பொன் வேய்ந்த பெருமாள்

பொன் வேய்ந்த பெருமாள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. சடையவர்மர் சுந்தரபாண்டியர், மூன்றாம் ராகவேந்திர சோழர், விசயகண்ட  கோபாலன் ஆகிய சரித்திர நாயகர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட வரலாற்றுப் புதினம் பொன்வேய்ந்த பெருமாள். சரித்திரக் கதைகளுக்கு அடிப்படைத்தேவை கம்பீரமான நடை. கோவி. மணிசேகரன் இயற்கையாகவே கம்பீர நடையை கைவரப்பெற்றவர். காட்சிகளை வர்ணிப்பதிலும், அசகாய சூரர். அவருடைய இந்த முத்திரைகள், இந்த நாவலிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளன. இதைப் படிக்கும் எல்லோருமே, நல்லதொரு சரித்திர நாவலைப் படித்தோம் என்ற மன நிறைவைப் பெறுவார்கள். நன்றி: தினத்தந்தி, 27/5/2015. […]

Read more

வர்மக் கலையின் கர்ப்பிணி அடங்கல்

வர்மக் கலையின் கர்ப்பிணி அடங்கல், டிராகன் டி. ஜெய்ரா4, ஸ்ரீகாளீஸ்வரி பப்ளிகேஷன்ஸ், கோவை, விலை 150ரூ. பெண்களின் உடலில் அமைந்துள்ள அற்புதமான வர்மங்கள் கர்ப்பபையுடன் சம்பந்தப்பட்டு உள்ளன. அந்த வர்மங்களை இயக்குவதன் மூலம் மாதவிடாய் கோளாறு பிரச்சினை நீங்குகிறது. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை சுகப்பிரசவமாக பிறக்கிறது. இப்படி பெண்களுக்கு நன்மை பயக்கும் பல தகவல்களை எளிமையான முறையில் இந்த நூல் விளக்குகிறது. பெண்களுக்கு பெரிதும் பயன்தரக்கூடிய புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி, 20/5/2015.   —- துளிர் விடும் விதைகள், வி. கிரேஸ் பிரதிபா, […]

Read more

நலம் 360

நலம் 360, மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணர்வுகளையும் மீண்டும் அவர்களுக்கு உணர்த்தும் மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். நம் உடல் மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்து பராமரிப்பதை மறந்துவிடுகின்றோம். விளைவு? செயற்கை கருத்தப்பரிப்பு மையங்களின் பெருக்கம், மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை குறைந்திருப்பதன் எதிரொலி, இளைய தலைமுறையினர் இது மாதிரியான மையங்களில் தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை மறந்ததுதான். சுத்தம் என்ற நல்ல […]

Read more

இந்திய ரெயில்வே தொடக்க காலம்

இந்திய ரெயில்வே தொடக்க காலம், எஸ். வெங்கட்ராமன், சென்னை, விலை 800ரூ. இந்திய ரெயில்வேயில் நீண்ட காலம் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எஸ். வெங்கட்ராமன் (தற்போது வயது 92). அவர் இந்தியாவில் ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கியது, அதற்குக் காரணமாக இருந்தவர் யார், ஆரம்ப கால ரெயில் எப்படி இருந்தது என்பதை எல்லாம் ஆராய்ந்து, இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 500 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம், முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. சுமார் 600 படங்கள் இடம் பெற்றுள்ள. புத்தகத்தின் தொடக்கத்தில் பிரதமர் […]

Read more

தமிழ்ச் சுரபி

தமிழ்ச் சுரபி, இலக்கியப்பீடம், சென்னை, விலை 450ரூ. அமுத சுரபியின் ஆசிரியராக இருந்த விக்கிரமன் 1948ம் ஆண்டு முதல் 1958ம் ஆண்டு வரை, 10 ஆண்டுகளில் பிரசுரித்த சிறந்த கதை, கட்டுரை, கவிதைகளைத் தொகுத்து தந்துள்ளார். தமிழ்த்தென்றல், திரு.வி.க., ரா.பி.சேதுப்பிள்ளை, கி.ஆ. பெ. விசுவநாதம், யோசி சுத்தானந்த பாரதியார், எஸ். வையாபுரிப்பிள்ளை, க.நா. சுப்பிரமணியம், தி.க.அவிநாசிலிங்கம் செட்டியார், கி.வா. ஜெகந்நாதன் உள்பட 44 பேர்களின் கட்டுரைகளும், உமாசந்திரன், குசுப்பிரியை, எம்.எஸ். கமலா, சரோஜா ராமமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, பெ. தூரன், பி.எஸ். ராமையா, லா.ச. […]

