பயணம்

பயணம், அரவிந்தன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 350ரூ. இனி இந்த வீடு என்னுடையதல்ல என்னும் எண்ணத்துடன் வீட்டைவிட்டு வெளியேறும் இளைஞனான ராமநாதனின் துறவுப்பயணமே 390 பக்கங்களில் விரியும் இந்நாவல். ஒரு இந்து சுவாமியின் ஆசிரமத்தில் சேர்ந்து, ஆசிரமம் செய்கிற சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல கிராமங்களில் அவன் பணியாற்றி தன்னையும் உயர்த்திக்கொள்கிறான். யோகாசனங்களில் சிறந்தவனாக இருக்கும் அவன் தன் பயணத்தில் ஆசான்கள் மூலம் மேலும் திறமைவாய்ந்த யோகாசனப் பயிற்சியாளன் ஆகிறான். ஆனால் அவனால் பிரம்மச்சர்யம் காக்க முடிவதில்லை. ஒரு பெண் மீது […]

Read more

வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்

வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள், சந்திரா, பட்டாம்பூச்சி பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. நீலத்தின் காதல் காதல், காத்திருப்பு, தனிமை, பயணம், கோபம் உள்ளிட்ட பல உணர்வு சார்ந்த அனுபவங்களைத் தேக்கி வெளியாகியிருக்கிறது வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள் என்கிற இந்த கவிதை நூல். காதலைப் பிரயாதீர் என்ற தலைப்பில் இருக்கும் ஒரு கவிதை மட்டுமேகூட இந்த தொகுப்பை இன்னொரு உயரத்துக்குக் கொண்டு செல்ல போதுமானது என்று சொல்லலாம். மழையடிக்கும் பொழுதுகள் காதலைச் சொல்லும் தூத கணங்கள் அன்பர்களே உங்கள் காதல் முறிவினை அப்போது நிகழ்த்தாதீர்கள் […]

Read more

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை, தமிழில் எஸ். ராஜலட்சமி, அவ்வை இல்லம், ராஜலட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை, சென்னை, விலை 150ரூ. சாதனையாளரின் சுயசரிதை இந்தியாவின் முதல் பெண் மருத்துவப் பட்டதாரி, சட்டமன்ற உறுப்னிர் என்ற பெருமைகளை அடைந்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்த சுயசரிதை பல்லாண்டுகள் கழித்து இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆங்கில ஆட்சியில் தமிழகம் இருந்த நிலை, இங்கே கொண்டுவரப்பட்ட முக்கியமான பெண்ணுரிமை மற்றும் குழந்தைகள் உரிமை சட்டங்கள் ஆகியவற்றுக்கான பின்புலம், மகளிர் உரிமை இயக்கங்கள் ஆகியவற்றைப் […]

Read more

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. விறுவிறுப்பான தகவல்கள் அழகு முத்துக்கோன், பூலித்தேவர், ஹைதர் அலி, வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், திப்பு சுல்தான், ஜான்சி ராணி, வாஞ்சிநாதன், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி. என்று நீளும் தேசபக்தர்களின் வீரம் செறிந்த வரலாறு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற நூல்கள் இருந்தாலும் இந்நூலாசிரியர் தகவல்களைப் பதிவு செய்வதில் ஆழ்ந்த கவனத்தையும் வரலாற்றப் பார்வையும் கொண்டவர் என்பதால் இந்த நூல் சிறப்பாக வந்துள்ளது. பூலித்தேவன் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார் என்னும் […]

Read more

ஜென் தொடக்க நிலையினருக்கு

ஜென் தொடக்க நிலையினருக்கு, தமிழில் சேஷையா ரவி, அடையாளம் வெளியீடு. எளிமையாய் ஓர் அறிதல் ஜென் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? அதைப் பயில்வது எப்படி? அதன் தத்துவம் எப்படிப்பட்டது போன்ற விவரங்களை ஆரம்ப கட்ட நிலையினருக்கு சொல்லும் நூல் இது. இதன் சிறப்பியல்பு மிகவும் எளிமையான மொழியில் அழகான படங்களுடன் இது எழுதப்பட்டுள்ளது என்பதுதான். ஜுடித் பிளாக்ஸ்டோன், ஸோரஜோசிபோவிச் என்ற இரு அமெரிக்கர்களும் ஜென் பௌத்தம் பயின்றவர்கள். இவர்கள் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்காக எழுதிய இந்நூலை சேஷையா ரவி தமிழில் மொழி […]

