நானும் எனது நிறமும்

நானும் எனது நிறமும், ஓவியர் புகழேந்தி, தோழமை வெளியீடு, விலை 350ரூ. காலத்தின் பதிவு, நானும் எனது நிறமும் என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தன் வரலாறு எழுதியுள்ளார். நாலு கி.மீ. தூரம் தினமும் நடந்து சென்று படித்துக் காலையிலும் மாலையிலும் தோட்ட வேலைகள் செய்து,தனக்குப் பிடித்தது ஓவியப்படிப்பு தானென்பதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதைப் படிக்க ஏற்பட்ட எதிர்ப்பையும் மீறி அதில் பட்டப்படிப்பு முடித்து முதுநிலைப் பட்டமும் பெற்று இன்று சமூக உணர்வும் தமிழுணர்வும் கொண்ட ஓவியனாய் உயர்ந்து நிற்பதைக் கோர்வையாக எடுத்துச் […]

Read more

நான் ரசித்த வாலி

நான் ரசித்த வாலி, திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், வாலி பதிப்பகம், விலை 90ரூ ரசிகனின் பார்வை புலமை எதுவும் பெற்றிராத ஒரு இரசிகனின் பார்வையில் வாலியின் பாடல்களில் மிளிரும் எண்ணங்களின் பதிவே இது – என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். தமிழ் திரைப்பட உலகை விரல் நுனியிலும் தன் ஆவணக்காப்பகத்திலும் வைத்திருக்கும் சந்தானகிருஷ்ணன் வாலியின் பாடல்களைப் பற்றிய தன் எண்ணங்களை நன்றாக பகிர்ந்து கொண்டுள்ளார். ‘பூவரையும் பூங்கொடியே, பூமாலை போடவா’ என்ற பாடலில் ஆரம்பிக்கும் நூலாசிரியர் இப்பாடலின் சூழலை விவரித்து, பாடலின் நயங்களை எழுதுகிறார். அத்தோடு […]

Read more

விடம்பனம்

விடம்பனம், சீனிவாசன் நடராஜன், காலச்சுவடு, விலை 575ரூ. காலதரிசனம் கீழத் தஞ்சை மாவட்டத்தில் கடந்துபோன ஐம்பது ஆண்டுகால வாழ்வின் பின்னணியில் செல்லும் நாவல் சீனிவாசன் நடராஜனின் விடம்பனம். நாவலுக்கென்று நாம் அறிந்திருந்த எந்த ஒழுங்கும் இல்லாமல் ஓர் ஓவியர் பல்லாண்டாக வரைந்த ஓவியத் தொடர்போல இந்நாவல் அமைந்திருக்கிறது. நாவலாசிரியரும் ஒரு தேர்ந்த ஓவியர் என்பதால் இது சாத்தியம் ஆகியிருக்கலாம். இந்த தொடர்பற்ற தன்மையைத் தாண்டி, மென்மையான கிறுகிறுப்பூட்டும் தன் நடையால் கவர்கிறது இந்நாவல். மலர்கள் பூத்த குளமும் வாய்க்காலும், நெல்வயலும், கிணறுகளும், குடிசைகளும், தென்னை […]

Read more

நெருப்புப் பொறிகள்

நெருப்புப் பொறிகள், அரசியல் சமூக பொருளாதாரக் கட்டுரைகள், பேராசிரியர் மு. நாகநாதன், கதிரொளி பதிப்பகம், விலை 150ரூ. ஆழமும் விரிவும் தமிழ்நாட்டில் வாழும் முக்கியமான பொருளாதாரம், மாநில சுயாட்சியில் அறிஞரான பேராசிரியர் நாகநாதனின் கருத்துக்கள் எப்போதுமே கவனிக்கத்தக்கன. திமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தாலும் கூட அவரது கருத்துகளில் துணிச்சலும் தனித்துவமும் இருக்கும். அவர் சிந்தனையாளன் இதழில் குட்டுவன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் பத்தியிலும் இந்த தனித்துவம் இருந்தது. இந்திய அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், மதம், நீதித்துறை, சாதியம், மத்தியில் ஆளும் கட்சிகள் […]

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ.வெண்ணிலா, அகநி, விலை 275ரூ. பெண்முகம் ‘நானும் கவிதையும் வேறுவேறல்ல, கவிதை பெயரிடப்படாத நான், நான் பெயரழிந்த கவிதை’ என்ற நூலின் முகப்பிலேயே குறிப்பிடும் கவிஞர் வெண்ணிலா இந்த கவிதைத் தொகுப்பில் தன் மொத்த கவியுலகத்தையும் பார்வைக்கு வைக்கிறார். பொதுவாக கவிதை என்பதை மொழி தெரிந்த யார் வேண்மாடுனாலும் எழுதிவிடக்கூடும். ஆனால், அதன் பின்னால் இயங்கும் பித்துப்பிடித்த கவிமனம் தான் கவிஞருக்கும் ‘தொழில் நுட்பவாதிகளுக்கான’ வித்தியாம். வெண்ணிலாவின் கவி உள்ளம் நெகிழ்ச்சியானது. உறவுகளை, உணர்வுகளை, வாழ்வை, சூழலை நெகிழ்வோடு காண்கிறார். […]

