தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 650ரூ. அரசு அலுவலகங்களில் ஊழில் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஓர் அம்சமாகக் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முழு விவரங்களையும் இந்த நூல் தாங்கி இருக்கிறது. ஒவ்வொருவரும் நீதி மன்றத்தை அணுகாமலேயே வீட்டில் இருந்தபடி குறைந்த செலவில் நீதியைப் பெற முடியும் என்பதை இந்த நூல் விளக்கி இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவலைக் கேட்டுப் பெற 30 நாட்கள் காத்திருக்கத் தேவை இல்லை, 48 மணி நேரத்திலேயே தகவலைக் […]

Read more

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள்

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள், புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 150ரூ. நோட்டரி பப்ளிக் எனப்படும் சான்றுறுதி அதிகாரிகள் தொடர்பான சட்டம் மற்றும் விதிகள், அவர்களது அதிகாரம் ஆகிய அனைத்தும் மாதிரி படிவங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டு இருக்கின்றன. நோட்டரி பதவிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

ஊடகச் சட்டங்கள்

ஊடகச் சட்டங்கள், சந்திரிகா சுப்ரமண்யன், சந்திரோதயம் பதிப்பகம், விலைரூ.250. ஊடக சட்டங்கள் மற்றும் அறங்கள் பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம், 16 தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. எளிய மொழிநடையில் புரியும் வகையில், குறுந்தலைப்புகளில் நேரடி அடுக்கமைவு முறையில் தகவல்கள் அமைந்துள்ளன. ஊடகம் பற்றி மகாத்மா காந்தியின் பொன்மொழியுடன் துவங்குகிறது. தொடர்ந்து, நான்காவது துாண், இந்தியாவில் ஊடக சுதந்திரம் போன்ற விபரங்கள் தனித்தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயே ஆட்சியில் ஊடக சுதந்திரம் தனி இயலாக உள்ளது. ஊடகத்துறை வளர்ச்சி மற்றும் வணிகம் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. ஊடக செய்திகளை, […]

Read more

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், விலைரூ.110. சம்பளம் வாங்குவோருக்கான வருமான வரிச்சட்டத்தை விளக்கும் நுால். சட்ட நுணுக்கங்கள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. அரசு, அரசு சாராத பணிகளில் வரிப்பிடித்தத்துக்கு உரிய சம்பளம் வாங்குவோருக்கு மிகவும் உதவும். தனிப்பட்ட முறையில் வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டிய விபர அறிக்கை பற்றிய குறிப்பும், விளக்கமும் விரிவாக உள்ளது. வரி செலுத்துவது தொடர்பான அறிவை விரிவுபடுத்தும் நுால். நன்றி: தினமலர், 6.6.21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000027079_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005ம், பொதுத் தகவல் அலுவலரின் கடமைகளும், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.648; ரூ.550. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தத் தகவலை வேண்டுமானாலும் அரசுத்துறைகளிடமிருந்து கேட்டுப் பெற முடியும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. ஆனால் உண்மையில் எல்லாத் தகவல்களையும் நாம் பெற முடியாது என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. தகவலைத் தரும் நிர்வாக அமைப்புகள் குறித்த விரிவான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. தகவல் பெறும் உரிமைச் சட்டம் தோன்றியதன் பின்னணி, அதன் வரலாறு, […]

Read more

நீதி: ஒரு மேயாத மான்

நீதி: ஒரு மேயாத மான், கே.சந்துரு, போதிவனம் வெளியீடு, விலை: ரூ.200. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட இதழ்களில் எழுதிய 37 கட்டுரைகளின் தொகுப்பு. தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளுடன் இயற்றப்படுகிற பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள், ஊடகச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்கள், காவல் துறை நிகழ்த்தும் போலித் தற்காப்புக் கொலைகள், மதச்சார்பின்மைக் கோட்பாடு எதிர்கொள்ளும் சவால்கள், வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ராணுவச் சட்டங்கள், வெளிப்படைத் தன்மையற்ற நீதிபதி நியமனங்கள் என இந்திய அரசமைப்பின் அடிப்படைகள் […]