Read more

நீரோட்டம் அரசியல் பண்பாடும் பண்பாட்டு அரசியலும்

நீரோட்டம் அரசியல் பண்பாடும் பண்பாட்டு அரசியலும், தொகுப்பு ச. ராஜநாயகம், மக்கள் ஆய்வகம், சென்னை, விலை 190ரூ. பாபா படத்தின் தோல்விக்குக் காரணம் என்ன? சென்னை லயோலா கல்லூரியில் இயங்கிவந்த மக்ள் ஆய்வகம் என்ற அமைப்பின் சார்பில் தேர்தல்களை ஒட்டிக் கருத்துக்கணிப்புகள் எடுப்பது வழக்கம். 2001 சட்டமன்றத் தேர்தல் முதல் 2011 நாடாளுமன்றத் தேர்தல் வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல்களையொட்டி மக்கள் ஆய்வகம் நிகழ்த்திய கருத்துக்கணிப்புகளின் தொகுப்பாக நீரோட்டம் என்ற தலைப்பில் இந்நூல் வெளியாகி உள்ளது. பேராசிரியர் ச.ராஜநாயகம் தலைமையில் மாணவர்கள்மேற்கொண்ட கள ஆய்வுகள் […]

Read more

கொல்வதெழுதுதல் 90

கொல்வதெழுதுதல் 90, ஆர்.எம். நௌஸாத், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 150ரூ. கிராமத்தின் கதை இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.எம்.நௌஸாத் எழுதிய கொல்வதெழுதுதல் 90 என்ற நாவல் கிழக்கிலங்கையின் ஒரு முஸ்லிம் கிராமத்தளத்தில் இயங்குகிறது. அக்காலகட்ட மக்கள் மனநிலை மற்றும் அரசியல் சூழ்நிலை தெளிவாகக் காண்பிக்கிறது. 1990ஆம் ஆண்டு இலங்கை மக்கள் இலங்கை இராணுவம், அதிரடிப்படை, இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள், உதிரி இயக்கங்கள், ஊர்க்காவல்படை என்று பல வேறு அம்சங்களால் போரியல் அவதிக்குள்ளானார்கள். இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் யாவுமே கற்பனையேயல்ல என்றாலும் யாவுமே நிஜமுமே […]

Read more

குற்றம் தண்டனை மரண தண்டனை

குற்றம் தண்டனை மரண தண்டனை, அ. மார்க்ஸ், கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை, விலை 100ரூ. எதிர்ப்பு மரண தண்டனைக்கு எதிராக தீவிரமாகச் செயல்படும் கருத்தியலாளர் அ.மார்க்ஸின் குற்றம், தண்டனை, மரண தண்டனை என்ற நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கிறது. அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன. நமது தூக்குமுறை வலி நிறைந்ததாகவும் இழிவுமிக்கதாகவுமே உள்ளது என்கிறார் அ.மார்க்ஸ். […]

Read more

மறுபடியும்

மறுபடியும், கனகராஜன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-194-6.html இன்னும் சிநேகம் இருக்கிறது தினமணி கதிர், கல்கி, தினமலர், இதயம் பேசுகிறது போன்ற ஜனரஞ்சக பத்திரிகைகளில் சுமார் 20 வருடங்கள் வெளியிடப்பட்ட எழுத்தாளர் கனகராஜன் கதைகளின் தொகுப்பு இந்த மறுபடியும். விளிம்பு நிலை அல்லது அதைக் கொஞ்சம் தாண்டிய சராசரி மனிதர்களின் துயரங்களே இந்தக் கதைகள். பால்ய கனவுகளை இழந்து டீக்கடை கிளாஸ்களை கழுவும் சிறுவர்கள், பணத்துக்காக சொத்துக்காக சொந்த அம்மாக்களை புறந்தள்ளும் மகன்கள், […]

Read more

சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை 275ரூ. அரிய தகவல்களின் தொகுப்பு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயரால் நடத்தப்பட்ட குருகுலத்தில் பிராமணர், பிராமணரல்லாத மாணவரிடையே கடைப்பிடிக்கப்பட்ட சாதி ஏற்றத்தாழ்வு 1924 ஆம் ஆண்டு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் பிற புரவலர்களிடம் நிதி திரட்டி நடத்தப்பட்ட இந்த குருகுலத்தில் சமத்துவத்தைக் கொண்டுவர வரதராஜுலு நாயுடு, பெரியோர் முதலியவர்கள் போராடினர். பத்திரிகைகள், பொதுமேடைகள், காந்தியிடம் புகார் என்று பல்வேறு கட்டங்களில் இந்த பிரச்னை விவாதிக்கப்பட்டது. பெரியார் […]

Read more
1 5 6 7 8 9 12