அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம், சாரு நிவேதிதா, அந்திமழை, விலை 200ரூ. மனதில் பட்டத்தை துணிச்சலாக எழுதும் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் ஒரு பத்திரிகையில் எழுதிய கேள்வி – பதில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, இலக்கியம், கடவுள், மதுவிலக்கு… இப்படி சகலவிதமான விஷயங்களையும் அலசி இருக்கிறார். சில பதில்கள் சிந்திக்க வைக்கின்றன. சில சிரிக்க வைக்கின்றன. ஒரு ஜோசியர் பற்றி அவர் எழுதியிருப்பதாவது: “ஒருமுறை அவர் இந்திரா காந்திக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார். நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு இந்திரா காந்தி […]

Read more

ஹிந்துத்துவ சிறுகதைகள்

ஹிந்துத்துவ சிறுகதைகள், அரவிந்தன் நீலகண்டன், தடம் பதிப்பகம், விலை 125ரூ. காவிக்கதைகள் எந்த முகமூடியும் இல்லை, தலைப்பே சொல்லிவிடுகிறது இந்துத்துவா என்று. அதற்காகவே அரவிந்தன் நீலகண்டன் கவனம் பெறுகிறார். பிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயாசமாகத் தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு என்கிறது பின்னட்டைக் குறிப்பு. உண்மைதான். வரலாற்றப்பின்னணியில் இந்து மதப் பெருமை பேசும் கதைகள் மிகவும் கவனமான இலக்கிய உத்திகளுடன் மொழியாளுமையுடன். அமுதம் என்கிற முதல் சிறுகதை நாயக்கர் காலத்தில் கோயில் ஒன்றில் நிகழ்ந்த சாதிக்கெதிரான தனிமனித கலகத்தைப் பேசுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு […]

Read more

கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?

கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?, குழந்தைகள் திரைப்படங்கள், ஸ்ரீரசா, கடவு வெளியீடு, விலை 100ரூ. நுண்ணிய உலகம் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் உண்மையில் குழந்தைகளுக்கு மட்டுமானவை அல்ல. பெரியவர்களுக்கும்தான். அதுபோன்ற 19 திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல். மதுரையில் தமிழ்நாடு குழந்தைகள் திரைப்பட இயக்கத்தின் சார்பாக 2014ஆம் ஆண்டு திரையிடப்பட்ட படங்களைப் பற்றி நூலாசிரியர் தீக்கதிர் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வாட்ஜ்தா என்ற சௌதி அரேபியாவில் உள்ள 11 வயது சிறுமியின் கனவுகளைச் சொல்லும் படமே பெண்ணியப்பார்வையிலும் பலவிஷயங்களைச் சொல்வதாக இருக்கிறது. சைக்கிள் ஓட்ட […]

Read more

மௌனத்தின் சாட்சியங்கள்

மௌனத்தின் சாட்சியங்கள், சம்சுதீன் ஹீரா, பொன்னுலகம் பதிப்பகம், விலை 350ரூ. கலவரத்தின் சாட்சியங்கள் சென்னையில் உள்ள வாசகசாலை அமைப்பின் இலக்கியப் பரிசு பெற்ற நாவல். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் அகம் புறம் இரண்டையும் விலாவாரியாகப் பேசுகிறது. யாசர் என்றொரு அப்பாவி மனிதன் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதாகி செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவித்து விடுதலையாகி சென்னை நோக்கி ரயிலில் செல்கிறான். அந்த பயணத்தில் அவன் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதே இந்நாவல். குண்டுவெடிப்புக்கு முன்னால் அதற்கான சூழல் உருவான விவரங்களை நாவலாசிரியர் சம்சுதீன் ஹீரா உள்விவகாரங்களைத் […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ.சுசீலா, வம்சி புக்ஸ், விலை 180ரூ. தலைமுறைகள் யாதுமாகி ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்கிறது. கொள்ளுப்பாட்டி அன்னம்மாவுக்கு பத்து வயதில் திருமணம் நடக்கிறது. அதன் பிறகான அவளது வாழ்க்கை அடுப்படியின் கரியோடு உறைந்து போகிறது. கொள்ளுப்பேத்தி நீனா ஐஏஎஸ் படிக்கிறாள். இந்த தலைமுறை இடைவெளியை வலியோடும், உறுதியோடும் தாங்கிக்கொண்டு கல்வியையும், நம்பிக்கையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார் அன்னம்மாவின் மகள் தேவி. காலக் கடிகாரத்தின் பெண்டுலம்போல தேவியின் மகள் சாரு அம்மாவின் வாழக்கையையும் தன்னையும் பற்றி நினைத்தபடி இருக்கிறாள். […]

