மிளிர்கல்

மிளிர்கல், பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர், விலை 200ரூ. புகாரில் இருந்து கண்ணகி கோவலனுடன் கிளம்பிச் சென்று மதுரையை எரித்து பின்னர் தன்னந்தனியே காடேகி மலை உச்சிக்குச் சென்று பத்தினித் தெய்வமான கதை சிலப்பதிகாரம். கண்ணகி மண்மகள் பாராத தன் வண்ணச்சீரடிகளுடன் புகாரில் இருந்து நடந்து சென்ற வழியே பயணிக்கும் இந்நாவல் தன் பயணத்தின் வழியாக சிலப்பதிகாரம் தொடர்பான பல கேள்விகளுக்கு சமகாலப் பார்வைகள் வழியாக விடை காண முயல்கிறது. ஆனால் அத்துடன் நின்றுவிடாமல் காங்கேயம் பகுதியில் கிடைப்பதாகச் சொல்லப்படும் மாணிக்கம் போன்ற அபூர்வ கற்களைச் […]

Read more

அசுரன்

அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம், ஆனந்த் நிலகண்டன், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால், விலை 395ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-247-7.html அசுரன் சொல்லும் அரசியல் கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் எழுதிய Asura the tale of the vanquished என்கிற நாவல், தமிழில் அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு நூலாக வெளியாகி உள்ளது. எடுத்த எடுப்பிலேயே நமக்கு உற்சாகம் அளிப்பது இதன் மொழிபெயர்ப்பு நடை. மிகவேகமாகப் படித்துச் சென்றுவிடும் அளவுக்கு […]

Read more

திரை இசை வாழ்க்கை

திரை இசை வாழ்க்கை, ஷாஜி, உயிர்மை பதிப்பகம், சென்னை. வாழ்வின் குறிப்புகள் தமிழில் வெகுமக்கள் இசைமீதான விமர்சனத்தை மிகச் சிறப்பாக எழுதக்கூடியவரான ஷாஜியின் புதிய கட்டுரைத் தொகுப்பு நூல் இசை திரை வாழ்க்கை. இதில் இசை மட்டுமல்ல. அற்புதமான பல ஆளுமைகளின் வாழ்வையும் தன் தேர்ந்த கவித்துவமிக்க உரைநடை மூலம் பதிவு செய்திருக்கிறார். முதல் கட்டுரையான மைக்கேல் ஜாக்சனை எடுத்துக்கொள்ளுங்கள். அக்கட்டுரை மேற்கத்திய இசை தெரியாத ஒரு சாமானியனுக்கும் ஜாக்சனின் மேதைமையை அறிமுகப்படுத்தி அவருடன் நெருக்கமாக்குகிறது. ராஜேஷ் கன்னா, ஸ்டீவ் ஜாப்ஸ், டாக்டர் தம்பையா, […]

Read more

வந்தாராங்குடி

வந்தாராங்குடி, கண்மணி குணசேகரன், தமிழினி, சென்னை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு வீடு வாசல் நிலபுலம் எல்லாம் தந்துவிட்டு, வேறுவேறு ஊர்களில் குடியேறி வந்தாரங்குடியாய் வாழ நேர்ந்த மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அப்படியே அசலாய்ப் படம் பிடித்திருக்கிறது கண்மணி குணசேகரனின் இந்த நாவல். குருவிகளின் சிலும்பல்கள், கொட்டப்புளிகளின் கெக்களிப்புகள் இணைகளோடும் குஞ்சுகளோடும் கூடுகள் தோறும் விடியல் ஒலிகள், ஏகத்துக்குமாய் பச்சைப் பசேல் என்று விரிந்த கம்மங்கொல்லைகள், தாய்மடி போல் இம்மண், உயிர்களை ஊட்டி வளர்க்கும் பரிவு-இந்த அறிமுகத்தோடு வேப்பங்குறிச்சி கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர். […]

Read more

புதியதேசம்

புதியதேசம், ப. திருமலை, புதிய தரிசனம், சென்னை. சமூகப் பார்வை சமூகப் பிரச்னைகளைத் தேடிப்பிடித்து அதற்காக அலைந்து, திரிந்து தகவல்களைத் திரட்டி, அவற்றைச் சரிபார்த்து வழங்குவதே ஒரு செய்தியாளனின் முக்கியக் கடமை. அவ்வகையில் ப. திருமலை தன் பல்லாண்டு செய்தி உலக அனுபவத்தில் வழங்கி இருப்பதே புதிய தேசம் என்ற இந்நூல். இந்தியாவில் நீர் வழிச்சாலை தேவை, தமிழகத்தில் தொடரும் அரசியல் கொலைகள் பற்றிய ஆழமான கட்டுரை, சீமைக் கருவேல மரத்தினால் காலியாகும் கிராமங்கள், காவல்நிலைய மரணங்கள், தமிழர்களின் தற்கொலை மனஙப்பான்மை, கருக்கொலை, குழந்தை […]

