிறுகதைகள்), சந்திரசேகர் ராத்,ரா. குமரவேலன், சாகித்யஅகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 400, விலை 190ரூ. பேராசிரியர் சந்திரசேகர் ராத், ஒரிய மொழி எழுத்தாளர்களில் மிகச் சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர். அவர் ஒரு நாவலாசிரியரும், நல்ல கவிஞரும் கூட. அவர் எபதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் 25 சிறுகதைகளை மொழிபெயர்த்து தொகுத்திருக்கின்றனர். இவற்றில் சாமூவேல் பாதிரியாரின் கதை, உள்ளத்தை உருக்குவதாய் இருக்கிறது. அனாதை ஆசிரமத்தை நிர்வகிக்க அவர் படும்பாடு, தியாகம் ஆகியவை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. […]

Read more

உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 200, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-207-2.html நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் ஏங்கித் தவித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் மனஉளைச்சல்களையும் அதிலிருந்து அவள் மீண்டதையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் நாவல். அவளுடைய கணவன் ஊடகத்துறையில் செல்படக்கூடியவன். அவனுடைய நண்பன் நாட்டின் ஊழல் அரசியலை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறார்கள். இணைய தளங்கள் மூலமாகவும், கண்காட்சிகள் மூலமாகவும் மக்கள் விழிப்புணர்வு பெற வைக்கப்பாடுபடுகிறார்கள். மக்கள் எழுச்சியின் மூலம் […]

Read more

சமணம் வளர்த்த தமிழ்

சமணம் வளர்த்த தமிழ், பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் (மூன்று பாகம்) தமிழ் நிலையம், சென்னை 17,பக். 1233, விலை மூன்று தொகுதிகள் 700ரூ. வேதகாலத்திற்கும் முற்பட்டதான சமண சமயத்தின் மேன்மைகளைப் பற்றி, ரிக் வேதத்தில் குறிப்புகள் உள்ளன. சந்திரகுப்தர் தென்னாட்டுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியிருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பியர் சமண சமயத்தவர் என்பதும், தொல்காப்பியம் ஏசுநாதர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியிருந்திருக்கிறது. சமண […]

Read more
1 8 9 10 11 12 13