ஈழம் 87

ஈழம் 87, வரலாற்று ஓவியப் பதிவு, தாய்ப்பனை வெளியீடு, விலை 500ரூ. ஓவிய வடிவில் ஈழப்பிரச்னை ஈழப் பிரச்னையை விளக்கும் பல நூல்களுக்கு மத்தியில் அப்பிரச்னையின் ஒரு முக்கிய காலகட்டத்தைர ஓவியங்களின் மூலமாகச் சொல்கிறது இந்த நூல். அங்கங்கே வர்ணனையாக குறிப்புகளை உணர்வுடன் எழுதி இருப்பவர் புகழேந்தி தங்கராஜ். 1987ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபாகரன் – ராஜீவ்காந்தி சந்திப்பு முதல் அதன் பின்னர் நிகழ்ந்த இந்திய அமைதிப்படை – புலிகள் மோதல் போக்கு என 1987 முதல் 1990 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த […]

Read more

என் பெயர் கதை சொல்லி 1

என் பெயர் கதை சொல்லி 1, ரா.அருள் வளன் அரசு, வசந்தா பதிப்பகம், விலை 120ரூ. உரையாடல் தொகுப்பு காவேரி தொலைக்காட்சியில் ஊடகவியலாளர் ரா.அருள் வளன் அரசு நிகழ்த்திய பதினைந்து ஆளுமைகளுடனான சந்திப்பின் எழுத்து வடிவ தொகுப்பு நூல் இது. கவிஞர் மனுஷ்யபுத்திரன், சல்மா, மனுஷி, நெல்லை ஜெயந்தா, பத்திரிகையாளர் ரவி பிரகாஷ், எழுத்தாளர்கள், ஜோ.டி.குரூஸ், பாஸ்கர் சக்தி, ரமேஷ் வைத்தியா, நா.முத்துக்குமார், பேச்சாளர் சுந்தரவல்லி எனப் பல்வேறுபட்ட ஆளுமைகளின் உரையாடல்கள் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் நேர்காணலில் கலைஞர் கருணாநிதியுடன் […]

Read more

அகமுகம்

அகமுகம், குட்டி ரேவதி, காஞ்சனை நூலாறு, ஆழி பதிப்பகம், விலை 70ரூ. உள்ளத்தின் உரையாடல்கள் கூர் அலகுகளுடன் கம்பியில் வந்தமரும் மதியக் காகங்கள் எவ்வளவு கருமையை ஊற்றிப்போகின்றன இந்நாளைய பொழுதுக்கு -இதுபோன்ற அபூர்வமான காட்சிகளால் நிறைந்துகிடக்கிறது குட்டி ரேவதியின் புதிய கவிதைத் தொகுப்பு ‘அகமுகம்’. கூர்மையான மொழியால் தன் அகத்தின் குரலைத் திரட்டி உரையாட முயலும் உள்ளத்தின் எத்தனிப்பை இதில் காணமுடிகிறது. நிலாவும் புலியும் உலாவரும் கவிதைகளில் இருக்கும் இறுக்கமான உணர்வும், அகத்தனிமையின் கூர் நோக்கும் சில்லிட வைக்கின்றன. அத்திரமரத்தைப் பற்றிய கவிதையொன்று அந்த […]

Read more

கல்வெட்டில் தேவார மூவர்

கல்வெட்டில் தேவார மூவர், கா.ம.வேங்கடராமையா, சேகர் பதிப்பகம் சைவ மரபில் தேவார மூவருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அன்றாட வழிபாட்டில் மூவர் தேவாரப் பாடல்களைப் பாடுகிறவர்கள் ஏராளம். அநேகமாக எல்லா சிவ ஆலயங்களிலும் நாவல்வர் திருவுருவச்சிலைகளை அமைத்து வழிபடுகிறார்கள். ‘கல்வெட்டில் தேவார மூவர்’ என்ற பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவின் நூலைப் படிக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வேரூன்றிய மரபு இது என்று புரிகிறது. தமிழகமெங்கும் பக்தர்களும் மன்னர்களும் தேவார மூவரை எப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்நூல். குறிப்பாக, இந்நூலில் வரும் பெயர்கள் அனைத்தும் நம்மை […]

Read more

எம்.ஜி.ஆர். என்ற ஹிந்து

எம்.ஜி.ஆர். என்ற ஹிந்து, ம.வெங்கடேசன், கிழக்கு பதிப்பகம் ம.வெங்கடேசனின் சமீபத்தைய புத்தகம் ‘எம்.ஜி.ஆர். என்கிற ஹிந்து’. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகம் முனைந்ததை ஒட்டி ஏற்பட்ட ஆய்வில் இப்புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் ம.வெங்கடேசன். சில புத்தகங்கள் உணர்வுப் பூர்வமாக இருக்கும். சில புத்தகங்கள் வெறும் தகவல்களாக இருக்கும். இப்புத்தகம், ம.வெங்கடேசனின் மற்ற புத்தகங்களான ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’, ‘தலித்துகளுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி’ போன்ற புத்தகங்களைப் போலவே, மிகவும் விவரமாக தரவுகளுடன் எழுதப்பட்ட புத்தகம். ஹிந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயர் […]

