நிராசைகள்

நிராசைகள், லிங்கராஜா, மாலவன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. இந்நூல் ஒரு முக்கோண காதல் கதையைக் கொண்டது. கதையின் முடிவாக இருந்தாலும் விதியின் போக்கை நம்மால் முடிவு செய்ய இயலாது என்பதை உறுதி செய்வதுபோல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —- கன்னியாகுமரி மாவட்டம், பாரி நிலையம், சென்னை, விலை 70ரூ. கன்னியாகுமரி மாவட்டம் பற்றி அனைத்து தகவல்களையும் இந்த நூலில் எழுத்தாளர் சோமலெ எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —-   பிணங்களின் கதை, பாரதி புத்தகாலயம், சென்னை, விலை […]

Read more

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள்

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள் பாடலுக்கு சிறப்பான இடம் உண்டு. அறிவியல் பார்வைக்கும், ஆன்மிகத்தேடலுக்கும் உறவுப் பாலம் அமைத்து உயர்ந்த கருத்துகளை எளிமையாய் விளக்கியவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர் பாடல்களில் சிந்தை கவர்ந்த பாடல்களை முனைவர் சொ. சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர் போன்ற 24 சித்தர்களின் பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடல்களுக்கும் பொழிப்புரையோ அல்லது விளக்கவுரையோ இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். […]

Read more

இறையன்புவின் சிறுகதைகள்

இறையன்புவின் சிறுகதைகள், வெ. இறையன்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. இன்றைய இளைஞர் உலகத்துக்கு எதிர்காலத்தை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ள இவருடைய பேச்சும், எழுத்துகளும் ஒன்றுபோல உத்வேகம் அளிக்கிறது, என்றால் அது ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்புதான். இதுவரை 40 நூல்கள் எழுதியுள்ள இறையன்புவின் 16 சிறுகதைகளின் தொகுப்புதான் நின்னினும் நல்லன். புத்தகத்தை புரட்டும் முன்பே ‘அம்மாவிற்கு காணிக்கை, என்னை எப்போதும் குழந்தையாகவே பார்த்த அந்த மகராசிக்’ என்ற வரிகள் கண்களில் கண்ணீரை ததும்ப வைக்கின்றன. தொடர்ந்து ஒவ்வொரு கதையாக படிக்கும் போது, […]

Read more

இந்து மத சம்பிரதாயங்கள் ஏன்? எதற்காக?

இந்து மத சம்பிரதாயங்கள் ஏன்? எதற்காக?, யோகி ஸ்ரீ ராமானந்த குரு, அழகு பதிப்பகம், சென்னை, விலை 260ரூ. இந்து மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் கோட்பாடுகள் இறைவனை வழிபடும் முறை என்பது உள்பட அனைத்து தகவல்களையும் கொண்ட நூல். நன்றி: தினத்தந்தி, 27/5/2015.   —- செயல்திறன் மிக்க 5 எஸ்கள், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர், விலை 35ரூ. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைத்தன. இதற்கு உதவும் வகையில் ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். […]

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், அருள்மொழி பிரசுரம், சென்னை, விலை 110ரூ. எளிமையாகவும், இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விக்கிரமாதித்தன் கதைகளை எழுதியுள்ளார் கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. நன்றி: தினத்தந்தி, 27/5/2015   —-   வழக்கறிஞராக என் அனுபவங்கள், சந்திராமணி பதிப்பகம், திருவண்ணாமலை, விலை 140ரூ. இந்நூலை இளம் வழக்கறிஞர்களின் வளமான வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டி நூலாக படைத்திருக்கிறார் வழக்கறிஞர் பா. பழனிராஜ். நன்றி: தினத்தந்தி, 27/5/2015   —-  வியப்பூட்டும் விடுகதைகள் 1000, சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 35ரூ. சிந்திக்க தூண்டும் வகையில் 1000 விடுகதைகள் […]