Read more

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

டாப் 200 வரலாற்று மனிதர்கள், பூ. கொ. சரவணன், விகடன் பிரசுரம், பக். 616, விலை 240ரூ. இந்த நாடு, இந்த மொழி, இந்த பிரதேசம், இந்த காலம் என்ற வரையறையை வைத்துக் கொள்ளவில்லை சரவணன். விவரமாக சொல்வதை விட, விறுவிறுப்பாக சொல்வதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். ஈஸ்வர சந்திர வித்யாசாகர், வங்கத்தைச் சேர்ந்தவர். வேதங்கள், சமஸ்கிருத நூல்கள் ஆகியவற்றிலிருந்து, விதவை மறுமணத்துக்கு ஆதரவான கருத்துகளைத் திரட்டி புத்தகமாக வெளியிட்டவர். அவர், இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ‘கேர்’ என்னும் ஆங்கிலேயரைப் பார்க்கப்போனார். பூட்ஸ் அணிந்த […]

Read more

சின்னாலும் ஒரு குருக்கள்தான்

சின்னாலும் ஒரு குருக்கள்தான், ஆ. சிவராஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 236, விலை 150ரூ. திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர்களான, மாதாரிகளின் வாழ்க்கையை இந்த நாவல் சித்தரிக்கிறது. பள்ளர், பறையர், அருந்ததியினர் என, மூன்று முக்கியமான ஜனத்தொகை அதிகமுள்ள தலித் உட்பிரிவுகளில், அருந்ததியினரே எல்லா விதத்திலும் மிக மோசமாகப் பின்தங்கி உள்ளனர் என்பது, இந்த நாவலைப் படிக்கும் எவருக்கும் புரியும் கசப்பான உண்மை. மண்ணின் மைந்தர்களான சின்னான், குப்பாயி, வெள்ளச்சி, நல்லச்சி, அருக்காணி முதலிய குகைச்சித்திரங்களும், மாதாரிகளை ஆட்டிப் […]

Read more

சிறுகதை மன்னன் ஜே.கே. 100 அரிய தகவல்கள்

சிறுகதை மன்னன் ஜே.கே. 100 அரிய தகவல்கள், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 110ரூ. ஜெயகாந்தன் பற்றிய 100 அரிய தகவல்கள் அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன், தமிழ் இலக்கிய உலகில் புரட்சிசெய்தவர். அவருடைய சிறுகதைகளிலும், நாவல்களிலும் வருபவர்கள் வெறும் கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல, உயிரும், உணர்ச்சியும் நிறைந்தவர்கள். ஜெயகாந்தன் சினிமா உலகத்திலும் தடம் பதித்தவர். உலகப்புகழ் பெற்ற டைரக்டர் சத்யஜித்ரேயின் சாருலதா, அகில இந்திய ரீதியில் முதல் பரிசு வாங்கியபோது இவருடைய உன்னைப்போல் ஒருவன் மூன்றாம் பரிசு பெற்றது. ஜெயகாந்தன் பற்றிய அரிய […]

Read more

சக்தி பீடங்கள் 51

சக்தி பீடங்கள் 51, தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 225ரூ. பாரததேசத்தின் வரைபடத்தை உற்று நோக்கினால் அன்னை பராசக்தியின் திருவுருவை நாம் தரிசித்த உணர்வுதோன்றும். அவளே நம் இந்திய தாய். வடகோடியில் காமரூபத்து காமாக்யாதேவி கொலுவிருக்கிறாள் என்றால், தென்குமரியில் கன்னியாகுமரி பகவதி தேவியாகவும் அவளே குடியிருக்கிறாள். புராண வரலாற்றின்படி, பாரதம் முழுக்க 51 சக்தி பீடங்கள் அமைந்திருப்பதாகவும், அவை தேவியின் திருவுடலின் ஒவ்வொரு பாகத்தை அடையாளப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அந்த செய்தியின் ஆதாரமாக தட்சயக்ஞ சம்பவம் அமைந்துள்ளது. அதை […]

Read more

பாரதத்தின் பக்த கவிகள்

பாரதத்தின் பக்த கவிகள், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், சென்னை, பக். 264, விலை 175ரூ. ஒரு காலத்தில், கன்னட அரசால் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு, இரண்டு ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்கப்பட்ட குமார வியாசகனின், கன்னட பாரதம்; தெலுங்கில் கவித்ரயம் என்று போற்றப்படும் நன்னயர், திக்கணர், எர்ரப்ரகடா என்ற இலக்கிய மூம்மூர்த்திகளால் உருவான, தெலுங்கு மகாபாரதம்; இதிகாசங்களின் மொழிபெயர்ப்புகளாய் மாதவ கண்டாவி இயற்றிய, காலத்தால் முற்பட்ட, அசாமிய ராமாயணம்; தெலுங்கில் பதகவிதா பிதாமகர் எனும் உயர்பட்டம் பெற்ற, அன்னமாச்சார்யா; பண்டரிநாதரை மீட்ட பானுதாசர், ஒரிய […]

Read more
1 2 3 4 5 7