Read more

ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி பதில்கள்

ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி பதில்கள், தொகுப்பு ஜெயசிம்ஹன், எழில்முத்து. ஜே.கே. வாசகர் வட்டம் வெளியீடு, விலை 150ரூ. ஜே.கே.வின் பார்வை கல்பனா பத்திரிகை 1979ல் ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பத்திரிகை. இது சிறுகதை, குறுநாவலுக்கு முக்கியத்துவம் தந்த பத்திரிகை. இதில் அவர் எழுதிய வலுமையான கட்டுரைகள், கேள்வி பதில் பகுதிகள் ஆகியவை இடம்பெற்ற பக்கங்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. கலைஞர் கருணாநிதியை ஜெயகாந்தன் சந்தித்து எடுத்த நேர்காணல் மிகமுக்கியமானது. அதேபோல் எம்.ஜி.ஆருக்கு அர்த்தமுள்ள கேள்விகள் என்ற பெயரில் அவர் முன்வைத்திருக்கும் கேள்விகளைப் படிக்கும்போது […]

Read more

சரோஜாதேவி

சரோஜாதேவி, யுவகிருஷ்ணா, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கத்திமேல் குத்தாட்டம் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024036.html பத்திரிகையாளரான யுவகிருஷ்ணாவின் சரோஜாதேவி புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஏற்கெனவே அவருடைய வரைப் பக்கத்தில் வெளியானவை. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து, புன்னகைத்து கடந்து போன பதிவுகளை புத்தகமாக படிக்கும்போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வரலாற்றில் இந்த தகவல்கள் இடம் பெறாமல் போனால் தமிழன் ரத்தம் கக்கியே சாவான் என்று தொகுத்ததோடு அல்லாமல் சாருநிவேதிதாவுக்கு சமர்ப்பணம் வேறு […]

Read more

செவக்காட்டு சொல் கதைகள்

செவக்காட்டு சொல் கதைகள், கழனியூரன், புக்ஸ் பார் சில்ட்ரன், சென்னை, விலை 140ரூ. செவக்காட்டு சொல்கதைகள் என்ற இந்த நாட்டுப்புற கதைக் களஞ்சியத்தை படைத்திருக்கிறார் எழுத்தாளர் கழனியூரன். கர்ணன் என்கிற மகாபாரதப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு நாட்டுப்புற மக்கள் உருவாக்கி இருக்கும் கதைகளை விவரிக்கும் அத்தியாயம் சுவாரசியம். அன்னதானம் மிக முக்கியமான மானுடப்பண்பாகப் பேணப்பட்டது என்பதைக் காண்பிக்கும் கதை இது. அத்துடன் கெட்டது செய்பவன் ஜெயிக்க முடியாது என்பதை தீர்மானமாக கிட்டத்தட்ட இதில் உள்ள எல்லா கதைகளும் சொல்கின்றன. நமது ஐதீகங்களில் புழுங்கும் ஐந்து […]

Read more

சென்றுபோன நாட்கள்

சென்றுபோன நாட்கள், எஸ்.ஜி.இமானுஜலு நாயுடு, ஆ.இரா வேங்கடாசலபதி வெளியீடு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 125ரூ. இதழியல் பக்கங்கள் தன் 17வது வயதில் பத்திரிகை தொடங்குவது என்பதை யாரேனும் நினைத்துப்பார்த்திருக்க முடியுமா? 1904ல் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு நினைத்துப் பார்த்ததுடன் பிரஜாநுகூலன் என்ற மாத இதழையும் ஆரம்பித்திருக்கிறார். இந்த இதழை நடத்தினாலும் சுதேசமித்திரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதியவராகவும் பங்களித்தவராகவும் இவர் இருந்திருக்கிறார். 1926ல் இவர் ஆசிரியராக அமர்ந்த ஆநந்தபோதினி இவருக்குப் பேரும் புகழும் பெற்றுத்தந்தது.1934ல் இந்தப் பத்திரிகையிலிருந்து விலகிய கொஞ்சநாளிலேயே இவர் மரணம் அடைந்தார். […]

Read more

லைட்டா பொறாமைப்படும் கலைஞன்

லைட்டா பொறாமைப்படும் கலைஞன், இசை,  காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 100ரூ. சில்லென்று ஒரு தொகுப்பு! பாரதியின் கவிதைகளைப் பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றைக் கொண்ட இந்த கட்டுரைத் தொகுப்புக்கு நடிகர் வடிவேலுவைப் பற்றிய சின்னகட்டுரை ஒன்றின் தலைப்பை வைத்திருக்கிறார் கவிஞர் இசை. ஒரு வினோதமான ஆசை இது என்று முன்னுரையில் குறிப்பிடும்போதே இசை இந்த கட்டுரைத் தொகுப்பு எப்படி இருக்கும் என்பதைக் கோடிட்டுக்காட்டிவிடுகிறார். பெருமாள் முருகன் கவிதைகளுடனான பயணம், திருடன் மணியன் பிள்ளை புத்தகம் பற்றிய கட்டுரை, ஞானக்கூத்தன் கவிதைகள், கட்டுரை, க.மோகனரங்கனின் […]

Read more
1 3 4 5 6 7 12