Read more

உழவுத் தொழிலுக்குப் போர்த்தப்படுவது

உழவுத் தொழிலுக்குப் போர்த்தப்படுவது, வெ.ஜீவகுமார், என்சிபிஹெச் வெளியீடு, விலை: ரூ.25 இயற்றப்படும் சட்டங்களைப் பற்றி அவைகளில் விவாதிக்கிறபோது உறுப்பினர்களின் வாக்கெடுப்புக் கோரிக்கை நிராகரிக்கப்படுவது ஜனநாயக விரோதம். வேளாண் சட்டங்கள் குறித்த விமர்சனங்கள் இந்தக் குற்றச்சாட்டிலிருந்தே தீவிரம் கொள்கின்றன. சிறுகுறு விவசாயிகளின் நிலை என்னவாகும் என்ற அச்சம், பாதிக்கப்பட்டவருக்கான நிவாரணங்கள் குறித்து நிலவும் தெளிவின்மை, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உறுதியின்மை ஆகியவற்றை இந்தக் குறுநூல் விவாதிக்கிறது. இந்நூலை எழுதிய தஞ்சை வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் விவசாயிகளின் உரிமைகளுக்கான களச் செயல்பாட்டாளர் என்பதால், சட்டரீதியான விளக்கங்களுடன் இந்திய விவசாயிகள் […]

Read more

சாலை விபத்து தீர்வும் நஷ்டஈடும்

சாலை விபத்து தீர்வும் நஷ்டஈடும், ஏ.கே.எஸ்.தாஹிர், ஏ.எஸ்.பிலால், பாரதி புத்தகாலயம், பக். 84, விலை 70ரூ. சாலை விபத்து ஏற்பட்டால் சட்ட வழியில் நிவாரணம் பெறுவதற்கு உதவும் வகையில் தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். சட்ட சேவை மைய வழக்கறிஞர்கள் எளிமையாக படைத்துள்ளனர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விபத்து எனும் ஆபத்தில் துவங்கி, கவனக்குறைவு மற்றும் உரிமைகள் என்பது உட்பட, 10 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. விபத்துக்கு பின் சுலபமாக நிவாரணம் பெறுவது, விபத்தை தடுக்கும் வழிமுறை என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. கடுகளவும் நீதி, நியாயம் […]

Read more

நீதிமன்றமும் அறமும்

நீதிமன்றமும் அறமும், டாக்டர் ஆ.கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஊழல் ஓழிப்போர் கூட்டமைப்பு, பக். 160, விலை 150ரூ. படித்தவர்களிடம் கூட போதிய சட்ட அறிவு இன்மையால், வழக்குரைஞர்களிடம் சிக்கி நீதி கிட்டாமல் நிம்மதி இழப்பதையும், சட்டத் திரித்தல் மலிந்து அநீதிக்குச் சாதகமாக தீர்ப்புகள் உள்ளதையும் உதாரணங்களோடு வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நுால். நீதிமன்றங்களில் பெற்ற அனுபவங்களைத் தொகுத்தளித்திருக்கிறார். அரசு மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பொதுநல வழக்குகள் தொடர்ந்த போது கிட்டிய அவமானங்களை கேள்விகளால் ஆராய்ந்துள்ளார். சட்டப்பிரிவுகளின் இருள் பொதிந்த இடைவெளிகளை வெளிச்சம் போட்டுக்காட்ட முற்படுவதோடு, அறம் […]

Read more

சட்ட சிக்கல் இல்லாத காவல் துறையின் கட்டுப்பாடு இல்லாத மருத்துவ சேவைக்கு

சட்ட சிக்கல் இல்லாத காவல் துறையின் கட்டுப்பாடு இல்லாத மருத்துவ சேவைக்கு, டாக்டர் கு.தங்கமுத்து, ஐ.ஆர்.ஐ.எஸ்.பப்ளிகேசன்ஸ், பக். 328, விலை 300ரூ. உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு ஏற்படும் இன்னல், வழக்குகளை எதிர் கொள்ளும் வழி முறையை விளக்கும் நுால். வழக்குகளில் தீர்வு காணும் முறையும் விளக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மருத்துவருக்கு பயன் தரும் நுாலாகும். – பேராசிரியர் இரா.நாராயணன் நன்றி : தினமலர், 16/8/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more
1 2 3 4 12