Read more

மனக்குகைச் சித்திரங்கள்

மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறைப் பதிப்பகம், சென்னை. தமிழ் இதழ்களில் தற்போது தனிப்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும்போக்கு அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் புதிய தலைமுறை இதழில் ஆத்மார்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மனக்குகை சித்திரங்கள் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. நூல்கள் விற்கும் ஆறுமுகம், சாலையில் ஓவியம் வரைபவன், மனநோய் பாதிப்புக்குள்ளான மல்லிகா அக்கா, உறவினர் யாரும் இல்லாதபோதும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாலமூர்த்தி, நான்குவயதில் தொலைந்துபோன குட்டிமகள் இன்னும் தன்னுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் பெரியவர், மதுக்கூடத்தில் பாடும் ராமசாமி உள்ளிட்ட பல […]

Read more

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும், தமயந்தி, கருப்புப் பிரதிகள், சென்னை. எனது எல்லா கதைகளிலும் நான் இருக்கிறேன் என்கிறார் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பின் ஆரம்பத்திலேயே எழுத்தாளர் தமயந்தி. ஒரு பெண்ணின் பார்வையிலான குறிப்பிடத்தகுந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முன்னுரை எழுதி இருக்கும் பிரபஞ்சனின் சொற்களில் கூறுவதென்றால் இந்த சிறுகதைகள் ஆழ்ந்த வன்முறைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஒன்று குடும்பவன் முறை. அப்புறம் சட்டம் ஒழுங்கைக் காப்பதாக நம்பப்படும்நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனம் ஆற்றும் வன்முறைக் […]

Read more

காவியத் தலைவரும் காவியக் கவிஞரும்

காவியத் தலைவரும் காவியக் கவிஞரும், வாலி எழுதிய எம்.ஜி.ஆர். படப்பாடல்கள், வாலி பதிப்பகம், சென்னை. தமிழ்த் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து தன் மறைவுக்குப் பின்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். அவரது திரைப்புகழ் அரசியல் வெற்றியாக மாற்றம் அடைந்ததற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவரது படங்களுக்கு வாலி எழுதிய பாடல்கள். எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் பாத்திரங்களை அல்லாமல் எம்.ஜி.ஆர். எனப்படும் மாமனிதரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல்கள் அவை. எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் என்ற பாடல் அவரது […]

Read more

தோட்டக்காட்டீ

தோட்டக்காட்டீ, இலங்கையின் இன்னொருமுகம், இரா. வினோத், அறம் பதிப்பகம், பெங்களூர். தோட்டத்துக் கவிதைகள் தோட்டக்காட்டீ இலங்கையின் இன்னொரு முகம் என்கிற இரா. வினோத் எழுதியிருக்கும் கவிதைத் தொகுப்பு நூல். இலங்கையின் மலையகத்தில் வசிக்கும் மக்களின் கதையை, அவர்களின் கண்ணீரை, அவல வாழ்வைச் சொல்கிறது. தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்ற ஏழைமக்கள், அடிதட்டு மக்கள் உலகின் பலநாடுகளில் தேயிலை, கரும்புத்தோட்டங்களில் அடிமைகளாக சிக்குண்டு பல தலைமுறைகள் கழிந்துவிட்டன. இலங்கையில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களை இலங்கையராகவும் எண்ணாமல் இந்தியராகவும் எண்ணாமல் நாடற்றவர்களாகக் கருதும் காலமும் இருந்தது. அரசியல் […]

Read more

நிமித்தம்

நிமித்தம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை வெளியீடு, 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 375ரூ. விடிந்தால் திருமணம் செய்துகொள்ளப்போகிற தேவராஜுக்கு இரவில் உறக்கம் வரவில்லை. நாற்பத்தியேழு வயதில் திருமணம் செய்துகொள்கிற அவனுக்கு திருமணத்துக்கு முதல்நாளே வந்துவிடுவதாகச் சொன்ன நண்பர்கள் யாரும் வரவில்லையே என்கிற வருத்தம். காது கேளாமையால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் புறக்கணிப்பின் வலியையே தாங்கி வந்திருக்கும் அவன், தன் வாழ்வை அந்த இரவில் திரும்பிப்பார்க்கிறான். அவன் வாழ்வதாகச் சொல்லப்படும் தென் தமிழகத்தின் நாற்பதாண்டு அரசியல் சமூக நிகழ்வுகளாக இந்த நாவல் […]

Read more
1 7 8 9 10 11 12