Read more

அவள்

அவள் – பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், விலை 90ரூ. பெண்ணியப் பார்வை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் எழுதியுள்ள இந்நூல் உரையாடலுக்கான நூலாகும். பல்வேறு சமயங்களில் உள்ள பெண்களைச் சிறுமைப்படுத்தும் போதனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நபிகள் காலத்தில் பெண்களுக்கு அரசியல் முதல் ஆன்மீகம் வரையில் சமத்துவ உரிமைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நிகழ்ந்துள்ள மாற்றம் இந்தியாவில் இன்னும் வரவில்லை என்று ஒப்புக்கொள்கிறார் நூலாசிரியர். பெண்களின் பாதுகாப்புக்காகத்தான் கட்டுப்பாடுகள் என்ற வாதத்தை எதிரொலிக்கும் […]

Read more

சாஅய்

  சாஅய், சாமானியன், சந்தியா பதிப்பகம், விலை 95ரூ. கவனம்கோரும் கவிதை கோ.சாமானியன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு சாஅய். பட்டினியில் இருக்கும் மனிதனுக்கு கடவுள் மேல் எழும் தார்மீகக் கோபம், கணேஷ் பீடியும் கடன் தொல்லையுமாய் தெருக்கூத்தில் ராஜா வேஷம் கட்டும் கலைஞனின் வறுமை, தமிழர்களை சக அடிமைகள் என விளிக்கும் அறச்சீற்றம் என ஆரம்பநிலைக் கவிஞர்களின் முதல் தொகுப்பில் இருக்கும் சமூகக் கோபமும் அதே அளவிலான சமூக அக்கறையும் நிறைந்த தொகுப்புதான் இது. முதல் தொகுப்பிலேயே கவனம் ஈர்க்கும் கவிஞராக இருப்பதால் […]

Read more

காச்சர் கோச்சர்

காச்சர் கோச்சர், விவேக் ஷான்பாக், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. நகர வாழ்நிலை பட்டம்விடும் நூல் உருண்டைகள் சிக்கிக் கொண்டதை சிறுவன், ‘கோச்சர் காச்சர் ஆயிருச்சு’ என்கிறான். நகரவாழ்வின் இத்தகு சிக்கல்களைப் பேசும் கன்னட நாவலே ‘காச்சர் கோச்சர்’ இதை எழுதிய பொறியியலாளர் விவேக் ஷான்பாக். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகன். புதுமையையும் எளிமையையும் குழைத்து எழுதியிருக்கிறார். பெங்களூரின் பழைய காப்பி ஹௌஸ் கம்பாரில் கதை துவங்குகிறது. சோம்பேறியான பணக்கார இளைஞனே கதை சொல்லி. முதல் காட்சியிலேயே ஓர் இளம்பெண் கோபத்தில் தண்ணீர் கிளாஸையெடுத்துத் தன் நண்பன் […]

Read more

இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை

இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, சு.தியோடர் பாஸ்கரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 190ரூ. மனிதனின் தோழர்கள் இந்தியாவின் நாய் வகைகள் பற்றிய நல்ல அறிமுகம் தரும் நூல் இது. ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி என்கிற தமிழ்நாட்டு வேட்டை நாய்கள் பற்றியும் முதோல், கேரவான், இமாலய மாஸ்டிஃப், இமாலய மேய்ப்பு நாய், கூச்சி, புல்லிகுட்டா, சிந்தி, பக்கர்வால், பட்டி போன்ற பயன்பாட்டு நாய்கள், லாசா ஆப்சோ, திபெத்திய ஸ்பேனியேல், திபெத்திய டெர்ரியர் ஆகிய துணைநாய்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் நாய்கள் வளர்ப்பு பற்றிய […]

Read more

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம், கே.என். சிவராமன், சூரியன் பதிப்பகம், விலை 320ரூ. தெரியாத விஷயம் எல்லாம் தமிழ் சினிமாவின் பழைய சங்கதிகள்தான். சாதனையாளர்களின் வாழ்வில் இருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சுவாரசியமான சாற்றின் துளிகள்தான். ஆனால் மரணமசாலா எழுத்தைக் கடைப்பிடிப்பதில் நிபுணரான பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் கைவண்ணத்தில் எடுத்தால் வைக்கவே முடியாத விதத்தில் எழுதப்பட்டிருக்கும் நூல்தான் தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் ஆரம்ப கட்டம், தோல்வியிலிருந்து மீண்டு வந்த தருணங்கள், சறுக்கி விழுந்து காணாமல் போன நொடிகள் என எதெல்லாம் படிக்க ஆர்வமாக […]

Read more
1 2 3 4 12