Read more

தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும்

தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும், செம்முதாய் பதிப்பகம், சென்னை, சிலம்பு, மேகலை ஆகிய நூல்களின் விலை ஒவ்வொன்றும் 450ரூ. தமிழ்க் காப்பியங்களும் பண்பாட்டு அசைவுகளும் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். தமிழில் காப்பியம் கி.பி. 2-ம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் முதல் இன்று வரை பல காப்பியங்கள் தோன்றியுள்ளன. காப்பியங்கள் அனைத்தும் மனித சமுதாயத்தை மையப்படுத்தியே உள்ளன. பண்டைய காலம் முதல் தமிழர்களின் ஒழுக்கங்களையும், பண்பாட்டையும் காப்பியங்கள் பறைசாற்றி வருகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை […]

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 275ரூ. எளிமையான வார்த்தைகள் ஆனால் அவற்றில் ஏராளமான எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் கருத்துகள் என்று இந்த புத்தகம் முழுவதும் உள்ள அனைதுது கவிதைகளும் படித்து சுவைக்கும் வண்ணம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த கவிதைகள் நான் வாழ்வதின் சாட்சியங்கள் என்று அதன் ஆசிரியர் அ. வெண்ணிலா கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்து உணர்ச்சிகள் பிரவாகம் எடுத்து ஓடுகின்றன. கவிதைகள் என்றவுடன் சற்று தயங்குபவர்களைக்கூட கட்டிப்போடும் வகையில் சிறிய வரிகளில் சிறந்த கருத்துக்களையும் […]

Read more

வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம்

வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம், வெளியிட்டவர் ம.மத்தியாசு, திருநெல்வேலி, விலை 600ரூ. இத்தாலி நாட்டில் பிறந்து இந்தியாவில் தமிழகத்திற்கு வந்து இறைபணி ஆற்றியதோடு தமிழ் மொழியை வளர்த்த வீரமாமுனிவர் வழங்கிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்ற நூலை மூலமும் பதப்பகுப்பும், தொகுப்பும் கொண்டு நேருக்கு நேர் உரை என்ற முறையில் புதுமையாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் ம. மத்தியாசு. வீரமாமுனிவர் தந்தருளிய இந்நூல் பழைய ஓலைச்சுவடிகளில் உள்ளதுபோல அடி பிரிக்காமல் தொடர்ச்சியாக உரைநடைபோல் அச்சிடப்பட்டுள்ளது மட்டுமல்ல, அனைத்தும் புதிய முறைப்படி மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்நூல் வாசிப்பவர்களுக்கு […]

Read more

டாலர் நகரம்

டாலர் நகரம், மகேஸ்வரி புத்தக நிலையம், திருப்பூர், விலை 190ரூ. தமிழகத்தின் தொழில் நகரம் திருப்பூர். திருப்பூரின் சந்து பொந்துக்கள் முதல் சந்தை வாய்ப்புகள் வரை தெரிந்திருக்கும் குணங்களையும், மகிழ்ச்சிகளையும், துயரங்களையும், ஆயத்த அடைத் தயாரிப்பில் இத்தனை சூட்சமங்களா… சூதுவாதுகளா என எண்ணத்தகும் வாழ்நிலை அனுபவங்களையும் கொட்டி குவித்திருக்கிறார் நூலாசிரியர் ஜோதிஜி. தான் சார்ந்த துறையின் கண்டறிந்தவைகளை, கற்றறிந்தவைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, சிறப்புக்களை மட்டுமே பேசாது, குறைகளையும் அவை நிறைவாக மாறவேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். திருப்பூரில் சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி நிர்வாகியாக […]

Read more

அடையாற்றில் இன்னோர் ஆலமரம்

அடையாற்றில் இன்னோர் ஆலமரம், ராணிமைந்தன், சென்னை, விலை 150ரூ. எத்தனை எத்தனை போராட்டங்கள்… எத்தனை எத்தனை தடைகள்… எல்லாவற்றையும் ஜெயித்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தோற்றம், வளர்ச்சி உள்ளிட்ட வரலாறும், அம்மருத்துவமனையை உருவாக்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகிய மும்மூர்த்திகளின் தியாக வரலாறும், அம்மருத்துவமனையை உருவாக்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகிய மும்மூர்த்திகளின் தியாக வரலாறும் உள்ளடங்கியது இப்புத்தகம். சபிக்கப்பட்ட, தீர்க்கப்பட முடியாத நோயாகக் கருதப்பட்ட புற்றுநோயை எதிர்க்கும் போர்ப்பணியை […]

Read more
1 2 3 4 7