Read more

சொக்கப்பனை

சொக்கப்பனை, கடங்கநேரியான், வலசை பதிப்பகம், விலை 60ரூ. அறவெழுச்சிக் கவிதைகள் கவிஞர் கடங்கநேரியானின் மூன்றாவது தொகுப்பாக வெளிவந்திருக்கும் சொக்கப்பனையில் முந்தைய இரண்டு தொகுப்புகளையும் விட கவிமொழியில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். தான் வாழும் காலத்தில் நடக்கும் சமகால அரசியலை, நிகழ்வுகளை முடிந்த அளவுக்கு கவிதைகளில் படைத்திருப்பதாகச் சொல்லும் இவரது கவிதைகளில் வாழ்நிலத்தின் கூறுகள் நிரம்பிக்கிடக்கின்றன. மேகாற்றில் வேப்பம்பூ உதிரும் கிணற்றைக் கொண்டவள் நீ! அண்டங்காக்கைகள் அறிந்தே அடைகாக்கும் குயிலின் முட்டைகளை! மின்னல் கள்ளருந்திச் சென்ற மொட்டைப்பனை! இவ்வாறாக தெறிக்கும் வாழிடம் சார்ந்த காட்சிகளின் ஊடே […]

Read more

M.G.R. எழுத்தும் பேச்சும்

M.G.R. எழுத்தும் பேச்சும், தொகுப்பாசிரியர் வே. குமரவேல், முல்லை பதிப்பகம், விலை 250ரூ. எழுத்தும் பேச்சும் எம்.ஜி.ஆர். இன்று வழிபடப்படும் ஓர் அரசியல் பிம்பம். அவரது பேச்சும் எழுத்தும் என்று எதுவும் இன்றைய இளைஞர்கள் அறிய அரசியல் அரங்கில் முன்வைக்கப்படுவதில்லை. இந்த இடைவெளியை நிரப்பக்கூடியது எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும் என்கிற இருபாகமாக வந்திருக்கும் தொகுப்பு. எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்குவதற்கும் மன்னும் பின்னுமாக நிறைய நேர்காணல்கள், கட்டுரைகள், அறிக்கைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்பாடலில் இருந்திருக்கிறார். வெறுமனே தன்னுடைய திரைபிம்பம் எழுப்பித் தந்த கவர்ச்சியை மட்டும் […]

Read more

அச்சுதம் கேசவம்

அச்சுதம் கேசவம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், விலை 310ரூ. வேர்களின் கதை அரசூர் வம்சம், விஸ்வரூபம் ஆகிய இரா. முருகனின் நாவல்கள் வரிசையில் மன்றாவதாக வெளியாகியிருக்கிறது அச்சுதம் கேசவம். இந்நாவலில் சிறு கதையாடல்கள் மூலம் கதையோட்டத்தை முன்னோக்கி செலுத்துகிறார் முருகன். அரசூரைச் சேர்ந்த உறவுகள் காலப்போக்கில் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேர்களை உணர்ந்தறிவதே இந்த நாவலின் சுருக்கம் என்று சொல்லிவிடலாம். பெரும் திருப்பங்களோ, நாடகார்த்த நிகழ்வுகளோ இல்லாமல் அதே சமயம் சுவாரசியமான தனிமனிதர்களின் கதைகளைச் சொல்லிக்கொண்டே செல்கிறார் எழுத்தாளர். […]

Read more

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு, சுந்தரபுத்தன், பரிதிபதிப்பகம், விலை 150ரூ. மணம் வீசும் நினைவுகள் கண்ணையும் காதையும் திறந்துவைத்திருக்கிறவர் பத்திரிகையாளர் சுந்தரபுத்தன். சென்னையின் மஞ்சள் பூக்கள் நிறைந்த தெருக்களையும் கிராமத்தில் வெல்லம் அடைத்து சுட்டுத்தின்னும் தேங்காய்களையும் ஒரே நேரத்தில் எழுதுகிறவர். நகரவாழ்விலிருந்து கிராம வாழ்வின் ஏக்கங்களை, பெருமூச்சுகளை பதிவு செய்யும் இவரது எழுத்துகளில் ஏராளமான மனிதர்கள் வந்துபோகிறார்கள். பூவிற்கும் பெண்மணி முதல் நடிகர் சிவாஜிகணேசன் வரை எத்தனைபேர்? தன் தந்தையாரை என்ன மீசை எப்படி இருக்கே என்று நடிகர் சிவாஜிகணேசன் கூப்பிட்டதாக நினைவுகூரும் இவர் […]

Read more

டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. ஜேசி குமரப்பா: ஆளுமையும் கருத்துகளும் தஞ்சையில் பிறந்து இங்கிலாந்தில் படித்து தணிக்கையாளர் ஆகி, மும்பையில் தொழில் செய்த இளைஞர் அவர். பின்னர் அமெரிக்கா சென்று மேற்படிப்பு முடித்து மும்பை திரும்பியிருந்தார். மேற்கத்திய பாணியில் நடை உடை பாணிகள் கொண்டவர். பொருளாதாரம் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதை நூலாக வெளியிட காந்தியை அணுகுமாறு சொன்னார்கள். காந்தியை சந்திக்கப்போனபோது காத்திருக்க வேண்டியிருந்தது. பார்க்காமல் கட்டுரையை மட்டும் அளித்துவிட்டுத் திரும்பிவிட்டார். […]

Read more
1 2 3 4 5 6 12